Jump to content

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி!


Recommended Posts

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி!

 

 

 by : Benitlas

nnnn-20.jpg

கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று(புதன்கிழமை) பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போதே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் 22 மில்லியன் யூரோக்களை வழங்குவது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, இங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மீளவும் பாதுகாப்பாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார, பொருளாதாரத் துறைகள் சார்ந்து எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுதல் என்பன தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கைக்கு-ஐரோப்பிய-ஒன்ற/

Link to comment
Share on other sites

15 hours ago, nunavilan said:

கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த உதவி முறையாக கண்காணிக்கப்படவில்லை எனின் கணிசமான நிதியை ஆட்சியிலுள்ள போர்க்குற்றவாளிகள் தான் கொள்ளையடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

சகலருக்கும் சமத்துவமான முறையில் இந்த நிதி உதவிகள் கிடைக்கிறதை எப்பிடி உறுதி செய்யப்போறாங்கள்?
கூத்தமைப்புகாரர் இதை பற்றி கவலைப்பட மாட்டினம்.
வேறு ஆராவது ஐரோப்பிய யூனியனிடம் இவற்றை சொல்ல வேணும்.

Link to comment
Share on other sites

On 9/4/2020 at 18:41, போல் said:

இந்த உதவி முறையாக கண்காணிக்கப்படவில்லை எனின் கணிசமான நிதியை ஆட்சியிலுள்ள போர்க்குற்றவாளிகள் தான் கொள்ளையடிப்பார்கள்.

 

On 10/4/2020 at 05:55, Rajesh said:

சகலருக்கும் சமத்துவமான முறையில் இந்த நிதி உதவிகள் கிடைக்கிறதை எப்பிடி உறுதி செய்யப்போறாங்கள்?
கூத்தமைப்புகாரர் இதை பற்றி கவலைப்பட மாட்டினம்.
வேறு ஆராவது ஐரோப்பிய யூனியனிடம் இவற்றை சொல்ல வேணும்.

இந்த நிதிக்கான ஒப்பந்தம் எங்காவது கிடைக்குமா? ஐரோப்பிய யூனியனில் தயாரிக்கப்படும் கொரோனாவுக்கு எதிரான வக்சீனை ஏற்றுக்கொள்ளும் பரிட்சார்த்த பிரதேசங்களுக்கே இந்த நிதியில் முதலிடம் வழங்கப்படும் என்ற நிபந்தனை இருந்தால், தமிழர் பகுதிகள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பணத்தை பெறுவது சரியானதா?

அல்லது நிபந்தனையை அகற்றிவிட்டு பணத்தை தா என்று போராட்டம் செய்ய வேண்டுமா? பணத்தை மற்ற பிரதேசங்கள் பயன்படுத்தி பணம் முடியும்வரை போராட்டம் தொடரக்கூடும். போராட்டத்துக்கான செலவுகளுக்கு யார் பணம் தருவர்?

Link to comment
Share on other sites

38 minutes ago, கற்பகதரு said:

இந்த நிதிக்கான ஒப்பந்தம் எங்காவது கிடைக்குமா? ஐரோப்பிய யூனியனில் தயாரிக்கப்படும் கொரோனாவுக்கு எதிரான வக்சீனை ஏற்றுக்கொள்ளும் பரிட்சார்த்த பிரதேசங்களுக்கே இந்த நிதியில் முதலிடம் வழங்கப்படும் என்ற நிபந்தனை இருந்தால், தமிழர் பகுதிகள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பணத்தை பெறுவது சரியானதா?

அல்லது நிபந்தனையை அகற்றிவிட்டு பணத்தை தா என்று போராட்டம் செய்ய வேண்டுமா? பணத்தை மற்ற பிரதேசங்கள் பயன்படுத்தி பணம் முடியும்வரை போராட்டம் தொடரக்கூடும். போராட்டத்துக்கான செலவுகளுக்கு யார் பணம் தருவர்?

வரலாற்று நிஜங்களை அறியாத பேதமையான கற்பனையில் காலத்தைக் கடத்தும் மந்த மனதில் இதுபோன்ற நையாடிக் கேள்விகள் மட்டுமே உருப்பெறும்.

Link to comment
Share on other sites

5 hours ago, போல் said:

வரலாற்று நிஜங்களை அறியாத பேதமையான கற்பனையில் காலத்தைக் கடத்தும் மந்த மனதில் இதுபோன்ற நையாடிக் கேள்விகள் மட்டுமே உருப்பெறும்.

வரலாற்று நிஜங்களை அறிந்த அறிவாளியான உங்கள் ஞானத்தின்படி ஐரோப்பிய யூனியன் இலவசமாக பல மில்லியன்களை இலங்கை மக்களுக்கு அள்ளிக்கொடுப்பது மட்டுமன்றி, இலங்கையின் ஆட்சியாளரான கோத்தபாயவையும் கண்காணிக்கும் சக்தியையும் கொண்டிருக்கிறது என்கிறீர்கள்!! 😎

இப்படியான அறிவாளிகளால் ஈழத்தமிழ் மக்கள் வழிநடத்தப்பட்டால் இலங்கையில் ஒரு மொழி, ஒரு இனம் என்ற காலம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அதற்காக களமிறக்கப்பட்டவர்களுள் நீங்களும் ஒருவராகவும் இருக்கலாம், யார் கண்டது?🤑

 

 

Link to comment
Share on other sites

13 hours ago, கற்பகதரு said:

ஒரு வேளை அதற்காக களமிறக்கப்பட்டவர்களுள் நீங்களும் ஒருவராகவும் இருக்கலாம், யார் கண்டது?

உங்களைப் போலவே சுயசிந்தனையின்றி மற்றவர்களும் எடுபிடிகளாக நயவஞ்சக கருத்துக்களை விதைக்க களமிறக்கப்பட்டவர்கள் என்று நினைக்கும் கேவலமான புத்தியை உங்களிடம் மிகமிக நீண்ட காலமாகவே வெளிப்பட்டு வருகிறது. பெயரை மாற்றி உருவை மாற்றினாலும் பழக்கதோசம் மாறாது என்பது தமிழரின் நன்மைகளுக்கு சுயமாக உழைக்கும் ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.