Jump to content

அமெரிக்காவில் கொரோனாவின் தீவிரத்தால் வைத்தியசாலைகளின் நிலை: விபரிக்கிறார் தமிழ் வைத்தியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை விடுத்த வண்ணம் உள்ளது கொவிட் 19.இதனால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸால் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் தீவிர கண்காணிப்பில் பலர் வைத்தியசாலைகளில் உள்ளனர்.

இந்த தகவலை வழங்கும் தமிழ் வைத்தியர் பணியாற்றும் நியு ஜேர்சி வைத்தியசாலைகளில் கூட 250 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர்.

இவ்வாறு அமெரிக்காவில் கொவிட்19 நிலை என்ன என்பதை விளக்குகறார் தமிழ் வைத்தியரான சிறி சுஜந்தி ராஜாராம்

 

 

https://www.ibctamil.com/usa/80/140895?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு நாங்கள் உயிர்கொல்லும் வியாதியை பரப்பக்கூடாது என்பதை ஒவ்வொருவரும் உணருதல் அவசியம்.

எங்கள் மூலம் மற்றவர்கள் வியாதியை பெற்று கஸ்டப்படக்கூடாது இறக்கவும்கூடாது என்பதில் நாம் அவதானம் செலுத்தவேண்டும்.

அடுத்தவர் எங்கள் மூலம் நோயை பெற்று இறந்தால் அது எங்களை அறியாமல் நாங்கள் கொலை செய்வதற்கு ஒப்பானது.

நாங்கள் தப்பிவிட்டால் போதும் என்று மட்டும் நினைக்கக்கூடாது. எங்களை பாதுகாப்பதற்கு எவ்வளவு முன் எச்சரிக்கைகளை நாங்கள் எடுக்கின்றோமோ அதே அளவு முன்னெச்செரிக்கைகளை நாங்கள் மற்றவருக்கு வியாதியை பரப்பாமல் இருப்பதற்கு எடுக்கவேண்டும். இது இலகுவான காரியம் இல்லை. குரங்குபோல் வாழ்ந்த எங்கள் வாழ்க்கைமுறை ஒரீரு கிழமைகளில் மாறுவது இலகுவானது இல்லை. தினமும் முயற்சி செய்து எங்களை கொரோனா வைரஸ் கிருமி ஓர் பரப்பல் ஊடகமாக பயன்படுத்தாத வகையில் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.