Jump to content

சீனாவின் அடி மடியில் கை வைத்த யப்பான்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடி மடியில் கை வைத்த யப்பான்.. அதிர்ச்சி வைத்தியம் 

japan76-1586450820.jpg

ரோக்கியோ: கொரோனா வைரசின் ஆரம்ப புள்ளியான சீனாவுக்கு, அதன் நட்பு நாடான யப்பான் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.சீனாவிலுள்ள உற்பத்தி ஆலைகளை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மாற்றி தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு யப்பான் ஊக்கத் தொகை அளிக்கப்போகிறது. உற்பத்தி ஆலைகள்தான் சீனாவின் முதுகெலும்பு. அதில் யப்பான் முதல் அடியை ஓங்கி அடிக்க ரெடியாகிவிட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உற்பத்திக்கு ஏற்படும் இடையூறுகளை யோசித்து, தனது முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடனான வணிக உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் யப்பான் இருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது.

இடத்தை மாற்றுங்கள்

யப்பான் தனது பொருளாதார ஊக்க பேக்கேஜின் ஒரு பகுதியாக, தங்கள் உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்றியமைக்க 2.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையில், 220 பில்லியன் யென் (2 பில்லியன் டாலர்), உற்பத்தியை யப்பானுக்கு மாற்றும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியை மற்ற நாடுகளுக்கு நகர்த்த விரும்புவோருக்கு 23.5 பில்லியன் யென் மதிப்பிலான ஊக்கத் தொகையையும் அளிக்க உள்ளார்கள்.

லாக்டவுன்

பொதுவாக சீனா, யப்பானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி, ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால், சீனா லாக் டவுனை அமல்படுத்தியது. எனவே, பிப்ரவரியில் சீனாவிலிருந்து இறக்குமதி கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டது. கார் உற்பத்தி யப்பானிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார வல்லுனரான ஷினிச்சி செக்கி, ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவை உற்பத்தி தளமாக நம்புவதை குறைப்பதாக ஏற்கனவே பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாகவும், வரும் நாட்களில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

சீன உள்நாட்டு சந்தைக்கு சப்ளை செய்வதற்காக உற்பத்தி செய்யும் கார் கம்பெனிகள், போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து சீனாவிலேயே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விருப்பம்

பிப்ரவரி மாதம் ரோக்கியோ ஷோகோ ரிசர்ச் லிமிடெட் ஆய்வு செய்த 2,600 நிறுவனங்களில் 37 சதவீதத்திற்கும் அதிகமானவை, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் சீனாவைத் தவிர வேறு இடங்களுக்கு பரவலாக ஆலைகளை இடம் பெயரச் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தன. இப்போது அந்த விருப்பம் இன்னும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

https://tamil.oneindia.com/news/international/japan-will-pay-its-firms-to-leave-china-382219.html

Link to comment
Share on other sites

வருமுன் காக்க பல  நாடுகள் யோசித்த வண்ணம் உள்ள போது யப்பான் முதலடியை வைத்துள்ளது.

சீனா என்ன பதிலடியை வைத்துள்ளது என பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

1. எங்கு போவது ? சீனாவின் உற்பத்தி பலத்தை வேறு எந்த ஒரு தனி நாடாலும் மாற்ற முடியாது

2. பல சிறிய நாடுகளுக்கு மாற்றினாலும், மேற்குலகம் தனக்குள் ஒற்றுமை இல்லாமலும், இலாபத்தை மட்டுமே குறியாக வைத்து செயல்படுவதனாலும், சீனாவை தள்ள முடியாது 

3. மேற்குலகம், தன் நாட்டிற்குள் சில மருத்துவ மற்றும் அத்திவாசிய பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா.. உலகத்துக்கு கொடுத்த, மனித உயிரிழப்பும்...
பொருளாதார இழப்பும்... ஈடு செய்ய முடியாதவை.

சீனாவுக்கு... யப்பான், கொடுத்த அதிர்ச்சி  வைத்தியத்தைப் போல...
மற்ற நாடுகளும், தமக்குரிய உச்ச  வலுவை பயன் படுத்தினால்... தான்,
சீனாவுக்கும்... மற்றைய பலம் மிக்க நாடுகளுக்கும் பயம் வரும்.
இல்லையேல்.... கொரோனாவைப் போன்ற, 
பல இன்னல்களை... மனிதகுலம் சந்திக்க நேரிடும்.

Link to comment
Share on other sites

பிள்ளையார் சுழி போட்டது ஜப்பான்: என்ன செய்ய போகிறது இந்தியா?

கொரோனா பிரச்னையால் உலகமே துவண்டு போய் கவிழ்ந்து கிடக்கிறது. நித்தம் நித்தம் ஒரு பொருளாதார பிரச்சினை உருவாகி கொண்டிருக்க, இப்போது சீனாவுக்கு எதிராகவே சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன.

கொரோனா பிரச்னையால் உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டி இருக்கிறது. நியூயார்க் மும்பை, பெய்ஜிங் உள்பட பல்வேறு பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால் இதை சாதகமாக பயன்படுத்தி சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம் வாங்கி குவித்தன. இதனால் அந்த நிறுவனங்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சீனாவுக்கு எதிராக சில காய்களை நகர்த்த துவங்கியிருக்கிறது ஜப்பான். உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக சீனா விளங்குகிறது உலகின் அதிகமான உணவு பொருட்களை அதுதான் உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த ஆண்டு சீனா கொரோனா வைரஸ்களை ஏற்றுமதி செய்து விட்டது என்று உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் முன்பே சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறிவிட்டன. சீனா செய்த வேலைக்கு பதிலடி தர வேண்டும் என்றும் ஒரு கருத்து ஏற்பட்டுள்ளது. சமூக விலகலை கடைப்பிடிப்பது போல் சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்நாடுகள் நினைக்கின்றன. சீனாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளன. இனிமேல் சீனாவை நம்பி இருக்கக் கூடாது என்று அவை நினைக்கின்றன.

சீனாவுக்கு பாடம் கற்பிக்க நினைக்கும் முக்கிய நாடுகள் அமெரிக்காவும் ஜப்பானும். ஏனென்றால் வைரஸ் பிரச்சினையால் இந்த நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.சீனாவை விட்டு பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதற்கு ஜப்பான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அதனால் இந்தியாவும் வியட்நாமும் பெரிய அளவில் பலனடையும். பெரிய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு நிவாரண நிதி தருவதற்காக, சுமார் 2.2 பில்லியன் டாலர்களை ஜப்பான் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது.இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம். சீனாவை விட்டு வெளியேறி தங்கள் பொருட்களை தயாரிக்க நிறுவனங்களுக்கு 215 மில்லியன் டாலர்களையும் ஜப்பான் உள்ளதாக தெரிகிறது. அதாவது இதிலிருந்து உலகுக்கு ஜப்பான் தெரிவிக்கும் செய்தி சீனாவை விட்டு வெளியேறுங்கள் என்பது மட்டுமே.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2519361

வைரஸ் பிரச்சினையின் போது பல சீன நிறுவனங்கள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் பல பொருட்களின் விலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இது மற்ற நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சீனாவில் உற்பத்தி குறைந்தால் அதனால் பலனடையும் முக்கிய நாடு இந்தியா. ஏனென்றால் இந்தியாவில் ஏற்கனவே உற்பத்திக்கான கட்டமைப்பு மனித சக்தி கிடைக்கிறது. எனவே நிறைய பொருள்களை இந்தியாவால் ஏற்றுமதி செய்ய முடியும்.அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். இதனால் உற்பத்தி பொருள்களின் விலையும் குறையும்.எனவே இந்த வழிகளை தான் உலக நாடுகள் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் விலாங்குமீன் சிறிலங்காவிற்கு ஏதும் பாதிப்புகள் இல்லைத்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இதனால் விலாங்குமீன் சிறிலங்காவிற்கு ஏதும் பாதிப்புகள் இல்லைத்தானே?

மழையில உப்பு வித்தாலும் சரி  காத்தில மா வித்தாலும் சரி சேதாரம் இல்லாத அறுவடை மட்டும்தான்........!  🤔

Link to comment
Share on other sites

43 minutes ago, ampanai said:

அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். இதனால் உற்பத்தி பொருள்களின் விலையும் குறையும்.எனவே இந்த வழிகளை தான் உலக நாடுகள் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட நாடுகளில் ஏற்கனவே உற்பத்திகள் உண்டு. ஆனால், இங்கும் சீனாவை போன்று 'உண்ணும்' பழக்கங்கள் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 13:55, தமிழ் சிறி said:

1) சீனா.. உலகத்துக்கு கொடுத்த, மனித உயிரிழப்பும்...
பொருளாதார இழப்பும்... ஈடு செய்ய முடியாதவை.

2) சீனாவுக்கு... யப்பான், கொடுத்த அதிர்ச்சி  வைத்தியத்தைப் போல...
மற்ற நாடுகளும், தமக்குரிய உச்ச  வலுவை பயன் படுத்தினால்... தான்,
சீனாவுக்கும்... மற்றைய பலம் மிக்க நாடுகளுக்கும் பயம் வரும்.

3) இல்லையேல்.... கொரோனாவைப் போன்ற, 
பல இன்னல்களை... மனிதகுலம் சந்திக்க நேரிடும்.

1) எந்த ஆதாரத்தை வைத்து சீனா மீது குற்றம் சாட்டுகிறீர்கள். அல்லது சீனா மட்டும்தான் உலகத்தில் அழிவை உண்டுபண்ணியதா ? அல்லது இதற்கு முன்னர் அழிவே வரவில்லையா ? ☹️

2) தனியே தினமலரில் வந்த ஆக்கத்தை மட்டும் வைத்து கருத்துச் சொல்கிறீர்களோ ?சீனாவுக்கு முதலீடுகளும் தொழில் நுட்பங்களும் போவதற்குக் காரணம் மேற்குலகின் இரக்க குணமா ? இல்லவேயில்லை. அவர்களின் பேராசையே காரணம்.  சீனாவின் அதி குறைந்த மலிவான உழைப்பாளர்களே Cheep labour காரணம். சீனாவை விட வேறெங்கிகிகும் மலிவான உழைப்பு கிடைக்குமென்றால் மூலதனமும் தொழில் நுட்பமும் அங்கே போகும். ஏனென்றால் முதளாளித்துவத்தின் அடிப்படைக் கட்டுமானம் இலாபத்திலேயே ஆரம்பிக்கிறது. அதுவும் இந்த முதலாளித்துவமும் Democracy யும் ஒன்றாக இருக்கும்வரை இந்த இலாபத்திற்கு முன்னுரிமை  என்கின்ற கோட்பாடு மாற்றமடைய வெகு காலம் எடுக்கும்.🙂

3) கொறோனாவுக்கு முன்னரும் மனித குலம் கொள்ளை நோய்களால் அழிவை சந்தித்திருக்கிறது. இப்பொது சந்திக்கிறது. இனிமேலும் சந்திக்கும். அந்த அழிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆரம்பித்திருக்கிறது. இனியும் ஆரம்பிக்கும். மனிதகுலம் அழிவைச் சந்தித்தே தீரும். இதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அது சீனாவில் இருந்துதான் வரவேண்டுமென்கின்ற கட்டாயமல்ல. 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை போல் விரைவாக மலிவாக வேறு இடங்களில் சொய்ய முடியாது, அவர்களின் மனித வலு அப்படி. வேறு இடங்களில் செய்ய வெளிக்கிட விலைகள் தான் கூடும்

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

சீனாவை போல் விரைவாக மலிவாக வேறு இடங்களில் சொய்ய முடியாது, அவர்களின் மனித வலு அப்படி. வேறு இடங்களில் செய்ய வெளிக்கிட விலைகள் தான் கூடும்

உயிரைப் பாதுகாப்பதைவிட விலை மலிவைப் பாதுகாக்க முனைந்தால் உலகில் மனித இனமே இல்லாது அழிந்துவிடும்.   

Link to comment
Share on other sites

சீனாவின் பலம் என்பது அதன் மக்கள் தொகை ஒன்றில் மட்டும் சார்ந்ததல்ல. வினைத்திறன் மிக்கதொரு தொலைதூர நோக்குள்ள அரச நிர்வாகம், தொழில்நுணுக்கமுள்ள நாட்டுப்பற்று மிக்க மக்கள் கூட்டம் அதன் தற்போதைய நிலைக்கு இவை முக்கிய காரணம்.

சீனா உலகின் பலமுள்ள நாடாகும் பாதையில் பலகாத தூரம் ஏற்கனவே சென்றுவிட்டது.

 

அப்பிள் இயக்குனர் இப்படி சீனா பற்றி சொல்கின்றார்.

https://www.inc.com/glenn-leibowitz/apple-ceo-tim-cook-this-is-number-1-reason-we-make-iphones-in-china-its-not-what-you-think.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானோ அல்லது வேறு யாரோ இப்படி தொழிற்றசாலைகளை வேறு இடத்திற்கு மற்ற உந்துவதற்காக பணம் கொடுப்பது இயற்கையான உலகமயமாதல்  வரலாற்று   பொருளாதார வட்டத்தையும் , அதன் சக்தியையும் மீறி தமது பொருளாதாரத்தினால் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை சில வேளைகளில் அந்தந்த நாடுகளை பொருளாதாராப் படுகுழியில் தள்ளக் கூடியது.

அப்படி பார்த்தால், 1918 - 1919 இல்   நடந்த spanish flu (influenza) வில்,  உற்பத்தி மையம் மேற்கிலிருந்து, கிழக்கிற்கு மாறி இருக்க வேண்டும்.  

சீனா, இந்த மாற்றத்திற்கு தன்னை தயார் படுத்தி கொண்டே வந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். 2000 இல் wto சீனா இணைந்தாலும், 2005 இல் இதற்கான (அதாவது lower value production industry) ஐ தன்னிலும் குறைந்த விலையுள்ள நாடுகளிற்கு மாற்றுவது. 

ஆப்பிரிக்காவில் சீனாவின் முதலீடு, இந்த மாற்றத்திற்கான industrial base ஐ கட்டி எழுப்புவது.
   
2008 - 2009   நடந்த, பண நெருக்கடி பிருளாதா சரிவும், அதை மற்றோருக்கு financial discipline பற்றி போதித்த மேற்கு நாடுகளும், imf, world bank, europen bank, boe போன்றவை பணத்தை அச்சிட்டு கையாண்ட விதமும், சீனாவை இரவிரவாக சிந்த வைத்தது.    

சீன தனது பொருளாதாரத்தின் ஓர் பங்கை internal consumption economy ஆக மாற்றத்தை கொண்டு வந்தது 2008 இல் இருந்து. 

மேலும், production value chain இல், high value and advanced technological production நோக்கி தனது பொருளாதாரத்தையும் முடுக்கி விட்டுள்ளது.

இந்த production base நாடு விட்டு நாடு மாறும் போது, அநேகமானைவை சீனர்களே வேறு நாடுகளில் கூட தொழிற்சாலை அமைக்கிறார்கள். ஏனெனில், வேறு நாடுகளிடம், வளங்களோ, skill, டெக்னாலஜி, மற்றும் சிறப்புத்தேர்ச்சி இல்லை தொழிற்றசாலைகளை நடத்துவதற்கு. 

இந்த முறை (covid-19), சீனா இந்த மேற்கு நாடுகள் எதிர்பார்த்து, வேண்டி கேட்டும், QE (quantitative easing) செய்யவில்லை. மாறாக, பங்குகளை மலிவான விலையில் வாங்கி குவித்தது.  உண்மையில், யதார்த்தமான சந்தை பொருளாதாரத்தில் சீன தன்னை ஓர் சக்தியாக நிலை நிறுத்தி கொண்டது.

இது நீண்ட மற்றும் மத்திம கால போக்கில் சீனா  சந்தை பொருளாதாரத்தை கடைபிடிக்கும் நாடு என்பதை பாரிய முதலீட்டார்களை சீனாவை நோக்கி திரும்ப வைக்கும். 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.