Jump to content

சமூக இடைவெளி எதற்கு ? சற்று சிந்தியுங்கள் ! சுயநலத்தில் ஒரு பொதுநலனுக்காக செயற்படுங்கள் !


Recommended Posts

வீ.பிரியதர்சன்

நாம் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது நாங்கள் சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ளாவிட்டால் எனக்கு அருகில் இருக்கும் நபர் சமூக இடைவெளி( social distance) உடன் நிற்குமாறு ஏசுகிறார் அதனால் எமது நாட்டில் இதனை கட்டுப்படுத்த முடிகிறது என ஜேர்மனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவிக்கிறார்.

கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று உலகநாடுகளில் பரவி இதுவரை 1,431,533 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதுடன் 82,058 பேரை பலியெடுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத போதிலும் பல உலக நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் முழு முயற்சியுடன் இறங்கியுள்ளன.

இருந்தாலும் மனிதர்களை பலியெடுக்கும் இந்த கொரோனா நோய்த் தொற்று நாளுக்குநாள் ஆயிரக்கணக்கில் மனித உயிர்களை பலியெடுத்து வருகின்றது.

DSC00705.JPG


இதிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் சுகாதார பொறிமுறைகளை கையாளுமாறு அறிவுறுத்தியிருந்தது.

அதில் ஒரு பொறிமுறையே சமூக இடைவெளியைப் பேணுமாறு பல நாடுகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கு அமைய உலகநாடுகளில் பல நாடுகள் அதனை கடைப்பித்து வருகின்றன. அதனால் இந்த நோய்த் தொற்று அதிகம் பரவாமால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை நாம்அவதானிக்க முடிகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளதாலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாலும் இந்த சமூக இடைவெளி ( social distance) பேணப்படுகின்றது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் அனைத்தும் தவிடுபொடியாக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக காணப்படுகின்றது.

இந்த ஊரடங்குச் சட்டம் எதற்காக போடப்படுகின்றது என்பது தொடர்பில் இலங்கை மக்களிடத்தில் சரியான தெளிவின்மையாலேயே ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் சமூக இடைவெளியை பேணும் விதம் மக்களின் செயற்பாடுகள் தெளிவாக காட்டுகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றது. ஆனால் நாட்டு மக்கள் அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரியவில்லை என்பதை ஊரடங்கு வேளைகளில் கைதுசெய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் கைப்பற்றப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 7 ஆம் திகதி வரை ஊரடங்கை மீறியமை தொடர்பில் 16124 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 4064 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்திற்குள் குறிப்பாக ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிவரை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பேராரிசியர் இந்திக கருணாதிலகவினால் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

DSC07295.jpg


அத்துடன் அரச மருத்துவ அதிகாரிகளின் கணிப்பின்படி கொரோனா தொற்று ஏற்பட்ட முதலாவது நபர் அடையாளம் காணப்பட்ட நாளில் இருந்து ( மார்ச் 11 ) 48 நாளைக்குள் நாங்கள் ஒரு சாதகமான நிலையொன்றை எதிர்பார்க்க முடியும். வழங்கப்பட்ட பொறிமுறைகள் தவறும் பட்சத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை கூடி தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

இலங்கையில் 2 ஆயிரம் வரையிலான கொரோனா தொற்று நோயாளர்களை பராமரிப்பதற்கான வசதிகளே காணப்படுகின்றன. இந்த எல்லை மீறப்படுமிடத்து எமது சுகாதாரத்துறை நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை கொண்டிராது. வசதிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆகவே நாங்கள் இந்த நிலையை 2 ஆயிரத்திற்குட்பட்டவாறே மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை நடைமுறைப்படுத்த தற்போதுள்ள சமூக இடைவெளியை 80 வீதம் மட்டில் அகில இலங்கை ரீதியில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக இடைவெளியை நாங்கள் கூடியவரை பேணுவது, ஆனால் சமூக இடைவெளியை பேணுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் இடையிடையே ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதன் மூலம் அந்த சமூக இடைவெளியானது மேலும் குறைக்கப்படுகின்றது.

ஆகவே சமூகத்திலுள்ளவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சமூக இடைவெளியை பேண முன்வரவேண்டும்.என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலைக் கிளையின் செயலாளராகவும் அதன் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

01.jpeg


கொரோனா எனும் தொற்று நோய் என்ன செய்யலாம் !

வயதான பின்னர் நோயெதிர்ப்பு சக்தி குறைகின்றது. இதுவரை பதிவான கணிப்பின் பிரகாரம் வயதானவர்களையே கொரோனா அதிகம் தாக்குகின்றது. ஆகவே எம்மையும் பாதுகாத்துக்கொண்டு குறிப்பாக எமது வீட்டிலுள்ள வயோதிபர்களை கவனமாக பாதுகாப்போம்.

அதிலும் குறிப்பாக இதய நோய், நீரிழிவு நோய்களை ஏற்கனவே கொண்ட வயோதிபர்களை கவனமாக பாதுகாப்பது அவசியம்.

கொரோனாவினால் ஏற்கனவே வயோதிபர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆகவே ஆரோக்கியமான உணவுவகைகளை வழங்குங்கள். உங்களிடமிருந்து அவர்களுக்கு நோய் பரவாமல் இருக்க, இடைவெளியை பேணுவதோடு சுத்தமாக இருங்கள்.

வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி போன்றவற்றை முன்னெடுங்கள்.

வயோதிபர்கள் வழமையாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல், மருந்துகளை வீட்டிற்கு வரவழைத்து தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் இது மிகவும் அவசியம். மருந்தகங்களுடன் தொடர்புகொண்டு அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஒருவர் இருமினால் அதிலிருந்து பரவும் நீர்த்துளிகள் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவே சமூக இடைவெளியை பேணுங்கள்.

 


பல இடங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. இது மிகவும் ஆபத்தானது. ஆகவே சமூக இடைவெளியை பேணுங்கள்.
கடைகளுக்குள் மக்களை அனுமதிக்கும்போது, காற்றோட்டம் இல்லாத காரணத்தால் நோய் பரவும் அபாயம் அதிகம். ஆகவே பொருட்களை கடைக்கு வெளியில் விநியோகிக்க முடியுமானால் சிறந்தது. முடியுமானவர்கள், ஒன்லைனில் ஓடர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.
பொதுவெளிகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சிசெய்யுங்கள் .
யாருக்கும் உதவி செய்ய வேண்டுமானால் தனியாக செல்லுங்கள். அல்லது இருவர் செல்லுங்கள். தயவுசெய்து அதற்கு மேலதிகமாக, கூட்டமாக செல்ல வேண்டாம்.
திருமண வீடு அல்லது மரண வீட்டில் அநேகமானோர் ஒன்றுகூடும்போது, அதில் ஒருவருக்கேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
கொரோனா பாதிப்பு காலத்தில் வீதிகளில் கூடியிருந்து கைக்காதீர்கள்.
நாம் அணிந்துள்ள மாஸ்க்குகளை நாங்களே தொடக்கூடாது. காரணம் கைகளில் கிருமி இருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்னொருவருடைய மாஸ்க்கை எக்காரணம் கொண்டும் சரிசெய்யப் போகாதீர்கள்.
சர்ஜிக்கல் மாஸ்க், என் 95 மாஸ்க் என்பவை தொற்றை அண்டவிடாமல் தடுக்கும். இல்லாதவர்கள் துணியிலான மாஸ்க்கையாவது அணியலாம். குறைந்தபட்சம் எம்மிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருக்கும். ஆனால் துணியினால் ஆன மாஸ்க் எந்த வகையிலும் வைரஸ் உட்புகுவதை தடுக்காது.
குடும்ப அளவில் பரவி வந்த கொரோனா தொற்று, இப்போது சில இடங்களில் சமூக மட்டத்தில் பரவ ஆரம்பித்துள்ளதால், அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம்.
ஒரே மாஸ்க்கை அணிந்தால், தயவுசெய்து கழுவி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து மீள அணியுங்கள்.
எப்போதும் நேர்மறையான கருத்துக்களை வழங்குவோம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அல்லது நிவாரணம் வழங்கும் பகுதிகளுக்குச் சென்றால் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை மற்றும் சமூக இடைவெளியை பேணுங்கள்.
குறிப்பாக ஊடகவியலாளர்கள் கூடுமானவரை பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லாமல், தொலைபேசி அல்லது இணையம் வழியாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து செய்திகளை பெற முயற்சியுங்கள்.
ஊடகவியலாளர்கள் உங்கள் வேலை நேரத்தை வரையறை செய்துகொள்ளுங்கள். காரணம், கொரோனா செய்தி அறிக்கையிடலின் போது ஏற்படும் மன அழுத்தத்தை நிவர்த்திக்க இது உதவும்.
வேலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடல்களை கேளுங்கள், குடும்பத்தாருடன் கலந்துரையாடுங்கள், வேறு விடயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்.
பொருட்களை விற்பனை செய்பவர்களின் தொடர்பு இலக்கங்களைப் பெற்று அதனூடாக பொருட்களை ஓடர் செய்து வீட்டிலிருந்தவாறு பெற்றுக்கொள் முயற்சியுங்கள்.

எமது நாட்டிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது பல உயிர்களை பலியெடுத்துள்ளது. இங்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுவாக மருந்தகங்கள், அத்தயாவசிய தேவைகளை பூர்த்திசெய்யக் கூடிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேலாக வீடுகளுக்குள் முடிங்கியுள்ளனர். தேவையான நேரங்களில் ஒருவர் மாத்திரமே கடைகளுக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வீட்டுக்குள் வந்துவிடுவோம். இங்குள்ள மக்கள் சமூக இடைவெளியை நன்றாக பேணுகின்றனர். மக்கள் எங்கும் கூடமாட்டார்கள். அதற்கு எதிராக எவ்வித சட்டங்களும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மக்களே உணர்ந்து செயற்படுகின்றனர் என சுவிஸ் நாட்டில் வசிக்கும் பரம்சோதி மகாதீபன் தெரிவித்தார்.

இங்கு அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றோம். ஆனால் கடைகள் சாதாரணமாக திறந்துள்ளன. ஒரு மாதத்திற்கும் மேலாக வீடுகளுக்குள் தான் இருக்கின்றோம். ஆனால் உணவுப்பொருட்கள், மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்வோம். இங்கும் நாம் கடைகளுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை பேணுகின்றோம். அவ்வாறு நாம் சமூக இடைவெளியை பேணாது அருகிலிருப்பவருடன் நெருங்கும் போது அவரே நம்மை ஏசி சமூக இடைவெளியை பேணுங்கள் என்று சொல்லிவிடுவார் ’’என ஜேர்மனில் வசிக்கும் ரூபன் தெரிவித்தார்.

இங்கு ஆரம்பத்தில் கவனிக்காது விட்டுவிட்டார்கள் குறிப்பாக சமூக இடைவெளியை ஆரம்பத்தில் பேணாது விட்டுவிட்டார்கள் அதனால் இங்கு இறப்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. நாங்கள் மரண பயத்துடன் தான் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றோம். நான் வசிக்கும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை எனது சொந்த நாடான இலங்கைக்கு வரக்கூடாது. சமூக இடைவெளியை பேணுமாறு இத்தாலியில் வசிக்கும் அன்டனெட் தெரிவித்தார்.

மக்களாகிய நாம் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் மிகவும் அவதானமாக சமூக இடைவெளியை பேணக்கூடியவாறு நடந்துகொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் இருப்பவருக்கும் சமூக இடைவெளி தொடர்பில் தெளிவுபடுத்துங்கள்.

மக்கள் உணர்ந்து சமூக இடைவெளிகளை பேணும் போது தான் எதிர்காலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே இனிவரும் காலங்கள் நாட்டு மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. விழிப்புடனும் விவேகத்துடனும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். மக்களே சிந்தியுங்கள் சிறிது நேரம் ! சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள் ! வீட்டுக்குள் இருங்கள் ! வீட்டிலிருந்தே கடமைகளை நிறைவேற்றுங்கள் ! ஏனைய உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும் !

https://www.virakesari.lk/article/79544

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கடைகளுக்கு போனால் ஆளை ஆள் கட்டிப்பிடிக்காத குறையாக நெருக்கமாக நிற்கின்றார்கள். கடையினுள் குறிப்பிட்ட சில எண்ணிக்கையானோர் மட்டும் நிற்கும்படி மற்றவர்கள் வெளியில் ஒருவரில் இருந்து இன்னொருவர் இடைவெளிவிட்டு தள்ளி தள்ளி நிற்கும்படி அறிவுறுத்தப்படவேண்டும்.

இவ்வாறே பலருக்கும் முககவசம், கையுறை என்பனவற்றை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரியவில்லை.

முக கவசத்தை நாடிக்கு கீழ் இறக்குவதும் பின்னர் ரெலிபோனும் ஆக்களுடனும் கதைத்துவிட்டு மூக்குக்குமேல் ஏற்றுவதும் மேலே இழுத்துவிடுவதும், கையுறையை அணிந்துகொண்டு எல்லா இடங்களும் அளைவதும், நீண்டநேரம் அவற்றை அணிவதும் இவை எல்லாம் ஒரு பயனும் தராது.

ஏதோ சம்பிரதாயத்துக்கு தலைப்பாகை கட்டிக்கொண்டு தேங்காய் உடைக்கும்கணக்கில் முககவசம், கையுறை பயன்படுத்துவதைவிட அவற்றை பயன்படுத்தாமல் விடுவது மேல்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.