Jump to content

கொரோனா வைரசின் செயின் பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்: நியூசிலாந்து பிரதமர்


Recommended Posts

கொரோனா வைரசின் செயின் பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்: நியூசிலாந்து பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெறுவோம் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டபோது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஜனவரி மாதம் இறுதி பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் சீனாவின் வுகான் மாகாணத்தை புரட்டி எடுத்தது. பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்லமெல்ல பரவ ஆரம்பித்தது. இது ஒரு தொற்று நோய், சமூக விலகலால் (ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இருப்பது) மட்டுமே இந்த வைரசின் செயின் பரவலை தகர்த்து எறிய முடியும் என சீனாவும், உலக சுகாதார மையமும் எச்சரித்தது.

அப்படி இருந்தும் எந்த நாடுகளும் அதை கண்டுகொள்ளவில்லை. அப்போதுதான் ஜனவரி கடைசி வாரத்தில் ஈரான், துபாய் போன்ற நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது.

இதனால் நியூசிலாந்து உஷார் ஆனது. அப்போது இருந்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வந்தது, அதாவது ஜனவரில் 22-ல் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை செய்ய ஆரம்பித்தது. ஆனால் அப்போது ஒருவருக்கும் கூட கொரோனா பாதிப்பு இல்லை. இருந்தாலும் பரிசோதனையை தொடர்ந்தது.

முதன்முதலாக பிப்ரவரி 26-ந்தேதி முதல் நபர் நியூசிலாந்து மண்ணில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் உஷாரான நியூசிலாந்து மார்ச் முதல் வாரத்தில் இருந்து தடுப்பு நடவடிக்கைகளில் கையாள தொடங்கியது.

முதலாவதாக மார்ச் 14-ந்தேதியில் இருந்து வெளிநாட்டில் இருந்து யார் நியூசிலாந்துக்கு வந்தாலும் 14 நாட்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என உத்தரவிட்டது. மேலும் சொகுசு கப்பல் ஒன்றையும் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது.

அத்துடன் மார்ச் 19-ந்தேதியில் இருந்து நாட்டில் எல்லையை மூடியது. இதனால் மார்ச் 18-ந்தேதி வரை வெளிநாட்டைச் சேர்ந்த 32 பேருக்குத்தான் கொரோனா இருந்தது. அதன்பின் மின்னல் வேகத்தில் பரிசோதனை செய்ய ஆரம்பித்தது. மார்ச் 26-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஏப்ரல் 20-ந்தேதி வரை நியூசிலாந்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

கடந்த இரண்டு மூன்று வாரங்களின் கடுமையான நடவடிக்கையால் நேற்று வரை 992 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

கடுமையான கட்டுப்பாட்டால் கொரோனா வைரசின் செயின் பரவலை உடைத்து எறிந்து விட்டோம் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன் கூறுகையில் ‘‘நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஆறு வாரங்களுக்குள் அதை முறியடித்துள்ளோம்.

கடந்த இரண்டு வாரங்களாக நியூசிலாந்து மக்கள் செய்தது மிகப்பெரியது என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மனித ஆரோக்கியத்திற்கு எதிரான மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்தோம். நியூசிலாந்து மக்கள்தான் கொரோனா வைரசின் சமூக பரவலை தடுத்தனர். ஒவ்வொரு நபரும் இதைச் செய்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றதற்கு தேவைப்பட்டது நீங்கள் அமைதியாக இருந்ததுதான். தற்போது அதன்மூலம் உங்களது உயிரை காப்பாற்றியுள்ளீர்கள். தற்போது அந்த வகையில் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும்.

ஏப்ரல் 22-ந்தேதிக்குப் பிறகு ஊரடங்கை தொடர்வதா? அல்லது ஊரடங்கை தளர்த்துவா? என்பது குறித்து ஏப்ரல் 20-ந்தேதி முடிவு செய்யப்படும்.

நியூசிலாந்தில் லெவல் 4 முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கூட்டம் இதை லெவல் 3-க்கு குறைக்கும். 3-ம் நிலை என்பது வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அரசு கட்டடங்கள், மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் இடங்கள் மூடியே இருக்கும்’’ என்றார்.

Image may contain: 1 person, closeup
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கொரோனா வைரசின் செயின் பரவலை தகர்த்து வெற்றி பெற்று விட்டோம்: நியூசிலாந்து பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஊரடங்கு உத்தரவை திரும்ப பெறுவோம் என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

வாய் வீரம் காட்டிய டொனால்ட் ரம்புக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.