Jump to content

டெல்லி மாநாடு...மதகுருக்கள் மீது வழக்கு..!’- தமிழக போலீஸார் நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி மாநாடு

 

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய மத குருமார்கள், தொற்று நோயைப் பரப்பியதாக தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்படி இதுவரை 129 பேர் வரை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்திருக்கிறது. வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேரும், அரசின் கண்காணிப்பில் 213 பேரும் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

 

மேலும், இதுவரை 7,267 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை அனுப்பப்பட்டதில் 485 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல், தமிழகத்தில் கொரோனாவில் பாதிப்பில் இருந்து 27 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1,480 பேர் கலந்துகொண்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதில், 554 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 926 பேருக்கு தொற்று இல்லை என்பதும் சோதனை மூலம் உறுதியாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 188 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தநிலையில், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பி மத பிரசாரத்தில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த குருமார்கள் மீது தமிழகம் முழுவதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். சுற்றுலா விசாவில் வந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டது, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அதை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டது மற்றும் அவர்களில் சிலர் தங்களுக்குக் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக, ஈரோட்டில் தாய்லாந்தைச் சேர்ந்த மதகுருமார்கள் 6 பேர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 8 பேர், சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தில் 11 இந்தோனேசிய மதகுருமார்கள் உள்ளிட்ட 16 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

அதேபோல், மதுரை மலைப்பட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 10 பேர் மீதும், மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் பிரான்ஸ், கேமரூன், காங்கோ மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மத குருமார்கள் 12 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. திண்டுக்கல்லில் விசாகாலம் முடிந்தும் தங்கியிருந்த 11 மதகுருமார்கள் கைது செய்யப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர், குஜராத்தைச் சேர்ந்த 29 பேர் என 40க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் 129 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அவர்கள் பலர் சிகிச்சையில் இருப்பதால், சிகிச்சை முடிந்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில். தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் பதுங்கி இருந்தவர்களை மட்டுமே கைது செய்துள்ளதாகவும் போலீஸார் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

 

https://www.vikatan.com/news/tamilnadu/tn-police-books-129-related-delhi-religious-event?artfrm=v3

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இங்கும் சுவிஸ் பாஸ்ட்டருக்கும் எதிரா வழக்கு போடணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரப்ப வந்தது மதத்தையா... மரணத்தையா? படரும் பயம்... தொடரும் கைது நடவடிக்கை!

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மதகுருக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை பாயும்?

கடவுளைப் போல கண்ணுக்குத் தெரியாத கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது உலகம். ஆனால், கடவுளின் பெயரைக் கொண்டு, கொரோனாவைப் பரப்பி மரண வரத்தைத் தருவதுதான் மனிதகுலத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 90 சதவிகிதம் பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தப்லீக் ஜமாஅத் சார்பில் கூட்டம் நடைபெறவில்லையென்றால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாகியிருக்காது என்பதுதான் தற்போதைய நிலை. இவர்கள் தப்லீக் ஜமாஅத்தில் பங்கேற்கச் சென்றது தவறில்லை. ஆனால், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத்தொடங்கியிருந்த சூழ்நிலையில், மக்கள் வெளிநாட்டுப் பயணங்கள், உள்நாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதை ஏற்று இந்தப் பயணத்தை இவர்கள் தவிர்க்காமல் தொலைதுார பயணம் மேற்கொண்டு பெரும் திரளான கூட்டத்தில் பங்கேற்றதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணமாகியுள்ளது.

Corona

 

இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டும் பங்கேற்றிருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த ஏராளமான மதகுருக்கள் பங்கேற்றுள்ளனர். டெல்லி மாநாட்டில் மட்டுமன்றி, தமிழகத்தில் மதுரை, ஈரோடு, சேலம் போன்ற நகரங்களுக்கும் வந்து இவர்கள் மதப்பிரசங்கம் செய்துள்ளனர். கொரோனா பிடியில் சிக்கியுள்ள இந்த நாட்டிலிருந்து வந்தவர்களை உள்துறை அமைச்சகம் அனுமதித்தது தவறு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என்று உள்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

தற்போதைய, சூழ்நிலையில் இவர்களை அனுமதித்ததே உள்துறை செய்த தவறுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அனுமதித்த காரணத்தால்தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மதகுருக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று வேகமாகப் பரவிவந்த காலகட்டத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த இவர்களை மசூதிகளுக்கு அழைத்து வந்தது சரியா என்று இஸ்லாமிய மக்களே, தங்களுடைய ஜமாஅத்களில் உள்ள நிர்வாகிகளைப் பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்லீக் மாநாடு நடத்த வெளிநாட்டு நிதி வந்ததா?’- மவுலானா சாத் மீது பாய்ந்த அமலாக்கத்துறை வழக்கு

மவுலானா சாத்

தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் மீது டெல்லி போலீஸார் ஏற்கெனவே கொலை வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தியவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த மாநாடு நடத்த வெளிநாட்டிலிருந்து நிதி வந்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் மீது டெல்லி போலீஸார் ஏற்கெனவே கொலை வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மவுலானா சாத் மீது, உள்நோக்கம் இல்லாமல் கொலையில் ஈடுபட்ட பிரிவின்கீழ் (ஐ.பி.சி 304) வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை மவுலானா சாத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு
 
தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலுக்கு வந்தன. இந்தியாவிலும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. டெல்லியில் மார்ச் மாதம் ஆரம்பத்திலே மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, மால்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் விதமாக அவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரே இடத்தில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையில் மாநில அரசு இறங்கியது

இந்த நிலையில்தான் டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தப்லீக் ஜமாஅத்தில் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மதக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். சுமார் 1,700 முதல் 1,800 இந்தியர்களும், தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 200 முதல் 250 வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

தப்லிக் ஜமாத் மாநாடு இப்போது கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற டெல்லி மற்றும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மாநில அரசுகளோ அந்த மாநாட்டில் பங்கேற்ற நபர்களைக் கண்டறிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மாநாட்டில் பங்கேற்ற 9,000 பேரில் 1,100 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து மாநாட்டில் பங்கேற்ற 1,900 பேர் மீண்டும் அவரவர் நாட்டுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/controversy/money-laundering-case-filed-against-tablighi-jamaat-leader

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.