Jump to content

கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்!


Recommended Posts

கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்!

 

 

  by : Litharsan

World-Coronavirus.jpg

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது.

உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்து 900ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் உலக அளவில் 14 இலட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 82 ஆயிரத்து 80 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு இதுவரை 3 இலட்சத்து 2 ஆயிரத்து 149 பேர் குணமடைந்துள்ள போதும், தற்போது மரணமடைவோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகின்றமை கவலைக்குரியதாக உள்ளது.

நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 380 பேர் மரணித்துள்ள நிலையில் இதுவே கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு நிகழ்ந்த நாளாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 970 பேர் மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 33 ஆயிரத்து 331 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர்.

மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 4 இலட்சத்து 335 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 674 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் 9 ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள்ளமை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க மாநிலங்களில் நியூயோர்க்கில் வைரஸ் தொற்று கடுமையாகியுள்ள நிலையில் அங்குமட்டும் கடந்த 24 மணிநேரங்களில் 731 பேர் மரணமடைந்துள்ளனர்.

அங்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 384 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 489ஆகக் காணப்படுகிறது.

இதையடுத்து நியூஜெர்ஸி மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரேநாளில் 229 பேர் மரணித்து மொத்த மரணம் ஆயிரத்து 232ஆகப் பதிவாகியுள்ளது.

அங்கு 44 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மிச்சிக்கன் மாகாணத்தில் ஒரு நாளில் 118 பேர் மரணித்து மொத்த உயிரிழப்பு 845 ஆகவும் மொத்த பாதிப்பு 18 ஆயிரத்து 970ஆகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடான பிரான்சில் ஆயிரத்து 417 பேர் ஒரே நாளில் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்பு பத்தாயிரத்தைக் கடந்து 10 ஆயிரத்து 328ஆகப் பதிவாகியுள்ளது.

பிரான்ஸில் நாளுக்கு நாள் உயிரிழப்புக்கள் ஆயிரக்கணக்கில் ஏற்பட்டுவரும் நிலையில் நேற்று மட்டும் அங்கு 11 ஆயிரத்து 59 பேர் புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டு மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 69 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜேர்மனியிலும் கொரோனாவின் தீவிரப் பரவல் நீடித்துவரும் நிலையில் அங்கும் பல நூற்றுக்கணக்கில் மரணங்கள் ஏற்பட்டுவருகின்றன.

அந்தவகையில், இத்தாலியில் உலகளவிலேயே அதிக மரணங்கள் மொத்தமாகப் மதிவாகியுள்ள நிலையில் நேற்று மட்டும் அங்கு 604 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், புதிய நோயாளர்களின் வரவு குறைந்துள்ள நிலையில் புதிய நோயாளர்களாக நேற்று 3 ஆயிரத்து 39 பேர் பதிவாகியுள்ளதுடன் மொத்த வைரஸ் தொற்றாளர்கள் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 586 பேராக உள்ளனர்.

அங்கு மொத்த உயிரிழப்பு 17 ஆயிரத்து 127 ஆகப் பதிவாகியுள்ளதுடன் 24 ஆயிரத்து 392 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

இதையடுத்து, கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஸ்பெய்னில் நேற்று ஒரேநாளில் 704 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணம் 14 ஆயிரத்து 45 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், ஸ்பெய்னில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 942 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வெளியேறியுள்ளமை சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 663 பேர் தொற்றாளர்களாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று 4 ஆயிரத்து 288 பேர் புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு கடந்த 24 மணிநேரங்களில் 206 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 16 ஆகக் காணப்படுகிறது.

இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிர நிலையில் பரவியுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் 786 பேர் மரணித்து மொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அங்கு 55 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, நேற்று புதிய நோயாளர்களாக 3 ஆயிரத்து 634 பேர் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, மற்றுமொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திலும் கொரோனாவின் அதிக்கம் வலுத்துள்ள நிலையில் அங்கு அதிகமாக 403 பேர் ஒரேநாளில் மரணித்துள்ளனர். அங்கு மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளதுடன், 22 ஆயிரத்து 253 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

இதனைவிட நெதர்லாந்திலும் கணிசமான உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. அங்கு நேற்று மட்டும் 234 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 101ஆகக் காணப்படுகிறது.

மேலும், 777 புதிய நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டு 19 ஆயிரத்து 580 ஆக வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனைவிட, சுவிற்சர்லாந்தில் நேற்று மட்டும் 56 பேர் மரணித்துள்ளதுடன் கனடாவிலும் 58 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சுவிற்சர்லாந்தில் இதுவரை 22 ஆயிரத்து 253 பேர் வைரஸ் நோயாளர்களாக உள்ள கிட்டத்தட்ட 9ஆயிரம் பேர் குணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.

கனடாவில், இதுவரை 17 ஆயிரத்து 897 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை மொத்த உயிரிழப்பு 381 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட ஈரானில் தொடர்ந்தும் நூறைத் தாண்டி உயிரிழப்பு பதிவாகிவருவதுடன் நேற்று மட்டும் 133 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன் அங்கு இதுவரை 3 ஆயிரத்து 872 பேர் மொத்தமாக மரணித்த நிலையில் மொத்த பாதிப்பு 62 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, பிரேஸிலில் நேற்று மட்டும் 122 பேர் மரணித்துள்ளதுடன், சுவீடனில் 114 பேரும், ஈக்குவேடாரில் 29 பேரும், பொலந்தில் 22 பேரும் நேற்று மரணித்துள்ள நிலையில் அயர்லாந்தில் 36 பேரும், இந்தியாவில் 24 பேரும் மெக்ஸிகோவில் அதிகபட்சமாக 31 பேரினதும் உயிரிழப்பு ஒரேநாளில் பதிவாகியுள்ளது.

http://athavannews.com/கொரோனாவின்-தீவிர-பரவல்-உ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.