Jump to content

கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க நிலையால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க நிலையால் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வருமா?

சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி
coronavirus lockdown cause food shortages in IndiaGetty Images

மார்ச் 31-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை அமைதியில் உறைந்தது.

மகாராஷ்டிர மாநிலம் லசங்காவ்ன் என்ற இடத்தில் உள்ள அந்த சந்தையில் எப்போதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் சந்தடி நிறைந்திருக்கும். இந்தியர்களின் உணவில் முக்கியப் பாத்திரம் வகிக்கும் வெங்காயத்தை ஏற்றுவது, இறக்குவது, வகை பிரிக்கும் பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தொழிலாளர்கள் அந்த சந்தையில் அப்போது இல்லை. 

இந்தியாவில் உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு வெங்காயத்தை வாங்கி விற்கும் இந்த சந்தை, மூன்றுவார கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு ஒரு வாரத்துக்கு எப்படியோ சமாளித்துக் கொண்டு இயங்கியது. 

இந்த ஊரடங்கு காரணமாக பஸ், ரயில், விமானப் போக்குவரத்து மட்டும் முடங்கவில்லை. முன்னெப்போதும் பார்த்திராத அளவுக்கு புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது பணியிடங்களில் இருந்து தொலை தூரங்களில் உள்ள அவர்களது சொந்த கிராமங்களை நோக்கி விரட்டியது. 

ஆனால் விவசாயத்தை அத்தியாவசிய சேவை என்று மத்திய அரசு அறிவித்துவிட்டதால், விவசாயிகள் தொடர்ந்து நிலத்துக்குச் சென்று வெங்காயம் பறித்தனர். குறைந்த அளவு தொழிலாளர்களைக் கொண்டு லசங்காவ்ன் சந்தை தொடர்ந்து இயங்கியது. 

காலியாக கிடக்கும் சாலையில் சந்தைக்கு செல்லும் விவசாய விளைபொருள் ஏற்றிய வண்டி ஒன்று.Getty Images காலியாக கிடக்கும் சாலையில் சந்தைக்கு செல்லும் விவசாய விளைபொருள் ஏற்றிய வண்டி ஒன்று.

ஆனால், சந்தை இருக்கும் பகுதியில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பீதி பரவத் தொடங்கியது. சந்தை இயங்குவது நின்று போன நாளில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், ஏற்றுமதிக்காக மும்பை துறைமுகத்துக்கும் செல்வதற்குத் தயாராக 450 டன் வெங்காயம் காத்துக்கொண்டிருந்தது. 

“முதலில் லாரிகள் வருவது நின்றது. பிறகு கொஞ்சம் தொழிலாளர்கள் கிளம்பினார்கள். அதன் பிறகு வைரஸ் தொற்றியது பற்றிய செய்தி வந்தது. பிறகு மீதமிருந்த தொழிலாளர்களும் கிளம்பிவிட்டனர்” என்று மனோஜ் ஜெயின் என்ற வியாபாரி என்னிடம் கூறினார். நெரிசல் மிகுந்த வெங்காய ஏலச்சந்தையில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மிகவும் கடினமாகவும் இருந்தது என்றும் அவர் கூறினார். 

1700 கி.மீ. தூரத்துக்கு அப்பால், பிகார் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு விவசாயி இதே போன்ற சங்கடத்தில் இருந்தார். 
 

சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள தமது 30 ஏக்கர் பண்ணையில் நெல், காய்கறி, பழங்கள் விளைவிக்கிற, கால்நடைகள் வளர்க்கிற மனுவந்த் சௌதரி என்கிற அந்த விவசாயி, சாலைக்கு அந்தப் பக்கத்தில் இருந்து வருகிற தொழிலாளிகள் வேலைக்கு வர மறுப்பதாக என்னிடம் சொன்னார். 

சாலையைக் கடந்து நிலத்துக்கு வருவதற்கே அவர்கள் பயப்படுகிறார்கள். வந்தால், திரும்பிப் போக அனுமதிக்கமாட்டார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறினார் சௌதரி. 

“வைரஸ் பற்றி ஏராளமான தவறான தகவல்கள், சமூக அச்சம் நிலவுவதால், அந்த கிராம மக்கள் வெளியே செல்வதை முற்றிலும் நிறுத்திவிட்டனர். அவ்வப்போது கைகளைக் கழுவ வேண்டும் என்று நான் சொன்னபோது, அதற்குப் பதில் பசுவின் கோமியத்தை குடிக்கலாமா என்று அவர் கேட்டார். விளைநிலத்தில் பயிர்வேலை செய்யும்போது எங்களால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை” என்று கூறினார் சௌதரி. 

இந்தியாவில் சரிபாதிக்கும் அதிகமான தொழிலாளர்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் விவசாயத்தில் இருந்து வருகிறது. நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, காய்கறி, பால் ஆகியவற்றை உலகில் அதிக அளவு உற்பத்தி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 

இப்போது வேளாண் நடவடிக்கைகளை நிறுத்துவது விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதிக்கும் என்பதைத் தாண்டி உணவுப் பாதுகாப்பையே இது பாதிக்கும் என்ற அபாயம் இருக்கிறது. 

இந்தியாவில் வேளாண் நடவடிக்கைகள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மிக உச்சமாக இருக்கும். எனவே முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நேரம் மிக மோசமானது.

இந்த மாதங்களில்தான் குளிர்காலப் பயிர்களான கோதுமை, அரிசி, பருப்பு வகைகள் ஆகியவை அறுவடை செய்யப்பட்டு விற்கப்படும். பழங்களும் அதிக அளவில் விளையும் பருவம் இது. கோடைகால – மானாவாரிப் பயிர்களை, நெல், பயறு வகைகள், பருத்தி, கரும்பு ஆகியவற்றை விவசாயிகள் விதைக்கும் காலமும் இதுவே. 

இந்த இருவகைப் பருவங்களையும் முடக்க நிலை அறிவிப்பு பாதித்துள்ளது என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் இணைப் பேராசிரியர் மேகலா கிருஷ்ணமூர்த்தி. 

 

முடக்கநிலை அறிவிப்புக்கு முன்பே இந்திய விவசாயிகளின் பாடு போராட்டமாகவே இருந்தது. விளைபொருள்களின் விலை குறைவாக இருப்பதன் காரணமாக ஊரக நுகர்வு மந்தகதியில் இருந்தது. ‘சாதாரண’ நிலையிலேயே கூட விவசாயம் கட்டுப்படி ஆகாத ஒன்றாகவே ஆகிப்போனது என்கிறார் சௌதரி.

1997க்குப் பிறகு சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இவற்றில் பெரும்பாலான தற்கொலைகள் வறுமை, கடன், இடுபொருள்களின் கடும் விலை உயர்வு, பூச்சி தாக்குதலால் பயிர் அழிவு ஆகிய காரணங்கள் தொடர்புடையவை. 

உணவுப் பாதுகாப்புக்கும், ஏழைகளுக்குப் பணப் பட்டுவாடா செய்யவும் அரசாங்கம் இதுவரை 1.74 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் இது போதுமானதல்ல என்ற விமர்சனங்கள் எழுந்தன.
 

விளைபொருள்களை கொள்முதல் செய்ய மாநில அரசுகள் நிதியைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றன. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு டிராக்டர்களை கடனாக வழங்கத் திட்டமிடப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அவற்றை இயக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. பொதுப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாமல் அளிப்புச் சங்கிலி பழைய நிலைக்கு எப்படித் திரும்பும் என்பதும் தெளிவாக இல்லை. 

அது தவிர, வேறுபல கடினமான சவால்களும் உள்ளன. புலம் பெயர் தொழிலாளர்களை மீண்டும் விளைநிலத்துக்கு வரவைப்பது எப்படி? நிச்சயமற்ற நிலையில் உள்ள வியாபாரிகள் எவ்வளவு விரைவாக, முடக்கநிலைக்கு முன்பு செய்த அளவுக்கு கொள்முதல் செய்வார்கள்? அவர்கள் குறைவாக கொள்முதல் செய்தால் ஒரே நேரத்தில் நுகர்வோருக்கு சந்தையில் உணவுப் பொருள்களின் விலை உயரும், விவசாயிகளுக்கு விளைபொருள்களில் இருந்து கிடைக்கிற வருமானம் மேலும் குறையும்.

ஆனால் கெட்ட செய்திகள் மட்டுமே இல்லை. களத்தில் சூழ்நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Will coronavirus lockdown cause food shortages in India?AFP

இந்தியாவில் மொத்தம் சுமார் 7,500 மொத்த விற்பனை விவசாய விளைபொருள் சந்தையும், 25,000 சிறிய அளவிலான வாரச் சந்தைகளும் உள்ளன. “அவற்றில் சில மீண்டும் திறக்கப்படுகின்றன. எப்படி விளைபொருள்களை சந்தைகளுக்கு கொண்டுவருவது என்பது பற்றியும், சந்தைகளில் எப்படி சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்படுகின்றன” என்கிறார் மேகலா கிருஷ்ணமூர்த்தி. 

குளிர்கால பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருந்தது என்பது இன்னொரு நற்செய்தி. இந்தியாவின் உணவுக் களஞ்சியம் நிரம்பி வழிகிறது. அதில் 6 கோடி டன் உணவு தானியம் குவிந்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய அரசால் நடத்தப்படும் உணவு விநியோகத் திட்டம் இது. எனவே உணவுப் பற்றாக்குறை தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் மாமூல் நிலை திரும்பும் வரை விவசாயிகள், குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியவர்களை ஆதரித்துக் காப்பது, ஏழைகளுக்கு உணவைக் கொண்டுபோய் சேர்ப்பது, அடுத்த பருவத்துக்கான அறுவடை நடப்பதை உறுதி செய்வது ஆகியவையே சவாலான பணிகள். 

farmer கணேஷ் நானோட்

மலையளவு சோதனைகள் வந்தாலும், கலங்காமல் சகஜ நிலைக்குத் திரும்பும் வல்லமை மிக்கவர்களாக விவசாயிகள் காட்சி தருகிறார்கள். 

“சந்தை மூடப்பட்டுள்ளதும், போக்குவரத்து இல்லை என்பதும் எங்கள் பிரச்சனை. எனவே எங்களால் பொருள்களை விற்கமுடியவில்லை. ஆனால் நான் தற்போது என் வயலில் தன்னந்தனியாக வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்று தொலைபேசி வழியாகத் தெரிவித்தார் மகாராஷ்டிர மாநிலம், அகோலா என்ற இடத்தைச் சேர்ந்த கணேஷ் நானோட் என்ற பருத்தி விவசாயி. பிறகு, தாம் நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை என்பதைக் காட்டுவதற்காக, தனது வயலில் இருந்து எனக்கு ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பினார்.


 

https://www.bbc.com/tamil/india-52202568

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.