Jump to content

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

(நா.தனுஜா)
 

தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது.



download.jpg


நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது.

காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கம் தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தற்போதையா நெருக்கடி நிலையில் தமது வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்த காலங்களில் பொதுமக்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் காணாமல் போயிருப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைக்கு அமைவாக, காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு வரவு, செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன், அக்குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் இன்னமும் பல குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதுடன், அவற்றில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. எனவே தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/79577

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்கா அரசின் கபடநாடகம் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்

பாதிக்கப்பட்ட தரப்பினர் - எதிர்பார்க்கும் நீதியை வழங்க முடியாத காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திருமதி மதிஅமுதன் சுகந்தினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பாதிப்பை ஏற்படுத்திய சிறிலங்கா இராணுவத் தரப்புடன் இணைந்தே தயாரிக்கப்பட்ட காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பான சட்ட விடயத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கக் கூடிய அதிகாரம் எவையும் அதற்கு வழங்கப்படவில்லை.

வெறுமனே தகவலைத் திரட்டி - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தீர்வு வழங்குவது போன்று - ஏமாற்றுவதற்காகவே இந்த காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையிலேயே - பாதிக்கப்பட்டோருக்கு - மாதாந்த கொடுப்பனவு வழங்குதல் என்னும் கபட திட்டத்தால் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரச்சினையை மூடிமறைக்க - சிறிலங்கா அரசு முயற்சித்தவேளை அதனை நிராகரித்திருந்தோம்.

இந்த நிலையில் - தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் - 19 நோய் தொற்று தொடர்பான இடர்கால நிலையில்- அவர்களின் வறுமை நிலையைப் பயன்படுத்தி - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நிராகரிக்கப்பட்டிருந்த - காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினூடாக நிவாரணம் வழங்கி - இந்த அவல நிலையிலும் அரசியல் இலாபம் தேட அரச தரப்பு முயற்சிக்கின்றமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் - ஏனைய குடும்பங்களை விடவும் மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் கிடைப்பது முக்கியமானதாகும். ஏனெனில் - குடும்பங்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர்களையும் - உழைத்துக் குடும்பங்களைப் பாதுகாத்தவகர்ளையுமே சிறிலங்கா இராணுவம் காணாமல் ஆக்கியுள்ளது.

இதனால் - அவர்களின் குடும்பங்கள் போதிய வருமானமற்ற நிலையில் - போர் முடிந்தும் - பலவருடங்களாக வறுமையை எதிர்நோக்கிய நிலையிலேயே உள்ளனர். இன்று ஏற்பட்டுள்ள – கொவிட் - 19 நோய்த்தொற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலை - ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை மிகவும் வறுமைநிலைக்குத் தள்ளியுள்ளது.

இந்நிலையில் - அவரகளுக்கு உதவிகள் கிடைக்கவேண்டியது அவசியமானதாகும். ஆனால் - அவர்களையும் -ஏனைய மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது போன்ற ஒரு பொறிமுறையை உருவாக்கிப் பார்க்க வேண்டுமேயொழிய - காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினூடாக நிவாரணம் வழங்க முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கும் நிவாரணத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்த முடியாது.

இன்று இந்த மக்கள் பாதிக்கப்படுவதற்கான பிரதான காரணம் - சிறிலங்கா அரசால் சிதைக்கப்பட்ட அவர்களது வாழ்க்கை நிலைமையாகும். இவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் - இன்றைய பொருளாதார ரீதியான பலவீனத்தைப் பயன்படுத்தி-காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கு அங்கீகாரத்தைத் தேடும் கபட முயற்சியில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த நிவாரணத்தை வைத்துக்கொண்டு - தமது யுத்தக் குற்றங்களை மறைப்பதற்காக - சிறிலங்கா அரசாங்கம் - இந்த அவலத்திலும் கூட அரசியல்லாபம் தேடவே முற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டு வறுமை நிலையை எதிர்நோக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு - காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினூடாக வழங்கும் நிவாரணத்தினூடாக - காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதாக காட்ட முயலும் - மறைமுக நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த அரசாங்கம் செயற்படுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதாகும்.

https://www.ibctamil.com/srilanka/80/141080

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.