Jump to content

'கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'கொரோனா ஊரடங்கு தொடர்பாக தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?'

தமிழக முதல்வரால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?'ARUN SANKAR / Getty

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக தலைமை செயலர் சண்முகம் பிரதமர் மோதி வெளியிடவுள்ள அறிவிப்பை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார். 

தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என கேள்வி எழுப்பி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகிறார்கள்.

#whoareyouedappadi என்ற ஹேஷ்டேகும் தமிழக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே எடுக்கும் நேரத்தில் தமிழக முதல்வர் அவ்வாறு எடுக்கவில்லை என ட்விட்டர் வாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.

"மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிக்கை விடும் நேரத்தில் இன்று தமிழ்நாட்டில் தலைமை செயலர் அதை பிரதமர் மோதி அறிவிப்பார் என்றால் நீங்கள் யார் எடப்பாடி அவர்களே??" என்று ஒரு ட்விட்டர் வாசி குறிப்பிட்டுள்ளார்

"துப்பட்டா, துண்டு கூட முகக்கவசம்தான்"

பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்TARIK KIZILKAYA/getty imAGES

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்றும் வெளியிடங்களில் இருக்கும்போது, குறைந்தபட்சம் கைகுட்டை, துப்பட்டா, துண்டு அல்லது அங்கவஸ்திரம் போன்றவற்றை முகத்தை மூடிக்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

பீலா ராஜேஷ் பதிவிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ஒவ்வொவரு நாளும் பயன்படுத்தும் உடைகளில் தூய்மையான துணியை முகக்கவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். சோப்பால் துவைத்து, சூரிய ஒளியில் உலர்த்திய துணியை முகக்கவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் உள்ள துணியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் தூய்மையானதாக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் பொது மக்கள் தங்களது உடல்நலனில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் தாங்களாகவே மருந்துகளை மருந்துக்கடைகளில் வாங்கி உட்கொள்ளக்கூடாது என்றும் பீலா ராஜேஷ் அறிவுறுத்தியுள்ளார். இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றும் பயணிக்கும்போது முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911 ஆக உள்ளது. 

இந்நிலையில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது, எதிர்க்கட்சித் தலைவரின் சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுகிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்பாக "அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது "என தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்யுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

 

இந்நிலையில், சனிக்கிழமையன்று பிரதமருடன் காணொளி வாயிலாக நடந்த சந்திப்பில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழகத்தில் எடுத்துவரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த முதல்வர் பழனிசாமி, கொரோனா சோதனையை நடத்த தேவைப்படும் ரேப்பிட் டெஸ்ட் கிட் விரைவாக அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இரண்டு லட்சம் கிட்கள் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார். 

பிரதமர் மோதிGetty Images

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.510 கோடி நிதி ஒதுக்கியதற்கு பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மாநிலங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்குவதில் 15வது நிதிக்குழுவின் வரைமுறையே தவறாக உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவீதம் தமிழகத்திற்கு மட்டும் 64.65 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

 

https://www.bbc.com/tamil/india-52258996

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.