Jump to content

தவறு செய்து விட்டீர்கள்.. உங்களுக்கான நிதியை நிறுத்த போகிறேன்.. உலக சுகாதார மையத்திற்கு டிரம்ப் செக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான நடவடிக்கை

தவறு செய்து விட்டீர்கள்.. உங்களுக்கான நிதியை நிறுத்த போகிறேன்.. உலக சுகாதார மையத்திற்கு டிரம்ப் செக்

உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் வேளையில், கொரோனாவை தடுக்கும் பணியில் உலக சுகாதார மையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்தியா தொடங்கி உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளுக்கு நிதி உதவி அளிக்க உலக சுகாதார மையம் முடிவு எடுத்துள்ளது.

எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா கடந்த வருடம் 111 மில்லியன் டாலர் அளித்தது. அதன்பின் தாமாக முன் வந்து 401 மில்லியன் டாலர் அளித்தது. உலக சுகாதார மையத்திற்கு அதிக நிதி அளித்து வரும் நாடாக அமெரிக்க உள்ளது.

இந்த நிலையில் திடீரென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தனது செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதார மையத்திற்கு எதிராக பேசினார். அவர் தனது பேட்டியில், உலக சுகாதாரம் மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள். சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு போக்குவரத்தை தடை செய்த போது உலக சுகாதார மையம் எங்களை எச்சரித்தது. இது போன்ற தடைகள் பயன் அளிக்காது என்று என்னுடைய முடிவை விமர்சனம் செய்தது.

எங்கள் முடிவு சரி

ஆனால் அதன்பின்தான் என்னுடைய முடிவு சரி என்று அவர்களுக்கு தெரிந்தது. உலக சுகாதார மையம் பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. பல தவறான விஷயங்களை பேசி வருகிறது. அவர்கள் சீனாவை ஆதரிக்கிறார்கள். நாங்கள் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி வைக்க முடிவு செய்து இருக்கிறோம்.

மிக கடுமையான நடவடிக்கையை நாங்கள் எடுக்க போகிறோம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். கொரோனாவை எதிர்கொள்ள உலக சுகாதார மையம் பெரிய அளவில் பணிகளை செய்யவில்லை. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். தவறான முடிவை எடுத்துவிட்டார்கள். அவர்கள் நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள்.

சீனாவில் கொரோனா தோன்றிய போதே அவர்கள் உலகை எச்சரித்து இருக்க வேண்டும். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் ஏன் அப்படி அசட்டையாக இருந்தார்கள். கொரோனா பரவுவது தெரிந்த பின்பும் கூட அதை பற்றி அவர்கள் உலகிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லை, என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலக சுகாதார மையத்திற்கு எதிரான அவரின் இந்த பேச்சு பெரிய வைரல் ஆகியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/new-york/coronavirus-we-re-going-to-put-a-hold-on-money-spent-to-who-says-trump-382034.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் விட்ட பிழைக்கு  இப்ப மாற்றவர்களில் எப்படி பழி போடலாமென பார்க்கின்றார். சீனாவும் இதன் பயங்கரத்தை பித்தியே அறிவித்தது, அவர்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்

Link to comment
Share on other sites

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருந்து தவறிழைத்துவிட்டது- ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

 

 

    by : Litharsan

Donald-Trump-1.jpg

கொரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை இரத்துச் செய்யப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் குறித்து பல தகவல்கள் முன்னரே வெளியானாலும் அவற்றை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அத்துடன், சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறிய போது அதை ஏற்காமல் உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறிழைத்து விட்டது என ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ட்ரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்ரொஸ் அதனொம் கெப்ரேயிசஸ் (Tedros Adhanom Ghebreyesus) மறுத்துள்ளதுடன், சர்வதேச அமைப்பான உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டது என ட்ரம்ப் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/உலக-சுகாதார-நிறுவனம்-சீன/

Link to comment
Share on other sites

6 hours ago, உடையார் said:

தான் விட்ட பிழைக்கு  இப்ப மாற்றவர்களில் எப்படி பழி போடலாமென பார்க்கின்றார். சீனாவும் இதன் பயங்கரத்தை பித்தியே அறிவித்தது, அவர்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்

வரலாற்றில் மிகப் பெரும் உண்மை மறைப்பினை சீனா செய்ததை அறிந்தும் அப்பட்டமாக அதை மறைத்ததும் இல்லாமல், சீனா கொரோனா வைரஸ் பிரச்சனையை சரியாகக் கையாளுகின்றது என்று மிகவும் பக்கச்சார்பாக சொன்னது உலக சுகாதாரப் நிறுவனம். சீனாவின் துணையுடன் தான் இன்றிருக்கும் உலக சுகாதார தலைவர் பதவிக்கு வந்தமையால் (என்று மீடியாக்கள் எழுதுகின்றன) சீனாவின் தவறுகளையும், மரணங்களையும் மறைத்து வருகின்றார்.

 

பிபிசி யின் இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டு இருக்கும் WHO தலைவருடனான பேட்டியை பாருங்கள்

https://www.bbc.com/news/world-asia-52088167

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

வரலாற்றில் மிகப் பெரும் உண்மை மறைப்பினை சீனா செய்ததை அறிந்தும் அப்பட்டமாக அதை மறைத்ததும் இல்லாமல், சீனா கொரோனா வைரஸ் பிரச்சனையை சரியாகக் கையாளுகின்றது என்று மிகவும் பக்கச்சார்பாக சொன்னது உலக சுகாதாரப் நிறுவனம். சீனாவின் துணையுடன் தான் இன்றிருக்கும் உலக சுகாதார தலைவர் பதவிக்கு வந்தமையால் (என்று மீடியாக்கள் எழுதுகின்றன) சீனாவின் தவறுகளையும், மரணங்களையும் மறைத்து வருகின்றார்.

 

என்னத்த சொல்லி என்ன பிரயோசனம்...

உலகம் முழுவது விழுந்து விட்ட ஷேர் மார்க்கெட்டினுள் எல்லாம் சீனா காரர் பூந்து விளையாடுகினம்.

பிரிட்டனில், அரசு ரியல் எஸ்டேட் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது... அதாவது மோர்ட்கஜ் இல்லை.....

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காக்கு ஒரு பான்கீ மூன் போல சீனாவுக்கு ஒரு ரெட்ரொஸ் அதனொம் கெப்ரேயிசஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம்: அறிவித்தார் டிரம்ப்

 

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார்.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்ற உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர்.


latest tamil news


 


கடந்த வாரம் அதிபர் டிரம்ப் பேசுகையில், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்தி வருகிறது. ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. எனவே உலக சுகாதார அமைப்பு அளிக்கப்படும் நிதியை நிறுத்த உள்ளதாக கூறினார்.

WHO எச்சரிக்கை


டிரம்ப்பின் பேட்டியை அறிந்த உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதனோம், தயவுசெய்து கொரோனா வைரஸ் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். கொரோனாவிலிருந்து அரசியலை தனிமைப்படுத்துங்கள். ஆபத்தான வைரசை வீழ்த்த ஒற்றுமை மிக முக்கியம் என எச்சரித்தார்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் தகவல்களைப் பெறவும், கண்காணிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தவறிவிட்டது முன்னரே அறிவித்த படி உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதால் எனது அரசு நிர்வாகம் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2521545

Link to comment
Share on other sites

5 minutes ago, உடையார் said:

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார்.

மன்னரை புகழாவிட்டால் ... சிரச்சேதம் தான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Donald-Trump.jpg

கொரோனா வைரஸ்: உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

“சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவலின் கடுமையை, அது உலகெங்கும் பரவும்முன்னர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த்தும் அதன் அடிப்படை கடமையில் இருந்து உலக சுகாதார நிறுவனம் தோல்வியுற்றது. மேலும் அது பொறுப்புக்கூறப்பட வேண்டும்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும் இருப்பினும், அமெரிக்காவின் பெருந்தன்மையை நிறுவனம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்கிறதா என்பதுகுறித்த கவலை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனம் சீனாவிற்கு விரைவாக வல்லுநர் குழுவை அனுப்பியிருந்தால் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-உலக-சுகாதார/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா விவவாரம்: உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை டிரம்ப் குறைக்கும் நேரம் இதுவல்ல- ஐ.நா

ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் கூறும் போது உலக சுகாதார அமைப்பிற்கோ அல்லது தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வேறு எந்த அமைப்பிற்கோ நிதியைக் குறைப்பதற்கு தகுந்த நேரம் இதுவல்ல என கூறினார்.
 
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
 
வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
 
அமெரிக்க அளிக்கும் நிதியை உலக சுகாதார நிறுவனம்  சிறந்த பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா என்பது குறித்து தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த கவலைகள் உள்ளது.
 
உலக சுகாதார  அமைப்பு அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்று உள்ளது,  அதற்கு  அதுவே பொறுப்பேற்க வேண்டும். கொரோனா பரவல் தொடர்பில் சீனா அளித்த தவறான தகவல்களை அந்த அமைப்பு முன்னிலைப்படுத்தி உள்ளது.
 
இல்லை எனில் உலக நாடுகள் கண்டிப்பாக கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும். சுகாதார அச்சுறுத்தல்கள் குறித்த துல்லியமான தகவல்கள் சரியான நேரத்தில் பகிரப்படுவதை உறுதிசெய்ய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பை உலகம் சார்ந்துள்ளது. அதன் வெளிப்படையான தோல்விகளுக்கு அமைப்பு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் தொடர அமெரிக்கா அந்த அமைப்புடன் தொடர்ந்து கைகோர்க்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
 உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதியளிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இது குறித்து சுகாதார அமைப்பு எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
 
இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் கூறும் போது உலக சுகாதார அமைப்பிற்கோ அல்லது தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வேறு எந்த அமைப்பிற்கோ நிதியைக் குறைப்பதற்கு இது தகுந்த நேரம் அல்ல.
 
இந்த வைரஸையும் அதன்  விளைவுகளையும் தடுக்க ஒற்றுமைக்காகவும் சர்வதேச சமூகம் ஒற்றுமையுடனும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என கூறி உள்ளார்.
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.