Jump to content

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்


Recommended Posts

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

mulaitivu-death.jpg


முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்த நிலையில் அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே, அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபர் கடந்த (05-04-2020) இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று முன்தினம் (06-04-2020) காலை அவர் எழுந்து வராத நிலையில் அங்கு இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று குறித்த நபரின் உடலை பார்வையிட்டதோடு உயிரிழந்தவருடைய உறவினர்கள் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் உடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது .

குறித்த மருத்துவ பரிசோதனைகள் இன்றையதினம் (08-04-2020) இடம்பெறவுள்ளன. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 2016 ஆம் ஆண்டு முதல் குறித்த விகாரையில் இறந்த விகாராதிபதியுடன் கடமையாற்றி வந்த ஜனகபுர பகுதியை சேர்ந்த கமகே நிமால் கருணாரத்ன என்கின்ற 47 வயதுடைய நபர் ஆவார் .

இவருடைய தங்கையார் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவுப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://www.virakesari.lk/article/79549

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரோட, கண தெய்யோட விளையாடின சும்மா விடுவாரே? 🤗

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

பிள்ளையாரோட, கண தெய்யோட விளையாடின சும்மா விடுவாரே? 🤗

அப்படியா நாதமுனி! அப்ப பத்து வருசத்துக்கு முன்னர் லடசக்கணக்கான எமது  மக்கள் இதே ஏரியாவிலை தானே கொல்லப்பட்டாங்க. அப்ப ஏங்க போனார் இந்த பிள்ளையார்?   ஓ அந்த ரைம. அவர் வேற ஏரியாவுக்கு பொறுப்போ!  அல்லது தன்னோட சேட்ட விட்டவர்களை கொல்லுற பேட்டை பிஸ்தாவா அவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிள்ளையாரோட, கண தெய்யோட விளையாடின சும்மா விடுவாரே? 🤗

சிங்களவரிடம் பத்ரகாளி, முனீஸ்வரன் தொடர்பாக மிகவும் பயம் உள்ளது என்பது உண்மை. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அப்படியா நாதமுனி! அப்ப பத்து வருசத்துக்கு முன்னர் லடசக்கணக்கான எமது  மக்கள் இதே ஏரியாவிலை தானே கொல்லப்பட்டாங்க. அப்ப ஏங்க போனார் இந்த பிள்ளையார்?   ஓ அந்த ரைம. அவர் வேற ஏரியாவுக்கு பொறுப்போ!  அல்லது தன்னோட சேட்ட விட்டவர்களை கொல்லுற பேட்டை பிஸ்தாவா அவர். 

அதில்லை பாருங்கோ... அங்க தேவாலயங்களில் ஒதுங்கின ஆக்கள் தான் தப்பிடினம்...

இதுதான் நீங்கள் எதிர்பார்க்கிற பதில் எண்டால் எனக்கு பிரச்னை இல்லை பாருங்கோ... உங்கண்ட மத (ம் ) பிடிச்ச விவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை.

பிள்ளையார் கோவிலைப் பிடித்து அதுக்குள்ள பங்க்சலையை கட்டி, அதுக்குள்ளயே பிக்கரையும் போட்டு எரித்தால்..... சாபம் தான் விழும்....

Link to comment
Share on other sites

6 minutes ago, Nathamuni said:

அதில்லை பாருங்கோ... அங்க தேவாலயங்களில் ஒதுங்கின ஆக்கள் தான் தப்பிடினம்...

இதுதான் நீங்கள் எதிர்பார்க்கிற பதில் எண்டால் எனக்கு பிரச்னை இல்லை பாருங்கோ... உங்கண்ட மத (ம் ) பிடிச்ச விவாதங்களுக்கு எனக்கு நேரமில்லை.

பிள்ளையார் கோவிலைப் பிடித்து அதுக்குள்ள பங்க்சலையை கட்டி, அதுக்குள்ளயே பிக்கரையும் போட்டு எரித்தால்..... சாபம் தான் விழும்....

நான் கேட்ட சிந்திக்க கூடிய கேள்வி தேவாலயத்திற்கும் பொருந்தும் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். அப்படி இருந்தும் ஏதோ எதிர் கட்சிகாரனுக்கு பதில் சொல்லுமா போல தேவாலயத்தை அதுக்குள்ள இழுகிறீங்க. 

பிள்ளையார் கோவிலை பிடித்து அதுக்குள்ள பஞ்சாலையை கட்டின உடனே பிடிக்கிற சாபம் பிடிக்கும் என்டு சொல்லுறீங்க.  1960 களிலை இருந்தே அந்த பிள்ளையார வணங்கிற பக்தர்களின்ற காணிகளை பறித்து குடியேற்றங்களை மேற்கொண்டு அவங்கட நிலத்திலேயே அவங்களை சிறுபான்மை மக்கள் ஆக்கேக்க  ஏன் சாபம் பிடிக்கேல்லை என்று கேட்கிறது நியாயம் தானே. 

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் ?  உண்மை வெளிவராமல் போகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, tulpen said:

நான் கேட்ட சிந்திக்க கூடிய கேள்வி தேவாலயத்திற்கும் பொருந்தும் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். அப்படி இருந்தும் ஏதோ எதிர் கட்சிகாரனுக்கு பதில் சொல்லுமா போல தேவாலயத்தை அதுக்குள்ள இழுகிறீங்க. 

பிள்ளையார் கோவிலை பிடித்து அதுக்குள்ள பஞ்சாலையை கட்டின உடனே பிடிக்கிற சாபம் பிடிக்கும் என்டு சொல்லுறீங்க.  1960 களிலை இருந்தே அந்த பிள்ளையார வணங்கிற பக்தர்களின்ற காணிகளை பறித்து குடியேற்றங்களை மேற்கொண்டு அவங்கட நிலத்திலேயே அவங்களை சிறுபான்மை மக்கள் ஆக்கேக்க  ஏன் சாபம் பிடிக்கேல்லை என்று கேட்கிறது நியாயம் தானே. 

உங்கட குதர்க்க கேள்விக்கு பதில் சொல்ல வெளிக்கிட்டால்....

கடைசீல, கடவுள் ஏன் என்னை ஆம்பிளயாக/பெம்பிளையாக படைத்தான்.... ஏழையாக படைத்தான்... 

சிங்களவனாக இல்லாமல்.... ..... தமிழனாக பிறக்க வைத்தான்... என்று போய்....

கிறிஸ்தவ ஐரோப்பியன் நாட்டினை பிடித்து ஆள விட்டுடானே தீவில் சிங்களவனும், தமிழனும், இஸ்லாமியனும் வணங்கிய கடவுள் என்று வந்து நிப்பியள். 

சில இயற்கை நியதி படி நடக்கும். போர்த்துகேயன் கிளம்பியதுபோல ஒல்லாந்தனும் கிளம்ப வேண்டி வந்தது. அதுபோல பிரிட்டிஷ்காரனும் கிளம்பினான். அதேபோல சிங்களவனுக்கு கிளம்பும் காலமும் வரும்.

ஜின்னாவின் பாக்கிஸ்தான் உதாரணம் இருந்தும், எங்களது படித்த மரமண்டைகள், சிங்களவனை நம்பியதும் இயற்கை நியதி. 

புலிகள் மீது அனுதாபம் இருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவு, அவர்களால் தவிர்த்திருக்க படக் கூடியது என்பது எனது தனிப்படட அபிப்பிராயம்.
 
அதனை  புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் பேசி பயன் இல்லை.

Link to comment
Share on other sites

"அந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.:

 உண்மை வெளிவராமல் போகலாம் 😞 

2 minutes ago, Nathamuni said:

சில இயற்கை நியதி படி நடக்கும். போர்த்துகேயன் கிளம்பியதுபோல ஒல்லாந்தனும் கிளம்ப வேண்டி வந்தது. அதுபோல பிரிட்டிஷ்காரனும் கிளம்பினான். அதேபோல சிங்களவனுக்கு கிளம்பும் காலமும் வரும்.

ஜின்னாவின் பாக்கிஸ்தான் உதாரணம் இருந்தும், எங்களது படித்த மரமண்டைகள், சிங்களவனை நம்பியதும் இயற்கை நியதி. 

அருமையான கருத்து !

Link to comment
Share on other sites

20 minutes ago, Nathamuni said:

உங்கட குதர்க்க கேள்விக்கு பதில் சொல்ல வெளிக்கிட்டால்....

கடைசீல, கடவுள் ஏன் என்னை ஆம்பிளயாக/பெம்பிளையாக படைத்தான்.... ஏழையாக படைத்தான்... 

சிங்களவனாக இல்லாமல்.... ..... தமிழனாக பிறக்க வைத்தான்... என்று போய்....

கிறிஸ்தவ ஐரோப்பியன் நாட்டினை பிடித்து ஆள விட்டுடானே தீவில் சிங்களவனும், தமிழனும், இஸ்லாமியனும் வணங்கிய கடவுள் என்று வந்து நிப்பியள். 

சில இயற்கை நியதி படி நடக்கும். போர்த்துகேயன் கிளம்பியதுபோல ஒல்லாந்தனும் கிளம்ப வேண்டி வந்தது. அதுபோல பிரிட்டிஷ்காரனும் கிளம்பினான். அதேபோல சிங்களவனுக்கு கிளம்பும் காலமும் வரும்.

ஜின்னாவின் பாக்கிஸ்தான் உதாரணம் இருந்தும், எங்களது படித்த மரமண்டைகள், சிங்களவனை நம்பியதும் இயற்கை நியதி. 

புலிகள் மீது அனுதாபம் இருந்தாலும், முள்ளிவாய்க்கால் முடிவு, அவர்களால் தவிர்த்திருக்க படக் கூடியது என்பது எனது தனிப்படட அபிப்பிராயம்.
 
அதனை  புரிந்து கொள்ளாமல் விதண்டாவாதம் பேசி பயன் இல்லை.

ஜதார்தமான சிந்தனை பூர்வமான தங்கள் இந்த  பதிலுக்கு நன்றி. இவ்வாறான  சிந்தனைகள் தான் எமது எதிர்காலத்திற்கு நல்லது. ஆனால் படித்த மரமண்டைகள் சிங்களவனை நம்பியது இயற்கை நீதியல்ல. அது அவர்களின் சுயநலம்.  உங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. நான் கேட்டது குதர்க்கம் அல்ல.  சிந்திக்க தூண்டும் கேள்வி என்பது இவ்வளவு விடயம் தெரிந்த தாங்கள் அறியாத‍த‍ல்ல. வெளிப்படையாக அதை ஒத்து கொள்ளாவிட்டாலும் தங்களின் பதிலில் இருந்து அதை புரிந்து கொண்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

படித்த மரமண்டைகள் சிங்களவனை நம்பியது இயற்கை நீதியல்ல. அது அவர்களின் சுயநலம்.  

சுஜநலமா? 

அப்படி சொல்லமுடியாது நண்பரே...தெளிவாக சிந்தியுங்கள்

ஜின்னாவை போல நாட்டினை பிரித்து கேட்டிருந்தால், அவர்கள் தானே பிரதமர் அல்லது ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள்.... அது அதிகூடிய சுஜநலமாக இருந்திருக்கும் அல்லவா?
 

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

சுஜநலமா? 

அப்படி சொல்லமுடியாது நண்பரே...தெளிவாக சிந்தியுங்கள்

ஜின்னாவை போல நாட்டினை பிரித்து கேட்டிருந்தால், அவர்கள் தானே பிரதமர் அல்லது ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள்.... அது அதிகூடிய சுஜநலமாக இருந்திருக்கும் அல்லவா?
 

இல்லை நண்பரே தமிழர்களின் முக்கியமாக யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம். பெரிதாக றிஸ்க் எடுக்க விரும்பமாட்டா்கள். ஒரு வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். வர்த்த‍கத்துறையில் வளர்ச்சியடையாமல் படித்தவுன் அரசு உத்தியோகம் எடுப்பதில் திருப்தி கொள்ளுவர். போட்டி போடுவதென்றால் தனது அயல்வீட்டுகாரனுடம் மட்டும் தான் போட்டி போடுவரே தவிர அடுத்த நாட்டு கார‍ரை ஒரு ரோல் மொடலாக கூட எடுக்க மாட்டார்கள்.  அந்த ரீதியில் சிங்களவனிடம் அரச உத்தியோகத்தில் கொழுத்த சம்பளத்தில் இருக்கலாம் என்று பேதைத்தனமாக கற்பனை செய்திருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

இல்லை நண்பரே தமிழர்களின் முக்கியமாக யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம். பெரிதாக றிஸ்க் எடுக்க விரும்பமாட்டா்கள். ஒரு வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். வர்த்த‍கத்துறையில் வளர்ச்சியடையாமல் படித்தவுன் அரசு உத்தியோகம் எடுப்பதில் திருப்தி கொள்ளுவர். போட்டி போடுவதென்றால் தனது அயல்வீட்டுகாரனுடம் மட்டும் தான் போட்டி போடுவரே தவிர அடுத்த நாட்டு கார‍ரை ஒரு ரோல் மொடலாக கூட எடுக்க மாட்டார்கள்.  அந்த ரீதியில் சிங்களவனிடம் அரச உத்தியோகத்தில் கொழுத்த சம்பளத்தில் இருக்கலாம் என்று பேதைத்தனமாக கற்பனை செய்திருப்பார்கள். 

சிறு திருத்தம்;

"யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம், தன் ஊரவன், தன் சாதிக்காறன் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம்."

 

ஒருவன் படித்து அரச உத்தியோகம் எடுக்கப் போறாணெண்டால் ஏற்கனவே படித்தவர்கள் உடனே செய்வது பெட்டிசன் போடுவது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kapithan said:

சிறு திருத்தம்;

"யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம், தன் ஊரவன், தன் சாதிக்காறன் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம்."

 

ஒருவன் படித்து அரச உத்தியோகம் எடுக்கப் போறாணெண்டால் ஏற்கனவே படித்தவர்கள் உடனே செய்வது பெட்டிசன் போடுவது. ☹️

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

31 minutes ago, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

🤗

பச்சை முடிச்சு போட்டுதாம்...

ஆனால்.... பச்சை உள்ள பதிலை quote பண்ணி, பச்சையை மட்டும் விட்டுப்போட்டு.... மிச்சத்தை டெலீட் பண்ணினால்.... பச்சை 'அங்க' நிண்டு மிலாந்துது... மேலே இருக்கிறது போல தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

உண்மைதான். ஆனால் சுயநலத்திலும் பொதுநலன் வேண்டும்.

உலகத்திலுள்ள இனங்கள் அனைத்துமே தங்கள் இனம், தேசம் என வரும்போது தங்கள் குறுகிய சிந்தனையிலிருந்து தற்காலிகமாகவேனும் விலகி பொது நலனுக்காக ஒன்று சேர்ந்து கொள்கின்றன. ஆனால் மிகச் சிறிய எண்ணிக்கையான மக்களே தனக்கு மூக்குப் போனாலும் பபறவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக அமைய  வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். 

எங்கள் இனம் நிச்சயமாக பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தினுள் அடங்கா ☹️

(இங்கே எதிரி என்பவன்  சிங்களமாக இருக்க வேண்டியது  கட்டாயம்  அல்ல) !🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

உண்மைதான். ஆனால் சுயநலத்திலும் பொதுநலன் வேண்டும்.

உலகத்திலுள்ள இனங்கள் அனைத்துமே தங்கள் இனம், தேசம் என வரும்போது தங்கள் குறுகிய சிந்தனையிலிருந்து தற்காலிகமாகவேனும் விலகி பொது நலனுக்காக ஒன்று சேர்ந்து கொள்கின்றன. ஆனால் மிகச் சிறிய எண்ணிக்கையான மக்களே தனக்கு மூக்குப் போனாலும் பபறவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக அமைய  வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர். 

எங்கள் இனம் நிச்சயமாக பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தினுள் அடங்கா ☹️

(இங்கே எதிரி என்பவன்  சிங்களமாக இருக்க வேண்டியது  கட்டாயம்  அல்ல) !🤥

தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால் சரியான இலக்கை அடையலாம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

இல்லை நண்பரே தமிழர்களின் முக்கியமாக யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம். பெரிதாக றிஸ்க் எடுக்க விரும்பமாட்டா்கள். ஒரு வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். வர்த்த‍கத்துறையில் வளர்ச்சியடையாமல் படித்தவுன் அரசு உத்தியோகம் எடுப்பதில் திருப்தி கொள்ளுவர். போட்டி போடுவதென்றால் தனது அயல்வீட்டுகாரனுடம் மட்டும் தான் போட்டி போடுவரே தவிர அடுத்த நாட்டு கார‍ரை ஒரு ரோல் மொடலாக கூட எடுக்க மாட்டார்கள்.  அந்த ரீதியில் சிங்களவனிடம் அரச உத்தியோகத்தில் கொழுத்த சம்பளத்தில் இருக்கலாம் என்று பேதைத்தனமாக கற்பனை செய்திருப்பார்கள். 

இது குறித்து பெரிதாக எழுதலாம்.... நேரமில்லை...

நான் இப்போது 16ம் நூறாண்டில் இலங்கையில் நுழைந்த போர்த்துக்கேயரால் உண்டான கலாசார மாறுதல்கள் என்ற ஆங்கில புத்தகம் ஒன்றினை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

சிங்கள அரச சரித்திரத்தில் முடியுரிமைக்காக இளவரசரான மகன் அல்லது மகன்கள் தந்தையை கொன்ற நிகவுகள் உள்ளன. 

போர்த்துக்கேயர் வரும்போது ஆண்டு கொண்டிருந்த அப்பாவினைக் கொலை செய்து மூன்று அண்ணன் தம்பிகளிடையே ராஜ்யத்தினை பேசியபடியே இரண்டாக பிரித்து ஆண்டு கொண்டிருந்தனர். ஆனாலும் அவர்களுக்கிடையே நடந்த பதவிசண்டையில் கோட்டையினை ஆண்ட ஒருவருக்கு ஆதரவு கொடுத்து, அவரை தமது பொம்மையாகி பின்னர் ஆடசியை பிடித்துக் கொண்டனர். 

அதேபோல  யாழ்பாணத்தினை பிடித்த போர்த்துக்கேயர் அங்கேயும் ஒரு பொம்மையினை வைத்து பின்னர் சங்கிலியனை போரிட்டு வென்று யாழ்ப்பாணத்தினை பிடித்துக் கொண்டனர்.

ஆனாலும் எமக்கு தெரியாத செய்தி என்னவென்றால், சிங்களவர்கள் கை ஓங்கிய போதெல்லாம், தமிழர்களுக்கு ஆதரவாக ஓடி வந்தவர்கள் தென்னிந்திய அரசர்கள்.

இவர்களால் வரக்கூடிய ஆபத்தினை தடுக்க போர்த்துக்கேயர் குடியேறிய முதலில் பகுதி, யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த தீவு பகுதிகள். முக்கியமாக நெடும்தீவு. 

இந்த தென்னிந்திய ஆபத்தினை பிரிட்டிஷ்காரர்கள் இரண்டு பக்கமும் பிடித்துக் கொள்ளும் வரை, போர்த்துகேயர்களும், ஒல்லாந்தர்களும் மிக கவனமாக கையாண்டார்கள்.

மிக மிக அண்மையில் கூட, இந்த ஆதரவு கிடைக்காமல் தடுத்தது கருணாநிதி.

இன்றும் கூட பல ஆய்வாளர்கள் சொல்வது தமிழகத்தின் பேராதரவு கிடைத்தால் மட்டுமே ஈழ தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும். 

அதனால் தான் சொல்கிறேன்... சிங்களவன் வெளியேறும் நாளும் வரும். 

ஏனெனில் எதுவுமே நிரந்தரமில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

ஏதோ மற்ற மிருகங்களுக்கு சுயநலம் இல்லை என்றதாகவல்லோ உங்கள் கதை போகிறது? இப்படி மனிதரை நீங்கள் தாழ்வாக எழுத, தாங்களும் மனிதர் என்று சொல்லும் ஒரு கூட்டம் அதை படித்து ஆரவாரிக்குது, யாரிடம் சொல்லி அழ, ஆனை முகத்தானே😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

ஏதோ மற்ற மிருகங்களுக்கு சுயநலம் இல்லை என்றதாகவல்லோ உங்கள் கதை போகிறது? இப்படி மனிதரை நீங்கள் தாழ்வாக எழுத, தாங்களும் மனிதர் என்று சொல்லும் ஒரு கூட்டம் அதை படித்து ஆரவாரிக்குது, யாரிடம் சொல்லி அழ, ஆனை முகத்தானே😥

சரி உங்கடை ஆசையை ஏன் கெடுப்பான்......
எல்லா உயிரினங்களுக்கும் சுயநலம் இருக்கின்றது.  சுயநலம் இல்லாத உயிரினங்களே இந்த உலகில் இல்லை.

இப்ப என்ன மாதிரி தலை குளிருதோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால் சரியான இலக்கை அடையலாம்.:cool:

தாயக்கட்டையும் பிழை (Loaded dice ) அதை உருட்டும் இடத்தில் இருப்பவர்களும் திருடர்கள் என்றால் அதில் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

தாயக்கட்டையும் பிழை (Loaded dice ) அதை உருட்டும் இடத்தில் இருப்பவர்களும் திருடர்கள் என்றால் அதில் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை. 😜

நான் எழுதியதை நன்றாக கூர்ந்து வாசித்து கிரகித்து கொள்ளுங்கள்.இருப்பவர்கள் உருட்டினால் என நான் எழுதவில்லை.
மீண்டுமொரு முறை எழுதுகின்றேன்.

தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால்!!!!!!!!! :cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

நான் எழுதியதை நன்றாக கூர்ந்து வாசித்து கிரகித்து கொள்ளுங்கள்.இருப்பவர்கள் உருட்டினால் என நான் எழுதவில்லை.
மீண்டுமொரு முறை எழுதுகின்றேன்.

தாயக்கட்டையை உருட்டுபவர்கள் உருட்டினால்!!!!!!!!! :cool:
 

ஹாஹா..

நானும் தெளிவாகக்  கூறியுள்ளேன். உருட்டும் இடத்தில் இருப்பவர்கள் திருடர்கள் என்று.😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.