Jump to content

சீவல் தொழிலாளர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த ஏற்பாடு : அமைச்சரவை அனுமதி என்கிறார் டக்ளஸ்


Recommended Posts

சீவல் தொழிலை மேற்கொண்டு நாளாந்தம் குடும்ப வருமானத்தை பெற்று வாழ்வாதாரத்தை முன்னெடுத்துவந்த தொழிலாளர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து சந்தைப்படுத்துவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதால் அவர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தகைய தொழில்துறையை முன்னெடுத்த தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலை மேற்கொண்டு சந்தைப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்ட நடைமுறையால் குறித்த சீவல் தொழிலாளர்களால் நாளாந்தம் இறக்கப்படும் கள் சந்தைப்படுத்துவதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் அவர்களால் நாளாந்தம் இறக்கப்படும் கள் வடிசாலை நிறுவனத்துக்கும் போத்தலில் அடைப்பதற்குமாக பெற்றுக்கொடுப்பதற்கு பொறிமுறை ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவையும் அனுமதி தந்துள்ளது. இதன்பிரகாரம் அத்தொழிலை செய்பவர்கள் நாளாந்தம் இறக்கும் 'கள்'ளை குறித்த வடிசாலை நிறுவனங்களுக்கும் போத்தலில் அடைக்கும் நிறுவனங்களுக்கும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

 

https://www.virakesari.lk/article/79564

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பீட்டளவில் பிற டமில் அரசியல்வாதிகளைவிட அ.கு...ர் அதிகமாகவே செய்யுறார். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் கள்ளுக்கு பதிலாக கருப்பனி உற்பத்தி செய்தால் பனங்கட்டி, பனங்கற்கண்டு, சீனி ஆகியவற்றை உற்பத்தி சொய்யலாம். உள்ளுரில் இவற்றை சந்தை படுத்தலாம் தற்போதைய சூழலில்.

கொழும்பிலிருந்து சாமான்கள் வாராத போது தலைவர் இந்த உற்பத்தியைதான் ஊக்குவித்தவர்தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் ஊடாக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

இவர்கள் கள்ளுக்கு பதிலாக கருப்பனி உற்பத்தி செய்தால் பனங்கட்டி, பனங்கற்கண்டு, சீனி ஆகியவற்றை உற்பத்தி சொய்யலாம். உள்ளுரில் இவற்றை சந்தை படுத்தலாம் தற்போதைய சூழலில்.

கொழும்பிலிருந்து சாமான்கள் வாராத போது தலைவர் இந்த உற்பத்தியைதான் ஊக்குவித்தவர்தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் ஊடாக

கம்போடியா , வியட்நாமிலிருந்து ஏற்ருமதி செய்யப்ப்ட்ட பனங்கட்டியை அண்மையில் தமிழ்க் கடையோன்றில் வாங்கக் கூடியதாகவிருந்தது. தரத்திலும் பொதி செய்தலிலும் தரம் கூடியதாக இருந்தது. விலையும் ஒப்பீட்டளவில் குறைவு.

நமது உள்ளூர் உற்பத்திகள் இவற்றில் அதிகம் கவனம் செலுத்துதல் வேண்டும்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

இவர்கள் கள்ளுக்கு பதிலாக கருப்பனி உற்பத்தி செய்தால் பனங்கட்டி, பனங்கற்கண்டு, சீனி ஆகியவற்றை உற்பத்தி சொய்யலாம். உள்ளுரில் இவற்றை சந்தை படுத்தலாம் தற்போதைய சூழலில்.

கொழும்பிலிருந்து சாமான்கள் வாராத போது தலைவர் இந்த உற்பத்தியைதான் ஊக்குவித்தவர்தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் ஊடாக

வீட்டில் வைத்து விற்பதக்கு உள்ள தடையை தற்க்காலிகமாக நீக்கினால் சந்தைப்படுத்ல் பிரச்சனை வராது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.