Jump to content

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட நாடுகளில் இலங்கை!


Recommended Posts

Coronavirus-World-3.jpg

கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உலக அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கலக்கம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ‘கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நாடுகளாக அவர்கள் கூறியுள்ளனர்.

சீனாவை பொறுத்த வரையில் கொவிட் -19 பாதிக்கப்பட்ட முதல்  தொற்றுநோயாளி இனங்காணப்பட்ட பின்னரே அவர்கள் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். எனினும் சீனா இப்போது வரையில் 81 ஆயிரத்துக்கும்  அதிகமான கொரோனா தொற்றுநோயாளர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

எனினும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் உயரிய மட்டத்தில் உள்ளது என கூறும் அந்த ஆய்வு, இலங்கையை பொறுத்தவரை வேறெந்த நாடுகளும் மேற்கொள்ளாத மிகச் சரியான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

அனைத்து நாடுகளுமே கொரோனா  வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னரே தமது நாட்டினை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த நிலையில் இலங்கை அவ்வாறு அல்லாது கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவ முன்னரே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இப்போது வரையில் இலங்கையின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் வைரஸை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் சுகாதார வேலைத்திட்டம் மிக உயரிய மட்டத்தில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனாவை-கட்டுப்படுத்து/

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

கொரோனாவை தடுப்பதில் முன்னிலை வகிக்கும் ஸ்ரீலங்கா? வெளியான தரவரிசை அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நாடுகளின் பட்டியலில் ஸ்ரீலங்கா 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு வல்லரசு நாடுகளே போராடி வருகின்றன.

பல நாடுகளில் சமூக விலக்கலை கடைப்பிடிப்பதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளை அவுஸ்திரேலியாவின் ICMA நிறுவனம் தரவரிசைப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கை 9 ஆவது இடத்தை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையானது கொரோனாவை தடுக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு பட்டியல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 244 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 77 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

ஸ்ரீலங்காவில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் ஏனைய மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக இடைக்கிடையே ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

https://www.ibctamil.com/srilanka/80/141419


Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளை அவுஸ்திரேலியாவின் ICMA நிறுவனம் தரவரிசைப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கை 9 ஆவது இடத்தை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இலங்கை அரசுக்கு 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் இலங்கை அரசுக்கு 

 

9ஆவது இடத்தில்  ஆட்டம் முடியவில்லை.

நாளை முதலாம் இடத்திற்கு முன்னேத்தி விடலாம், கொஞ்சம் அதிகம்  செலவாகும் 😃

Link to comment
Share on other sites

கேள்விகளுக்கு அப்பால் இலங்கை அரசு கொவிட் 19 வைரஸ் பிரச்சனையை திறமையாக கையாள்கிறது என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இது வரைக்கும் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளது (புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 இனால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம்). அத்துடன் குணமடைந்து வெளியேறுகின்றவர்களின் எண்ணிக்கையிலும் முன்னேற்றம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

பலமிக்க வல்லரசுகள் கூட தடுமாறிக் கொண்டு இருக்கும் போது சுண்டக்காய் சைசில் இருக்கும் இலங்கை தற்போதைக்கு சிறப்பாகவே கையாள்கிறது. உணவு வினியோகத்தில் கூட சில குறைபாடுகள் இருப்பினும் இயலுமானவரைக்கும் ஒழுங்கான விதத்தில் செயல்படுகிறது.

கோத்தா அரசு தேர்தலை நினைவில் கொண்டு திறமையாக செயல்படுவதாக சொல்லலாம், ஆயினும் அதன் விளைவு நன்மையாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

10 minutes ago, நிழலி said:

கேள்விகளுக்கு அப்பால் இலங்கை அரசு கொவிட் 19 வைரஸ் பிரச்சனையை திறமையாக கையாள்கிறது என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இது வரைக்கும் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளது (புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 இனால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம்). அத்துடன் குணமடைந்து வெளியேறுகின்றவர்களின் எண்ணிக்கையிலும் முன்னேற்றம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

பலமிக்க வல்லரசுகள் கூட தடுமாறிக் கொண்டு இருக்கும் போது சுண்டக்காய் சைசில் இருக்கும் இலங்கை தற்போதைக்கு சிறப்பாகவே கையாள்கிறது. உணவு வினியோகத்தில் கூட சில குறைபாடுகள் இருப்பினும் இயலுமானவரைக்கும் ஒழுங்கான விதத்தில் செயல்படுகிறது.

கோத்தா அரசு தேர்தலை நினைவில் கொண்டு திறமையாக செயல்படுவதாக சொல்லலாம், ஆயினும் அதன் விளைவு நன்மையாகவே உள்ளது.

இலங்கையை விட ஐம்பது மடங்கு சனத்தொகையில் பெரிய அண்டைய நாடான இந்தியாவில் 499 பேர்  இறந்துள்ளனர்.இலங்கையை விட  சிறப்பாக கையாண்டுள்ளனர் என சொல்லலாம். 

மேலைத்தேய நாடுகளில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 60 வயதிற்கும் மேலானவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முதியோர் காப்பகத்தில் இருந்தவர்கள். 

இந்த இரண்டு நாடுகளிலும் முதியோர்களை உறவினர்களே அதிகம் கவனிப்பது இழப்புக்களை குறைக்க உதவியுள்ளது. 

இலங்கையின் மருத்துவ துறை ஒப்பீடளவில் சிறப்பானது. அத்துடன், கோத்தாவின் இராணுவ மயமாக்கப்ட்ட அரசியலும் இழப்புக்களை குறைக்க உதவியுள்ளன. ஆனால், எவ்வளவு பேருக்கு தொற்று உள்ளது? யார் இதனால் இறக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்கள் நிச்சயம் தவறாக, குறைவாக இருக்கும். 

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

கேள்விகளுக்கு அப்பால் இலங்கை அரசு கொவிட் 19 வைரஸ் பிரச்சனையை திறமையாக கையாள்கிறது என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இது வரைக்கும் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளது (புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 இனால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம்). அத்துடன் குணமடைந்து வெளியேறுகின்றவர்களின் எண்ணிக்கையிலும் முன்னேற்றம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

பலமிக்க வல்லரசுகள் கூட தடுமாறிக் கொண்டு இருக்கும் போது சுண்டக்காய் சைசில் இருக்கும் இலங்கை தற்போதைக்கு சிறப்பாகவே கையாள்கிறது. உணவு வினியோகத்தில் கூட சில குறைபாடுகள் இருப்பினும் இயலுமானவரைக்கும் ஒழுங்கான விதத்தில் செயல்படுகிறது.

கோத்தா அரசு தேர்தலை நினைவில் கொண்டு திறமையாக செயல்படுவதாக சொல்லலாம், ஆயினும் அதன் விளைவு நன்மையாகவே உள்ளது.

இது 100க்கு 100 உண்மை!

பயபக்தி வேலை செய்யுது என்டு தான் சொல்லோணும். சில உண்மைகளை சொறிலங்கா அரசு மறைச்சிருக்கு என கருதினாலும் இதுவரை எல்லாம் நலமாகவே போய்க்கொண்டிருக்கு.

ஆனா இனி தான் சொறிலங்கா மக்கள் ஆபத்தான காலத்தை கடக்க வேண்டும். ஏனென்டா கோத்தபாய கோஷ்டிக்கு தேர்தல்வெறி தலைக்கு ஏறிவிட்டது. இதனால மக்கள் நலம் பின்தள்ளப்படுவது உறுதி. இதனால உண்மைகள் கடுமையா மறைக்கப்படும். நிர்வாக சீர்கேடுகள் தலைவிரித்தாடும். மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

கேள்விகளுக்கு அப்பால் இலங்கை அரசு கொவிட் 19 வைரஸ் பிரச்சனையை திறமையாக கையாள்கிறது என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இது வரைக்கும் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளது (புலம்பெயர் நாடுகளில் கொவிட் 19 இனால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம்). அத்துடன் குணமடைந்து வெளியேறுகின்றவர்களின் எண்ணிக்கையிலும் முன்னேற்றம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

பலமிக்க வல்லரசுகள் கூட தடுமாறிக் கொண்டு இருக்கும் போது சுண்டக்காய் சைசில் இருக்கும் இலங்கை தற்போதைக்கு சிறப்பாகவே கையாள்கிறது. உணவு வினியோகத்தில் கூட சில குறைபாடுகள் இருப்பினும் இயலுமானவரைக்கும் ஒழுங்கான விதத்தில் செயல்படுகிறது.

கோத்தா அரசு தேர்தலை நினைவில் கொண்டு திறமையாக செயல்படுவதாக சொல்லலாம், ஆயினும் அதன் விளைவு நன்மையாகவே உள்ளது.

முக்கியமாக காலநிலை தான் செல்வாக்கு செலுத்துகிறது.ஏனென்றால் குளிர் காலநிலை உள்ளநாடுகளில் தான் அதிக பாதிப்பு (கனடாவை தவிர அதுவும் பெரியநிலப்பிரதேசத்தில் குறைந்த சனத்தொகை என்பதால்)

Link to comment
Share on other sites

13 hours ago, வாதவூரான் said:

முக்கியமாக காலநிலை தான் செல்வாக்கு செலுத்துகிறது.ஏனென்றால் குளிர் காலநிலை உள்ளநாடுகளில் தான் அதிக பாதிப்பு (கனடாவை தவிர அதுவும் பெரியநிலப்பிரதேசத்தில் குறைந்த சனத்தொகை என்பதால்)

உங்கள் கருத்தில் உண்மை உண்டு. வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் முக்கியமான காரணியாக  நாட்டுக்கு நாடு சுற்றுலாப்  பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பாரிய வித்தியாசம் உண்டு. அதனால் தொற்றை காவி செல்வோர் எண்ணிக்கை சொற்பமானதே. அது இலங்கைக்கு கைகொடுத்திருப்பதை மறுக்க முடியாது  என்றாலும் இதன் பலனை ஆளும் கட்சி அடுத்த தேர்தலில் அறுவறை செய்ய முயற்சிக்கும்.  

Link to comment
Share on other sites

8 hours ago, tulpen said:

உங்கள் கருத்தில் உண்மை உண்டு. வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் முக்கியமான காரணியாக  நாட்டுக்கு நாடு சுற்றுலாப்  பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பாரிய வித்தியாசம் உண்டு. அதனால் தொற்றை காவி செல்வோர் எண்ணிக்கை சொற்பமானதே. அது இலங்கைக்கு கைகொடுத்திருப்பதை மறுக்க முடியாது  என்றாலும் இதன் பலனை ஆளும் கட்சி அடுத்த தேர்தலில் அறுவறை செய்ய முயற்சிக்கும்.  

வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம் என்பதற்கு எந்த அறிவியல் ரீதியான ஆதாரமும் இதுவரை இல்லை. 

Link to comment
Share on other sites

28 minutes ago, ampanai said:

வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம் என்பதற்கு எந்த அறிவியல் ரீதியான ஆதாரமும் இதுவரை இல்லை. 

நிச்சயமாக  இதற்கு அறிவியல்  ஆதாரம் இல்லை என்பது உண்மை அம்பனை. 

Link to comment
Share on other sites

BCG Vaccination எனும் tuberculosis (TB) இற்கு எதிரான தடுப்பூசி பெற்ற மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் கொவிட் 19 தொற்று மோசமாக ஏற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஆராச்சிகளின் மூலம் இது உண்மையானதா என இன்னமும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்த தடுப்பூசி கண்டிப்பாக போடப் பட வேண்டிய ஒன்று என்பதால் எம்மில் அனேகம் பேருக்கும் இது ஏற்றப்பட்டு இருக்கு,

ஸ்பெயினில் இந்த தடுப்பூசி போடப்படவில்லை. அதே நேரம் அதன் எல்லையில் அமைந்திருக்கும் போர்த்துக்கல்லில் இது கட்டாயமாக்கப்பட்டு இருக்கும் ஒரு தடுப்பூசி. ஸ்பெயினில் பல்லாயிரக்கணக்கானோர் கொவிட் 19 இனால் பலியாகிக் கொண்டிருக்கையில் போர்த்துக்கல்லில் 1000 இற்கும் குறைவானவர்களே இதுவரைக்கும் பலியாகியுள்ளனர் என அறிய முடிகின்றது.

இது தொடர்பாக வந்த தகவல்கள் / செய்திகள்:

https://www.statnews.com/2020/04/14/decades-old-tb-vaccine-attracts-attention-and-skepticism-as-a-potential-weapon-against-covid-19/

https://www.nytimes.com/2020/04/03/health/coronavirus-bcg-vaccine.html

https://www.latintimes.com/calmette-vaccine-coronavirus-covid-19-death-rates-lower-countries-use-bcg-vaccine-457794

https://www.france24.com/en/20200403-could-tb-vaccine-protect-medics-from-covid-19

 

Link to comment
Share on other sites

9 hours ago, tulpen said:

உங்கள் கருத்தில் உண்மை உண்டு. வெப்பவலய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இயலபாகவே குறைவாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் முக்கியமான காரணியாக  நாட்டுக்கு நாடு சுற்றுலாப்  பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பாரிய வித்தியாசம் உண்டு. அதனால் தொற்றை காவி செல்வோர் எண்ணிக்கை சொற்பமானதே. அது இலங்கைக்கு கைகொடுத்திருப்பதை மறுக்க முடியாது  என்றாலும் இதன் பலனை ஆளும் கட்சி அடுத்த தேர்தலில் அறுவறை செய்ய முயற்சிக்கும்.  

 

இன்று ரஸ்யாவில் பாதிக்கப்பட்டோரை பார்க்கும் போது குளிர் நாடுகள் என்ற கூற்று சரியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

17 minutes ago, nunavilan said:

 

இன்று ரஸ்யாவில் பாதிக்கப்பட்டோரை பார்க்கும் போது குளிர் நாடுகள் என்ற கூற்று சரியாக தெரியவில்லை.

உண்மை நுணாவிலான். எனது அவதானிப்பையே தெரிவித்தேன். ஒரு அவதானிப்பு மாத்திரம் இதனை உறுதியாக சொல்ல போதுமானது அல்ல. பலவகை காரணங்கள் இருக்கலாம். மேலே நிழலி கூறிய தகவல்களும் காத்திரமான பங்களிப்பை செய்திருக்கலாம்.   

Link to comment
Share on other sites

53 minutes ago, nunavilan said:

 

இன்று ரஸ்யாவில் பாதிக்கப்பட்டோரை பார்க்கும் போது குளிர் நாடுகள் என்ற கூற்று சரியாக தெரியவில்லை.

நுணா, நீங்கள் சொல்வதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ரஷ்யாவை மேற்கோள் காட்டியது ரஷ்யா இலங்கை இந்தியா போன்று வெப்பம் அதிகமாக இருக்கும் நாடு என்ற ரீதியிலா? அவ்வாறு எனில் ரஷ்யா அப்படியான நாடு இல்லை அல்லவா?

Link to comment
Share on other sites

1 minute ago, நிழலி said:

நுணா, நீங்கள் சொல்வதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ரஷ்யாவை மேற்கோள் காட்டியது ரஷ்யா இலங்கை இந்தியா போன்று வெப்பம் அதிகமாக இருக்கும் நாடு என்ற ரீதியிலா? அவ்வாறு எனில் ரஷ்யா அப்படியான நாடு இல்லை அல்லவா?

குளிர் நாடுகளை அதிகம் தாக்காது என்றும் ஒரு செய்தி உள்ளது. துல்பன் அதனை கருத்தில் கொள்கிறார் என்று நினைத்தேன்.

வெப்ப நாடுகளுக்கு பரவாது, தாக்காது என்பதும் பொய்யானது என ஒரு  கொரோனா ஆய்வாளர் கூறி அப்ப்டியெனில் சென்னையில் கொரோனாவே இருக்க கூடாதல்லவா என குறிப்பிட்டுள்ளார். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

 

இன்று ரஸ்யாவில் பாதிக்கப்பட்டோரை பார்க்கும் போது குளிர் நாடுகள் என்ற கூற்று சரியாக தெரியவில்லை.

ஆனால் ரஷ்யாவில் சனத்தொகை அடர்த்தி ஏனைய ஐரோப்பியநாடுகளைப்போல இல்லை.ஆனால் இந்தியாவின் சனத்தொகைக்கு இவ்வளவுக்கும் இலட்சக் கணக்கில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.நிழலி சொல்வதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அப்பிடியெண்டால் பிரித்தானியா,பிரான்ஸில் ஏன் இலங்கை இந்தியாவை சேர்ந்த முதலாம் தலைமுறையினர் கூட இறந்துள்ளனர் (இவர்களில் பெரும்பாலானோர் BCG போட்டிருக்க வாய்ப்பு இருக்கு).முக்கிய விடயம் இந்தியாவிலும் இலங்கையிலும் BCG போட்டவர்களை விட போடாதவர்கள் மிக அதிகம்.

அறிவியல் ஆதாரம் இப்போது வராது. அதுக்கு எப்பிடியும் 12-18 மாதங்கள் எடுக்கும். ஆனால் தற்போது வரையான புள்ளி விபரத்தை அடிப்படையாக வைத்து தான் கூறினேன். சனத்தொகை அடர்த்தியுடன் குளிர் காலனிலையும் சேரும் போது பாதிப்பு கூடவாக இருக்கும்

Link to comment
Share on other sites

4 minutes ago, நிழலி said:

நுணா, நீங்கள் சொல்வதை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ரஷ்யாவை மேற்கோள் காட்டியது ரஷ்யா இலங்கை இந்தியா போன்று வெப்பம் அதிகமாக இருக்கும் நாடு என்ற ரீதியிலா? அவ்வாறு எனில் ரஷ்யா அப்படியான நாடு இல்லை அல்லவா?

ரஷ்யா குளிர் காலநிலை உள்ள நாடாக இருந்த போதிலும்  கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்ற தகவல் அடிப்படையிலேயே நுணா அப்படி தெரிவித்தார் என்று நினைக்கிறேன். ஆனால் ரஷ்யா இந்த விடயத்தில் மேற்கு நாடுகளை போல் வெளிபடை தன்மையான (Transparency ) நடந்து கொண்டாதா என்பது கேள்விக்குறி.

Link to comment
Share on other sites

On 18/4/2020 at 10:20, போல் said:

ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 244 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 77 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

இந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வீதாசார அடிப்படையில் நம்பிக்கை தருவதாய் உள்ளது. 

இலங்கை உலகத்திற்கு தாங்கள் எவ்வாறு குணமடைய வைக்கின்றோம் என சொல்லி உலகத்தையும் காப்பாற்றலாம்👏

Link to comment
Share on other sites

6 minutes ago, nunavilan said:

குளிர் நாடுகளை அதிகம் தாக்காது என்றும் ஒரு செய்தி உள்ளது. துல்பன் அதனை கருத்தில் கொள்கிறார் என்று நினைத்தேன்.

வெப்ப நாடுகளுக்கு பரவாது, தாக்காது என்பதும் பொய்யானது என ஒரு  கொரோனா ஆய்வாளர் கூறி அப்ப்டியெனில் சென்னையில் கொரோனாவே இருக்க கூடாதல்லவா என குறிப்பிட்டுள்ளார். நன்றி.

விளக்கத்துக்கு நன்றி நுணா.

மருத்துவ / விஞ்ஞான ரீதியாக வெப்பத்தை ஒரு முக்கிய காரணியாக கொண்டு உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்பதால் புள்ளிவிபரங்களை மட்டுமே வைத்து இப்படியான விடயங்கள் அணுகப்படுகின்றன. அத்துடன் சீனா / ரஷ்யா நாடுகளில் அதிகாரங்கள் அனைத்தும் குவிந்து இருக்கும் மத்திய அரசுகளாலேயே அனேக விடயங்கள் கையாளப்படுவதால் வெளிப்படைத் தன்மை இல்லாததாகவே அவர்களின் தகவல்களும் உள்ளன.

ஆபிரிக்க நாடுகளில் அனேகமானவை வெப்பம் மிகுந்த நாடுகள். ஆபிரிக்காவில் கொவிட் 19 கட்டுப்படுத்தப்படவில்லை எனின் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் இறக்க நேரிடும் என ஆபிரிக்க நாடுகளின் கூட்டு அமைப்பு ஒன்று கவலை வெளியிட்டு உள்ளது.

13 minutes ago, வாதவூரான் said:

ஆனால் ரஷ்யாவில் சனத்தொகை அடர்த்தி ஏனைய ஐரோப்பியநாடுகளைப்போல இல்லை.ஆனால் இந்தியாவின் சனத்தொகைக்கு இவ்வளவுக்கும் இலட்சக் கணக்கில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.நிழலி சொல்வதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அப்பிடியெண்டால் பிரித்தானியா,பிரான்ஸில் ஏன் இலங்கை இந்தியாவை சேர்ந்த முதலாம் தலைமுறையினர் கூட இறந்துள்ளனர் (இவர்களில் பெரும்பாலானோர் BCG போட்டிருக்க வாய்ப்பு இருக்கு).முக்கிய விடயம் இந்தியாவிலும் இலங்கையிலும் BCG போட்டவர்களை விட போடாதவர்கள் மிக அதிகம்.

அறிவியல் ஆதாரம் இப்போது வராது. அதுக்கு எப்பிடியும் 12-18 மாதங்கள் எடுக்கும். ஆனால் தற்போது வரையான புள்ளி விபரத்தை அடிப்படையாக வைத்து தான் கூறினேன். சனத்தொகை அடர்த்தியுடன் குளிர் காலனிலையும் சேரும் போது பாதிப்பு கூடவாக இருக்கும்

இந்தியாவைப் பற்றித் தெரியாது. ஆனால் இலங்கையில் இது அரச மருத்துவமனையிலும் சரி, தரமான தனியார் மருத்துவமனையிலும் சரி குழந்தை பிறந்த ஒரு சில நாட்களுக்குள் கொடுக்கப்படும் ஒரு (கட்டாயத்) தடுப்பூசி. என் மகன் பிறந்தது கொழும்பில். அவனுக்கும் இந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டு இருக்கு என்பதை தடுப்பூசிகள் கொடுத்த ஏட்டில் (Log book) உள்ளதை இப்போதும் சரிபார்த்தேன்.

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

இந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வீதாசார அடிப்படையில் நம்பிக்கை தருவதாய் உள்ளது. 

இலங்கை உலகத்திற்கு தாங்கள் எவ்வாறு குணமடைய வைக்கின்றோம் என சொல்லி உலகத்தையும் காப்பாற்றலாம்👏

சிங்களப் பகுதிகளில் இருக்கும் கொவிட் 19 நோயாளர்களுக்கான மருத்துவமனைகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் இணைத்தே நோயாளர்களை கவனிக்கின்றனர் என அறிய முடிந்தது. சில மருத்துவமனைகளில் இலைக் கஞ்சியை மருத்துவர்கள் தம் வீட்டில் சமைத்து நோயாளர்களுக்கு கொடுத்துள்ளனர். மல்லித்தண்னியும் முக்கிய நோயெதிர்ப்புச் சக்தி மருந்தாக சில இடங்களில் கொடுக்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

27 minutes ago, நிழலி said:

சிங்களப் பகுதிகளில் இருக்கும் கொவிட் 19 நோயாளர்களுக்கான மருத்துவமனைகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் இணைத்தே நோயாளர்களை கவனிக்கின்றனர் என அறிய முடிந்தது. சில மருத்துவமனைகளில் இலைக் கஞ்சியை மருத்துவர்கள் தம் வீட்டில் சமைத்து நோயாளர்களுக்கு கொடுத்துள்ளனர். மல்லித்தண்னியும் முக்கிய நோயெதிர்ப்புச் சக்தி மருந்தாக சில இடங்களில் கொடுக்கின்றனர்.

 

இந்த  பாடலின் படியா நிழலி ( )😃😃😃😃  just joke

 

Link to comment
Share on other sites

மடகஸ்கார் ஆய்வாளர்கள் artemisia மூலிகை மருந்து ஒன்றினை கொரோனாவுக்கெதிராக வெற்றிகரமாகப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஆய்வு விபரங்கள் எதனையும் தரவில்ல்லை. எந்த அளவு உண்மை என்று தெரியாது.

https://www.francetvinfo.fr/monde/afrique/societe-africaine/madagascar-covid-organics-le-remede-du-president-rajoelina-contre-le-coronavirus-voit-le-jour_3925621.html#xtor=AL-79-[article]-[connexe]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.