Jump to content

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.


என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.  

29 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

போட்டா போச்சு.. என்ன குமாரசாமியர் என்னைய வச்சு மீம்சு போடுறியா மாம்சுன்னு சண்டைக்கு வராம இருக்கணும்..😂

க‌ள்ளு கொட்டில்ல‌ நான் பார்த்து கொள்ளுறேன் ஓணாண்டி / மிம்ஸ்ச‌ சீக்கிர‌ம் த‌யார் செய் மாப்பிள‌  /

தாத்தாட்ட‌ பேச்சு வேண்டுற‌து என‌க்கு புதிதில்லை 😁 /

 

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 17:22, பாலபத்ர ஓணாண்டி said:

யூ மீன் இங்கிலீஸ்..?

spacer.png

அதே....அதே  என்ரை லண்டன் மச்சானிட்டையும் பெரிசாய் ஒண்டுமில்லை. கோபம் வந்தால் இல்லாட்டி விஷ்கியை மணத்தால் ஒரே இங்கிலிசுதான். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

அதே....அதே  என்ரை லண்டன் மச்சானிட்டையும் பெரிசாய் ஒண்டுமில்லை. கோபம் வந்தால் இல்லாட்டி விஷ்கியை மணத்தால் ஒரே இங்கிலிசுதான். 😎

சாமிகளே, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..!

ஏன் மச்சானை இப்படி கரித்துக் கொட்டுகிறீகள்..? 😡

இளவயதில் தங்கள் வீட்டம்மணியை காதலிக்கும்போதோ அல்லது திருமணத்தின்போதோ மச்சினன் உங்களை போட்டு கும்மி விட்டாரா..? :shocked:  Be frank please..! :)

திருமண சடங்கில் அக்கினியை இல்லாளுடன் வலம் வரும்போது துணைக்கு வந்த மச்சினனை இப்படி தூற்றுவது சரியல்ல சாமிகளே..!

மச்சினனின் அருமையை விளக்க இன்றும் தூத்துக்குடி பகுதிகளில் உலாவரும் பழக்கத்தை சொல்கிறேன்..

முத்துக்குளிக்கும்போது கடலுக்குள் மூழ்கும் மீனவரின் சொந்த மச்சினனிடம் தான் மீனவர் இறங்கும் கயிற்றை கொடுப்பார்களாம், ஏனெனில் அவர்தான் கரையில் தவிப்புடன் காத்திருக்கும் தன் சகோதரியின் வாழ்வுக்கு பங்கம் நினைக்காமல் பொறுப்புடன் முத்தெடுக்க மூழ்குபவருக்கு கடலுக்கடியில் ஏதும் இடர் வந்தால்  தன்னை கயிற்றுடன் மேலிழுத்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொடுப்பவர். மற்ற மீனவர்கள் அல்ல..

இவ்வளவு ஏன்..?

'மச்சினன் இல்லாத வீட்டில் யாரும் பெண்ணெடுக்க மாட்டார்கள்' என்ற பழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளது.. அறிவீர்களா..?

தன்னையும், தன் குடும்பத்தையும் கட்டையில் வேகும் வரை வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்கள் அனைத்திலும் உறுதுணையாய் இருக்கும் மச்சினனின் அருமை தெரியாமல், இப்படி சகட்டுமேனிக்கு கரித்துக்கொட்டுகிறீர்களே.. vil-colere1.gif

இது அடுக்குமா..?

தகுமா..?

va-taper.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 17:55, ராசவன்னியன் said:

ما شاء الله

 😂 استمتع! أنت رجل جريء ..... يوبخ حفيد لندن 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ராசவன்னியன் said:

'மச்சினன் இல்லாத வீட்டில் யாரும் பெண்ணெடுக்க மாட்டார்கள்' என்ற பழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளது.. அறிவீர்களா..?

ஏன் மச்சினன் இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ராசவன்னியன் said:

சாமிகளே, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..!

ஏன் மச்சானை இப்படி கரித்துக் கொட்டுகிறீகள்..? 😡

இளவயதில் தங்கள் வீட்டம்மணியை காதலிக்கும்போதோ அல்லது திருமணத்தின்போதோ மச்சினன் உங்களை போட்டு கும்மி விட்டாரா..? :shocked:  Be frank please..! :)

திருமண சடங்கில் அக்கினியை இல்லாளுடன் வலம் வரும்போது துணைக்கு வந்த மச்சினனை இப்படி தூற்றுவது சரியல்ல சாமிகளே..!

மச்சினனின் அருமையை விளக்க இன்றும் தூத்துக்குடி பகுதிகளில் உலாவரும் பழக்கத்தை சொல்கிறேன்..

முத்துக்குளிக்கும்போது கடலுக்குள் மூழ்கும் மீனவரின் சொந்த மச்சினனிடம் தான் மீனவர் இறங்கும் கயிற்றை கொடுப்பார்களாம், ஏனெனில் அவர்தான் கரையில் தவிப்புடன் காத்திருக்கும் தன் சகோதரியின் வாழ்வுக்கு பங்கம் நினைக்காமல் பொறுப்புடன் முத்தெடுக்க மூழ்குபவருக்கு கடலுக்கடியில் ஏதும் இடர் வந்தால்  தன்னை கயிற்றுடன் மேலிழுத்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை கொடுப்பவர். மற்ற மீனவர்கள் அல்ல..

இவ்வளவு ஏன்..?

'மச்சினன் இல்லாத வீட்டில் யாரும் பெண்ணெடுக்க மாட்டார்கள்' என்ற பழக்கம் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளது.. அறிவீர்களா..?

தன்னையும், தன் குடும்பத்தையும் கட்டையில் வேகும் வரை வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்கள் அனைத்திலும் உறுதுணையாய் இருக்கும் மச்சினனின் அருமை தெரியாமல், இப்படி சகட்டுமேனிக்கு கரித்துக்கொட்டுகிறீர்களே.. vil-colere1.gif

இது அடுக்குமா..?

தகுமா..?

va-taper.gif

 

அது மச்சினன்.. நம்மாளுக்கு வாச்ச இது விசம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

ஏன் மச்சினன் இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டார்கள்?

வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்து சடங்களிலும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தாய் மாமன் சடங்குகள் செய்ய மச்சினனின் பங்கு மிக முக்கியமானது. (மிக முக்கியமாக பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால்..)

திருமண நிச்சயதார்த்ததில் (உங்கள் வழியில் எழுத்து எழுதுதல்)இரு வீட்டிலும் தாய் மாமன்கள் தான் முதலில் பேச வேண்டும். மாலை மாற்றிக்கொண்டு இரு வீட்டாரும் தட்டுகள் மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்து சடங்குகளிலும் மச்சினனுக்கு தான் முதலிடம். எந்த காரியங்களுக்கும் மச்சினனைத் தான் முதலில் அழைக்க வேண்டும்.

அந்த வெற்றிடத்தை நிரப்ப வேறு யாராலும் முடியாது, இது தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் பழக்கம்.

"கிழக்குச் சீமையிலே" படத்தில் கூட இதை சரியாக சொல்லியிருப்பார்கள். 'தாய் மாமன் சீர்' கேள்விப்பட்டுருப்பீர்களே?

இவ்வழக்கம் ஈழத்தில் இல்லையா..?

எனது திருமணத்திற்கும் அப்படியே பார்த்து முடித்தார்கள், என் மச்சினன் தான் இன்றளவும் உறுதுணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்கடை மச்சானை பேசுவதுக்கும்  ஒரு திரியா ?

 

எனக்கும் ஒரு மண்டை கயிறு ஜெர்மனில் இருக்கு தறுதலை 42 வயதாகியும் தறி கெட்டு  திரியிது .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் நாட்டு க‌லாச்சார‌த்துக்கும் ஈழ‌த்து க‌லாச்சார‌த்துக்கும் நிறைய‌ வித்தியாச‌ம் இருக்கு /

த‌மிழ் நாட்டில் கூட‌ பிற‌ந்த‌ அக்காவின் ம‌க‌ளை த‌ம்பி திரும‌ண‌ம் செய்து கொள்ள‌லாம்  / 

த‌மிழீழ‌த்தில் அப்ப‌டி இல்லை /
ம‌ச்சான் ம‌ச்சால‌ திரும‌ண‌ம் செய்வ‌து தான் முறை /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மாமன்:

தாய் மாமன் தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம்

தொட்டிலிடுதல்

குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.

காது குத்துதல்

காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.

பூப்புச் சடங்கு

ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டும் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.

தாய்மாமன் சீர்" தங்கை மகள் பூப்பெய்திய(வயதுக்கு வந்ததும்) தாய் வீட்டுசீர்வரிசையாக(மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பச்சை ஓலை குச்சில் கட்டுவது, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே.

மருமகள் பூப்பெய்திய புனித நீராட்டு விழா எடுப்பது தாய்மாமன்முறை என்பது எம் தமிழர் மரபின் வழிசம்பிரதாயம்..

பட்டம் கட்டுதல்

திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.

தமிழ் திரைப்பட பாடல்களில்

"நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்"

***

"தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி"

 

விக்கிப்பீடியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'கு.சா' சாமியார் இருக்கிறாரே, ஏதாவது ஒரு திரியை தொடங்கி பத்த வச்சுடுறார், நாமளும் அதில் விழுந்து மீண்டெழ ரொம்ப நேரமெடுக்கிறது..! 

இப்பொழுது அதிகாலை மணி 02. நேரம் போனதே தெரியலை..!:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மாமன் சீர்சுமந்து வாராண்டீ..
அவன் , தங்க கொலுசு கொண்டு தாராண்டீ..

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.