Jump to content

யாழ்ப்பாணம் அரசு, சுதந்திரத்தினை பறிகொடுத்து 500 வருட நினைவு 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட  500 வருட நினைவு.

போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு.  யாழ்ப்பாண அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்டஆண்டு 1520

அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய  நான்கு ராஜிஜங்கள் இருந்தன.

யாழ்ப்பாணம், கண்டி  தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக (கோட்டை, சீதாவாக்கை, ராய்கம) பிரித்து பதவிக்கு அமர்ந்த அவனது மூன்று மகன்மாருக்கு இடையே நடந்த போராடங்களினால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள்.

தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது  பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது. 

இடையே வடக்கே மக்கள் வாழாத அல்லது குறைவான மக்களைக் கொண்ட தீவுக்கூடங்களை பிடித்துக் கொண்டனர் போர்த்துக்கேயர். இதனூடாக, தென் இந்திய உதவி தடுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் ராஜ்யம் மடக்கப்பட, போர்த்துகேயர்களுக்கு இசைந்து போகவேண்டி வர, தமது பொம்மை அரசரை 1520 அளவில் பதவி ஏற வைத்தனர். அந்த அரசரின் பேரன் சங்கிலியன் அரசனாகி  முரண்டு பிடித்த போது, போரிட்டு அவனைக் கொன்று நேரடி ஆளுமைக்கு கொண்டு வந்தனர்.

சிலர் இந்த சங்கிலி மன்னனை போரில் வீழ்த்தி அதன் பின்னான நேரடி ஆட்சியே போர்த்துக்கேயர் ஆதிக்கம் தொடங்கி காலம் என்று தவறாக சொல்கின்றனர்.

Meegaaman Fort (1660) on Delft (Neduntheevu) Island, Sri Lanka ...

சிதைந்த போர்த்துக்கேயர் கோட்டை, நெடுந்தீவு

இதேபோலவே கோடடையின் அரசனான (கொல்லப்பட்ட விஜயபாகுவின் ஒரு மகன்) மன்னர் புவனேகபாகுவை அந்தப்புரத்தில் உப்பரிகையில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அறிவித்து, (மேலிருந்து ஒரு போர்த்துகேயனால் தள்ளி விழுத்தி கொலை செய்யப்பட்ட) பின்னர் அவனது பேரனை, கிறிஸ்தவனாக்கி (டொன் யுவான் தர்மபால) பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக.

இந்த 2020ம் ஆண்டு, இந்த யாழ்ப்பாண ராஜ்யம் தனது சுதந்திரத்தினை பறிகொடுத்த 500 வது வருட நிறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க இனம்புரியாத கவலை மனதில் எழுந்தது உண்மைதான். விடுதலையடைய நமது இனம் இன்னும் தகுதியடையவில்லை என்பததென்னமோ  அதைவிட உண்மை. ☹️

இதை இங்கே இணைத்ததற்கு நாதத்ஸ்கு நன்றி.👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள், அது நிர்மாணிக்கப் பட்ட... 
தமது... 500´வது, 600´வது  வருடங்களை நினைவு கூரும்  போது,
அதனைப்  பார்த்து... இனம் புரியாத மகிழ்ச்சி, அந்நியராகிய எமக்கும் ஏற்படும்.

யாழ்ப்பாண அரசு,  தனது  பிடியை இழந்து 500 வருடமாகிய நாளை நினைக்கும் போது...
நீண்ட  பெரு மூச்சுத்தான்...  வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட ஆண்டு 1520.

அப்ப மண்டியிட்டது தான் இன்னும் எழும்பவேயில்லை.
அதுவே பழகியும் போச்சு.
பேசாமல் வெள்ளைக்காரனே ஆண்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

 விடுதலையடைய நமது இனம் இன்னும் தகுதியடையவில்லை என்பததென்னமோ  அதைவிட உண்மை. ☹️

 

 

ஓஓஓ அப்படியும் ஓன்று இருக்கோ?இது என்ன பதவி  உயர்வோ அல்லது பதவியா தகுதி பார்த்து கொடுப்பதற்கு.....புரிகின்றது தங்களது  மனப்பான்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள், அது நிர்மாணிக்கப் பட்ட... 
தமது... 500´வது, 600´வது  வருடங்களை நினைவு கூரும்  போது,
அதனைப்  பார்த்து... இனம் புரியாத மகிழ்ச்சி, அந்நியராகிய எமக்கும் ஏற்படும்.

யாழ்ப்பாண அரசு,  தனது  பிடியை இழந்து 500 வருடமாகிய நாளை நினைக்கும் போது...
நீண்ட  பெரு மூச்சுத்தான்...  வருகின்றது.

இதே நிலைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஓஓஓ அப்படியும் ஓன்று இருக்கோ?இது என்ன பதவி  உயர்வோ அல்லது பதவியா தகுதி பார்த்து கொடுப்பதற்கு.....புரிகின்றது தங்களது  மனப்பான்மை

புத்தா 🌞

என்னுடைய மனப்பான்மை ஒரு பக்கம் இருக்கட்டும். 

எங்கள் இனம் விடுதலைக்கு தகுதியடைந்து விட்டதா ? 🤔

நேரடியாகவே கூறலாம் அதில் தவறொன்றுமில்லையே 😀

6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப மண்டியிட்டது தான் இன்னும் எழும்பவேயில்லை.
அதுவே பழகியும் போச்சு.

பேசாமல் வெள்ளைக்காரனே ஆண்டிருக்கலாம்.

நான் தங்களை வழி மொழிகிறேன் 👍(கிரகிக்கக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை எப்போதுமே காச்சல் மருந்துமாதிரி. கசக்கும். ஆனால் குணப்படுத்து 😀. ஈழப்பிரியன் சுயபச்சாதாபத்தில் கூறினாலும் உண்மையும் அதுதான்)

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது  பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந்து வந்த பொருள், ஆள், ஆயுத பலத்தினால் தென் இலங்கை குறித்து அசராமல் இருந்தது.

தமிழக - தமிழீழ அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்புக்கள் மீண்டும் இந்த தொப்புள்கொடி உறவை பலப்படுத்தல் வேண்டும். 

அன்றிருந்த அந்த உறவை இல்லாமல் போனதற்கு ஒரு காரணம் இந்தியா என்ற ஒரு நாடு உருவானது. இருந்தாலும், அதையும் தாண்டி உறவை பலப்படுத்தல் வேண்டும். 

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

யாழ்ப்பாணம், கண்டி  தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக (கோட்டை, சீதாவாக்கை, ராய்கம) பிரித்து பதவிக்கு அமர்ந்த அவனது மூன்று மகன்மாருக்கு இடையே நடந்த போராடங்களினால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள்.

மீண்டும் கொதி நிலையை உருவாக்கி....
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்தை பரிகொடுத்தோம் என்று சொல்ல முடியாது. 

நாம் தமிழர் எப்பவும் மத்தவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க விரும்புவோம். ஆகவே நாங்களாவே விட்டுகொடுக்கின்றேம் என்பதே சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ampanai said:

மீண்டும் கொதி நிலையை உருவாக்கி....
 

அம்பனை, சரியாக சொன்னீர்கள்.

பாருங்கள், வரலாறு குறித்து எழுதுபவர்கள், அது மீண்டும் திரும்பும் என்ற பதத்தினை அடிக்கடி பாவிப்பார்கள். (History will repeat, itself)

தந்தை விஜயபாகுவை கொன்ற அவனது மூன்று மகன்கள் போலவே, தமிழர்களை கொன்றழித்த, சகோதரர்கள் இன்று இலங்கையில் அதிகாரத்தில் இருக்கிறார்கள். வெகுவிரைவில் இது பெரும் மோதலாக வெடிக்கும்.

இந்த கோரோனோ பிரச்சனை, பெரும் பொருளாதார தலைவலியாக மாறப்போகின்றது. இதனை, போர்த்துக்கேயர் போலவே சீனா பயன்படுத்திக் கொள்ளப்போகின்றது.

மறுபுறமாக, இந்தியாவுக்கு, அமெரிக்காவுக்கு வேறு வழி இருக்காது.

அப்போது வாசல்கள் திறக்கலாம்.... நம்புவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, colomban said:

சுதந்திரத்தை பரிகொடுத்தோம் என்று சொல்ல முடியாது. 

நாம் தமிழர் எப்பவும் மத்தவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க விரும்புவோம். ஆகவே நாங்களாவே விட்டுகொடுக்கின்றேம் என்பதே சரி

டொன் யுவான் தர்மபால, போத்துக்கேயரால் தள்ளி விழுத்தி கொல்லப்படுமளவுக்கு காலில் விழுந்து நெருக்கம் காட்டிய அவனது தந்தை புவனேகபாகு.... பற்றி சொல்கிறீர்கள் போலும். 

சிங்களவர்களா? தமிழர்களா?

சங்கிலியனும், பண்டாரவன்னியனும் பிரபாகரனும் போரில் வீழ்ந்தவர்கள்....

இன்னும் சொல்வதானால், கண்டிய அரசின் கடைசி மன்னன் தமிழன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கூட போரில் வீழ்ந்தான். காட்டிக்கொடுத்த துரோகி சிங்களவன் பிலிமத்தலாவ.

மண்டியிடா மானம், தலை வணங்கா வீரம் அது தமிழன் மாண்பு

ஆனாலும் நம்பிக் கெட்டான் தமிழன் என்பதே உண்மை.

1948 சுதந்திரத்தில், சிங்களவனை நம்பி, பிரிட்டிஷ்காரன் சுதந்திரத்தினை அவனிடம் கொடுக்கும் போது நம்பி இருந்து விட்டான்.

பண்டாரவாணியனுக்கு ஒரு காக்கை வன்னியன் 
விக்கிரம ராசசிங்கனுக்கு ஒரு பிலிமத்தலாவை 
பிரபாகரனுக்கு ஒரு கருணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, colomban said:

சுதந்திரத்தை பரிகொடுத்தோம் என்று சொல்ல முடியாது. 

நாம் தமிழர் எப்பவும் மத்தவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க விரும்புவோம். ஆகவே நாங்களாவே விட்டுகொடுக்கின்றேம் என்பதே சரி

தமிழனின் மனநிலையை தெளிவாக அடையாளம் கண்டுள்ளீர்கள். கல்லெறிக்கு தயாராக  இருங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

தமிழனின் மனநிலையை தெளிவாக அடையாளம் கண்டுள்ளீர்கள். கல்லெறிக்கு தயாராக  இருங்கள். 😂

நீங்களுமா? 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

நீங்களுமா? 🙄

எல்லாம் சுய கழிவிரக்கம்தான். இயலாமை, கோபம், தன்னிலை வெறுப்பு, ஆற்றாமை எல்லாம் ஒருங்கே சேர்ந்து வெளிக்காட்டியுள்ளேன்.

மற்றும்படி எனக்கென்ன, வெளிநாட்டில் நிலத்திலும் காலூன்றாமல், யதார்த்தத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல்  கிடந்து தவிக்க விருப்பமா ? 😢

பகலில் ஒரு மெல்லிய ரீசேட், ஒரு டெனிம் ரவுசர், காலில் முள்ளு, முள்ளு டி எஸ் ஐ செருப்பும் சைக்கிளும்,  இரவில் கோரைப் புற் பாய், சிரிய தலையணை, ஒரு சறம் மற்றும் ஒரு யன்னலோரம். இதை தவறவிட்டு நான் படும் தவிப்பு எனக்கு மட்டும்தான் புரியும்🤧

 

Link to comment
Share on other sites

13 hours ago, Nathamuni said:

பதவியில் அமரத்தினார்கள் பொம்மையாக.

இன்றுள்ள சிங்கள தலைமைகளும் பொம்மைகளே என குறிப்பிட்ட சிங்கள மக்களும் சிறிய அரசியல் தலைமைகளும் நம்புகின்றன. 

1 hour ago, Nathamuni said:

இந்த கோரோனோ பிரச்சனை, பெரும் பொருளாதார தலைவலியாக மாறப்போகின்றது. இதனை, போர்த்துக்கேயர் போலவே சீனா பயன்படுத்திக் கொள்ளப்போகின்றது.

மறுபுறமாக, இந்தியாவுக்கு, அமெரிக்காவுக்கு வேறு வழி இருக்காது.

அப்போது வாசல்கள் திறக்கலாம்.... நம்புவோம். 

உலக பொருளாதாரம் காரணமாக அரசியல் எல்லைகள் மாறும். 

அப்பொழுது, அதை இலாவகமாக செயற்படுத்தி எமது இலட்சியத்தை அடையக்கூடிய தலைமைகள் எமக்குள் இருந்தால் மட்டுமே விடியல் சாத்தியம். தலைமைகளை இனம்கண்டு உருவாக்குதலே மக்கள் பணி.  

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

தமிழக - தமிழீழ அரசியல், பொருளாதார மற்றும் சமூக அமைப்புக்கள் மீண்டும் இந்த தொப்புள்கொடி உறவை பலப்படுத்தல் வேண்டும். 

அன்றிருந்த அந்த உறவை இல்லாமல் போனதற்கு ஒரு காரணம் இந்தியா என்ற ஒரு நாடு உருவானது. இருந்தாலும், அதையும் தாண்டி உறவை பலப்படுத்தல் வேண்டும். 

நல்ல கருத்து!
இந்தியா என்ட பூதம் 1947க்கு பிறகு நிலமைகளை தலைகீழா ஆக்கி வைச்சிருக்கு.
தமிழக மக்களும் யதார்த்தத்தை உணர்ந்தால் முன்னேற்றம் காணலாம்.
சீமான் போன்றாக்கள் முயன்றாலும் இன்னும் பூதத்தை சாடிக்குள் அடைக்கிற அளவுக்கு எழுச்சி வரேல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

நல்ல கருத்து!
இந்தியா என்ட பூதம் 1947க்கு பிறகு நிலமைகளை தலைகீழா ஆக்கி வைச்சிருக்கு.
தமிழக மக்களும் யதார்த்தத்தை உணர்ந்தால் முன்னேற்றம் காணலாம்.
சீமான் போன்றாக்கள் முயன்றாலும் இன்னும் பூதத்தை சாடிக்குள் அடைக்கிற அளவுக்கு எழுச்சி வரேல்ல.

வரும். வரும். 👍

அன்னாள் என் வாழ்வின் இனிய பொன்னாள். 😀

எங்களுக்கு தனி நாடு கிடைக்குதோ இல்லையோ, இந்தியா என்கின்ற நாடு உலகின் வரைபடத்திலிருந்து மறைய வேண்டும் 😡

Link to comment
Share on other sites

3 minutes ago, Kapithan said:

எங்களுக்கு தனி நாடு கிடைக்குதோ இல்லையோ, இந்தியா என்கின்ற நாடு உலகின் வரைபடத்திலிருந்து மறைய வேண்டும் 😡

அதுக்கு சீன நாடு தொடக்கம் பாகிஸ்தான் வரை நாடுகளும் வேறு அமைப்புக்களும் உண்டு.

ஆகவே, எமது விரலுக்கு ஏற்ப, ச்சீ, எமது வேலையை அதாவது எமது நாட்டுடன் மட்டுமே நிற்போம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

அதுக்கு சீன நாடு தொடக்கம் பாகிஸ்தான் வரை நாடுகளும் வேறு அமைப்புக்களும் உண்டு.

ஆகவே, எமது விரலுக்கு ஏற்ப, ச்சீ, எமது வேலையை அதாவது எமது நாட்டுடன் மட்டுமே நிற்போம் !

என்ர ஆசயச் சொல்லவும் விடமாடீங்களாப்பா ?

இது என்ன ஞாயம். இது என்ன நீதி ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையனை வெளியேறு என்டு போட்டு அவனுக்கு முன் போய் அவன்ர நாட்டில இருக்கிற ஆக்கள் தானே நாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

வெள்ளையனை வெளியேறு என்டு போட்டு அவனுக்கு முன் போய் அவன்ர நாட்டில இருக்கிற ஆக்கள் தானே நாங்கள்.

அவன் வந்து 300 வருசம் இருக்கலாம். நாம வந்து 30 வருசம் இருக்கிறது பிழையே.... தெரியாம தானே கேக்கிறேன் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அவன் வந்து 300 வருசம் இருக்கலாம். நாம வந்து 30 வருசம் இருக்கிறது பிழையே.... தெரியாம தானே கேக்கிறேன் 😉

நான் வந்ததைச் சொல்ல வில்லை.போனதைப்பற்றித்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நான் வந்ததைச் சொல்ல வில்லை.போனதைப்பற்றித்தான்

உகாண்டா இடி அமின் அனுப்பினது போல எங்களையும் போகச்சொல்லி, சொன்னா கிளம்பிறோம்.... அதுவரைக்கும் யோசியாதிங்கோ... 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

புத்தா 🌞

என்னுடைய மனப்பான்மை ஒரு பக்கம் இருக்கட்டும். 

எங்கள் இனம் விடுதலைக்கு தகுதியடைந்து விட்டதா ? 🤔

நேரடியாகவே கூறலாம் அதில் தவறொன்றுமில்லையே 😀

 

சகல இனமும் விடுதலைக்கு தகுதியுடைது.....இந்த இனம் விடுதலைக்கு தகுதியில்லை என யார் கூற முடியும்....
இன்று இன மக்களை விட வெளி சக்திகள் தான் தீர்மானிக்கின்றன விடுதலை வழங்குவதை பற்றி....வெளிசக்திகளின் நலன் கருதி நாடுகள் உருவாக்கப்பட்டன....உருவாகின்றன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.