Jump to content

காமரூபிணியும் கற்சிற்பியும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                     
                             உ.

 காமரூபினியும்  கற்சிற்பியும்.


அயிரை மீன்கள் உருண்டு பிரண்டு 
நிரை நிரையாய் விளையாடும் ஆறு.
கரையினில் குறுமணல் மேடுதனில் 
தரையிலே இருந்தது தங்குமோர் குடில்.

கற்சிற்பியவன் கலங்கி நின்றான் --- கையில் 
சிற்றுளி கொண்டு செதுக்கி செப்பனிட்ட 
கற்சிற்பத்தை கண்ணால் வருடியபடி 
கண்ணில் நீர் ஒழுகியபடி.
மெய்தீண்டாது வான் பார்த்து சிந்தனையுடன்.

அலைபுரண்டோடும் ஆற்றின் 
கரைபுரண்டு தெறிக்கும் திவலையின் 
நுரைகளுடன் கையளைந்து 
நிரை கொங்கைகள் சதிராட 
நீந்திக் களிக்கும் மங்கையவள் 
ஈரேழு அகவையவள் இளமைப் 
பருவத்தின் தலைவாசல் தீண்டுவாள்.

சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க 
சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் 
எடைபோல் குறைந்த உடையுடன் 
குடில் நோக்கி வருகின்றாள் குமரி 
குங்குமம் இட்டறியாத பிறைநுதலாள்.  

வைத்த விழி வாங்காது 
கன்னிச் சிற்பத்தைப் பார்த்து 
நிற்கின்றான் கட்டிளங்காளை 
முகத்தில் கவலையின் ரேகை --- அதனால் 
அருகில் வந்த அதிசயத்தையும் கண்டிலன்.

கைவளை ஒலியெழுப்ப கடைக்கண் நோக்கியவனின் 
முழுக்கண்ணையும் ஈர்க்கின்றாள் மோகனப் புன்னகையால் 
முணுமுணுக்கின்றான் யார் நீ , உனக்கென்ன வேண்டும் 
வினா தொக்கி நிற்க விழி தொங்காத அழகை தொட்டு வர.

அற்புதம்: இந்த அழகிய சிலையை நீதான் செதுக்கினாயா 
சிற்பம் கேட்க சிற்பியும் தன்னிலை மீண்டான் 
ஆமாம், நான்தான் செதுக்கினேன் ஆயினும் 
அதில் ஒரு சிக்கல் நவின்று நின்றனன்.

நன்றாகத்தானே இருக்கின்றது பின் ஏன் இந்த விசனம் 
நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் நீ நன்றாகப் பார்த்தாயா 
கற்குவியலின் மேலே கடுகி ஏறினள் கன்னி 
சிற்பத்தின் முன்னால் ஒரு சிற்பமாய் நின்றனள் 

நெற்றி அழகாய் இருக்கிறது என்கிறாள் 
அவன் விழியருகே தன் இடையசைய 
ம்....நெற்றி வடிப்பது சுலபம் --- அதன் மேல் 
ஜடை இழைப்பது கடினம்.
ஆம் :கச்சிதமாய் பின்னியிருக்கிறாய் 

கண்கள் அழகாய் இருக்கின்றன 
ஆனால் கருமணிகள் தெரியவில்லை.
ஆம் பெண்ணே; 
ம்....ரூபிணி. காமரூபிணி என் நாமம்.
நல்லது ரூபிணி: சிலை பூர்த்தியடைந்த பின்தான் 
கண்கள் திறக்கும் கருவிழிகள் கதை பேசும்.

ஓ....அப்படியா....!
ஆம்....அப்படித்தான் சிற்பசாஸ்திர வேதம் சொல்கிறது....!

பவளஇதழ்களை பக்குவமாய் வடித்திருக்கிறாய் 
ஆம் ரூபிணி, அதைவிட உதட்டுக்குள் சிரிக்கும் 
பற்களை வடிப்பது சிரமம்.
உதடுகளின் செம்மை எப்படி சாத்தியம் சிற்பி. 
அவற்றில் சிலமூலிகைகள் வெற்றிலைச்சாறு 
சுண்ணாம்புடன் எனது உதிரமும் கலந்திருந்தது.

ஆமாமாம், சிலையின் சிரிப்பு கிறங்கடிக்குது.
தாடையும் கழுத்தும் காதுகளும் கன்னங்களும் 
அங்கலட்ஷணமாய் இருக்கின்றன சிற்பி.
உண்மைதான், அவைகள் சிறிது பிசகினாலும் 
அவலட்ஷணமாய் ஆகிவிடும். காதில் தோடும் 
கழுத்தில் நகைகளும் செதுக்க கஷ்டப்பட்டேன்.

நெடிய தோள்களும்  அபிநயிக்கும் கரங்களும் 
அதில் ஓடும் நரம்புகளும் அற்புதம் சிற்பி .
ஆம் ரூபிணி: அந்த கை வளையல்களை 
தட்டிப்பார் அசைந்து அசைந்து ஒலியெழுப்பும்.

அசைத்து பார்த்தவள் ஆச்சரியத்துடன் 
ஓமோம் அவைகள் கற்களா...!
இங்கு கற்களைத்தவிர வேறொன்றும் 
கிடையாது ரூபிணி.

தயங்குகிறாள் வந்தவள்.... என்ன ரூபிணி 
என்ன தயக்கம் சொல்லு....!
வந்து....பெண்ணின் கொங்கைகள் 
கொப்பளித்து நிற்கின்றனவே--- எனில் 
மிகக் காமம் கொண்டு செதுக்கினீரோ.
 
காமம் கொண்டல்ல, கவனம் சிதறாமல் 
அதை செப்பனிட்டேன். கொங்கைகளின் 
மேலால் நழுவும் துகிலை நீ பார்க்கவில்லையா 
அதை வடிக்க சில மாதங்கள் சென்றன தெரியுமா.
ஓ...ஆமாமாம், இது ஒரு விந்தைதான்.
இதை நீ எங்கு கற்றாய்....!

எங்குமில்லை இங்குதான். தேடல் உள்ளவனுக்கு 
இயற்கை கற்றுத்தரும்.
சொல்லியபடியே  அவளைப் பார்த்தவன் 
ஆங்கே கல்மேல் கிடந்த ஆடியை (கண்ணாடி)
எடுத்து அவள் முன் பிடிக்கிறான்.அதில் அவள் 
தன்னைப் பார்க்கிறாள். ரவிக்கையணியாத 
அவள் மேனியில் மார்பை மூடியபடி துகில் 
தோளில் சரிகிறது.ஈரத்துகிலினுடாக மார்பகங்கள் 
மதர்த்து நிற்கின்றன. சட்டென்று  கைகளால் 
புள்ளடியிட்டுக் கொள்கிறாள்.

நிலைமையை மாற்ற எண்ணி, மெலிந்த இடையும் 
நாபிச் சுழியும் நயமாகப் படைத்திருக்கிறாய் நீ ....!
ஆமாமாம், அந்த ஒட்டியாணம் பார்த்தாயா....!
பார்த்தேன், அதில் பூக்கள் எல்லாம் வெறும் 
மொட்டுகளாக இருக்கின்றன.மலரவில்லை.....!
நான் வடித்த கன்னியும் இன்னும் மலராத மொட்டுத்தான்....!


நாணத்துடன் தலை கவிழ்ந்தவளின் கவனத்தை 
பாதங்களும் சிலம்பும் ஈர்க்கின்றன.
ஆகா, பாதங்களும் அவற்றின் விரல்கள் நகங்கள் 
எல்லாம் அளவோடு அழகழகாய் இருக்கின்றன சிற்பி.
அப்படியே அந்தக் கொலுசை உரசிப்பார்.
சுட்டுவிரலால் எட்டித் தொட்டுப்பார்க்க கொலுசில் இருந்து 
கல்லினாலான மணிகள் கலகலக்கின்றன.....!

ஓ......கடவுளே, நீதான் எவ்வளவு திறமையானவன்.
கெண்டைக்கால் தொடை இடை பிருஷ்டம் எல்லாம் அந்தந்த 
அளவுப் பிரமானங்களில் செதுக்கியிருக்கிறாய். பின் ஏன் 
இந்த விசனம், கண்திறந்துவிட என்ன தயக்கம்......!

ஏறிநின்ற கல்லிலிருந்து ஒய்யாரமாய் சாய்ந்தபடி கேட்கிறாள்.
சிற்பம் இன்னும் பூர்த்தியாகவில்லை ரூபிணி.சிறு வேலை 
பாக்கியிருக்கிறது.அதை நீ பார்க்கவில்லையா....!
ம்....ம்.....பார்த்தேன், ஏன் உனக்கு அதில் அறிவில்லையா 
அல்லது அனுபவமில்லையா.....!
ஆம் உண்மைதான், எனக்கு அதில் அனுபவமில்லை,அறிவுக்காக 
பல ஏடுகளைப் புரட்டினேன், அவைகள் பூடகமாக தெரிவித்தனவே தவிர 
புதிரை விடுவிக்கவில்லை.பல மாதங்கள் கடந்து சென்று விட்டன.
இன்றும் முடியாவிட்டால்  இனி இந்தச் சிலையை உடைத்து விடுவது 
என்னும் முடிவில் உறுதியாய் இருக்கிறேன்.

அவள் சாய்ந்து நின்ற கல்லின் மேல் இருந்த சுத்தியலையும் 
உளியையும் எடுக்கிறான்.கொஞ்சம் பொறு சிற்பி,
அவள் அவன் கையைத் தடுக்க  உளி தவறி அவள் கால்விரல்மீது 
விழுகின்றது.இரத்தம் கொப்பளிக்க அவள் அம்மா என்றலறியபடி 
குந்திய வேகத்தில் காற்றிலே காய்ந்திருந்த துகில் சற்றே நழுவிய 
ஒரு நொடிப்பொழுதில் ....அந்த ஒருநொடியில் அவன் முகத்தில் பிரகாசம்.
அவளைப் பொருட்படுத்தாமல் உளியை எடுத்தவன் சிலையின் இடையில் 
ஒரு விரற்கிடை யளவில் துகில் மறை காயாக அல்குலை செதுக்க 
உளியில் இருந்த அவள் உதிரமும் அதில் இழைந்து சிலை பூரணமாகி 
கண் திறக்கிறது.
அவள் நினைவு வர திரும்பிப் பார்க்கிறான் அவள் எட்டச் செல்கிறாள்.
ரூபிணி நில் போகாதே ....!
என்ன இயற்கை உனக்கு கற்பித்து விட்டது போல.....!
ஆமாம் அறிவைத்தான் தந்திருக்கிறது.ஆனால்.....!
நின்று திரும்பிக் கேட்கிறாள், ஆனால் என்ன ....!
அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரை,நீ உயிர் குடுத்த சிலை உள்ளவரை,
 நிலமும் நீலவானம் உள்ளவரை......!

யாழ் 22 அகவைக்காக.....!
ஆக்கம்......!
சுவி......! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா என்ன தலைவா இப்படி பிய்த்து உதறிவிட்டியள்.. பாலியாத்தில் கல்லுமணல் சளசளவென்று ஒலி எழுப்ப உதிர்ந்த விழுந்த சருகுகள் ஆற்றின் மேல் மிதந்தும் நெளிந்தும் வளைந்தும் அலைமகளோடு விளயாட ஆத்துநீர் ஆர்ப்பரித்து ஓடியதுபோல் தமிழ்மகளை உங்கள் கவிதையில் தவழவிட்டுள்ளீர்கள்.. 

யாழ்மேல் உங்கள் அன்பும் பிரியமும் உங்கள் கவிதைகளில் நிறைந்து வழியக்கண்டோம்..

ஊர் ஊராய் போய் அரச சபைகளில் யான் பாடிப்பெற்ற பொன்னையும் மணியையும் அத்தனையையும் உங்கள் தமிழ்கண்டு மகிழ்ந்து தந்துவிட்டேன் புலவரே.. 

நீர் வாழ்க.. நின் தமிழ் வாழ்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கற்பனை வளம் அண்ணா. தொடர்ந்தும் இப்படியான படைப்புகள் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்களத்தில் பார்த்து பொறாமைப்படும்/பெருமைப்படும் ஒரே ஒருவர் என்றால் அது சுவியர் மட்டும் தான்.
எழுத்துக்களும் எழுத்து நடைகளும் பிரமிக்க வைக்கும்.
சில இடங்களில் கருத்து சொல்லக்கூட அருகதை எனக்கில்லை என்ற உணர்வுடன் விலக்கிச் செல்லவேண்டி இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அருமையான கவிதை, லக் டவுணில் கற்பனை ஆறக ஒடுகின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பியின் வடிவில்  சிறகுவிரித்த  சுவியவர்களுக்குப் பாராட்டுகள். கவிதை ரசபானமாய்  நகர்ந்து  ரதிபாகமாய் ..................  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா,தங்கச்சி உள்ளே வரலாமா 😙

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.சுவி உங்கள் கற்பனை வளம் பிரமிக்க வைப்பதோடு உங்கள் எழுத்தைப் பார்த்து பொறாமைப்படவும் வைக்கிறது. மிக அபாரமான கற்பனை. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

எப்படி பாராட்டுவது  என்று தெரியல. பாராட்டுவதற்கு வார்த்தைகளும் வரவில்லை.

கவிதை நயமாக நளினமாக இலகுவாக புரியக்கூடியதாக இருந்தது.

வாழ்த்துக்கள் சுவி அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா ,
முதலில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், கவிதை படைக்கும் திறனுக்கும் ஓர் அஷ்டாங்க நமஸ்காரம்.
உங்கள் கவிதை படைப்பை வாசிக்கும் போது , சாண்டில்யனின் எதோ ஒரு புத்தகத்திக்குள் வந்து விட்டோமா என்று உணரும் அளவிட்கு வர்ணனைகள், சொல் நயம், கட்பனை வளம் .... அபாரம்!!!
சில எனக்கு தெரியாத புதிய தமிழ் சொற்களையும்  காணுகிறேன். 
இந்தகைய படைப்பாளிகள் யாழ் களத்தில் வளம் வருவது எமக்கெல்லாம் பெருமை.
இப்படி தொடர்ந்தும் எழுதுங்கள் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம்.  

பின் குறிப்பு:
நீங்கள் கவிதையில் வர்ணித்த அந்த பதினாலு வயது ....கண்முன்னே வந்து என்னை தடுமாற வைக்கிறது.  நானும் அந்த சிற்பியாய் அவள் அழகில் தொலைந்தே போகிறேன்... 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 07:32, suvy said:

சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க 
சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் 
எடைபோல் குறைந்த உடையுடன் 
குடில் நோக்கி வருகின்றாள் குமரி 
குங்குமம் இட்டறியாத பிறைநுதலாள்.  

எப்படி உங்களால் இப்படி?
அருமை அருமை சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 00:32, suvy said:

காமம் கொண்டல்ல, கவனம் சிதறாமல் 
அதை செப்பனிட்டேன். கொங்கைகளின் 
மேலால் நழுவும் துகிலை நீ பார்க்கவில்லையா 
அதை வடிக்க சில மாதங்கள் சென்றன தெரியுமா.
ஓ...ஆமாமாம், இது ஒரு விந்தைதான்.
இதை நீ எங்கு கற்றாய்....!

அருமையானன் கவிதை ...தமிழ் கொஞ்சி விளையாடுகின்றது .....எனக்கு சாதாரண பேச்சு தமிழே எழுத வருதில்லை .....இலக்கண இலக்கிய ...வள்ளுவன் காலத்து தமிழ் எல்லாம் புகுந்து விளையாடுகின்றது உங்களது கவிதையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 18:10, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவா என்ன தலைவா இப்படி பிய்த்து உதறிவிட்டியள்.. பாலியாத்தில் கல்லுமணல் சளசளவென்று ஒலி எழுப்ப உதிர்ந்த விழுந்த சருகுகள் ஆற்றின் மேல் மிதந்தும் நெளிந்தும் வளைந்தும் அலைமகளோடு விளயாட ஆத்துநீர் ஆர்ப்பரித்து ஓடியதுபோல் தமிழ்மகளை உங்கள் கவிதையில் தவழவிட்டுள்ளீர்கள்.. 

யாழ்மேல் உங்கள் அன்பும் பிரியமும் உங்கள் கவிதைகளில் நிறைந்து வழியக்கண்டோம்..

ஊர் ஊராய் போய் அரச சபைகளில் யான் பாடிப்பெற்ற பொன்னையும் மணியையும் அத்தனையையும் உங்கள் தமிழ்கண்டு மகிழ்ந்து தந்துவிட்டேன் புலவரே.. 

நீர் வாழ்க.. நின் தமிழ் வாழ்க..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....!   👍

On 8/4/2020 at 00:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையான கற்பனை வளம் அண்ணா. தொடர்ந்தும் இப்படியான படைப்புகள் தாருங்கள்.

இருந்திருந்திட்டு இப்படியெல்லாம் வரும். இனியும் வரலாம்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.....!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 16:32, suvy said:

அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரை,நீ உயிர் குடுத்த சிலை உள்ளவரை,
 நிலமும் நீலவானம் உள்ளவரை......!

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம் அவர்களே என் உயிர் உள்ளவரை உங்களையும் மறக்க முடியாது நண்பரே நீங்கள் மென்மேலும் சிறப்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.......!  🌹

Oiseaux de fleurs Fonds D'écran Animé iPhone - Télécharger sur l ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ...யாழ்களத்தில் கவிஞர்கள் மட்டுமல்ல ஓவியர்களும் இருக்கிறாா்கள். பாராட்டுக்கள் கவி அருணாச்சலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kavi arunasalam said:

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரைஇநீ உயிர் குடுத்த சிலை உள்ளவரைஇ
நிலமும் நீலவானம் உள்ளவரை......!

இந்த கவிதை வரிகளுக்கு இதை விட இன்னும் சிறப்பாக ஒரு ஓவியம் 
சாத்தியமா?
அருமை கவி அருணாச்சலம். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

என் உயிர் உள்ளவரை உங்களையும் மறக்க முடியாது நண்பரே

உயிர் இல்லாத போது நினைக்கவே முடியாது. நல்லது Suvy உங்கள் அன்புக்கு நன்றி.

உங்கள் கவிதைக்கு நான் இரண்டு படங்கள் வரைந்தேன். முதலாவதில் அவ்வளவாக திருப்தி கிடைக்காததால் இரண்டாவதை வரைந்துஇங்கே பதிந்திருந்தேன். நான் கிறுக்கிய முதலாவது படத்தை இங்கே இணைக்கிறேன்  கவிதைக்குப் பொருந்தாவிட்டால் கவலை வேண்டாம். படத்துக்கு ஏற்ப இன்னொரு கவிதையை எழுதி விடுங்களேன்

567-ECFE1-4534-4-ED1-A797-88-B296084-FAD

Link to comment
Share on other sites

நன்றிகள் பல கவி சுவிக்கு.சுவி தந்த கவிக்கு.கவித்துவம் கவிமுழுக்க கரைபுரண்டு ஓடுகிறது.தொடருங்கள் ஆவலாய் உள்ளேன் அள்ளிப்பருக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

சுவியின் கவிதைக்கு உயிர் கொடுத்த ஓவியம், அருமை👍👍👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.