Jump to content

இரத்தத்துடன் சேர்ந்தது அந்தப் பாசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

0-E54-AEA7-397-B-4-C03-98-F5-111-D31-D30
ஒவ்வொரு நாளும்
தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது.

கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இறந்து போனார்கள். இந்த அதிர்ச்சியான நிகழ்வால், முதியோர் இல்லங்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. வெளியார்கள் மட்டுமல்லாமல் இரத்த உறவினர்கள்கூட  முதியவர்கள் இல்லங்களுக்குள் உள்நுளைய யேர்மனி முழுதும் அனுமதி மறுக்கப்பட்டது.

கட்டிலில் படுத்திருந்த 101 வயதான Ursulaவுக்குத் தூக்கம் வரவில்லை. இன்று Marianneக்கு 72வது பிறந்தநாள் ஆயிற்றே. எப்படியும் அவளைப் பார்த்து வாழ்த்துச் சொல்லியே ஆக வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டார். யாரும் வெளியேறவோ உள்நுளையவோ முடியாதவகையில் முதியோர் இல்லத்து வாசலில் காவல் இருந்தது. ஆனாலும் ஒரு வழி அங்கே இருந்தது. முதியவர் இல்லத்தில் இருந்து அவசரகால வாசலால் வெளி வீதிக்கு வரமுடியும் என்பது Ursulaக்குத் தெரிந்திருந்தது.

வீதியில் தள்ளாடியபடி  நடந்து கொண்டிருந்த Ursulaவை பொலீஸ் இடை மறித்தது. தன்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் சொன்ன Ursula முதியோர் இல்லத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

Ursula குறிப்பிட்ட இடத்துக்கு தங்கள் வாகனத்திலேயே பொலீஸ் அவரை அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் பொலீஸார் மிகவும் அவதானமாக நடந்து கொண்டார்கள். தாயையும் மகளையும் தூர நிறுத்திக் கொண்டார்கள். Ursulaவின் கையில் ஒரு வெள்ளை உறை இருந்தது. Marianneவுக்குப் புரிந்து விட்டது, தனது பிறந்த நாளுக்கு தாய் வாழ்த்தோடு வந்திருக்கிறார் என்று.

இதற்கிடையில் தாங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையில் Ursula முதியோர் இல்லத்தில் இருந்து வருகிறார் என்பதை பொலீஸார் அறிந்து கொண்டார்கள். அவரை மீண்டும் பாதுகாப்பாக அங்கே கொண்டு போய் விட்டு விட்டார்கள்.

A9-BE2-B28-A411-4677-A8-C8-6-B4-F5-D4-EB

தாயின் பாசத்தில் உருகிப் போய் Marianne, பூக்கள், சொக்கிளேற் பக்கெற்றுக்களை வாங்கிக் கூடையில் போட்டு முதியோர் இல்லத்து வாசலில்போய் நின்றார். பின்னர் முதியோர் இல்ல நிர்வாக ஏற்பாட்டில்  Ursula மாடி யன்னலுக்கு வர அங்கிருந்தே தனது தாய் தந்த பிறந்த நாள் வாழ்த்துகளை கண்ணீருடன் Marianne ஏற்றுக் கொண்டார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டான சூழ்நிலையிலும் வயாதான நிலையிலும் மகளை பார்க்க வாந்தாரே, மனதை உருக்கும் பதிவு. பொலீஸாரும் நல்ல மனநிலையுடன் உதவியுள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமை.... நாளைக்கு, எனக்கும் வரலாம்.
எனக்கோ... உனக்கோ....  கொரோனா வந்தால்...
உன்னுடனுடைய  சவத்தையையோ....
என்னுடைய ...  சவத்தையையோ.... 
யாரும்... கண்ணில் காட்ட மாட்டார்கள்.என்று....  

வீட்டுக்காரிக்கு, சொல்லிய போது 
அவளின்... முகத்தில், இருந்து.... கண்ணீர்   வந்ததை,  பார்தேன்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாசம் எல்லோருக்கும் பொதுவானது. மேற்கு நாடுகளில் இருப்பவர்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு தாமுண்டு தம்பாடுண்டு என்று இருப்பதில்லை. இயன்றவரை பெற்றோரை அடிக்கடி போய்ப்பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள்.

என்னுடன் பல ஆண்டுகள் வேலை செய்த ஆஸ்திரிய நண்பர் தற்போது Munich (München) இல் வசிக்கின்றார். எல்லை மூடப்பட்டுள்ளதால் ஆஸ்திரியாவில் தனித்திருக்கும் 87 வயதான தந்தையைப்  பார்க்கவோ உதவி செய்யவோ முடியாத கவலையில் இருக்கின்றார். அதுபோல இன்னோர் ஆங்கிலேயர் முதியோர் இல்லத்தில் படுக்கையில் இருக்கும் தாயாரைப் பார்க்கமுடியவில்லை என்று வேதனைப்படுகின்றார். கொரோனா சொந்தங்களையும், பலகாலம் தொடர்பில்லாத நட்புக்களையும் நினைக்கவைக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலைமை.... நாளைக்கு, எனக்கும் வரலாம்.
எனக்கோ... உனக்கோ....  கொரோனா வந்தால்...
உன்னுடனுடைய  சவத்தையையோ....
என்னுடைய ...  சவத்தையையோ.... 
யாரும்... கண்ணில் காட்ட மாட்டார்கள்.என்று....  

வீட்டுக்காரிக்கு, சொல்லிய போது 
அவளின்... முகத்தில், இருந்து.... கண்ணீர்   வந்ததை,  பார்தேன்.
 

 

ஒரு தேத்தண்ணி தாம்மா எண்டா தந்திட்டு போவா...அதுக்கு இப்படியா சொல்லி பயமுறுத்துவது சிறியர்.... 🤔😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.