Jump to content

கொரோனா தடுப்பு நிவாரண நிதி


Recommended Posts

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி!

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு முன்னணி நடிகரான அஜித் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என இந்திய அரசும், தமிழக அரசும் அறிவித்தன. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதி உதவி கொடுத்து, தமிழ் திரையுலகின் பங்களிப்பை தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் அரசிற்கு நிதி வழங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

தற்போது நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் நடிகர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி வழங்கி வருகிறார்கள்.

இந்த இரண்டு பட்டியலிலும் இதுவரை முன்னணி நடிகர்களான 'தல' அஜித், தளபதி விஜய் போன்றவர்கள் இடம்பெறவில்லை என்ற விமர்சனம் இருந்தது.

இந்நிலையில் அஜித், பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு 25 லட்ச ரூபாயும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் தன்மீது எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்திருக்கிறார் 'தல' அஜித்.

இதனிடையே அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்பது குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/79528

Link to comment
Share on other sites

ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி COVID-19 நிவாரண நிதிக்கு 1 பில்லியன் டாலர் உறுதிமொழி அளிக்கிறார்

ஜாக் டோர்சி தனது ஒட்டுமொத்த செல்வத்தில் (கோப்பு) 28 சதவீதத்தை பங்களிப்பதாக கூறினார்

சான் பிரான்சிஸ்கோ:

ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி செவ்வாயன்று தனது பரோபகார நிதியின் மூலம் கொரோனா வைரஸ் நிவாரணத்திற்காக தனது தனிப்பட்ட செல்வத்தில் 1 பில்லியன் டாலர் செலவழித்து வருவதாகக் கூறினார்.

தொடர்ச்சியான ட்வீட்களில் டோர்சி தனது டிஜிட்டல் கொடுப்பனவு குழு சதுக்கத்தில் தனது பங்குகளை தனது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டு நிறுவனமான ஸ்டார்ட் ஸ்மால் நிறுவனத்திற்கு மாற்றுவதாகக் கூறினார், இது அவரது ஒட்டுமொத்த செல்வத்தில் 28 சதவீதத்தை பங்களித்தது.

“இப்போது ஏன்? தேவைகள் பெருகிய முறையில் அவசரப்பட்டு வருகின்றன, மேலும் எனது வாழ்நாளில் அதன் தாக்கத்தை நான் காண விரும்புகிறேன்” என்று டோர்சி கூறினார். “இது மற்றவர்களுக்கு இதேபோன்ற செயலைச் செய்ய தூண்டுகிறது என்று நான் நம்புகிறேன். வாழ்க்கை மிகவும் குறுகியது, எனவே இப்போது மக்களுக்கு உதவ இன்று எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.”

https://trendingupdatestamil.net/world/ட்விட்டர்-இணை-நிறுவனர்-ஜ/

Link to comment
Share on other sites

கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - ரூ.5 கோடி வழங்கிய சுந்தர் பிச்சை!

GIVE INDIA என்கிற தன்னார்வ அமைப்பு நன்கொடையாளர்களுக்கும் உதவி தேவைப்படும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தற்போது கூகுள் CEO சுந்தர் பிச்சை ரூ.5 கோடி நிதி அளித்துள்ளார். தினசரி கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கொரோனா லாக் டெளன் நேரத்தில் தேவையான பண உதவி வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என GIVE INDIA தெரிவித்துள்ளது. மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சை அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ட்வீட் செய்துள்ளது.

இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் கொரோனா தொற்றை அழிக்க உதவும் ஆராய்ச்சிகளுக்கு 800 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உள்ளதாக உறுதியளித்தது. சிறு வணிகங்களுக்கு மூலதனத்தை ஈட்ட உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான 200 மில்லியன் டாலர் முதலீட்டு நிதியும் இதில் அடங்கும்.

https://www.vikatan.com/news/healthy/sundar-pichai-donates-5-crores

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.