Jump to content

முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! -கண்ணீர் கடிதம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! -கண்ணீர் கடிதம்!

36.jpg

 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணம் இஸ்லாமியர்களே என்ற வதந்தி சில ஊடகங்களாலும், சமூக தளங்களில் கணிசமானோராலும் முன்னெடுக்கப்பட்டதால், சமுதாயத்தின் கீழ் நிலையில் இருக்கும் முஸ்லிம் வியாபாரிகளின் நிலை சொல்லொணா துயரத்துக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா தொற்றுக்கும் தப்லீக் மாநாட்டுக்கும் தொடர்புபடுத்தி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஒட்டுமொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 33% மட்டுமே பேர் தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளார் லவ் அகர்வால் குறிப்பிட்ட பிறகும்.. ஒட்டுமொத்த கொரோனா தொற்றும் முஸ்லிம்களால் ஏற்பட்டது போல ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. அரசுத் துறைகளுக்கும் இஸ்லாமிய தலைவர்களுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடந்தும் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது போல தெரியவில்லை.

இந்த நிலையில்தான் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து மனித நேய மக்கள் கட்சி தலைமைக்கு ஓர் முஸ்லிம் வியாபாரி வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கும் கடிதம், அக்கட்சிப் பிரமுகர்கள் மூலமாக நமக்குக் கிடைத்தது. ‘இதை வெளியிட்டு தமிழ் சமூக இணக்கத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

அந்தக் கடிதம் இதோ...

“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

இன்று நிலவிவரும் அசாதாரண சூழலில் நம் சமுதாய மக்களை தனிமைப்படுத்தும் வேலைகள் அதிகமாகி வருகிறது. இதனால் மேல்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய பாதிப்புகள் இல்லையென்றாலும், அடித்தட்டு முஸ்லிம் மக்களுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றன. முஸ்லிம் சிறு வியாபாரிகளிடம் காய்கறி, பால், மாவு போன்ற அத்யாவசிய பொருட்களை கூட மக்கள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்கள் சென்று வருவதே தடைசெய்யப் படுகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் பகுதியான- காலனி பகுதிகள்.

எனவே, நம் தலைமை மற்ற அரசியல் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு, சமுதாய மக்கள் படும் சிரமங்களை எடுத்துக்கூறி, அந்த அந்த பகுதிகளில் சமூக ஒற்றுமை ஏற்பட வழிவகை செய்ய அவர்களின் மாவட்ட நகர நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் - என கோரிக்கை வைத்தால் இங்கு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், இதை வலியுறுத்தி மாற்று மத தலைவர்களிடம் நேர்காணல் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிரலாம்.

 

இதற்காக ஆலோசனைகளை தலைமை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்” என்று விருத்தாசலத்தில் இருந்து முஸ்லிம் வியாபாரி ஒருவர் அக்கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

சமூக இடைவெளியே கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்று மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில்... முஸ்லிம் இன ஒதுக்கல் நடைபெறுவதற்கான வெளிப்படையான ஆரம்ப அறிகுறி இது. அந்த வியாபாரி குறிப்பிட்டது போல மாற்று மதத் தலைவர்களிடம் இஸ்லாமிய மதப் பிரமுகர்கள் பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இல்லையேல் கொரோனா முடிந்தும் இந்த சமூக இடைவெளி நீடிக்கும் அபாயம் உண்டு.
 

https://minnambalam.com/public/2020/04/07/36/muslim-small-sellers-rejected-by-people-letter-corona-effect

Link to comment
Share on other sites

அவர்கள் தப்பு மிக அதிகம் யூரியூப் இல் tic tok இப்படி பல வலைத்தளங்களில் அவர்கள் கக்கும் மத இன குரோதங்கள் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமை மிக பெரிய துவேசங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு கோஷங்கள் அவர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்கி விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிலிம்கள் முதலில் தாங்கள்  தமிழர் அதன்பின் முஸ்லிலிம் என்பார்கள் . இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் அதட்க்கு நேர் எதிர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிலிம்கள் முதலில் தாங்கள்  தமிழர் அதன்பின் முஸ்லிலிம் என்பார்கள் . இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் அதட்க்கு நேர் எதிர் .

அது அவர்கள் பிழை இல்லை.
  
சிங்களவனினின்  பிரித்தாளும் சூழ்ச்சியினால், றிசாட், ஹிஸ்புல்லா, அதாவுல்லா வகையறாக்கள் ஆடிய ஆட்டம்.

இன்றய நிலையில் அனைவரும் பல்லு பிடுங்கப்பட்டு இருப்பதால், ஆகாயத்தில் இருந்து நிலத்துக்கு வருவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

அது அவர்கள் பிழை இல்லை.
  
சிங்களவனினின்  பிரித்தாளும் சூழ்ச்சியினால், றிசாட், ஹிஸ்புல்லா, அதாவுல்லா வகையறாக்கள் ஆடிய ஆட்டம்.

இன்றய நிலையில் அனைவரும் பல்லு பிடுங்கப்பட்டு இருப்பதால், ஆகாயத்தில் இருந்து நிலத்துக்கு வருவார்கள். 

நிலத்துக்கு வந்தால் நல்லது. ஆனால் ஈழத்தீவில்  முஸ்லிம் சகோதரர்கள் மாறுவார்களா? புலிகளின் காலத்தில் தமிழர்களின் அரசியலில் முன்னேற்றகராமான நகர்வுகள் ஏற்படும்போதெல்லாம்  ஆதரிப்பதுபோல் காட்டியவாறு; பெரும்பான்மைக் கட்சிகளோடு பேரம் பேசியவர்களல்லவா? இப்போது திருந்திவிடுவார்களா? ஏனென்றால்; மிகப்பலவீனமான தமிழ் அரசியல் தலைமைகள்  மற்றும் கட்சிகள்.  கிழக்கு மாகாணசபையில் கிடைத்த வாய்ப்பைக்கூடச் சரியான அரசியல் நுண்ணாளுமையோடு கையாளத் தெரியாத தமிழர் தலைமைகளால் எப்படி முரண்களுள் சிக்குண்டிருக்கும் தமிழ் - முஸ்லிம் உறவுநிலையைச் சீராக்கும் நிலைக்கு  நகர்த்த முடியும்?   மிகுந்த அடிப்படைவாதிகளாகத் தற்போதைய முஸ்லிம் குமுகாயம் பரிணாமம் பெற்றுள்ள சூழல் மத்திய கிழக்குநாடுகளின் ஆதரவு என்று பல்வேறு அகப் புறக் கரணியங்களையும் தமிழினம் ஆய்வுக்குட்படுத்துதல் அவசியமானது. 

தமிழகம் மதத்தால் வேறானாலும் மொழியால் இணைந்து செல்லும் சூழல் இதுவரை பாதிப்புக்குள்ளாகவில்லை. ஆனால், மத முரண்பாட்டை நோக்கித் தள்ளுவதற்கான பல்வேறு சிண்டுமுடியும் வேலைகளை பீயேபீ வகையறாக்கள் மற்றும் அவர்களது முகவர்கள் தொடர்ச்சியாகச் செய்துவருகிறார்கள். இதனை இதயசுத்தியோடு  தமிழகத் தலைமைகள் எதிர்கொள்வதே வலிமையான தமிழகத்தை நிலைக்கச் செய்யும் வழியாகும். 

ஈழத்தீவில் சோனகராயிருந்து- முஸ்லிமாகித் -தற்போது அரபுமுஸ்லிமாகத் துடிக்கும் நிலையையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

 

ஈழத்தீவில் சோனகராயிருந்து- முஸ்லிமாகித் -தற்போது அரபுமுஸ்லிமாகத் துடிக்கும் நிலையையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

முஸ்லிம் ஆட்களைதான் சோனகர் என அழைப்து நினைந்திருந்தேன்.  சோனகர் முஸ்லிம் மாதமாக மறியதை இன்றுதான் தெரியும்

http://www.jaffnamuslim.com/2010/12/blog-post_5385.html

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

முஸ்லிம் ஆட்களைதான் சோனகர் என அழைப்து நினைந்திருந்தேன். 

http://www.jaffnamuslim.com/2010/12/blog-post_5385.html

 

 

 

நீங்கள் சுட்டுவது சரியானதே.  நான் குறிப்பிட்டிருப்பது பெரும்பாலும் நானறிந்தவகையில்(வன்னியில்) சோனகர் என்ற பதமே புழக்கத்தில் இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று அழைக்கப்படுவதையே முன்னிறுத்தகிறார்கள்.

http://www.jaffnamuslim.comஇணையத்தின் இணைப்புக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.