Jump to content

பொறுப்பற்ற அதிகாரிகளால் யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிதவிக்கும் பெற்றோர்


Recommended Posts

யாழ்ப்பாணம் - அராலி பிரதேசத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்ட இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் கொட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்த போது பொதுச் சுகாதார பரிசோதகர் வந்து உறுதிப்படுத்தினால் தான் வண்டியில் ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுச் சுதாதார பரிசோதகர் மற்றும் சுகாதார சேவைகள் ஊழியர்கள் இவருக்கு சாதாரண நோய்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று மருந்து வழங்குமாறு தெரிவித்துச் சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவர் அவரை அராலி கொட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவருடை நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதேச வைத்தியசாலையில் நின்ற அம்பியுலன்ஸ் வண்டியின் உதவியை கேட்டபோதும் நீண்ட நேரத்தின் பின்பே அவ்விளைஞன் அம்பியுலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மதியம் 2.45 மணிக்கு இளைஞனின் மரணத்தில் முடிந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை முடிவு வரும் வரையில் குறித்த இளைஞனுடன் வந்த இருவரும் யாழ். போதனா வைத்திசாலையில் தனிமைப்படுத்தலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தான் அறிய முடியும்.

பிரதேச ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச சுகாதார சேவைகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தான் ஒழுங்கமைக்கப்படுகின்றது என்றார்.

வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பானர் வைத்திய கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது. நான் நடவடிக்கை எடுப்பதற்குள் நோயாளி இறந்து விட்டார்.

தற்போதைய இடர் நேரத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே சாதாரண நோய் என தம்மை அடையாளப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்த சம்பவங்கள் பதிவாகியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறான அம்பியூலன்ஸ் பிரச்சினையின் போது அவசர அழைப்பான 0212226666, 0212217982 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த போது, உரிய நேரத்தில் நோயாளர் காவு வண்டி வந்திருக்குமாயின் அவனின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று கலங்கி நிற்கிறார்கள் பெற்றோர்கள்.

உயிரிழந்த இளைஞன் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர் என்றும் கூறுப்படுகிறது. அதிகாரிகள் பொறுப்பற்ற செயல்பாடுகளினாலும் அசட்டையீனங்களினாலும் இந்த மரணங்கள் சம்பவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நேரங்களின் போது பொது மக்களின் தொலைபேசி அழைப்புக்களுக்கு உரிய முறையில் பதில் வழங்கி அவர்களுக்கான சேவையினை அதிகாரிகளும் ஊழியர்களும் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தாமதமாக சென்ற நோயாளர் காவு வண்டியில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் கூட இல்லை என உயிரிழந்த இளைஞனை அழைத்துச் சென்ற மற்றொரு இளைஞன் கருத்து வெளியிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/140748?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

யாழில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்

யாழ். மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக தொடர்ச்சியாக நீடித்துவரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சை பெறும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதி, தென்மராட்சி, வடமராட்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை காணப்படுகின்றது.

இதய சிகிச்சை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், மனநோய், கண் நோய், போன்ற நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை பெறுவதிலேயே நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ. சத்தியமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றுக்குப் பின்னர் மாதாந்த சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் அவர்களுக்கான மருந்துகள் தொலைபேசி மூலமாக வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இருப்பினும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சில பேருக்கு மருந்துகள் கிடைப்பதில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மருத்துவர்கள் அவர்களுக்கு மருந்து வழங்குமாறும் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

https://www.ibctamil.com/srilanka/80/140757

Link to comment
Share on other sites

1 மாதம் போயும் அம்பியூலன்ஸ் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு அங்கிகளை பொறுப்பிலுள்ள மருத்துவ அதிகாரிகள் செய்து குடுக்க தவறியுள்ளனர்.

தலைவலி என்டால் தலையை வெட்டு என்டு முடிவெடுக்கிற முட்டாள்கள் தான் நோயாளர்களுக்கு உதவாத நடைமுறைகளை முடிவு செய்றாங்கள் என்டு தெரியுது.

இந்த அநியாய உயிர்ப்பலியாவது இந்த முட்டாள்களின் கண்களை திறக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவாலும், பட்டினியாலும், அலட்சியத்தாலும் போகிறவர்கள் போக. மிஞ்சி இருக்கிறதை இருக்கிறவர்கள் காணவேண்டியதுதான். அறிவியலும் கைவிட்டது, கண்டுபிடிப்புகளும் முடியவில்லை.  யாரை நோவது?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - அராலியில், திடீரென உடல் நலம் பாதித்த இளைஞனை உரிய நேரத்தில் வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர் ஒத்துழைக்காமையினால் குறித்த இளைஞன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 30 வயதான நாகேந்திரன் புஸ்பராசா என்பவரே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் 1 1/2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில், குறித்த இளைஞன் தேக ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளினிக் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவசர அம்பியூலன்ஸ் வண்டிக்கு அழைப்பை எடுத்த போது பொதுச் சுகாதார பரிசோதகர் வந்து உறுதிப்படுத்தினால் தான் வண்டியில் ஏற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொதுச் சுதாதார பரிசோதகர் மற்றும் சுகாதார சேவைகள் ஊழியர்கள் இவருக்கு சாதாரண நோய்தான் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்து வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவர் அவரை அராலி கொட்டைக்காடு பிரதேச வைத்தியசாலைக்கு சென்ற போது அவரது நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பிரதேச வைத்தியசாலையில் நின்ற அம்பியூலன்ஸ் வண்டியின் உதவியை கேட்டபோதும் நீண்ட நேரத்தின் பின்பே அவ்விளைஞன் அம்பியூலன்ஸில் ஏற்றப்பட்டுள்ளார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

காலை 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் மதியம் 2.45 மணிக்கு இளைஞனின் மரணத்தில் முடிந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா உள்ளதா என்ற பரிசோதனை முடிவு வரும் வரையில் குறித்த இளைஞனுடன் வந்த இருவரும் யாழ். போதனா வைத்திசாலையில் தனிமைப்படுத்தலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில் தான் அறிய முடியும். பிரதேச ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச சுகாதார சேவைகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தான் ஒழுங்கமைக்கப்படுகின்றது என்றார்.

வடக்கு மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பானர் வைத்திய கலாநிதி ஆர். கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் தகவல் கிடைத்தது. நான் நடவடிக்கை எடுப்பதற்குள் நோயாளி இறந்து விட்டார். தற்போதைய இடர் நேரத்தில் நோயாளர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படுகின்றது.

ஏற்கனவே சாதாரண நோய் என தம்மை அடையாளப்படுத்தி வைத்தியசாலையில் சேர்த்த சம்பவங்கள் பதிவாகியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறான அம்பியூலன்ஸ் பிரச்சினையின் போது அவசர அழைப்பான 0212226666, 0212217982 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://seithy.com/breifNews.php?newsID=243810&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.