Jump to content

வவுனியாவில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகளை விநியோகிக்க நடவடிக்கை!


Recommended Posts

Vavuniya-Agriculture.jpg

வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.விஜியகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் நேற்று கருத்துத் தெரிவிக்கையில், “தற்போது வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகள் மற்றும் மரக்கறி நாற்றுக்கள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்டத்தினை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் வவுனியா நகருக்கு வருகைதந்து இலுப்பையடியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநல சேவை நிலையத்தில் 20 ரூபாயினைச் செலுத்தி குறித்த நாற்றுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன், ஒவ்வொரு கிராமங்களிலும் அமைந்துள்ள கிராம சேவகர் காரியாலயங்களில் குறிப்பிட்ட நாட்களில் வருகைதந்து நாற்றுக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தவகையில் 7 ஆம் திகதி பட்டாணிச்சூர், வேப்பம்குளத்திலும் 8ஆம் திகதி வைரவபுளியங்குளம், குருமன்காடு பகுதிகளிலும் 9ஆம் திகதி தோணிக்கல்லிலும் 10ஆம் திகதி கோவில்குளம், இறம்பைக்குளம் பகுதிகளிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், 11ஆம் திகதி பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், 12ஆம் திகதி சமனங்குளம், தெற்கிலுப்பைக்குளம், 13ஆம் திகதி வவுனியா நகரம், வெளிக்குளம், 14ஆம் திகதி வவுனியா நகரம், வெளிக்குளம், 15ஆம் திகதி பூந்தோட்டம், 16ஆம் திகதி புதுக்குளம், 17ஆம் திகதி மூன்றுமுறிப்பு, எல்லப்பர் மருதன்குளம், 18ஆம் திகதி முருகனூர், கல்நாட்டினகுளம், 20ஆம் திகதி ஆசிகுளம், பெரியகோமரசன்குளம், 21ஆம் திகதி காத்தார்சின்னக்குளம், மகாறம்பைக்குளம், 22 ஆம் திகதி நொச்சிமோட்டை, பறன்நட்டகல் பகுதிகளிலும் 23 ஆம் திகதி கள்ளிகுளம் பகுதிகளிலும் இந்நடவடிக்கை மரக்கறி விதைகள் வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, விநியோக நேரங்கள் தொடர்பாக ஒலி பெருக்கி மூலம் கிராமங்களின் ஒவ்வொரு பகுதிக்கும் அறியத்தரப்படுவதுடன், திகதிகளில் மாற்றங்கள் இருப்பின் கிராமங்களுக்கு அறியத்தரப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள, கோவில்குளம்-0242221053, செட்டிக்குளம்-0772608277, உளுக்குளம்-0716386555, பம்பைமடு-0779362215, ஓமந்தை-0774215305, கனகராயன்குளம்-0778068339, நெடுங்கேணி-0779885667, மடுக்கந்தை-0702612923 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/வவுனியாவில்-வீட்டுத்தோட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்க தூண்டில் குடுப்பது நல்லது".....நல்ல விடயம்......!  👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.