Jump to content

நானும்அவனும்


Recommended Posts

நானும்அவனும்
….................................
 
ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி ….
 
 
இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற்றி ஒரு இழுவை இழுத்து விட்டு கணணியை திறந்தேன் ஏனென்றால் இப்பிடியான சந்தர்ப்பங்களில் தான் எனக்கு கற்பனை தானாக வந்து கொட்டி ஏதாவது எழுதத் தோன்றும்..
 
அபோதான் கண்களை கூச வைக்கும் ஒரு பெரு மின்னல்.. சாத்தியிருந்த யன்னலையும் ஊடறுத்து அறை முழுவதையும் பகலாக்கி செல்ல .மழையின் கோரம் அதிகரித்திருந்தது அடுப்படியில் திறந்திருந்த கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டு அதை சாத்தி விட்டு வரலாமென எழுந்து போயிருந்தேன். ஏனெனில் அது பின்னால் உள்ள சிறிய தோட்டத்துக்கு செல்லும் பாதை மழையின் கோரத்தால் எலியோ பூச்சிகளோ அதுவழியாக உள்ளே வந்துவிடும் . கதவை சாத்திக் கொண்டிருக்கும்போது இதுவரை நான் கேட்டிராத பெரும் இடியோசை .சின்ன வயதில் நான் சொன்ன அருச்சுனா ()பத்து நினைவுக்கு வருமளவு சத்தம் அதே நேரம் மின்சாரமும் போய்விட மீண்டுமொரு மின்னல் அப்போதான் அந்த உருவத்தை தோட்டத்தில் பார்த்தேன் .
 
கொஞ்சம் திகைத்துப் போயிருந்தாலும் . கடவுளையோ பேயையோ நம்புகிறவனில்லை என்பதால் யாரோ கள்ளன் தான் வந்திருக்கிறான் என நினைத்து இருட்டில் தட்டித் தடவி வந்து என் போனை எடுத்து அதிலிருந்த டோச் வெளிச்சத்தை அடித்தபடி. கள்ளன் வந்தால் தாக்குவதுக்காக கதவுக்கு பின்னாலேயே மறைத்து வைத்திருந்த கொட்டானை எடுத்துக்கொண்டு டோச் வெளிச்சத்தில் தோட்டத்தை பார்த்தேன் . கொட்டும் மழையில் நெடிய, கறுத்த, ஆடைகளேதுமற்ற அம்மணமான அந்த உருவம் நின்றிருந்தது .அண்ணாந்து பார்த்தேன். மழைத்துளிகள் என் கண்ணில் வீழ்த்து மங்கலாக தெரிந்த அந்த உருவத்தை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது .."என்னடா நலமா".. என்று என்னைப் பார்த்து அது கேட்ட அதே நேரம் அதன் பின்னாலிருந்து வெளிவந்த சிவந்த கண்களையுடைய பெரிய கறுத்த நாயொன்று என் மீது பாய்ந்து அதன் கால்களை என் மார்பில் வைத்து முகத்தை நக்க தொடங்க.. அது வரை என் பின்னாலேயே பதுங்கியிருந்த என் பூனை மீனு பயத்தில் மழையென்றும் பாராமல் தோட்டத்தில் பாய்ந்து பின் மதிலையும் தாண்டி ஓடி விட்டிருந்தது .
 
இப்போ எனக்கு நினைவுக்கு வந்து விட்டிருந்தது "ஓ நீயா ..எத்தனை வருடங்களாகி விட்டது என்ன இப்பிடி திடீரெண்டு சரி உள்ளே வா" ..என்றதும்
 
அவன் வாசலால் குனிந்து உள்ளே வர நாயும் பின்னாலேயே உள்ளே வந்தது ..அதுக்கிடையில் நான் ஓடிப்போய் படுக்கையறை கதவு சாதியிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வந்தேன்.நனைந்து போயிருப்பாய் என்றபடி துவாயை எடுத்து நீட்டியபோது அவன் உடல் காய்ந்து விட்டிருந்தது நாய் மட்டும் உடலை ஒரு உதறு உதறி விட்டு படுத்துக் கொண்டது ..சோபாவில் சரிந்திருந்தவனின் இடுப்பில் துவாயை போட்டு விட்டு .எத்தனை வருசமாச்சு எப்படி என்னை தேடி வந்தாய் என்றேன்.
 
இத்தனை வருசமாச்சு என்னை நீ தேடி வந்தாயா. முறைத்தான் .
 
எனக்கு ஊருக்கு வர முடியாது ஆனா உன்னைப்பற்றி அடிக்கடி அம்மாவிடம் விசாரிப்பேன் ,.
 
என்ன சொல்லு  வா ..
 
புளிய மரத்தடியில வெறும் சூலமா ஒரு கொட்டிலுக்கு கீழ இருந்த உனக்கு இப்ப வசதி வாய்ப்பு எல்லாம் வந்திட்டுதாம். கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்து ஐயர் வந்து பூசை செய்யுறாராம் எண்டு சொன்னா..
 
வேற என்ன சொன்னவா ..
 
சின்னதா ஒரு தேரும் செய்து கொண்டிருக்கினமாம் ..
 
அதுவும் உண்மை தான் .அதை விட வேற ஒண்டும் சொல்லேல்லையோ ..
 
இல்லையே ..
 
நான் குடியிருந்த புளிய மரத்தையே தறிச்சுப் போட்டாங்கள்
 
அட நாசமறுப்பு.. என்னத்துக்கு தறிச்சவங்கள் ..
 
எனக்கு கோயில் கட்ட தான் ..
 
அந்தப்பெரிய மரத்தை எப்பிடி தறிச்சவங்கள் ..
 
மிசின் வைச்சு அரிஞ்சு தள்ளிட்டான்கள் ..
 
அட கடவுளே ….
 
ஓம் கூப்பிட்டனியே …
 
இல்ல ....ஓம்... நீ கடவுள் எண்டதை ஒரு செக்கன் மறந்து போனன் .மிச்சத்தை சொல்லு ..
 
%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg
 
 
நான் செவிடு எண்டு நினைச்சு ஒவ்வொரு நாளும் சவுண்ட் பொக்ஸ் வைச்சு பாட்டு போடுறாங்கள் .விளங்காத சமஸ்கிருதத்தில பூசை வேறை
 
ஏன் உனக்கு சமஸ்கிரதம் விளங்காதோ ..
 
அடேய் நான் தமிழ்க்கடவுளடா எனக்கெதுக்கு சில்லெடுத்த சமஸ்கிருதம்.அதுவும் அவன் எனக்கு கணபதி கோமத்தை சொல்லிக்கொண்டு இடைக்கிடை வைரவராய நமகா ..எண்டு அடிச்சு விட. விசர் சனமும் அது வைரவர் மந்திரமெண்டு நினைச்சு கும்புடுதுகள் . அதைவிட மோசம் இப்போவெல்லாம் பச்சையரிசி பொங்கல் அவல் மோதகம் . எனக்கே சுகர் வந்திடும் போலவிருக்கு வடை எப்போவாவது ஒருதரம் கண்ணுல காட்டுறாங்கள் அதையும் படைசுப்போட்டு தொட்டால் சுடுவேன் எண்டு ஐயர் தீபத்தை முகத்துக்கு முன்னாலேயே காட்டுறான் .
 
 
 
 
 
சரி .உலகம் முழுக்க சுத்தி நாய் களைச்சுப் போய் விட்டுது அதுக்கு கொஞ்சம் தண்ணி வைக்கிறாயா.. என்றதும் நான் ஓடிப்போய் பூனையின் கிண்ணத்தை கழுவி தண்ணீரைஅதில் வைத்ததும் நாய் லபக் லபக்கென்று குடிதுக்கொண்டிருக்கும்போதே வேறொரு லபக் லபக் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தேன் .மேசையிலிருந்த விக்கியை போத்தலோடு எடுத்து அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருந்தான். "வைரவா நீயா" ..என்றதும் பெரிய மீசையை வருடி விட்டு "என்ன நீயா நானா" எண்டு. உன் பாட்டன் எனக்கு தினமும் சிரட்டையில் கள்ளும் நண்டு மீன் பொரியல் என படைத்தது விட்டுதான் அவனே சாப்பிடுவான் விசேட நாளில ஆட்டுக்கறியும் கிடைக்கும் ம்.. அதெல்லாம் ஒரு காலம் ..பெருமூச்சொன்றை விட்டான் ..
 
 
 
ஒரு உடுப்பு கூட போடாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறியே வெட்கமாயில்ல..
 
 
இல்ல...ஏனென்டால் பட்டுத் துணியில எனக்கு கோவணம் வேற கட்டி விடுறாங்கள்.அதுதான் எனக்கு வெட்கமாயிருக்கு
 
குளிரேல்லையோ எண்டு கேட்டலும் இடக்கு முடக்கா ஏதும் பதில்தான்வரும் ..சரி இவ்வளவு தூரம் என்னை எதுக்கு தேடி வந்தனி ?..
 
எனக்கு நீயொரு கோயில் கட்டவேணும்...
 
நான் அதிர்ந்துபோய் "வைரவா என்ன விளையாடுறியா" நானிருக்கிறதே வாடகை வீடு .கனடாப்பக்கம் போய்ப்பார் ..அங்கைதான் ஐயப்பன் தொடக்கம் அம்மா பகவான்னெண்டு ஊர் பேர் தெரியாதவனுக்கெல்லாம் கோயில் கட்டி வைசிருகிறான்கள் .கட்டாயம் உனக்குமொரு கோயில் யாராவது கட்டியிருப்பான்கள் ..
 
 
இப்பதானே சொன்னான் உலகம் முழுக்க சுத்தி வாறனெண்டு .அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை ஒரு வைரவர் கோயில் கூட இல்லை .
 
என்னட்டை அவளவு வசதியில்லையே வைரவா ..
 
 
நீ நினைக்கிற மாதிரி பெரிய கோயில் எல்லாம் வேண்டாம் எதோ ஒரு மரத்துக்கு கீழை ஒரு சூலம் மட்டும் போதும். எந்த சத்தம் சந்தடியுமில்லாமல் இருந்தாலே போதும் நீ விரும்பினா விஸ்கியோ வோட்காவோ அப்பப்போ ஒரு வடை மாலை அது போதும் .மொத்தத்தில என்னை நிம்மதியா இருக்க விட்டாலே போதும்.
 
உனக்கொரு ஐடியா சொல்லவா ..
 
ம் சொல்லு …
 
எதுக்கு.. கோயில் குளமெண்டு அலையாமல் பேசாமல் பேஸ் புக்கில ஒரு அக்கவுண்ட் திறந்து அதிலையே குடியிருக்லாமே ..
 
வைரவர் விழுந்து விழுந்து சிரிக்க நாய் வேற அவ்.... என்று உளையிட்டது ..
 
எதுக்கு இப்ப சிரிக்கிறாய் ..
 
அடேய் நான் பேஸ் புக்கில் குடியிருக்க தொடங்கினால் ஒவ்வொரு நாளும் ஒரு செல்பியாவது போடுவேன் அப்போ உங்கள் பிழைப்பு என்னாவது …...
 
அதுவும் உண்மைதான் வைரவா உன் உயரத்துக்கும் கலருக்கும்.. அதுக்கும் ..எல்லா லைக்கும் உனக்குத்தான் விழும் ..அதை விட உலகத்தில் உள்ள எல்லா வடையும் மாலையா வந்து உன் கழுத்தில தான் விழும் ..
 
 
வைரவர் மீண்டும் சிரித்தார் ...
 
 
சரி வைரவா உனக்கு வீட்டு தோட்டத்திலேயே நான் கோயில். ச்சே .. ஒரு சூலம் நடுகிறேன் கவலைப்படாதே என்றதும் எழும்பி மீண்டும் விஸ்கி போத்தலை வாயில் வைத்து உறிஞ்சி விட்டு வெளியே போக . நாயும் பின்னல் ஓடவே மீண்டும் ஒரு பெரும் மின்னல் தோன்றி மறைய அதன் வெளிச்சத்தில் கண்ணை மூடி திறந்து பார்த்தேன். வைரவரையும் அவரின் வாகனத்தையும் காணவில்லை
 
வைரவ ராசாவே உன் அற்புதமே அற்புதம். உன் நாமத்தின் பெயராலே.உன் வார்த்தையின் பெயராலே . சாத்தான்கள் விலகியோடட்டும்உனக்காக நாளை சூலம் நடுகிறேன் . என்று வாய் முணு முணுக்க தொடங்க ..
 
வைரவர் வீட்டுக்கு வந்திட்டுப்போனதை இப்பவே உடனே ஓடிப்போய் மனிசியை தட்டியெழுப்பி சொல்லமா எண்டு யோசித்தாலும். "ச்சே சும்மா தண்ணியை போட்டிட்டு புலம்பாதை" .. எண்டு எட்டி உதை விழும்.நாளைக்கு பக்குவமா எடுத்துச் சொல்லலாமெண்டு என்று நினைத்து பேசாமல் படுத்து விட்டேன் ..
 
ஆனாலும் நித்திரை வரவில்லை . வைரவருக்கு சூலம் நடுறதெண்டால் அவருக்கு பிடிச்சது பொதுவா புளிய மரம்தான் .இந்த ஊரில.. இந்த நாட்டிலையே புளிய மரமில்லை .வீட்டு தோட்டத்தில நிக்கிறது ஒரு வாழை மரம் . அடுத்தது தோடை மரம் .வாழை மரத்துக்கு கீழை சூலத்தை நட முடியாது ஏனென்டால் குளில் காலத்தில அது பட்டுப்போகும். அப்பிடி நிண்டு பிடிச்சாலும் குலை போட்டதும் வாழையை வெட்டும் போது வைரவருக்கும் வெட்டு விழும் . அதால தோடை மரத்துக்கு கீழயே நடலாம் அதுவும் புளித்தோடை தான். புளிக்கு புளி வைரவருக்கும் லொக்கேசன் செட்டாகும் .சூலத்துக்கும் சிரமப்பட தேவையில்லை கன காலமா கார் கராச்சுக்குள்ள நீள இரும்புக் கம்பியொண்டு கிடக்கு அதை இரண்டா வெட்டி ஒண்டை வளைச்சு மற்றதை நிமித்தி நடுவிலை ஒட்டி விட்டா போதும் வைரவர் ரெடி என்று நினைக்கும் போதே அந்த மகிழ்ச்சியில் நித்திரையாகிப் போனேன் .
 
காலை கண்விழித்தபோது மனிசி குளியலறையில் பல் தீட்டிக்கொண்டிருந்த நேரம் வைரவர் வந்ததை சொல்லாமா என்று யோசித்தேன் . வேண்டாம் எல்லா கடவுளையும் கிண்டலடிக்கிறதா எனக்கு மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு அதால சூலத்தை தோடை மரத்துக்கு கீழ நட்டு .வடை மாலை போடும்வரை சஸ்பென்சாக வைத்து விட்டு சொல்லாமென நினைத்து ..அவரிடம் போய் "என்னப்பா எனக்கு கொஞ்ச நாளாவே வடை சாப்பிட வேணும் போலவிருக்கு" .. எண்டதும் வாயிலிருந்த பிரஸ்சை எடுத்து விட்டு தொட்டியில் துப்பியவர் ..."உனக்கு எப்ப பாத்தாலும் இதே நினைப்பு அதுவும் காலங் காத்தாலை" .. என்று அக்கிளில் ஒரு குத்து விழுந்தது ..
 
மீண்டும் பல்லு தீட்ட தொடங்கியவரிடம் .."இல்லை உண்மையாவே உளுந்து வடை சாப்பிட வேணும் போலவிருக்கு வேலை முடிஞ்சு வந்ததும் பத்து வடையாவது சுட்டு வைக்கேலுமோ" என்றதும் .மீண்டும் பிரஸ்ஸை வாயிலிருந்து எடுத்து தொட்டியில் துப்பியதுமே . குத்து விழலாமென நினைத்து சட்டென்று இரண்டடி பாய்ந்து நின்று கொண்டேன் .."சரி சரி போ" ...என்றார் .தோட்டத்தில் வந்து நின்று தோடை மரத்துக்கடியில் எந்த பக்கமாக வைரவரை நடலாமென யோசித்தாலும் நம்ம வைரவருக்குத்தான் வாஸ்து ஆகமம் எல்லாம் கிடையாதே எதோ ஒரு பக்கம் ஊன்றி விட்டா போதும் .மரத்தடியை கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன் .மனம் முழுதும் வைரவர் நினைப்பிலேயே நிரம்பியிருந்தது போகும் வழியில் இருந்த தேவாலயத்தின் உச்சியில் இருந்த சிலுவை கூட சூலம் போலவே தெரிந்தது பிதா, சுதன், பரிசுத்த வைரவரின் பெயராலே ஆமென் என்று சூலம் போட்டுக் கொண்டேன் ..
 
வேலை முடிந்து வீடு வந்ததுமே வடை வாசம் மூக்கை துளைத்தது.வண்டியை விட்டிறங்கி கராச்சுக்குள் புகுந்து இரும்பை தேடத் தொடங்கியிருந்தேன் காணவில்லை .தேடிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த மனைவி ..
 
என்ன வேலையால வந்ததும் கராச்சுக்குள்ள நோன்டிக்கொண்டிருக்கிறியள் ..
 
இங்கின ஒரு இரும்புக்கம்பி கிடந்தது அதை தான் தேடுறன் ..
 
அதுவா கன காலமா கிடந்தது கறள் பிடிச்சுப்போய் கிடக்கெண்டு பழைய சமான் லொறி வரேக்குள்ள எடுத்து போட்டிடேன் ..
 
எனக்கு நேற்றிரவு விழுந்த இடிச்சத்தம் இப்போ காதில் கேட்டது ..வைரவா ஏனிந்த சோதனை இருந்த ஒரேயொரு இரும்புக்கம்பியையும் மனிசி தூக்கி எறிந்சிட்டுது நான் என்ன செய்வேன் . புதுசா கம்பி வாங்கி உனக்கு சூலம் செய்து கோயில் வைக்கிற அளவுக்கு என்னட்ட வசதியில்லை என்னை மன்னிசுக் கொள் என்று வேண்டி விட்டு சுட்ட வடை வீணாகிப் போக கூடாது தானே என்பதுக்காக அதை துக்கிக் கொண்டு போய் தோட்டத்தில் உள்ள மேசையில் வைத்துவிட்டு சாப்பிட கதிரையில் அமர்ந்ததும் எங்கேயோ இருந்த தேனீ ஓன்று விர் என்று வடையில் வந்து குந்த .. "கன காலத்துக்கு பிறகு நானே இப்பதான் வடை சாப்பிட போறேன் .ச்சே ..போ" ..என்று நான் கையால் விசுக்கி கலைக்க..வேகமாகமேலே எழும்பி ஒரு சுற்று சுற்றி விட்டு என்னை நோக்கி வந்தது ..
 
ஐயோ ..சாமி கண்ணை குத்திட்டுது என்று கண்களை பொத்தியபடி கத்தினேன் …..
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு பன்னிரண்டுக்கு மேல் இனி மதுவைத் தொடாதீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவர் தேனீயாய் வரமாட்டார், நாயாய்தான் வந்து பிடுங்குவார்.....வீதியில் செல்லும்போது கவனமாய் இருக்கவும்.கனநாட்களுக்கு பின் கண்டது சந்தோசம் சாத்திரியார்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனுஷனுக்கு தான் எத்தனை மதம் நாய்க்கு இல்லையே சாத்திரியார் வைரவருக்கு அவரின் வாகனத்துக்கும் கோவில் கட்டினால்  நாய் வைத்திருக்கும் வெள்ளைக்கல்  எல்லாம் தங்கள் நாய்க்கு ஒரு சாமி இருக்கெண்டு நாயுடன் வருங்கள்  அப்படியே நாய்க்கு தியான வகுப்பு அப்படி இப்படி நல்ல வருமானமும் கொட்டும் சாத்திரியை சந்திக்க அப்பாயின்மென்ட் எடுக்கும் நிலை வந்தாலும் வரும் .😄🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி ஏதோ கதை சுப்பர்.அது சரி அந்த மிச்ச வடை என்னாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, சுவைப்பிரியன் said:

சாத்திரி ஏதோ கதை சுப்பர்.அது சரி அந்த மிச்ச வடை என்னாச்சு.

இப்ப வடையா முக்கியம் அந்த வடைய வச்சி இன்னொரு போத்தல தட்டியிருப்பார்

கதை சூப்பரு சாத்து 

Link to comment
Share on other sites

17 hours ago, Kavi arunasalam said:

இரவு பன்னிரண்டுக்கு மேல் இனி மதுவைத் தொடாதீர்கள்

நன்றி அண்ணே

17 hours ago, suvy said:

வைரவர் தேனீயாய் வரமாட்டார், நாயாய்தான் வந்து பிடுங்குவார்.....வீதியில் செல்லும்போது கவனமாய் இருக்கவும்.கனநாட்களுக்கு பின் கண்டது சந்தோசம் சாத்திரியார்......!   😁

கருத்துக்கு நன்றி சுவியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வைரவர் கோயில் இன்னும் புலம்பெயர் நாடுகளில் வரவில்லை என்று ஒரு ஆராய்ச்சி செய்யத்தான் இருக்கு!

2004 இல் நான் யாழில் எழுதியது!

 

எனக்கு ஒரு வைரவர் கோயில் திறக்க ஆசை. ஹலால் லைசென்சும் எடுத்தால் பலி கொடுக்கிறதும் இலகு. வைரவ மடை பெரிசாக வைக்கலாம். மற்ற எல்லாக் கோயில்களையும் விட அதிக வருமானம் வரும். ஐயரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை. ஆரும் பங்காளாராக விரும்பினால் சொல்லுங்கோ

https://yarl.com/forum2/thread-6909-post-32074.html#pid32074

 

கொரோனாவுக்குத் தப்பினாலும் வேலை இருக்குமோ தெரியாது! இல்லாட்டி சாத்திரியோட கூட்டுச் சேர்ந்து வைரவர் கோயில்களைக் கட்டலாமோ என்று யோசிக்கிறன்.😃

 

Link to comment
Share on other sites

On 7/4/2020 at 23:37, பெருமாள் said:

மனுஷனுக்கு தான் எத்தனை மதம் நாய்க்கு இல்லையே சாத்திரியார் வைரவருக்கு அவரின் வாகனத்துக்கும் கோவில் கட்டினால்  நாய் வைத்திருக்கும் வெள்ளைக்கல்  எல்லாம் தங்கள் நாய்க்கு ஒரு சாமி இருக்கெண்டு நாயுடன் வருங்கள்  அப்படியே நாய்க்கு தியான வகுப்பு அப்படி இப்படி நல்ல வருமானமும் கொட்டும் சாத்திரியை சந்திக்க அப்பாயின்மென்ட் எடுக்கும் நிலை வந்தாலும் வரும் .😄🤑

நன்றி

On 8/4/2020 at 10:03, சுவைப்பிரியன் said:

சாத்திரி ஏதோ கதை சுப்பர்.அது சரி அந்த மிச்ச வடை என்னாச்சு.

அதை விடுவேனா

On 8/4/2020 at 10:35, தனிக்காட்டு ராஜா said:

இப்ப வடையா முக்கியம் அந்த வடைய வச்சி இன்னொரு போத்தல தட்டியிருப்பார்

கதை சூப்பரு சாத்து 

நன்றி

On 11/4/2020 at 09:51, கிருபன் said:

ஏன் வைரவர் கோயில் இன்னும் புலம்பெயர் நாடுகளில் வரவில்லை என்று ஒரு ஆராய்ச்சி செய்யத்தான் இருக்கு!

2004 இல் நான் யாழில் எழுதியது!

 

எனக்கு ஒரு வைரவர் கோயில் திறக்க ஆசை. ஹலால் லைசென்சும் எடுத்தால் பலி கொடுக்கிறதும் இலகு. வைரவ மடை பெரிசாக வைக்கலாம். மற்ற எல்லாக் கோயில்களையும் விட அதிக வருமானம் வரும். ஐயரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை. ஆரும் பங்காளாராக விரும்பினால் சொல்லுங்கோ

https://yarl.com/forum2/thread-6909-post-32074.html#pid32074

 

கொரோனாவுக்குத் தப்பினாலும் வேலை இருக்குமோ தெரியாது! இல்லாட்டி சாத்திரியோட கூட்டுச் சேர்ந்து வைரவர் கோயில்களைக் கட்டலாமோ என்று யோசிக்கிறன்.😃

 

நான் ரெடி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.