Jump to content

யாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...?


Recommended Posts

 

 

யாழ்மாவட்டத்தில் மக்களை பழிவாங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்...?  

உனக்கு சமுர்த்தி கொடுப்பனவு தரமுடியாது செய்கிறதை செய்...!அசிங்கமான முறையில் நடந்து கொள்ளும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் .

தொடர்ந்து உரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், யாழ்மாவட்டத்தில் அன்றாடம் கூலி வேலை செய்யும் சமுர்த்தி பயனாளிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அனைத்து சமுர்த்தி பயனாளிகளும் நன்மை தரக்கூடிய வகையில் உதவித்திட்டங்கள் கிடைக்கின்றனவா? என்பதையும்,சமுர்த்தி அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்பதையும் சமுர்த்தி பயனாளிகள் என்ன கூறுகிறார்கள் ...?

Link to comment
Share on other sites

கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டான் என்பதுபோல இப்படி நெருக்கடியான நிலமையில் வறுமைப்பட்ட மக்களின் வயித்தில் அடிக்கும்  இந்த கேவலம் கெட்ட ஈனப்பிறவி உத்தியோகத்தர்களை தட்டிக்கேட்கக் கூட கூத்தமைப்பு மாணவர் ஒன்றியங்களுக்கு துப்பில்லையா ?.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சண்டமாருதன் said:

நெருக்கடியான நிலமையில் வறுமைப்பட்ட மக்களின் வயித்தில் அடிக்கும் 

நமது அதிகாரிகள்,  வறுமைப்பட்டவர்களின்   வயித்தில் அடிக்கவும், தமக்கு பிடிக்காதவை, தங்கட வாலுகளுக்கு பிடிக்காதவையை  பழிவாங்கவும் இதுதான் சரியான நேரம். இப்பிடியான நேரத்தை பாத்துக்கொண்டு இருந்தவை. இன்றைய தேவை அறிந்து சேவை செய்யும் இளைஞர் எங்கே . இதுகள் கூலியில் சுரண்டும் கொள்ளைக் கூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர் தங்கள் வீரத்தை இந்த வறுமைப்பட்ட மக்களிடம்தான் காட்டுகின்றார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சுட்டு வேலை இல்லாமல் காஞ்சுபோய் இருக்குதுபள் எண்டு பாவம் பாத்து குடுத்த வேலைதான் சமூர்த்தி உத்தியோகத்தர் பதவி.. நியாயமா கிடைக்கவேண்டிய பலர் இருக்க டகளசுக்கு தமிழ் எம்பிமாருக்கும் காசக்குடுத்து கொல்லேக்கால வேலைக்கு வந்ததுகள்தான் முக்கால்வசி உதில. கொய்யால படிச்சுட்டு சொந்தமா தொழில் செய்ய வல்லமை இல்ல 40,50 வயசாகி முத்தின கத்தரிக்கா ஆனாலும் அரசாங்க உத்தியோகம்தான் வேணும் எண்டு அப்பன் ஆத்தாண்ட காசுல துன்னுகொண்டு இருக்கிறது பிறகு டக்ளஸ் ஒபிஸ் வாசல்லபோய் உண்ணாவிரதம் இருக்கிறது அப்புறம் அப்பன் ஆத்தா காசும் கட்டி வேலை எடுத்தும் குடுக்கோணும். வந்திட்டு திமிரபாரு அப்பாவி ஏழைச்சனங்கள் மேல. அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்ததாத்திரியில் குடைபுடிப்பானம். கலெக்டர் உத்தியோகம் பாக்குற நினைப்பு உவைக்கு

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐயாயிரம் ரூபாயில் மோசடி; சமுர்த்தி உத்தியோகத்தர் பணிநீக்கம்!

மட்டக்களப்பில் சமுர்த்தி பெறுபவர்களின் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்ததாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் கடந்த 24.04.2020 முதல் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றிய மேற்படி சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் கொரோனா வைரஸ் சூழலில் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கலில் 13 பேருக்கு தலா 4000 ரூபா மட்டுமே வழங்கியிருப்பதா கவும் 5 பேருக்கு 5000ரூபாய் கொடுப்பனவு வழங்கவில்லை என்றும் காத்திருப்புபட்டியலிலுள்ள 50 குடும்பங்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை பெற்றுத் தருவதாக தலா ஆயிரம்ரூபாய் கப்பம் பெற்றுள்ளதாகவும், ஏற்கனவேயும் காணிமோசடி தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கிரான் பிரதேச செயலாளரால் விசாரணை குழு அமைக்கப்பட்டு அவ்விசாரணையில் குற்றம் இழைக்கப் பட்டதாகக் கருதி சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகமான மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கை சமர்பித்ததையடுத்து அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். (150)

 
Link to comment
Share on other sites

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகத்தான் இருக்குது।  இது இவர்களுடைய சொந்தப்பணமில்லாய்। மக்களின் பணம்। இருந்தாலும் தங்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள்। ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொரோனா வந்து சில மக்களின் கௌரவ வாழ்வை பாதித்ததுடன், பல இழப்புகள், நட்டங்கள், காயங்கள் ஏற்படுத்தி இருந்தாலும், வளர்ந்துவிட்ட தொழில் நுட்பமும், சில ஊடகங்களும் சமூக விரோத அதிகாரிகளை அடையாள படுத்தியும் விட்டது. இன்னும் சிலர் நல்ல பிள்ளை வேடம் போட்டு கொள்ளை அடிப்பவர்கள் முகமூடியும் கிழிய வேணும். நிஞாயத்தை கேட்டால் குழப்பவாதி என்கிறார்கள். தவறை சுட்டிக்காட்டினால் சண்டைக்காரர்  என்கிறார்கள். இப்போ ஏழைகள் எவ்வளவு அவமானப் படுத்தினாலும் வாயே திறப்பதில்லை. திறந்தால் இதுதான் நடக்கிறது. பழி வாங்கல், அலைச்சல். ஆனால் உள்ளுக்குள் நொருங்கிப் போகிறார்கள். அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் தன்மானம் உண்டு என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. இப்படி கொள்ளை அடிப்பதிலும் பார்க்க, ஏழையாய் இருப்பது உயர்வே. என்னையும், உன்னையும் படைத்த இறைவன். உனக்கு வசதியை தந்து, எனக்கு வறுமையை தந்தார் என்றால், அவர் உனக்கு தந்த பெருமையை முன்னிட்டு என்னை இகழாதே.  இதெல்லாம் உன்னால் நிகழ்ந்தவை அல்ல. என் இடத்தில் உன்னை வைத்துப் பார். அவர் உனக்குத் தந்ததை, மற்றவர்களோடு பகிர முடியாவிட்டால் ஒருநாள் அதை இழந்து நீ  தவிக்கலாம்.

Link to comment
Share on other sites

On 7/4/2020 at 07:31, சண்டமாருதன் said:

கூத்தமைப்பு மாணவர் ஒன்றியங்களுக்கு துப்பில்லையா ?.

கூத்தமைப்புக்கு எங்க மாணவர் ஒன்றியங்கள் இருக்கு?

கூத்தமைப்புடன் இப்ப சில சுயநலம் நிறைஞ்ச இளைஞர்கள் மட்டுமே ஒட்டிக்கொண்டுள்ளனர்?

Link to comment
Share on other sites

On 6/4/2020 at 21:14, nunavilan said:

உனக்கு சமுர்த்தி கொடுப்பனவு தரமுடியாது செய்கிறதை செய்...!அசிங்கமான முறையில் நடந்து கொள்ளும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் .

அரச வேலை என்பது சேவை மனப்பான்மை உள்ளவர்களை உள்வாங்வில்லையே !

அடுத்து, அரசியல் தலைமைகள் ஊழல், மற்றும் இனவாதம் / மதவாதம் என்று பார்த்து உதவிகளை வழங்கும் பொழுது, சாதாரண ஊழியர்களிடமும் அதுவே இருக்கும் வாய்ப்புக்கள் இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.