Jump to content

அவசர தேவைகளை பூர்த்தி செய்தல் – சீவிகே விடுத்த கடித அறிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

C.V.K.Sivagnanam.jpg?189db0&189db0

 

வடக்கு மாநாகர ஆளுநர், வடக்கு மாகாண செயலாளர் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு பெயரிட்டு எழுதிய கடிதம் ஒன்றை வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று (08) வெளியிட்டுள்ளார்.

அதில் இருப்பது வருமாறு,

கடந்த மாத ஆரம்பத்திலிருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமுல் செய்யப்படும் ஊரடங்குச் சட்டம் மற்றும் சுய தனிமைக் கட்டுப்பாடுகள் என்பனவற்றை எதிர்கொள்வதில் வடமாகாண மக்கள், பொதுவாகவும் யாழ். மாவட்ட மக்கள் குறிப்பாகவும் முகங்கொடுக்கின்ற சில பிரச்சினைகள் தொடர்பாக இந்தக் கடிதம் தங்களுக்கு எழுதப்படுகிறது.

மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் மக்கள் பிரதிநிதிகளாகப் பேசக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் மக்கள் சார்பில் பேசக்கூடிய மாகாண சபை உறுப்பினர்கள் இல்லாத நிலையில் யாழ்ப்பாண மாவட்டம் சார்ந்தும் மாகாணம் சார்ந்தும் பேசவேண்டிய பொறுப்பும் உரிமையும் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்து பதவியில் இருப்பவன் என்ற வகையிலும் பின்வரும் விடயங்களை தங்களது செயற்பாட்டு நடவடிக்கைக்காக முன்வைக்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் எழுந்துள்ள விடயங்கள் எமது மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் கையாளுகின்ற முறை பற்றி எந்த விமர்சனத்தையும் நான் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால் சில ஊடகச் செய்திகளின் படி சில அரசியல்வாதிகள் அரச அலுவலர்களது செயற்பாடுகளில் தலையீடு செய்வதான நிலை கண்டிக்கத்தக்கது.

அவ்வாறன நிலைகளை தவிர்த்து அரசாங்க அலுவலர்கள் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை தங்கள் ஊடாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களை மட்டும் அமுல்செய்வதையும் பாதிப்புக்குள்ளானோருக்கு உதவ விரும்புபவர்கள் தங்களிடம் வழங்கும் பொருட்கள் அல்லது நிதி தங்களுடைய பணிப்பிற்கமைய நிறைவேற்றப்படுவதையும் வேறெந்த அரசியல்வாதியும் அவற்றில் தலையீடு செய்யாதிருப்பதை உறுதி செய்யுமாறும், அவ்வாறான நெருக்குதல் அலுவலர்களுக்கு ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தங்களுடையது என்பதை ஒரு முன்னாள் அரச அதிகாரி என்ற வகையில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

ஜனாதிபதியினுடைய பணிப்பின் பேரில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் இன்னும் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. அவ்வாறான நிலையை சீர்செய்து சகல நிவாரண உதவிகளும் எல்லோரையும் சென்றடைவதை மீளாய்வு முறையில் உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, மா, சீனி, பருப்பு போன்ற விடயங்கள் மட்டுமல்லாது ஏனைய பொருள்களையும் மக்கள் சிரமமின்றி பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைள் உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டும். எமது பிரதேச வர்த்தகர்கள் தம்மால் இயன்ற சேவைகளை வழங்குகின்றபோதும் அவற்றில் காணப்படும் குறைபாடுகள் அல்லது போதாமை தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

யுத்தகாலத்தில் கூடுதலாக நிவாரண விநியோகங்களில் கூட்டுறவுத் துறை ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்பொழுது முழுமையாகச் செயற்படுவதற்கான நிதி வசதி இல்லாமை ஒரு பிரச்சினையாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்குகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. ஆகவே இச்சங்கங்களின் நிர்வாக இயலுமையைப் பரிசீலித்து அவர்களுக்கான போதிய கடன் வசதிகளை வழங்கி அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் அவற்றை ஈடுபடுத்தலாம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பாக உணவுப் பொருட்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலையில் – அதனால் அதிகரித்த விலையும் ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகுவது தவிர்க்கமுடியாததாகும். எனவே போதிய நெல் கொள்வனவை மேற்கொண்டு உள்ளுரில் இருக்கக் கூடிய அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தியை மேற்கொள்வதற்கும் இச்சங்கங்கள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.

கடன் நிதியைப் பொறுத்த வரையில் அண்மையில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அபிவிருத்தி வங்கியிடமிருந்து இவர்களுக்கான கடன் உதவியை பெற்றுக்கொடுக்க முடியும் எனக் கருதப்படுகிறது. – என்றுள்ளது.

https://newuthayan.com/அவசர-தேவைகளை-பூர்த்தி/

 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.