Jump to content

சூப்பர் பிங்க் மூன்: எங்கு, எப்படி, எப்போது காணலாம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

A plane passes in front of the full moon as seen from Curitiba, Brazil on 9 March 2020

 

உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருக்கிறீர்கள், அங்குள்ள வானிலை என்ன என்பதை பொறுத்தே 'சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும் இந்தப் பெருநிலவை காண்பது சாத்தியமா என்று கூறமுடியும்.

ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி தோன்றக்கூடிய 2020ம் ஆண்டின் மிகவும் பெரிய மற்றும் ஒளி மிகுந்த நிலவு, ''சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும். இந்த நாளன்று நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்காது. நிலவு இவ்வாறு தெரிவதற்கு ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது?

இந்த இளஞ்சிவப்பு நிலவின் சிறப்பு என்ன?

ஏப்ரல் மாதத்தின் முழு நிலவு வானத்தில் மிகவும் பெரியதாக காட்சியளிக்கும்.

இந்த வகையான சூப்பர் மூன் எனப்படும் பெரிய நிலவு, பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் சரியான வட்டத்தில் பூமியை சுற்றி வருவதில்லை. மாறாக பூமிக்கு சற்று அருகிலோ அல்லது தொலைவிலோ சுற்றி வரும்.

நிலவு பூமிக்கு சற்று அருகில் சுற்றி வரும்போது ’பெரிஜீ ’ (perigee) என்று அழைக்கப்படும். இவ்வாறு பூமிக்கு அருகில் சுற்றிவரும் நிலவு முழு நிலவாக இருந்தால் பெருநிலவு (சூப்பர் மூன்) என்று அழைக்கப்படும்.

The 'super worm equinox moon' rises behind the Statue of Liberty in New York, on 20 March 2019படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பொதுவாக பூமியிடம் இருந்து நிலவு 384,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில்தான் சுற்றி வரும். ஆனால் பெருநிலவு பெரிஜீ தோன்றும் நாளன்று 3,57,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே பூமியை சுற்றி வரும்.

''சூப்பர் பிங்க் மூன்'' பிங்க் நிறத்தில் தோன்றுமா ?

அமெரிக்க பூர்வகுடியினர் உட்பட உலகத்தில் உள்ள பல மக்கள், காலத்தை கணித்து அதன் அடிப்படையிலேயே நிலவுக்கு பெயர் வைத்தனர்.

கனடா மற்றும் அமெரிக்க முழுவதும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இளஞ்சிவப்பு நிறமுள்ள வைல்டு கிரவுண்ட் ஃபிலோக்ஸ் பூக்கள் பூக்கும். எனவே இந்த பூக்கள் பூக்கும் காலத்தில் இந்த முழு நிலவு தோன்றுவதால் ஊர் முழுக்க காட்சியளிக்கும் இளஞ்சிவப்பு நிறத்தையே இந்த நிலவுக்கு பெயராக வைத்துள்ளனர்.

எனவே தான் ''சூப்பர் பிங்க் மூன்'' என்ற பெயரை இந்த ஏப்ரல் மாத முழு நிலவு கொண்டுள்ளது.

Pigeons fly just above the Huntington Beach Pier as the super snow moon sets early on 19 February 2019 in Californiaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption2019 பிப்ரவரியில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் காணப்பட்ட 'சூப்பர் ஸ்னோ மூன்.'

இன்னும் சில நாடுகளில் ஃபுல் நிலவு, முட்டை நிலவு, மீன் நிலவு என்றும் இந்த சூப்பர் பிங்க் மூன் அழைக்கப்படுகிறது.

இந்த நிலவை எப்படி காண முடியும்?

நீங்கள் இந்த நிலவை எப்போது காண முடியும் என்பது நீங்கள் இருக்கும் ஊரைப் பொறுத்தே விளக்கம் அளிக்க முடியும். எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா உள்ளிட்ட இடங்களில் இருப்பவர்கள் ஏப்ரல் 8ம் தேதி புதன்கிழமை அன்றே இந்த நிலவை காணமுடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஆஃப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்கள் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 7ம் தேதி மாலை முதலே இந்த சூப்பர் மூன்னை காணமுடியும் என்று கூறுகின்றனர்.

ஆனால் உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும் இந்த நிலவை நன்கு காண முடியும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். உங்கள் ஊரில் நிலா உதிக்கும் நேரம் மற்றும் மறையும் நேரம், எந்த திசையில் மறையும் உள்ளிட்ட தகவல்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக இந்த வகை நிலவை, விஞ்ஞாணிகள் வெளியே சென்று காணும்படி அறிவுறுத்துவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

A super moon as seen from Suresnes in Paris, France on 20 February 2019படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுவும் 2019 பிப்ரவரியில் காணப்பட்ட 'சூப்பர் மூன்.' பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எடுக்கப்பட்ட படம் இது.

எனவே வீட்டின் மேல்தளத்தில் நீன்றபடியே இந்த நிலவை காண முடியும். உங்கள் வீட்டிற்கு அருகில் கட்டடங்கள் எதுவும் மறைக்காமல் இருந்தால் ஜன்னல் வழியாகவே இந்த நிலாவை காணலாம்.

ஏன் இந்த மாத நிலவு சிறப்பானது ?

இந்த நிலவின் அழகு அம்சங்களை தவிர்த்து, ஏப்ரல் மாதத்தில் தோன்றும் இந்த நிலவு உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பல பண்டிகைகளையும், விடுமுறை நாட்களையும் குறிக்கும்.

இந்த முழு நிலவை தொடர்ந்து வரும் ஞாயிற்று கிழமை ஈஸ்டர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இலையுதிர் காலத்தின் ஈக்விநியோக்ஸ் என்று அழைக்கப்படும் நாளையடுத்து ஈஸ்டர் வருகிறது. அதாவது பகல் நேரமும் இரவு நேரமும் கிட்டத்தட்ட சமமாக இருக்கும் நாள். இந்த ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி ஈஸ்டர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதே நாள் இந்தியாவில் ஹனுமான் பிறந்த நாளாக கொண்டாப்படுகிறது.

ஆங்கிலத்தில் ‘பாஸோவர்’ என்று அழைக்கப்படுகின்ற யூத பண்டிகையின் தொடக்க நாளாகவும் இந்த ''சூப்பர் பிங்க் மூன்'' நிலவு தோன்றும் நாள் அனுசரிக்கப்படுகின்றது.

 

https://www.bbc.com/tamil/science-52201716

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய 'பிங்க் சூப்பர் மூன்’ 

பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு வழக்கமான தூரம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர்கள் ஆகும். ஆனால், சில வானியல் நிகழ்வுகளின் போது நிலவு பூமிக்கு மிகவும் அருகில் வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிகழ்வுகளின் போது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் குறைந்து இரு கிரகங்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும்.
 
அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு (2020) ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தேதிகளில் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்தது. வழக்கமான தூரத்தை விட சுமார்  28 ஆயிரம் கிலோமீட்டர்கள் குறைவாக அதாவது 3 லட்சத்து 56 ஆயிரத்து 900 கிலோமீட்டர்கள் என்ற தூரத்தில் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்.
 
இந்த அதிசய நிகழ்வின் போது நிலவு பூமிக்கு மிக அருகில் பெரிதாகவும், வெளிச்சமாகவும் காணப்பட்டது. 
 
வட அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் பூத்துக்குளுங்கும் மோஸ் பிங்க் எனப்படும் பூக்களை பெயரில் இருந்து  இந்த ஆண்டில் தோன்றும் இந்த முதல் சூப்பர் நிலவுக்கு ’பிங்க் சூப்பர் மூன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.     
 
இந்த ஆண்டு தோன்றிய ’பிங்க் சூப்பர் மூன்’ புகைப்படங்களின் தொகுப்பு:-
 
சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்சூப்பர் மூன் புகைப்படங்கள்
 

https://www.maalaimalar.com/news/topnews/2020/04/10012028/1404924/Supermoon-The-biggest-and-brightest-full-moon-of-2020.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் மூன் புகைப்படங்கள்

சூப்பர் மூன் புகைப்படங்கள்

உடையார்.... இந்த இரண்டு படங்களையும்... மிக ரசித்தேன். 
இந்தப் படங்களை எடுத்தவருக்கு.... உலக விருது கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.