Jump to content

சுடுநீர் முட்டை(poached eggs)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள்.
பெரியவேலை ஒன்றுமில்லை.
ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும்.
தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள்.
கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம்.
சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும்
மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை பாவித்து இறக்கலாம்.
மஞ்சள்கரு ஆடக் கூடாது என்பவர்கள் 4-5 நிமிடம் செல்ல எடுக்கவும்.
இது பாணுக்கு நன்றாக இருக்கும்.
எண்ணெய்ப் பிரச்சனையும் இல்லை.

BAEC2411-7-ED7-4-A62-952-D-45707-A5-C94-

BD2-F4-C1-C-EE0-C-460-C-BBA8-BFA1399-A11

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமையல் முறையை... இப்போ தான் கேள்விப்  படுகின்றேன்.
பகிர்விற்கு... நன்றி ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

இந்த சமையல் முறையை... இப்போ தான் கேள்விப்  படுகின்றேன்.
பகிர்விற்கு... நன்றி ஈழப்பிரியன்.

வெகு சுலபமான முறை.செய்து சாப்பிட்டுப் பாருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்பதான் பார்க்கிறன்..... உங்களிடம் நிறைய நளபாக நுட்பங்கள் கைவசம் இருக்குது.....இதுக்கெல்லாம் அடிக்கடி கோவித்துக்கொண்டு சமைக்காமல் போய் படுக்கிற மனைவி வேண்டும்......!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன், project camp இல் இருக்கும் போது, முட்டையை இப்படி  அவித்து வைத்திருப்பார்கள். 4000 பேருக்கு மேல் உள்ள camp இல் இப்படி செய்வது சுலபம்

வீட்டில் இப்படி இன்னும் செய்யவில்லை, செய்து பார்க்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன சத்து இருக்கப் போகுது ...தண்ணியோட போயிடும் சத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள்.
பெரியவேலை ஒன்றுமில்லை.
ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும்.
தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள்.
கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம்.
சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும்
மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை பாவித்து இறக்கலாம்.
மஞ்சள்கரு ஆடக் கூடாது என்பவர்கள் 4-5 நிமிடம் செல்ல எடுக்கவும்.
இது பாணுக்கு நன்றாக இருக்கும்.
எண்ணெய்ப் பிரச்சனையும் இல்லை.

BAEC2411-7-ED7-4-A62-952-D-45707-A5-C94-

BD2-F4-C1-C-EE0-C-460-C-BBA8-BFA1399-A11

நன்றி.

உந்தாள் எங்கையிருந்துதான் புதிசு புதிசாய் கண்டுபிடிக்குதோ தெரியேல்லை....
என்ரை அம்மா நல்லெண்ணையை கொதிக்க வைத்துவிட்டு உதே முறையில் பொரித்தெடுப்பார். நல்லாயிருக்கும்.எண்டாலும் நானும் நாலு முட்டையை  சுடுதண்ணிக்கை போட்டு எடுக்கத்தான் இருக்கு..:)

17 minutes ago, ரதி said:

இதில் என்ன சத்து இருக்கப் போகுது ...தண்ணியோட போயிடும் சத்து 

இந்தக்காலத்திலை எவன் சத்துக்காக சாப்பிடுறான்?......அதுக்குத்தான் குளிசை குண்டுமணியெல்லாம் விக்குது 😎

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

உந்தாள் எங்கையிருந்துதான் புதிசு புதிசாய் கண்டுபிடிக்குதோ தெரியேல்லை....

ஒருவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். 

4 hours ago, suvy said:

அடிக்கடி கோவித்துக்கொண்டு சமைக்காமல் போய் படுக்கிற மனைவி

💃🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

நானும் இப்பதான் பார்க்கிறன்..... உங்களிடம் நிறைய நளபாக நுட்பங்கள் கைவசம் இருக்குது.....இதுக்கெல்லாம் அடிக்கடி கோவித்துக்கொண்டு சமைக்காமல் போய் படுக்கிற மனைவி வேண்டும்......!   😁 

அப்பாடா எவருமே இன்னமும் செய்து பார்க்கவில்லை என்றதும் மனம் கொஞ்சம் துள்ளிக் குதிக்குது.
சுவி மனைவி நியூயோர்க்கில்.அங்கு நிற்கும் போதும் வேலை இல்லை என்றால் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன்.
செய்து பாருங்க.

5 hours ago, உடையார் said:

இது நான் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன், project camp இல் இருக்கும் போது, முட்டையை இப்படி  அவித்து வைத்திருப்பார்கள். 4000 பேருக்கு மேல் உள்ள camp இல் இப்படி செய்வது சுலபம்

வீட்டில் இப்படி இன்னும் செய்யவில்லை, செய்து பார்க்கனும்

நன்றி உடையார்.செய்து பார்த்து படத்தையும் போடுங்க.காலைச் சாப்பாட்டுக்கு உதவும்.

3 hours ago, ரதி said:

இதில் என்ன சத்து இருக்கப் போகுது ...தண்ணியோட போயிடும் சத்து 

தங்கச்சி முட்டை அவிந்து வரும்போது தனியே தானே இருக்கும்.
தண்ணீருக்குள் கரண்டியை வைத்து அடிக்கவா போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாத்திரத்தை மூடி  அவிக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்யும் போது, சூடான தண்ணீரில்  வினிகர் கலந்து, அது கொதித்த பின், நெருப்பு குறைக்கப்பட வேண்டும், அணைக்க கூடாது.

முட்டையை உடைத்து  படிப்படியாக  விடும் முன்பு, சூடு நீரை வேகமாக சுழற்றி விடுங்கள். முட்டை பரவுவது குறையும்.

நன்கு ஒடுங்கிய பாத்திரம் பாவியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

egg1.jpgEgg.jpg

13 hours ago, ஈழப்பிரியன் said:

வெகு சுலபமான முறை.செய்து சாப்பிட்டுப் பாருங்க.

செய்முறைக்கு நன்றி ஈழப்பிரியன் , Kadancha . ஒன்லைன் வேலை எல்லாத்தயும் ஒரு கரையில வச்சிட்டு உப்பு போட்டு , வினிகர் விட்டு பிறகு ஒரு வளையம் போட்டு 3 poached  eggs  செய்தாச்சு . முதல் முறை என்றபடியால் பரவாயில்லை . மகன்மார் சாப்பாடு என்று குசினிக்கி  வந்தால் இதுதான் இருக்கு. egg2.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி நீங்கள் டாக்டர் ஆனதற்கும் நான் வேஸ்ட் ஆனதற்கும் ஒரே ஒரு காரணம் நீங்கள் வீட்டுப்பாடத்தை பள்ளியிலேயே செய்து விடுகின்றீர்கள்.நான் வீட்டிலும் செய்ததில்லை. வாழ்க வளமுடன்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

நில்மினி நீங்கள் டாக்டர் ஆனதற்கும் நான் வேஸ்ட் ஆனதற்கும் ஒரே ஒரு காரணம் நீங்கள் வீட்டுப்பாடத்தை பள்ளியிலேயே செய்து விடுகின்றீர்கள்.நான் வீட்டிலும் செய்ததில்லை. வாழ்க வளமுடன்.......!  👍

நன்றி. நீங்கள் வேஸ்ட் என்று ஒருவரும் நினைக்க மாட்டார்கள் சுவி. எங்கள் எல்லோருக்கும் இந்த உலகத்தில் சில கடமைகள் காத்திருக்கு. எனக்கு இப்படி  உங்களுக்கு அப்படி. பள்ளிக்கூடத்தில் நான் நடுத்தரம் தான். தட்டு தடுமாறி யூனிவெர்சிட்டியில் மட்டும் ஓர்மத்தோடு படித்து முடித்துவிட்டேன். அதற்கு பிறகு நடந்தது எல்லாம் விரும்பியும் விரும்பாமலும் நடந்தவை தான். ஆனால் வைத்திய துறை மாணவர்களுக்கு படிப்பிப்பது மிகவும் மன நிறைவை தருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உந்தாள் எங்கையிருந்துதான் புதிசு புதிசாய் கண்டுபிடிக்குதோ தெரியேல்லை....
என்ரை அம்மா நல்லெண்ணையை கொதிக்க வைத்துவிட்டு உதே முறையில் பொரித்தெடுப்பார். நல்லாயிருக்கும்.எண்டாலும் நானும் நாலு முட்டையை  சுடுதண்ணிக்கை போட்டு எடுக்கத்தான் இருக்கு..:)

40-45 வருடத்துக்கு முதல் அம்மா செய்ததையே சொல்லிக் கொண்டிருங்கோ.
நாலையும் போட்டு திரும்பவும் அம்புலன்சில் ஏறி திரியாமல் ஒவ்வொன்றாக சாப்பிடுங்கோ.

6 hours ago, Paanch said:

ஒருவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். 

💃🤣

பெண் நியூயோர்க்கில்.

4 hours ago, nilmini said:

பாத்திரத்தை மூடி  அவிக்க வேண்டுமா?

மூடத் தேவையில்லை.

2 hours ago, இணையவன் said:

எனக்கு மஞ்சள்கரு ஆடினால் தான் பிடிக்கும். இதனை சலாட் வகைகளுடன் சாப்பிடலாம்.

எனக்கும் பிடிக்கும்.எனது மனைவிக்கு மஞ்சள் கரு ஆடுவதைக் கண்டாலே சத்தி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

செய்யும் போது, சூடான தண்ணீரில்  வினிகர் கலந்து, அது கொதித்த பின், நெருப்பு குறைக்கப்பட வேண்டும், அணைக்க கூடாது.

உப்புக்கு பதிலாக பாவிக்கிறார்களோ?

2 hours ago, Kadancha said:

முட்டையை உடைத்து  படிப்படியாக  விடும் முன்பு, சூடு நீரை வேகமாக சுழற்றி விடுங்கள். முட்டை பரவுவது குறையும்.

அது தான் சுழற்றி போட்டு சுழிக்குள் விட சொன்னேன்.

1 hour ago, nilmini said:

செய்முறைக்கு நன்றி ஈழப்பிரியன் , Kadancha . ஒன்லைன் வேலை எல்லாத்தயும் ஒரு கரையில வச்சிட்டு உப்பு போட்டு , வினிகர் விட்டு பிறகு ஒரு வளையம் போட்டு 3 poached  eggs  செய்தாச்சு . முதல் முறை என்றபடியால் பரவாயில்லை . மகன்மார் சாப்பாடு என்று குசினிக்கி  வந்தால் இதுதான் இருக்கு.

அப்புறம் என்ன.நல்லாத் தான் இருக்கு.
எப்படி பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உப்புக்கு பதிலாக பாவிக்கிறார்களோ?

அது தான் சுழற்றி போட்டு சுழிக்குள் விட சொன்னேன்.

அப்புறம் என்ன.நல்லாத் தான் இருக்கு.
எப்படி பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்களா?

நன்றி செஃப் ஈழப்பிரியன் 😁 . வட்டமாக இருப்பது கூட  நல்லா இருக்கு என்று சொன்னார்கள் 

Link to comment
Share on other sites

16 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் பிடிக்கும்.எனது மனைவிக்கு மஞ்சள் கரு ஆடுவதைக் கண்டாலே சத்தி வரும்.

இதற்குக் கருத்தெழுதினேன். எழுதிவிட்டு வாசித்தேன்.... யாழ்களத்திற்கே சத்திவந்து கத்தியோடு வரும்போல் இருந்தது பயத்தில் அழித்துவிட்டேன். Bildergebnis für %e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d  அப்படி என்னதான் எழுதியிருப்பேன்.....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்போது அநேகமான English breakfast உடன் கிடைக்கும். இலங்கையில் கூட சினமொன், சங்கரி லா போன்ற ஹோட்டல்களில் கிடைக்கின்றன.

எனக்கு பிடிப்பதில்லை. 

கொதி தண்ணியில் உடைச்சு ஊத்தினால், அதன் பாகுத்தன்மை காரணமாக ஒட்டி ஒன்றாக இருப்பதால், அது தண்ணீரில் கரையாமல் உடனடியாக வேகத்தொடங்கும். 

ஒரு அமெரிக்க பெண்மணி, குழந்தைகளுக்கு பிடிக்க கூடிய பல வேறு வடிவங்களை தரக்கூடிய பிளாஸ்டிக் கப்புகளை வியாபாரம் செய்கிறார். முட்டையினை உடைச்சு அதனுள் ஊத்தி, கொதி  தண்ணீரில் போட்டால், அந்த வடிவில் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இதற்குக் கருத்தெழுதினேன். எழுதிவிட்டு வாசித்தேன்.... யாழ்களத்திற்கே சத்திவந்து கத்தியோடு வரும்போல் இருந்தது பயத்தில் அழித்துவிட்டேன். Bildergebnis für %e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d  அப்படி என்னதான் எழுதியிருப்பேன்.....???

அப்படி என்ன தான் எழுதியிருப்பீர்கள்?
அனேகமாக இதற்குள் வரமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, இணையவன் said:

எனக்கு மஞ்சள்கரு ஆடினால் தான் பிடிக்கும். இதனை சலாட் வகைகளுடன் சாப்பிடலாம்.

தண்ணியடிக்கிறவைக்குத்தான் அரையவியல் முட்டை தவனம் வாறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அருமையான ஜடியாவா இருக்கே. நேத்துத்தான் றோஸ்பாண் வீட்டில செய்யுறத படிச்சன் இண்டைக்கு இது. யாழுக்கு வாறதில் இப்படி நாலு விசயங்கள் புதிசா கற்றுக்கொள்கிறம். மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இது இப்போது அநேகமான English breakfast உடன் கிடைக்கும். இலங்கையில் கூட சினமொன், சங்கரி லா போன்ற ஹோட்டல்களில் கிடைக்கின்றன.

எனக்கு பிடிப்பதில்லை. 

கொதி தண்ணியில் உடைச்சு ஊத்தினால், அதன் பாகுத்தன்மை காரணமாக ஒட்டி ஒன்றாக இருப்பதால், அது தண்ணீரில் கரையாமல் உடனடியாக வேகத்தொடங்கும். 

ஒரு அமெரிக்க பெண்மணி, குழந்தைகளுக்கு பிடிக்க கூடிய பல வேறு வடிவங்களை தரக்கூடிய பிளாஸ்டிக் கப்புகளை வியாபாரம் செய்கிறார். முட்டையினை உடைச்சு அதனுள் ஊத்தி, கொதி  தண்ணீரில் போட்டால், அந்த வடிவில் வரும்.

நான் கொஞ்ச நாளைக்கு முதல் தான் சாப்பிட்டேன் பிடித்துக் கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட அருமையான ஜடியாவா இருக்கே. நேத்துத்தான் றோஸ்பாண் வீட்டில செய்யுறத படிச்சன் இண்டைக்கு இது. யாழுக்கு வாறதில் இப்படி நாலு விசயங்கள் புதிசா கற்றுக்கொள்கிறம். மகிழ்ச்சி.

வீட்டில சமையல் வேலைகளை செய்யப்போறதை சொல்லாமல் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

பாலபத்திர ஓணான்டி உங்கள் பெயர் அப்படி பிடித்திருக்கிறது எனக்கு😎 

நான் துபாயில் வேலைசெய்யும் போது ஒரு பொலித்தின் பையுனுள் முட்டையை உடைத்து விட்டு சுடுதண்ணீரில் இட்டு அவித்து எடுப்போம் தண்ணீர் பட்டிராது  முட்டையில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.