Jump to content

பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு!


Recommended Posts

பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு!

 

 

     by : Benitlas

sanakkiyan-1.jpg

பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே பிரான்ஸ் ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த தொற்று நோய் நிலைப்பெற தொடங்கியுள்ளது. எனினும், நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸினை எதிர்கொள்ள எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் குறைய தொடங்கியபின்பு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் தொடங்கும்.

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் பாடசாலைகள் செயல்பட தொடங்கும்.  ஆனால், உணவு விடுதிகள் மற்றும் கஃபேக்கள் தொடர்ந்து மூடியிருக்கும்.

அடுத்த உத்தரவு வரும்வரை ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுடனான எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் புதிய அத்தியாயம் தொடங்கும்.

அது முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும்.  நிலைமைக்கு ஏற்ப விதிமுறைகள் பிறப்பிக்கப்படும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/பிரான்ஸில்-எதிர்வரும்-மே/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

ஊரடங்கு இல்லை, தனிமைப் படுத்தல்.

நாங்க ஊரடங்கில் தனிமைப்பட்டிருக்கிறோம் 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.