Jump to content

ரோஸ் பாண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு என்ன செய்வது, எப்பிடி நேரத்தை போக்காட்டுவது என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தபோது  இது ஞாபகத்துக்கு  வந்தது. வேறுயாரும் இங்கு செய்தார்களா என்று தெரியவில்லை. நீண்ட நாளாக செய்ய யோசித்தேன், இன்றைக்கு செய்து பார்த்து விட்டேன். நன்றாகவே வந்தது. இடித்த சம்பலுடன் நன்றாகவே இருந்தது. 
2.jpg4.jpgthumbnail.jpg

Link to comment
Share on other sites

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நீர்வேலியான் said:

இண்டைக்கு என்ன செய்வது, எப்பிடி நேரத்தை போக்காட்டுவது என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தபோது  இது ஞாபகத்துக்கு  வந்தது. வேறுயாரும் இங்கு செய்தார்களா என்று தெரியவில்லை. நீண்ட நாளாக செய்ய யோசித்தேன், இன்றைக்கு செய்து பார்த்து விட்டேன். நன்றாகவே வந்தது. இடித்த சம்பலுடன் நன்றாகவே இருந்தது. 

68C87F99-9DE7-403E-A306-1D2A299793A1.jpg

நல்லது.
நன்றாக வந்தா சரியோ?
எப்படி எப்படி செய்ததென்று எழுதினால்த் தானே மற்றவர்களும் செய்யலாம்.
நானும் முந்தி செய்யிறது.உதுக்கு நிறைய எண்ணெய் தேவையென்றபடியால் நிற்பாட்டியாச்சு.

கொஞ்ச மாதத்துக்கு முதல் செய்த முழுப்பாண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெறுப்பேத்தாமல் என்னெண்டு செய்தனீங்கள் எண்டு சொன்னால் குறைஞ்சே போவியள்?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நல்லது.
நன்றாக வந்தா சரியோ?
எப்படி எப்படி செய்ததென்று எழுதினால்த் தானே மற்றவர்களும் செய்யலாம்.
நானும் முந்தி செய்யிறது.உதுக்கு நிறைய எண்ணெய் தேவையென்றபடியால் நிற்பாட்டியாச்சு.

கொஞ்ச மாதத்துக்கு முதல் செய்த முழுப்பாண்.

நானும் ஆசையாக வந்து பார்த்தேன் எப்படி செய்வது என்று, நன்றாக வெறுப்பேத்திவிட்டார் 😡😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சும்மா வெறுப்பேத்தாமல் என்னெண்டு செய்தனீங்கள் எண்டு சொன்னால் குறைஞ்சே போவியள்?😎

 

1 minute ago, உடையார் said:

நானும் ஆசையாக வந்து பார்த்தேன் எப்படி செய்வது என்று, நன்றாக வெறுப்பேத்திவிட்டார் 😡😡

இப்ப தான் சாப்பிடுகிறார்.சாப்பிட்டுட்டு குட்டி தூக்கம் ஒன்று போட்டுட்டு அப்புறமா போடுவார்.
அது வரை மக்களே அமைதி அமைதி
ஓம் சாந்தி சாந்தி
ஓம் சாந்தி சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை, பதம் பார்த்து செய்தால் சரியாக வரும். இடைக்கிடை மாலு பாண் எல்லாம் செய்வதால் எனக்கு இது ஓரளவுக்கு பழக்கம் ஆனால் ரோஸ் பாண் இண்டைக்குத்தான் செய்து பார்த்தேன்.   நிறைய எண்ணெய் எல்லாம் தேவையில்லை. இரண்டு மூன்று  இறாத்தல் பாணுக்கு 2 கரண்டி தேங்காய் அல்லது மரக்கறி எண்ணை போதுமானது, ஆனால் நான் வாசத்துக்கு மரக்கறி எண்ணையும் butter உம் சேர்த்தேன்.  கீழே உள்ள வீடியோவில் செய்முறை உள்ளது. நான் கிட்டத்தட்ட 45 நிமிடம் oven இல் விட்டேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நீர்வேலியான் said:

பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை, பதம் பார்த்து செய்தால் சரியாக வரும். இடைக்கிடை மாலு பாண் எல்லாம் செய்வதால் எனக்கு இது ஓரளவுக்கு பழக்கம் ஆனால் ரோஸ் பாண் இண்டைக்குத்தான் செய்து பார்த்தேன்.   நிறைய எண்ணெய் எல்லாம் தேவையில்லை. இரண்டு மூன்று  இறாத்தல் பாணுக்கு 2 கரண்டி தேங்காய் அல்லது மரக்கறி எண்ணை போதுமானது, ஆனால் நான் வாசத்துக்கு மரக்கறி எண்ணையும் butter உம் சேர்த்தேன்.  கீழே உள்ள வீடியோவில் செய்முறை உள்ளது. நான் கிட்டத்தட்ட 45 நிமிடம் oven இல் விட்டேன்.

 

பாக்கவே வாயூறுதுதான். எண்டாலும் ரோஸ்பாணுக்கு அந்த கருக்கல் தான் முக்கியம்.அதுதான் நல்ல ரேஸ்ற்.....வீடியோவிலை கருக்கல் என்ரை நிறத்துக்கு வந்துட்டுது.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா பின்னேரத்தில சுடச்சுட ரோஸ்பாணும் தேங்கா சம்பலும் இஞ்சி பிளேன்ரியும் என்ர உசிர்.. அதை வீட்டிலும் செய்யலாம் எண்டு உங்களாலதான் இண்டைக்கு அறிஞ்சன். இனி டெய்லி செய்து சாபிடப்போறன். தெய்வமே நன்றி தெய்வமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பாக்கவே வாயூறுதுதான். எண்டாலும் ரோஸ்பாணுக்கு அந்த கருக்கல் தான் முக்கியம்.அதுதான் நல்ல ரேஸ்ற்.....வீடியோவிலை கருக்கல் என்ரை நிறத்துக்கு வந்துட்டுது.😎

நானும் 180 டிகிரி செல்சியஸ் இல் தான் செய்தேன், இப்படி கருதவில்லை. ஒவ்வொருடைய oven உம ஒவ்வொருமாதிரி. மேல் பக்கம் முறுகி வருவதுக்கு 30 நிமிசத்தில், மேல் பகுதிக்கு எண்ணை பூசினேன். 

 

4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவா பின்னேரத்தில சுடச்சுட ரோஸ்பாணும் தேங்கா சம்பலும் இஞ்சி பிளேன்ரியும் என்ர உசிர்.. அதை வீட்டிலும் செய்யலாம் எண்டு உங்களாலதான் இண்டைக்கு அறிஞ்சன். இனி டெய்லி செய்து சாபிடப்போறன். தெய்வமே நன்றி தெய்வமே.

 

3 hours ago, உடையார் said:

செய்முறை இலகுவாக இருக்க, செய்து பார்ப்போம்

செய்து பாருங்கள், இவ்வளவு easyயாக வீட்டில் செய்ய முடியம், இலங்கை ரோஸ் பாண் மாதிரி வரும் என்று நானும் எதிர்பார்த்திருக்க வில்லை. நல்லவேளை பொரித்து இடித்த சாம்பல் கை காவலாக இருந்தது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:


4.jpgthumbnail.jpg

ஆகா.... நீர்வேலியான்,  உண்மையில் நன்றாக வந்துள்ளது என்று படத்தைப் பார்க்கவே தெரிகிறது.
அப்படியே... சம்பல் செய்த,  ரெக்னிக்கையும்... எங்களுக்கு காட்டித் தாருங்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பராய் இருக்கு நீர்வேலியான்......செய்து பார்க்கத்தான் வேண்டும்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஆகா.... நீர்வேலியான்,  உண்மையில் நன்றாக வந்துள்ளது என்று படத்தைப் பார்க்கவே தெரிகிறது.
அப்படியே... சம்பல் செய்த,  ரெக்னிக்கையும்... எங்களுக்கு காட்டித் தாருங்கள்.  :)

 

4 hours ago, suvy said:

சூப்பராய் இருக்கு நீர்வேலியான்......செய்து பார்க்கத்தான் வேண்டும்.....!  👍

நன்றி சுவி , நன்றி சிறி 
ஒருகால் செய்து பாருங்கள், இப்பதான் நாங்கள் எல்லாம் வீட்டில் சும்மா இருக்கிறோம். இந்த சம்பல் நான் செய்யவில்லை, முதல் நாள் தோசைக்கு மனைவி செய்தது. அவர் சம்பல் சட்னி நன்றாக செய்வார். பெரும்பாலோர் பொரித்து இடித்த சம்பலுக்கு தேசிப்புளி விடுவார்கள், நாங்கள் பழப்புளி விடுவோம் மிகவும் நன்றாக இருக்கும், எனக்கு கறிவேப்பிலை  அதிகமாக இருக்க வேண்டும்.  ஒரு நடுத்தர அளவு உரல் ஒன்றும் வைத்திருக்கிறோம், அதில் இடித்த சம்பலுக்கும் , food processor இல் செய்த சம்பலுக்கும் சுவையில் வித்தியாசம் அப்பிடியே தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 18:05, நீர்வேலியான் said:

இண்டைக்கு என்ன செய்வது, எப்பிடி நேரத்தை போக்காட்டுவது என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தபோது  இது ஞாபகத்துக்கு  வந்தது. வேறுயாரும் இங்கு செய்தார்களா என்று தெரியவில்லை. நீண்ட நாளாக செய்ய யோசித்தேன், இன்றைக்கு செய்து பார்த்து விட்டேன். நன்றாகவே வந்தது. இடித்த சம்பலுடன் நன்றாகவே இருந்தது. 
2.jpg4.jpgthumbnail.jpg

 

On 7/4/2020 at 18:15, ஈழப்பிரியன் said:

68C87F99-9DE7-403E-A306-1D2A299793A1.jpg

நல்லது.
நன்றாக வந்தா சரியோ?
எப்படி எப்படி செய்ததென்று எழுதினால்த் தானே மற்றவர்களும் செய்யலாம்.
நானும் முந்தி செய்யிறது.உதுக்கு நிறைய எண்ணெய் தேவையென்றபடியால் நிற்பாட்டியாச்சு.

கொஞ்ச மாதத்துக்கு முதல் செய்த முழுப்பாண்.

எனக்கு இந்த ரோஸ்ட் பாணும் சம்பலும் மிகவும் பிடித்த உணவு 
இதை பார்த்தும் மிகுந்த மகிழ்ச்சி .....உடனேயே எல்லாம் வாங்கிவந்து 
செய்தேன் .......... சரியாக வரவில்லை ......கல்லு மாதிரி இருக்கிறது 
நேற்று மீண்டும் மேலும் பல விடியோக்கள் பார்த்து அதைப்போலவே 
செய்தேன் மீண்டும் கல்லு மாதிரியே இருக்கிறது 

ஏதாவது ஆலோசனை தர முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Maruthankerny said:

 

எனக்கு இந்த ரோஸ்ட் பாணும் சம்பலும் மிகவும் பிடித்த உணவு 
இதை பார்த்தும் மிகுந்த மகிழ்ச்சி .....உடனேயே எல்லாம் வாங்கிவந்து 
செய்தேன் .......... சரியாக வரவில்லை ......கல்லு மாதிரி இருக்கிறது 
நேற்று மீண்டும் மேலும் பல விடியோக்கள் பார்த்து அதைப்போலவே 
செய்தேன் மீண்டும் கல்லு மாதிரியே இருக்கிறது 

ஏதாவது ஆலோசனை தர முடியுமா? 

வெள்ளைக்காரியெண்டாலும் பரவாயில்லை நேர காலத்துக்கு திருமணம் செய்யவும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வெள்ளைக்காரியெண்டாலும் பரவாயில்லை நேர காலத்துக்கு திருமணம் செய்யவும்.😎

இந்த உறைப்பு சம்பல் அவகளுக்கு ஒத்துவருமோ தெரியவில்லையே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

இந்த உறைப்பு சம்பல் அவகளுக்கு ஒத்துவருமோ தெரியவில்லையே? 

அவிங்க இப்ப எங்களை விட படு காரம் நைனா.....ஒன்னுக்கும் யோசிக்காதீங்க.....கமோன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு :  மாசி துண்டுகளை நறுக்கிப்போட்டு சம்பல்  இடியுங்கள் அந்த சம்பலுக்கு சும்மா அதிரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு :  மாசி துண்டுகளை நறுக்கிப்போட்டு சம்பல்  இடியுங்கள் அந்த சம்பலுக்கு சும்மா அதிரும் 

இவகள் வெள்ளைக்காரிகளுக்கு 
உப்பு சப்பு அதுகள் பெரிதாக தெரியாது 
சும்மா மினுக்கிக்கொண்டு திரியாத்தான் தெரியும் 

அஞ்சோவி என்று நெத்தலி மீன் மாதிரி டின் இல் இருக்கு 
பிட்ஸா வுக்குள் போட்டு அடித்தால் அந்த மாதிரி இருக்கும் 
அவர்கள் மேனுவிலும் அது இருக்கு ,...........நான் போய் ஆர்டர் கொடுத்தால் 
பன்றியை கண்ட முஸ்லிம்கள் மாதிரி சும்மா ஓடித்திரிவார்கள்.
அதை பார்த்துவிட்டு நான் இப்போ ஓர்டர் பண்ணுவதில்லை.

Anchovies: A timeless pizza topping | On The Menu ...

A is for: Anchovies – B is for: Broccoli

Pizza Anchovy

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 

எனக்கு இந்த ரோஸ்ட் பாணும் சம்பலும் மிகவும் பிடித்த உணவு 
இதை பார்த்தும் மிகுந்த மகிழ்ச்சி .....உடனேயே எல்லாம் வாங்கிவந்து 
செய்தேன் .......... சரியாக வரவில்லை ......கல்லு மாதிரி இருக்கிறது 
நேற்று மீண்டும் மேலும் பல விடியோக்கள் பார்த்து அதைப்போலவே 
செய்தேன் மீண்டும் கல்லு மாதிரியே இருக்கிறது 

ஏதாவது ஆலோசனை தர முடியுமா? 

மருதங்கேணி ,
அநேகமாக உங்களுக்கு கீழே உள்ள பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று வந்திருக்கலாம் என்று நினைக்கிறன்:
1. உங்கள் ஈஸ்ட் காலாவதியாகியிருக்கலாம். இரண்டு வகை ஈஸ்ட் உள்ளது. முதலாவது வகை என்றால் நீங்கள் ஒரு சிறு பாத்திரத்தில் நீர் எடுத்து, சிறிதளவு சீனி போட்டு, மிதமான சூட்டில் (Room Temperature ) 5 நிமிடங்கள் விட்டால் நன்றாக பொங்கி வரவேண்டும், அதன் பிறகு மாவில் சேர்க்க வேண்டும். அப்பிடி பொங்கி வராவிட்டால் அது வேலை செய்யாது. பாணும் கல்லு மாதிரி வரும். இரண்டாவது வகையினை மாவில் நேரடியாக கலக்கலாம், அது வேலை செய்யுதா என்று பார்பதுக்கு முதலாவது வகை போன்று நீரில் சீனியுடன் போட்டு check பண்ணலாம். உங்கள் மா 30-45 நிமிடங்களில் பொங்கி வரவேண்டும். அப்பிடி வராவிட்டால் உங்கள் ஈஸ்ட் இல் தவறு உள்ளது.
2. நீங்கள் மாவை நன்றாக பிசைந்து விடவேண்டும். நான் 30 நிமிடங்களுக்கு பிறகு சிறு உருண்டைகளாக எடுத்து மீண்டும் ஒருமுறை பிசைந்தேன்.
3. தண்ணீர் தேவைக்கு அதிகளவு விடக்கூடாது, ஈஸ்ட் சரியா வேலை செய்யாது 
4. உங்கள் வீடு மிக குளிராக இருந்தால் ஒழிய, மிக நீண்ட நேரம், இரண்டு மூன்று மணி நேரத்துக்கு மேல்  தேவைக்கு மிக அதிகமாகவும்  மாவை  பொங்க விடக்கூடாது, விட்டால் ஒருவிதமாகா Rusk போல வரும்.

350 டிகிரி Fahrenheit இல் oven ஐ set பண்ணவும்  

உங்கள் ஈஸ்ட் இல் பிரச்னை என்றுதான் நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நீர்வேலியான் said:

மருதங்கேணி ,
அநேகமாக உங்களுக்கு கீழே உள்ள பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று வந்திருக்கலாம் என்று நினைக்கிறன்:
1. உங்கள் ஈஸ்ட் காலாவதியாகியிருக்கலாம். இரண்டு வகை ஈஸ்ட் உள்ளது. முதலாவது வகை என்றால் நீங்கள் ஒரு சிறு பாத்திரத்தில் நீர் எடுத்து, சிறிதளவு சீனி போட்டு, மிதமான சூட்டில் (Room Temperature ) 5 நிமிடங்கள் விட்டால் நன்றாக பொங்கி வரவேண்டும், அதன் பிறகு மாவில் சேர்க்க வேண்டும். அப்பிடி பொங்கி வராவிட்டால் அது வேலை செய்யாது. பாணும் கல்லு மாதிரி வரும். இரண்டாவது வகையினை மாவில் நேரடியாக கலக்கலாம், அது வேலை செய்யுதா என்று பார்பதுக்கு முதலாவது வகை போன்று நீரில் சீனியுடன் போட்டு check பண்ணலாம். உங்கள் மா 30-45 நிமிடங்களில் பொங்கி வரவேண்டும். அப்பிடி வராவிட்டால் உங்கள் ஈஸ்ட் இல் தவறு உள்ளது.
2. நீங்கள் மாவை நன்றாக பிசைந்து விடவேண்டும். நான் 30 நிமிடங்களுக்கு பிறகு சிறு உருண்டைகளாக எடுத்து மீண்டும் ஒருமுறை பிசைந்தேன்.
3. தண்ணீர் தேவைக்கு அதிகளவு விடக்கூடாது, ஈஸ்ட் சரியா வேலை செய்யாது 
4. உங்கள் வீடு மிக குளிராக இருந்தால் ஒழிய, மிக நீண்ட நேரம், இரண்டு மூன்று மணி நேரத்துக்கு மேல்  தேவைக்கு மிக அதிகமாகவும்  மாவை  பொங்க விடக்கூடாது, விட்டால் ஒருவிதமாகா Rusk போல வரும்.

350 டிகிரி Fahrenheit இல் oven ஐ set பண்ணவும்  

உங்கள் ஈஸ்ட் இல் பிரச்னை என்றுதான் நினைக்கிறன் 

மிக்க நன்றி 
நீங்கள் கூறுவதுதான் பிரச்சனை என்று நானும் உணருகிறேன் 
ஈஸ்ட்டில் இரண்டு வகை இருப்பது எனக்கு தெரியாது 
கடைகளில் இப்போ ஓரிடமும் ஈஸ்ட் வாங்க முடியாது 
எல்லா கடிகளிலும் முடிந்து விட்டது 

இது நண்பர் ஒருவர் மூலம் பீட்ஸா கடை ஒன்றில் எடுத்தேன் 
அவர்கள் மாவுடன் சேர்த்துதான் பிஸ்சாவுக்கு குழைப்பதை பார்த்து இருக்கிறேன்.

இப்படி ஒருமுறை செய்து பார்த்துவிட்டு 
பதில் எழுதுகிறேன்.

மீண்டும் மிக்க நன்றி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்ட் இங்கேயும் தட்டுப்பாடாம் ...எல்லோரும் வீட்டில் பாண் செய்யினம் போல இருக்கு 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வெள்ளைக்காரியெண்டாலும் பரவாயில்லை நேர காலத்துக்கு திருமணம் செய்யவும்.😎

 

1 hour ago, Maruthankerny said:

இந்த உறைப்பு சம்பல் அவகளுக்கு ஒத்துவருமோ தெரியவில்லையே? 

உங்களை படத்துக்கு கூட்டிப்போன அந்த ரஸ்ய வீட்டு ஓனர் மகளுக்கு கடுதாசி போட்டு பார்தியளே மருதர்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

மிக்க நன்றி 
நீங்கள் கூறுவதுதான் பிரச்சனை என்று நானும் உணருகிறேன் 
ஈஸ்ட்டில் இரண்டு வகை இருப்பது எனக்கு தெரியாது 
கடைகளில் இப்போ ஓரிடமும் ஈஸ்ட் வாங்க முடியாது 
எல்லா கடிகளிலும் முடிந்து விட்டது 

இது நண்பர் ஒருவர் மூலம் பீட்ஸா கடை ஒன்றில் எடுத்தேன் 
அவர்கள் மாவுடன் சேர்த்துதான் பிஸ்சாவுக்கு குழைப்பதை பார்த்து இருக்கிறேன்.

இப்படி ஒருமுறை செய்து பார்த்துவிட்டு 
பதில் எழுதுகிறேன்.

மீண்டும் மிக்க நன்றி! 

 

6 minutes ago, ரதி said:

ஈஸ்ட் இங்கேயும் தட்டுப்பாடாம் ...எல்லோரும் வீட்டில் பாண் செய்யினம் போல இருக்கு 

 

என்ன வகைகள் என்று குறிப்பிட மறந்து விட்டேன். முதலாவது வகை active dry yeast, இதை முதலில் activate பண்ண வேண்டும். ஒரு சிறு பாத்திரத்தில் நீர் எடுத்து, சிறிதளவு சீனி போட்டு, மிதமான சூட்டில் (Room Temperature) 5 நிமிடங்கள் விட்டால் நன்றாக பொங்கி வரவேண்டும், அதன் பிறகே மாவில் சேர்க்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை செய்யாது. இரண்டாவது வகை instant or rapid rise or quick rise yeast, இதை நேரடியாக மாவில் கலக்கலாம்.  

இங்கும் ஈஸ்ட் மிகவும் தட்டுப்பாடு, எல்லா இடமும் தேடுகிறேன், ebay இல் மாத்திரம் SAF-Instant (Red) என்ற வகை bulk ஆக $15-20 இற்கு உள்ளது, ஒரு கிழமைக்குள் ship பண்ணுகிறார்கள். இந்த brand பேக்கரிகளில் அதிகமாக பாவிப்பார்கள் அதை வாங்குவதா இப்பொழுது யோசித்திருக்கிறேன். Expiry date பார்த்து வாங்குவதுதான் கடினமாக உள்ளது. சும்மா இருப்பதால் நிறைய பிளான் வைத்திருக்கிறேன், அடுத்ததாக கொம்பு பணிஸ் செய்வதாக ஒரு பிளான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

ஈஸ்ட் இங்கேயும் தட்டுப்பாடாம் ...எல்லோரும் வீட்டில் பாண் செய்யினம் போல இருக்கு 

 

ஜேர்மனியிலையும் ஒரு இடமும் இல்லை. இப்பவும் நாலு கடையிலை தேடிப்போட்டுத்தான் வந்திருக்கிறன்
முட்டையும் எண்ணெய்யும் கொஞ்சம் கூட போட்டால் ஓரளவுக்கு சொவ்ராய் வருமாம்.

கொஞ்ச பாலும் விடவேணும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.