Jump to content

கொழும்பு துறைமுக நகரத்தால் பாதுகாப்பு அணிகலன்கள் விநியோகம்


Recommended Posts

கொழும்பு துறைமுக நகரத்தால் பாதுகாப்பு அணிகலன்கள் விநியோகம்

 

 

 

image_a9f9e2a32b.jpg

கொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வகையில் இயங்கும் புறக்கோட்டை மெனிங் மொத்த விற்பனைச் சந்தையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை கொழும்பு துறைமுக நகரம் (CHEC Port City Colombo) நேற்று முன்தினம் (05) நன்கொடையாக வழங்கியுள்ளது. 

பொலிஸ் படையினருக்கான மற்றொரு பாரிய அளவிலான பாதுகாப்பு கருவிகளின் வழங்கலைத் தொடர்ந்து, நிறுவனம் அடுத்த வாரம் சுகாதார மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோருக்காக மற்றுமொரு நன்கொடையையும் வழங்கவுள்ளது.

இந்த நன்கொடையின் பெறுமதி ரூ. 6 மில்லியனுக்கும் அதிகமாகும். முப்படைகள், முன்னின்று உழைத்து வருகின்ற பணியாளர்களுக்கும் இத்தகைய நன்கொடைகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. மெனிங் மொத்த விற்பனைச் சந்தையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொழும்பு பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான தேசபந்து தென்னக்கோனின் தலைமையின் கீழ், நன்கொடையாக வழங்கப்பட்ட பொருள்களைப் பெற்றுக்கொண்டதுடன், CHEC Port City Colombo இன் சார்பில் அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

கொவிட்-19 தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து, முகக்கவசங்கள் மற்றும் பிற பாதுகாப்பு கருவிகள் பொது மக்களின் பயன்பாட்டுக்காகக் கிடைப்பதில் பெரும் பற்றாக்குறை நிலவுவதுடன், இந்த பொருட்ள்களுக்கானத் தேவை இலங்கையில் அதிகரித்துள்ளது.

கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தினசரி புதிய உணவுப் பொருள்களை விநியோகிப்பதில் மெனிங் சந்தை வழங்கி வருகின்ற சேவையை இனங்கண்டு, இந்த சேவைகளை வழங்கி, மக்கள் முறையாக பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய இந்த முயற்சியை கொழும்பு துறைமுக நகரம் மேற்கொண்டது.

நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் கொழும்பு துறைமுக நகரம் அனைத்து இலங்கையர்களையும் பொறுப்புணர்வு மிக்கவர்களாகவும், வீட்டிலேயே இருக்கவும், நல்ல சுகாதாரப் பழக்கங்களை பேணவும், நிலைமை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

http://www.tamilmirror.lk/வணிகம்/கொழும்பு-துறைமுக-நகரத்தால்-பாதுகாப்பு-அணிகலன்கள்-விநியோகம்/47-248109

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.