Jump to content

      பெரிய அளவிற் பேசப்படாத "வாகை சூடவா " திரை விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

       

            பெரிய அளவிற் பேசப்படாத வாகை சூடவா – திரை விமர்சனம்

உங்க வீட்டுப்பிள்ளை படம் திரையில் போகிறது. அதிலே  எம்ஜிஆரை நம்பியார் சவுக்கால் அடிக்கிறார். அதனைப் பொறுக்காது படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகன் சுடுகலனால் சுடத் திரை பற்றி எரிகிறது. இப்படித்தான் காட்சி தொடங்குகின்றது. 2011 இல் வெளியாகிய இந்தத் திரைப்படத்தை கொறோனா முடக்கத்தால் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 

கற்றலின் அவசியத்தை வலியுறுத்தி எடுத்துள்ள திரைப்படம். ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வியை மறுக்கும் கிராமத்துத் தலையாரி. படிக்காத பாமர மக்களை மட்டுமன்றி அவர்களது பிள்ளைகளையும் வயது வித்தியாசமின்றிக் கற்சூளையில் வேலைசெய்ய நிர்பந்திக்கப்பட்ட கிராமத்தை நோக்கி உதவி நிறுவனமொன்றின் வழிகாட்டலோடு அந்தக் கிராமத்திற் குமூக சேவையாக  ஆறுமாதம் வேலை செய்வதூடாக ஒரு சான்றிதழைப் பெற்று அரசுப்பணியில் இணைவதை நோக்காக் கொண்டு வாத்தியார் வேலுத்தம்பி வருகிறார். அந்தக் கிராமத்துக்கு ஒரு வழிகாட்டி போல இருக்கும் வைத்தியர், ஒரு ஆட்டுக்கொட்டகையைத் தங்குவதற்குக் கொடுக்கிறார். அதையே படுக்கவும் படிப்பிக்கவுமாகப் பயன்படுத்துகிறார்.உணவுக் கடைவைத்திருக்கும் மதியிடம் உணவுக்கு பணம் கொடுத்து உண்பதும் மோதல் ஏற்படுவதும் பின் காதல் ஏற்படுவதுமாக ஆங்காங்கே ஏற்படும் திருப்பங்கள் தொடர விமலின் தந்தையார் கிராமத்துக்கு வருகிறார். கிராம மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார். என்னுடைய மகனாக இருந்தும் நீயாவது சொல்லக் கூடாதா?  

வாத்தியாரான தனது மகனுக்கு அரசவேலை கிடைத்துவிட்டதைக் கூறி அந்த பணியிணைவுக் கட்டளையை கோவிலில் சாமியின் பாதத்தில் வைத்து தனதுநேர்த்தியை முடித்துவிட்டுவருவதாகவும்ளூ பேரூந்து தரிப்பிடத்திடத்திற்கு வருமாறு கூறிச் செல்லக் காலையில் வாத்தியாரும் புறப்பட்டுச்  செல்லும் வழியில், அவர் கற்பித்த சிறுவர்களில் ஒருவன் தனக்கு ஒருவாரத்தில் திரும்பி வரும்போது ஒரு இரட்டைவரிக் கொப்பி எழுதிப்பழக வாங்கி வருமாறு சில்லறைகளைக் கொடுக்கின்றான். ஒருவாரத்தில் தான் வருவதாகப்  பிள்ளைகளுக்காக் கூறியதை நம்பிவிட்டார்களே என்று எண்ணிய  வாத்தியார்ளூ தான் அந்தக் கிராமத்துக்குச் சென்றது முதல் தற்போதுவரையான சம்பவங்களை மீட்டியவாறு பேரூந்து தரிப்பிடத்துக்கு வரும் அவர், தான் மீண்டும் அந்தக் கிராமத்துப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் போவதாகக் கூறித் தந்தையைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டுத் திரும்புகிறார். 

திருப்பங்கள் மட்டுமல்ல இனிமையான இசை சிறுவர்கள் வாத்தியாரோடு விடும் அங்கதம் மென்மையான காதல் காட்சியமைப்பு மற்றும் சர சர சாரக் காத்து.....போறானே போறானே.... ஆனா ஆவன்னா...... என கேட்கத் தூண்டும் பாடல்கள் என ஒரு சிறந்த திரைப்படமாக எனது பார்வையில் வாகை சூட வா. இயக்குனருக்கு இது 2ஆவது திரைப்படமென்றால், இசையமைப்பாளருக்கு 1ஆவது திரைப்படமாகும். 

மனித வாழ்வியலப் பேசவேண்டிய கலை; இன்று பேசினாலும் பேசப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.  மக்கள் விழிப்படைந்துவிட்டால் சுரண்ட முடியாதே.

நன்றி
நட்புடன்
நொச்சி

குறிப்பு: 22ஆவது அகவைநிறைவுக்குப் பொருந்தவிடின் நகர்திவிடுமாறு வேண்டுகின்றேன்.- நன்றி-

 

Link to comment
Share on other sites

இந்தத்திரைப்படத்தை வந்த புதிதில் 2தடவைகள் பார்த்தேன். விமலுக்கு இதுவொரு சிறந்த படம் . அதிகம் பேசப்படவில்லை. ஆனால் சமூக அக்கறை மிக்க திரைக்காவியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, shanthy said:

இந்தத்திரைப்படத்தை வந்த புதிதில் 2தடவைகள் பார்த்தேன். விமலுக்கு இதுவொரு சிறந்த படம் . அதிகம் பேசப்படவில்லை. ஆனால் சமூக அக்கறை மிக்க திரைக்காவியம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மெய்களைக் காண்பதைவிடப் பொய்மையில் உழலும் உலகல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.