Jump to content

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

ஹாஹா..

நானும் தெளிவாகக்  கூறியுள்ளேன். உருட்டும் இடத்தில் இருப்பவர்கள் திருடர்கள் என்று.😂

நான் உருட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று விளிக்கவில்லை. உருட்டுபவர்கள் இடத்தையும் விளிக்கவில்லை.
மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். கவனமாக கிரகித்து கொள்ளுங்கள்.
உருட்டுபவர்கள் உருட்டினால்.....!!!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

நான் உருட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று விளிக்கவில்லை. உருட்டுபவர்கள் இடத்தையும் விளிக்கவில்லை.
மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். கவனமாக கிரகித்து கொள்ளுங்கள்.
உருட்டுபவர்கள் உருட்டினால்.....!!!:cool:

ஹாஹா...

இன்னமும் உருட்டவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? நம்பீட்டம். 😂 
 

1948 இல இருந்து உருட்டி முடிஞ்சிது, இப்ப புதுசா முதலில இருந்தா 😀 தாங்கேலாது சாமியோவ் 👏

மேலே கூறியதுதான். உருட்டிற இடத்தில இருந்ததெல்லாம்/  இருக்கிறதெல்லாம் திருடர்கள். தாயக்கட்டையும் Loaded one.😜

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

சரி அப்படியானால் சம் - சும் - மாவை பொன்றோரின் சுயநலமும் உலக அரசியவாதிகளுக்கு பொதுவானது தானே. அவர்களை மட்டும் எடுத்தற்கெல்லாம் இங்கு உங்களால் திட்டப்படுவது தவறோ? 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

ஹாஹா...

இன்னமும் உருட்டவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? நம்பீட்டம். 😂 
 

1948 இல இருந்து உருட்டி முடிஞ்சிது, இப்ப புதுசா முதலில இருந்தா 😀 தாங்கேலாது சாமியோவ் 👏

மேலே கூறியதுதான். உருட்டிற இடத்தில இருந்ததெல்லாம்/  இருக்கிறதெல்லாம் திருடர்கள். தாயக்கட்டையும் Loaded one.😜

 

 

தாயக்கட்டையை 1948 ல. இருந்து உருட்டியவர்கள் பலர். அதில் ஏற்கனவே சொன்னபடி  தனது சொந்த / குடும்ப  நலனை முதல்  தெரிவாக முன்னிறுத்தி எதிரிக்கு நோகாமல்  உருட்டி நேரத்தை செலவிட்டவர்களும்  உண்டு. நேர்மையுடன்  மிகப்பலமாக ஆனால் தம்மிடையே இருந்த  மறுபக்க பலவீனங்களை  அசட்டை செய்து  தாயக்கட்டைகளுடன் தம்மையும் சேதப்படுத்தியவர்களும் உண்டு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அந்த பௌத்த விகாரையில், சேர்ந்த பணத்தை... பங்கு பிரிப்பதில்,
ஏற்பட்ட தகராறில் நடந்த உள் வீட்டு,  கொலையாக இருக்கலாம். 

ஆனால்.... அந்தக் கோணத்தில், ஸ்ரீலங்கா பொலிஸார் விசாரிக்காமல்...
யாரோ ஒரு அப்பாவி தமிழனை, மாட்டி விடவே... முனைப்பாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

சரி அப்படியானால் சம் - சும் - மாவை பொன்றோரின் சுயநலமும் உலக அரசியவாதிகளுக்கு பொதுவானது தானே. அவர்களை மட்டும் எடுத்தற்கெல்லாம் இங்கு உங்களால் திட்டப்படுவது தவறோ? 

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 05:52, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

புத்தா வாழ்க்கையில் சுயநாலமில்லாவிட்டால் சாமிதான், வாழ்கை சப்பென்றாகிவிடும்

Link to comment
Share on other sites

19 hours ago, குமாரசாமி said:

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

நான் முயற்சி செய்யலாமா? வெற்றி பெற்றால் என்ன பரிசு? 😃

1. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும்மூவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

2. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால பின்னணியை கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும் எந்தவொரு பொதுவான அரசியல் பின்னணியையும் கொண்டவர்களல்ல.

3. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் பௌத்த மதத்தினர். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவருக்கும் பொதுவான மதம் இல்லை.

மூன்று கேட்டீர்கள். தந்துவிட்டேன், என்ன பரிசு?🧉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

நான் முயற்சி செய்யலாமா? வெற்றி பெற்றால் என்ன பரிசு? 😃

1. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

2. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால பின்னணியை கொண்டவர்கள். எந்தவொரு பொதுவான அரசியல் பின்னணியையும் கொண்டவர்களல்ல.

3. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் பௌத்த மதத்தினர். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவருக்கும் பொதுவான மதம் இல்லை.

மூன்று கேட்டீர்கள். தந்துவிட்டேன், என்ன பரிசு?🧉

சாமியார் தனக்கொரு தீவவைத் தேடிக் கொண்டு ஓடி ஒழிய வேண்டியதுதான். 😂

விருப்பப்பட்டால் அதற்கும் ஒரு  பெயரையும் வைக்கலாம். 😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

நீங்க எப்ப்டி அடிச்சாலும் தாங்குவீங்க புத்தர் வாழ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?  சித்தாத்தன் கூட கட்டிய மனைவி நம்பித் தூங்க, சமதர்மம் ஏற்படுத்த இரவோடு இரவாய் வெளியேறி புத்தனாய் மாறினாரே தவிர எதையும் மாற்றவில்லையே? மற்ற இனங்களை பாருங்கள்! யார் என்ன உடுத்தினாலும், யார் என்ன மதம் மாறினாலும் அவர்களையும் மதித்து ஏற்று வாழ்கிறார்கள். நாங்கள் எத்தனை வாதப் பிரதிவாதம் செய்கிறோம். நாங்கள் மாறமாட்டோம். எங்கட மூதாதையர் சொன்னதை அப்படியே பின்பற்றியே தீருவோம். 

Link to comment
Share on other sites

9 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

 

3 hours ago, satan said:

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?

வீட்டுக்கு அத்திவாரமும், மரத்துக்கு ஆணிவேரும் போல உலகியலுக்கு தமிழனின் மரபுவழி உள்ளது. தான் மண்ணில் புதைந்தாலும், தன்னை அவை மறைத்தாலும் அவைகளை வாழவைக்கவேண்டும் என்ற உயரிய அந்தப் பண்பு தமினிடமும் உள்ளது.  தன்னுயிர் ஈய்ந்து மன்னுயிர் காக்க விளைவது அவன்வழியிலொன்று. சமீபத்திய ஈழப்போரிலும் அதனைக் கண்டோம்.

இன்று கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, அனைத்து இன உலகமக்களும் தமிழனின் மரபுவழியைப் பின்பற்ற ஓடுகிறார்கள்.   

Link to comment
Share on other sites

On 9/4/2020 at 06:52, குமாரசாமி said:

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

கோத்த பாய,மைத்திரி, மகிந்த மூவரும் பொதுவான சுயநல அரசியல் வாதிகள் என்றாலும தனது இனத்தை விட்டு கொடுக்கமை, இனம் என்ற பொதுதளத்தில் அந்த பொதுவான நன்மைக்காக இணைந்து செயற்படுதல் போன்ற விடயங்கள் இருந்த‍தை நீங்கள் கவனிக்க வில்லையா?  சுமந்திரன் சம்பந்த‍ன், மாவையில் இருந்து  அந்த விடயத்தில் பாரிய வேறு பாடு இல்லை என்று நீங்கள் கூறுவீர்களா? இன்றைய நிலையில் தமிழ் அரசியல் வாதிகளில்  ஏன் ஸ்ரீலங்காவிலேதே மிக திறமையான அரசியல் வாதியான சுமந்திரன் அந்த திறமையை தனது இனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்த்து தனது சொந்த  எதிர்கால ஏதோ ஒரு கோலுக்காக  சிறிது சிறிதாக பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடியும். அந்த கோல் நிச்சயமாக ஸ்ரீலங்கா அரச பதவி அல்ல.  நீங்கள் கூறியது போல்  சுயநலம் என்பது உலகிற்கு  பொதுவானதாக இருந்தாலும்  அது தமிழர் விடயத்தில் பல வேறுபாடுகளை கொண்டுள்ளதற்கு இதை விட பல உதாரணங்கள் உண்டு. 

Link to comment
Share on other sites

22 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

தமிழினத்திற்கு ஒரு சிலை மட்டுமே மிஞ்சும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?  சித்தாத்தன் கூட கட்டிய மனைவி நம்பித் தூங்க, சமதர்மம் ஏற்படுத்த இரவோடு இரவாய் வெளியேறி புத்தனாய் மாறினாரே தவிர எதையும் மாற்றவில்லையே? மற்ற இனங்களை பாருங்கள்! யார் என்ன உடுத்தினாலும், யார் என்ன மதம் மாறினாலும் அவர்களையும் மதித்து ஏற்று வாழ்கிறார்கள். நாங்கள் எத்தனை வாதப் பிரதிவாதம் செய்கிறோம். நாங்கள் மாறமாட்டோம். எங்கட மூதாதையர் சொன்னதை அப்படியே பின்பற்றியே தீருவோம். 

அப்படி நாங்கள் நினைக்கிறோம் ஆனால் அப்படியில்லை....பொருளாதார ,கல்வி போன்ற விடயங்களால் அவர்களும் ஏற்ற தாழ்வு பார்க்கின்றனர்.....சவுதி முஸ்லீம் பெண்ணை ஏனைய நாட்டு முஸ்லீம்கள் திருமணம் செய்ய முடியாது.....
பேருவளை மாணிக்க வியாபாரி மன்னார் ஏழையை திருமணம் செய்ய மாட்டார்கள்.....

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க எப்ப்டி அடிச்சாலும் தாங்குவீங்க புத்தர் வாழ் 

அப்படி இல்லை என பதில் அளித்த பல போராளிகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் .....திருப்பி அடிப்போம் ....என செய்து காட்டினார்கள்....நான் அல்ல😃 போராளிகள் .....

Link to comment
Share on other sites

2 minutes ago, putthan said:

அப்படி நாங்கள் நினைக்கிறோம் ஆனால் அப்படியில்லை....பொருளாதார ,கல்வி போன்ற விடயங்களால் அவர்களும் ஏற்ற தாழ்வு பார்க்கின்றனர்.....சவுதி முஸ்லீம் பெண்ணை ஏனைய நாட்டு முஸ்லீம்கள் திருமணம் செய்ய முடியாது.....
பேருவளை மாணிக்க வியாபாரி மன்னார் ஏழையை திருமணம் செய்ய மாட்டார்கள்.....

கல்வி பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யக. கூடியவை. பிறப்பின் அடிப்படையில் தனது சொந்த ஊரில் வாழும் ஒருவனை தாழ்துவது உலகில் மிக கேவலமான ஏற்றத்தாழ்வு. 

Link to comment
Share on other sites

On 8/4/2020 at 23:42, தமிழ் சிறி said:

அந்த பௌத்த விகாரையில், சேர்ந்த பணத்தை... பங்கு பிரிப்பதில்,
ஏற்பட்ட தகராறில் நடந்த உள் வீட்டு,  கொலையாக இருக்கலாம். 

ஆனால்.... அந்தக் கோணத்தில், ஸ்ரீலங்கா பொலிஸார் விசாரிக்காமல்...
யாரோ ஒரு அப்பாவி தமிழனை, மாட்டி விடவே... முனைப்பாக இருப்பார்கள்.

அதே விகாரையை பெருப்பித்தால்  - அதுவே நாடு, சிங்கள நாடு 

அந்த நாட்டில் பெரிய கொள்ளைக்காரர்கள் - மகிந்த அண்ட் கோ. 

அந்த கொம்பனியும் தமிழர்களை பகடைகைகளாக வைத்தே சிங்களவர்களை ஏமாற்றுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

கல்வி பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யக. கூடியவை. பிறப்பின் அடிப்படையில் தனது சொந்த ஊரில் வாழும் ஒருவனை தாழ்துவது உலகில் மிக கேவலமான ஏற்றத்தாழ்வு. 

உண்மை , இதற்கு இன்று வரை முடிவு வந்திருக்கா.....சுற்றி சுற்றி எதோ ஒரு விதத்தில் சமுகத்தில் வந்து கொண்டேயிருக்கு ....

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

அதே விகாரையை பெருப்பித்தால்  - அதுவே நாடு, சிங்கள நாடு 

அந்த நாட்டில் பெரிய கொள்ளைக்காரர்கள் - மகிந்த அண்ட் கோ. 

அந்த கொம்பனியும் தமிழர்களை பகடைகைகளாக வைத்தே சிங்களவர்களை ஏமாற்றுகிறார்கள். 

இது ஒரு சிங்கள பெண்ணின் வேண்டுகோள் .... சிங்கள நாட்டின் தலைவருக்கு 

தாய் நாட்டிற்கு வர விரும்பும் ஒரு பெண்மணி 
இவர்கள் போன்றவர்கள் பல மில்லியன்களை அந்நிய செலாவாணியாக அனுப்பி வந்துள்ளனர்.

இந்த இளையவர்களை சிங்கள அரசு கைவிட்டுக்குள்ளது  
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.