Jump to content

என்ன செய்யப்போகிறோம்? உலகம் முழுதும் கரோனா தொற்று 20 லட்சம்; ஐரோப்பாவில் உச்சம் தொட்ட கரோனா, தெற்காசியாவை தாக்கும்: நிபுணர்கள் கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யப்போகிறோம்? உலகம் முழுதும் கரோனா தொற்று 20 லட்சம்; ஐரோப்பாவில் உச்சம் தொட்ட கரோனா, தெற்காசியாவை தாக்கும்: நிபுணர்கள் கருத்து 

virus-cases-about-2m-worldwide-few-new-hot-spots  
 

டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் தோன்றிய உலக மரண வைரஸான கரோனாவுக்கு இன்று உலகம் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை நெருங்குகிறது. ஸ்வைன் ப்ளூ என்ற பன்றிக்காய்ச்சலை விடவும் கரோனா கொடியது என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒரு காலத்தில் நியூயார்க் என்றால் சொர்க்கபுரி ஆனால் இன்று மரணக்கூடம். ஆம், அங்கு 10,000 பேர் கரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர்.

நியூயார்க், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் வகையாகச் சிக்கியுள்ளன. இது அமெரிக்காவின் பிற மூலைகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தடம் காண்டும் தரவியல் படி அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 6,83,000 ஆகும். உலகம் முழுதும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அமெரிக்காவில் பாதிப்பு 582,000 என்றும் உலக அளவில் பாதிப்பு 19 லட்சம் என்றும் ஏன் குறைக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை.

ஆனாலும் உலக அளவில் ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு அளவு குறையத் தொடங்கியுள்ளது, அமெரிக்காவில் ஆபத்து இன்னும் அதிகமாகும் நிலையில் பொருளாதார முன்னுரிமைகளுக்காக விரைவில் சமூக ஊரடங்கு, லாக்டவுன் ஆகியவற்றை தளர்த்துவது பேராபத்தில் முடியும் என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

1586840836298.jpg

ஆனாலும் ஸ்பெயினில் சில தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர், இத்தாலியும் கொஞ்சம் லாக்-டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அமெரிக்காவிலும் சில கவர்னர்கள் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என்று கூறியதை அடுத்து கடுப்பான ட்ரம்ப், நான் தான் இங்கு முடிவெடுப்பவன், தன்னிச்சையாகச் செயல் பட முடியாது, அதிபர் என்று நான் எதற்கிருக்கிறேன்? என்று எச்சரித்துள்ளார்.

நியூயார்க் கரோனா மையமாகத் திகழ்ந்தாலும் முதல் முறையாக சாவு எண்ணிக்கை 700க்கும் குறைவாக ஒருநாளில் ஏற்பட்டுள்ளது. 2000பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“வைரஸ் இன்னமும் கூட நன்றாகவே தன் வேலையைக் காட்டுகிறது, அது ஒரு கொலைகார கரோனா” என்கிறார் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ.

டாக்டர் செபாஸ்டியன் ஜான்ஸ்டன், இவர் லண்டன் இம்பீரியல் காலேஜின் சுவாச மருத்துவ பேராசிரியர், கூறும்போது, கோவிட் 19 பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உச்சமடைந்து விட்டன, ஆனால் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றில் கரோனா தன் கைவரிசையைக் காட்டலாம் என்று எச்சரித்துள்ளார்..

 

https://www.hindutamil.in/news/world/549457-virus-cases-about-2m-worldwide-few-new-hot-spots-1.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிலிருக்கும், குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் winter காலநிலையை அனுபவிக்கும் நாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் south asian population இன் நிலைமை  இல் vitamin  D மிகவும் குறைவு அல்லது பற்றாக்குறையால் நிலைமை 

வைட்டமின் d  நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் தாக்கமும் கருத்தில் எடுக்கப்பட வேண்டி உள்ளது. 

evidence-based scientific ஆராய்ச்சியோ அல்லது study ஒன்றும் இல்லைத்  தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.