Jump to content

கொரோனாக் கொசிப் .......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பி ஒருத்தியின் தந்தை இரு வாரங்களுக்கு முன்னர் பிரான்சில் இறந்துவிட்டார். அவர்கள் குடும்பத்தவர் அனைவரையும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவரின் வயது 78. விடயத்தைக் கேள்விப்பட்டதும் அவளுக்குப்பின் செய்தேன். எதனால் இறந்தார் என்றேன். அந்தக் கொரோனா தானடி வந்திட்டுது. ஐயோ நாங்கள் போக்க கூட முடியாதடி. எல்லைகளையும் மூடி விட்டார்கள் என்று கூறி அழுதாள். அவளுக்குத் தந்தைமேல் மிகுந்த பாசம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்ததால் அவளுக்கு ஒருவாறு ஆறுதல் கூறிவிட்டு போனை வைத்த்துவிடடேன். அடுத்த நாள் மீண்டும் தொடப்பு கொண்டு அவளுடன் கதைத்துவிட்டு மற்றவர்கள் நிலை என்ன என்று கேட்டேன். ஏனெனில் அவளின் தாயும் தந்தையும் ஒரு சகோதரியுடன் தான் வசித்தனர். அவருக்கு கொரோனா என்றால் மற்வர்களுக்கு தொற்று இல்லையா என்று கேட்டேன். தந்தை மூன்று நாட்கள் மருதத்துவமனையில் இருந்துதான் பின் இறந்தார் என்றாள். தமக்கையின் மகள் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு தெரிவாகி இருப்பதாகவும் அவரின் ID காட்டி இரண்டாம் நாள் அவள் அங்கே சென்று தந்தையைப் போனில் லைஃப் வீடியோவில் எல்லோருக்கும் தந்தையைக் காட்டினாளாம். அதன்பின் அடுத்த நாள்த்தான் இறந்தார் தந்தை என்று கூற, "கொரோனா வாட்டுக்கு மற்றவர்களை அனுமதிக்க மாட்டார்களே" என்றேன் நான். அவள் மருத்துவ மாணவி என்றதனால் அனுமதித்தனர் என்றாள்.

அவளின் தங்கை ஒரு உணவகம் நடத்துகிறார். தாயும் தந்தையும் வெளியே செல்வதில்லை. தன் தங்கைதான் நோயைக் காவி வந்துள்ளாள். தங்கையின் 25 வயது மகனுக்கும் காய்ச்சல் இருமல். ஆனால் தாய்க்கு ஒன்றுமில்லை. தாயைத் தனியா ஒரு அறையில் வைத்துள்ளனர் என்றாள். மற்றவர்களை பரிசோதித்தார்களா என்றதற்கு ஓம். தாய் ஒடியல், குரக்கன், மருத்துவக் குணமுள்ள உணவுகளைத் தான் உண்பது. அதனால் அவருக்கு ஒன்றும் இல்லை என்றாள்.

அவளின் இன்னொரு சகோதரியும், சகோதரனும் பிரான்சில் தான் வசிக்கின்றனர். அவர்கள் கூட அம்மாவிடம் போகவில்லை என்று கூறப் பல விடயங்களைக் கதைத்துவிட்டு போனை வைத்தேன்.

போனை வைத்ததுதான் தாமதம் "உனக்கு மற்றவையிட்டை தூண்டித் துளாவிக் கேக்காட்டில் நித்திரை வராதாக்கும்" என்று மனிசன் நக்கலாகக் கூறுவதைக் கேட்டும் கேட்காததுபோல் இருந்துவிட்டேன்.

அன்று மாலை போன் செய்து அவளின் தங்கையுடன் கதைக்க முயன்றபோது போன் நிறுத்தப்பட்டிருந்தது. தங்கையின் மகனின் வற்சப் ஒன்லைன் காட்ட  அதை அழுத்தினேன். சிறிது ரிங் போனபின் போனை எடுத்தார். வழக்கமான விசாரிப்புக்குப் பின்னர் "உங்கள் உடல்நிலை இப்ப எப்படி இருக்கிறது" என்றேன். "எனக்கு கொஞ்சம் இருமல் காச்ச்சல் எல்லாம் இருக்கு அன்ரி. நானும் தனியா என் அறைக்குள்ளேதான் இருக்கிறன்" என்கிறார். அம்மாவுடன்  கதைக்க முடியுமா? என்று கேட்டதற்கு, "அன்ரி நான் தாத்தாவைப் பார்க்க உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு இங்க வந்திருக்கிறன்.  ஒரு இரண்டு மணித்தியாலத்தில போன் செய்யிறீங்களா" என்றதற்கு ஓம் என்று கூறி வைத்த பின்னரும் யோசனை ஓடிக்கொண்டே இருக்க, "என்னப்பா ஏன் மண்டையைப் போட்டு உடைக்கிறீர்" என்று கணவர் வம்பிழுக்க "தகப்பன் கொரோனாவிலே செத்தது என்றால் எப்பிடிப் பார்க்க விடுவாங்கள்" என்றேன். "அதுகள் ஏன் பொய் சொல்லப் போகுதுகள். உனக்கு வேற வேலை இருந்தாப் பார்" என்கிறார்.

மூன்றாம் நாள் நண்பிக்குப் போன் செய்து "என்ன மாதிரி?? அப்பாவின் உடலைப் பார்க்கவும் விடமாட்டாங்கள் போல" என்றேன். "அப்பா கிருஷ்ணனைக் கும்பிட்டதால கிருஷ்ணா அவரைக் கைவிடேல்லையடி. ஒருதத்தருக்குமே பொடி கொடுப்பதில்லை. இன்னும் இரண்டு நாளில் அப்பாவை வடிவாக மூடிக் கட்டித் தருகிறார்களாம். இருப்பது பேர் மட்டும் தான் போகலாமாம்" என்றும் தான் போக முடியவில்லை என்று அழ, அவளை எப்படியோ சமாதானம் செய்துவிட்டு போனை வைக்க, எனக்கே கேள்வியும் குற்ற உணர்வும் ஒன்றாகத் தலை தூக்க ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டேன்.  

நான்காம் நாள் அவளின் தங்கையுடன் பிரான்ஸ்சுக்கு கதைக்கும் போது வீட்டில் கலாம்புலாம் என்று பலர் கதைக்கும்  சத்தம். "அம்மா எப்படி இருக்கிறார்? மகனுக்கு இப்ப சுகமா? என்று கேட்க "அக்கா தம்பி குடும்பம் எல்லாம் வந்திருக்கினம். அதுதான் சத்தம்" என்கிறார். இந்த நிலையில் ஏன் எல்லாரும் கூடு கிறீர்கள் அது எல்லோருக்கும் ஆபத்தே என்றதற்கு "ஓம் அக்கா, பேரப்பிள்ளைகள் சொல்லுக் கேட்கிறார்களில்லை. இன்றும் அப்பாவை போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்தவை" என்கிறார். மனதில்க் குறித்துக் கொண்டாலும் எதுவும் கேட்காது போனை வைத்துவிட்டேன்.   

ஏழாம் நாள் போன் செய்து "என்னடி அப்பாவின் நிகழ்வெல்லாம் எப்படி நடந்தது" என்றேன். "கனபேர் போகேல்லை எண்டதுதான்  குறை. உரிய முறையில கிரியைகள் எல்லாம் செய்தது. பெட்டியையும் திறக்க ஓம் எண்டிட்டாங்கள்" என்றதும் என்குரல் கடுமையுடன் அப்படி என்றால் உன் அப்பாவுக்கு கொரோனா இல்லை என்று என்னை மீறி அதட்ட, "ஓமடி தங்கச்சியாக்கள் பிழையா நினைச்சிட்டினம்" என்று கூறி முடிக்கமுதல் "அப்பா எதனால் உன் அப்பா இறந்தார்" என்றேன். அவருக்கு "லங்சில கனநாளாப்  பிரச்சனை. ஏற்கனவே பிரஷர், சுகர் எல்லாம் இருக்கு. மூச்சு விட முடியாமல் அம்புலன்ஸ் தான் வந்து கொண்டு போனது. அதனால கொரோனா எண்டு நினைச்சு சொல்லீட்டினம்" என்றாள். போனை வைத்துவிட்டு தோட்டத்தில் நின்ற கணவரிடம் சென்று "அவளின் தகப்பனுக்கு கொரோனா இல்லையாம்" என்றவுடன் "இப்பதான் உனக்கு நின்மதி வந்திருக்குமே" என்கிறார் கணவர் சிரித்துக்கொண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவில் இறந்தால் அரசாங்கம் ஏதாவது மானியம் கொடுக்கிறாங்களா? சுமே ஆன்ரிக்கு இந்தக்கொள்ளை நோயும்குள்ளையும் விடுப்புக்கேட்காவிட்டால் பொச்சம் தீராது என்று தெரியும்தானே!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போனை வைத்ததுதான் தாமதம் "உனக்கு மற்றவையிட்டை தூண்டித் துளாவிக் கேக்காட்டில் நித்திரை வராதாக்கும்"

 

சுமே எனக்கும் இந்த விடயத்தை கற்றுக் கொள்ள ஆசையாக இருக்கு. எப்படி கற்றுக் கொள்வது?😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

சுமே எனக்கும் இந்த விடயத்தை கற்றுக் கொள்ள ஆசையாக இருக்கு. எப்படி கற்றுக் கொள்வது?😐

அதுக்கெல்லாம் அதிக சாச் எடுப்பன்.😂

On 9/4/2020 at 21:44, பெருமாள் said:

யாழை வதம்  பண்றது காணாது என்று ..............................................

இன்னும் சொல்லுவியள்.☹️

1 hour ago, கிருபன் said:

கொரோனாவில் இறந்தால் அரசாங்கம் ஏதாவது மானியம் கொடுக்கிறாங்களா? சுமே ஆன்ரிக்கு இந்தக்கொள்ளை நோயும்குள்ளையும் விடுப்புக்கேட்காவிட்டால் பொச்சம் தீராது என்று தெரியும்தானே!😜

😀😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கொரோனா எண்டாலே ஒரு பிரமாண்டம் போல தான் கிடக்கு. நான் நினக்கிறன் கொரோனாவாலை செத்தால் ஒரு கௌரவம் எண்டு நினைக்கினமோ தெரியாது.
 நான் நினைக்கிறன் என்னெண்டால் இப்ப நடக்கிற பிரச்சனையிலை 50 வீதம் உண்மை50வீதம் பொய் எண்டு.
உவர் பொறிஸ் ஜோன்சனும் பொய்யுக்குத்தான் ஆஸ்பத்திரிக்கை போய் படுத்திருக்கிறார். கன பழியள் தன்னிலை வரக்கூடாது எண்டும் அனுதாபத்திலை சனம் பேசாமல் இருந்துடும்.

 

விடுப்பு புடுங்கிறதுக்கு உவவை கேட்டுத்தான்....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

கொரோனாவாலை செத்தால் ஒரு கௌரவம் எண்டு நினைக்கினமோ தெரியாது.

பண்டமிக் என்று who அறிவித்த பின் உங்கள் காப்புறுதிகள் தொற்று நோய்களுக்கு கவர் பண்ணுமா என்று டபுள் செக் செய்து கொள்ளுங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

உந்த கொரோனா எண்டாலே ஒரு பிரமாண்டம் போல தான் கிடக்கு. நான் நினக்கிறன் கொரோனாவாலை செத்தால் ஒரு கௌரவம் எண்டு நினைக்கினமோ தெரியாது.
 நான் நினைக்கிறன் என்னெண்டால் இப்ப நடக்கிற பிரச்சனையிலை 50 வீதம் உண்மை50வீதம் பொய் எண்டு.
உவர் பொறிஸ் ஜோன்சனும் பொய்யுக்குத்தான் ஆஸ்பத்திரிக்கை போய் படுத்திருக்கிறார். கன பழியள் தன்னிலை வரக்கூடாது எண்டும் அனுதாபத்திலை சனம் பேசாமல் இருந்துடும்.

 

விடுப்பு புடுங்கிறதுக்கு உவவை கேட்டுத்தான்....🤣

நானும் அதைத்தான் எண்ணினேன் 😃

17 minutes ago, பெருமாள் said:

பண்டமிக் என்று who அறிவித்த பின் உங்கள் காப்புறுதிகள் தொற்று நோய்களுக்கு கவர் பண்ணுமா என்று டபுள் செக் செய்து கொள்ளுங்க .

கவர் பண்ணாதாம் 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.