Jump to content

வெஸ்டன் யூனியனர் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்


Recommended Posts

வெஸ்டன் யூனியனர் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்
Editorial   / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 11:21 - 0      - 32

சர்வதேச பணப்பரிமாற்ற, செலுத்துகை துறையில் உலகபுகழ் பெற்ற நிறுவனமான வெஸ்டன் யூனியன் நிறுவனம் (Western Union), இலங்கையின் முன்னணி வெஸ்டன் யூனியன் முகவரான எம்.எம்.பி.எல் மணிமாஸ்டர் (MMBL Money Master) நிறுவனம் நாடளாவிய வெஸ்டன் யூனியன் வாடிக்கையாளர்களுக்கான பணத்தை அவர்களது விட்டுக்கே கொண்டுசென்று வழங்கிடமோர் சேவையை ஆரம்பித்துள்ளது.

COVID - 19 சவாலுக்கிடையே அனைத்து இலங்கையரினதும் பாதுகாப்புக்கு அரசாங்கத்தால் நாடளாவிய ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி  மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதோர் சந்தர்ப்பத்தில் உலகளாவிய ரீதியில் உங்கள் அன்பானவர்கள் அனுப்பிடும் பணத்தை உங்கள் வீட்டுக்கே பெற்றுக்கொள்ளக்கூடியமை வெஸ்டன் யூனியன் வாடிக்கையாளர்களுக்கு பெரிதோர்பக்க பலமாய் அமைந்திடும். இச் சேவையானது, ஊரடங்குச்சட்டத்தின் போதும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை செயற்படுத்தப்படும்.

வெஸ்டன் யூனியன் உலகளாவிய வலையமைப்பின் தலைவர் ஜின் குளோட் ஃபாரா, இப்புதிய சேவை பற்றி கருத்து தெரிவிக்கையில்,

“வெஸ்டன் யூனியன் சேவையானது, தேவையான இடத்துக்குத் தேவையான நேரத்தில் ஒப்பற்றதோர் சேவையை வழங்கிட அர்ப்பணிப்புடன் பணியாற்றுமோர் நிறுவனமாகும். எம்.எம்.பி.எல் மணிமாஸ்டர் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு தமது அன்பிற்குரியவர்கள் அனுப்பிடும் பணத்தினை இலகுவாக பெறுவதற்கானதோர் முறையினை அறிமுகப்படுத்தக்கூடியதாக அமைந்தமை மகிழ்ச்சிக்குரியதே. விசேடமாக இக்காலத்தில் இத்திட்டமானது, எமது வாடிக்கையாளர்களுக்கு பெரிதோர் வசதியாக அமைந்திடும் என்பதே எமது நம்பிக்கை.

“இப்புதியசேவையினால் மக்களின் பணத்திற்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதோடு, வங்கி கணக்கற்றோருக்கும் இதனூடாக பெரியதோர் சேவை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

எம்.எம்.பி.எல் மணிமாஸ்டர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தினேஸ் மெண்டிஸ் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்,

“வெஸ்டன் யூனியன் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இப் புதிய சேவையை வழங்க முடிந்தமை எமக்கு மகிழ்ச்சியே. COVID - 19 காரணமாக நடைமுறையிலுள்ள ஊரடங்குச்சட்டம், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையினால், வெளிநாட்டிலிருந்து அனுப்பிடும் பணத்தினை பெரியதோர் நிலைகாணப்படுகின்றது. இவ்வாறானதோர் நிலையினால்

“அத்தியாவசிய பொருள்களை கூட கொள்வனவு செய்ய முடியாததோர் பிரச்சினைக்கு பலர்முகம் கொடுத்துள்ளனர். ஆகவே அவர்களுக்கோர் பக்கபலமாய் இருந்திட நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றோம்” என்று கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கான அறிவுறுத்தல்:

பணத்தை அனுப்பியுள்ளதாகப் பெறுனருக்கு தெரிவித்தபின், ஆஆடீடு ஆழநெல ஆயளவநச அழைப்பு மத்திய நிலையத்தின் 011-5529999 அல்லது 011-5529997 எனும் இலக்கங்கங்களுக்கு அழைத்து அருகே உள்ள MMBL Money Master கிளையை அறிந்திடுங்கள்.

பின் அருகே உள்ள அக்கிளையினை தொடர்கொண்டு, தொலைப்பேசி,மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஹப் ஊடாக அனைத்து அத்தியாவசிய தகவல்களையும் அப் பிரதிநிதிக்கு வழங்கிடுங்கள். அத்தியாவசிய தகவல்களில் MTCN, பெறுனரின் பெயர், பணம் அனுப்பியவரின் பெயர் மற்றும் நாடு, அனுப்பியுள்ள தொகை போன்ற தகவல்கள் உள்ளடங்கும்.

பிரதிநிதிபணம் பெறுனருக்கான 'பணம் பெற்றிட' (TRM) படிவத்தைப் பூர்த்தி செய்திடுவார்; தகவல் பெற்று உறுதிசெய்யப்பட்டதன் பின்னர், அப்பிரதிநிதி பணத்துடன் உங்கள் வீட்டுக்கே வந்து பணத்தைக் கையளித்திடுவார்.

பணத்தைக் கையளித்திட முன்பு, பிரதிநிதியினால் பணம் பெறுனரின் அடையாள அட்டையினை பெற்று உறுதிப்படுத்தப்படுவதோடு, TRM படிவம், இறுதி ரசீதில் கையொப்பம் பெற்று பணம், ரசீது பணம் பெறுனருக்கு வழங்கப்படும்.

http://www.tamilmirror.lk/வணிகம்/வெஸ்டன்-யூனியனர்-வாடிக்கையாளர்களுக்கு-அறிவித்தல்/47-248517

Link to comment
Share on other sites

வெஸ்டன் யூனியன் மூலம் பணம் அனுப்பினால் அதிக செலவாகும். இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் சென்ற வாரம் மிகக் குறைந்த செலவுடனும் அதிக மாற்றுவீதத்துடனும்  இலங்கையில் வங்கிக் கணக்கொன்றிற்குப் பணம் அனுப்பினோம். இங்கிருந்து பணம் அனுப்பி 20 வினாடிக்குள் பணம் தனது வங்கிக் கணக்கில் இடப்பட்டுவிட்டதாக உறவினர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

Link to comment
Share on other sites

1 hour ago, இணையவன் said:

வெஸ்டன் யூனியன் மூலம் பணம் அனுப்பினால் அதிக செலவாகும். இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் சென்ற வாரம் மிகக் குறைந்த செலவுடனும் அதிக மாற்றுவீதத்துடனும்  இலங்கையில் வங்கிக் கணக்கொன்றிற்குப் பணம் அனுப்பினோம். இங்கிருந்து பணம் அனுப்பி 20 வினாடிக்குள் பணம் தனது வங்கிக் கணக்கில் இடப்பட்டுவிட்டதாக உறவினர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

ஆம், இப்படி பணத்தை அனுப்புவதே இலாபம் தரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

வெஸ்டன் யூனியன் மூலம் பணம் அனுப்பினால் அதிக செலவாகும். இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் சென்ற வாரம் மிகக் குறைந்த செலவுடனும் அதிக மாற்றுவீதத்துடனும்  இலங்கையில் வங்கிக் கணக்கொன்றிற்குப் பணம் அனுப்பினோம். இங்கிருந்து பணம் அனுப்பி 20 வினாடிக்குள் பணம் தனது வங்கிக் கணக்கில் இடப்பட்டுவிட்டதாக உறவினர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

என்ன நிறுவனம்? ஒன்லைனில் அனுப்பலாமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

என்ன நிறுவனம்? ஒன்லைனில் அனுப்பலாமா ?

Moneygram international 

zoom 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, இணையவன் said:

வெஸ்டன் யூனியன் மூலம் பணம் அனுப்பினால் அதிக செலவாகும். இந்த நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் சென்ற வாரம் மிகக் குறைந்த செலவுடனும் அதிக மாற்றுவீதத்துடனும்  இலங்கையில் வங்கிக் கணக்கொன்றிற்குப் பணம் அனுப்பினோம். இங்கிருந்து பணம் அனுப்பி 20 வினாடிக்குள் பணம் தனது வங்கிக் கணக்கில் இடப்பட்டுவிட்டதாக உறவினர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

வேறெரு நிறுவனம் என்றால் சரியே.
அதன் முழுமையான விலாசம் இருந்தால்த் தானே மற்றவர்களுக்கும் பயன்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்டன் யூனியன் கமிசன் தொகை அதிகம்.  மணி கிராம் சேவை கட்டணம் மிகவும் குறைவு. மணிகிராம் மூலம் நான் தேவைப்படுபவர்களுக்கு காசை அனுப்புகின்றேன்.

எதுவாக இருந்தாலும் உங்கள் கிரடிட் கார்ட் வங்கி தகவல்களை ஒன்லைனுக்கால் கொடுப்பது ஆபத்தானது. ஒன்லைன் எக்கவுண்டும் நல்லது இல்லை. நேரடியாக முகவரிடம் சென்று (உதாரணமாக தபாலகம்) பணம் செலுத்தி காசை அனுப்புவதே சிறந்தது. ஒன்லைன் என்றால் உங்கள் கிரடிட் கார்ட் வங்கி தகவல் திருடப்பட்டு மோசடி இடம்பெறலாம்.

Link to comment
Share on other sites

12 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வெஸ்டன் யூனியன் கமிசன் தொகை அதிகம்.  மணி கிராம் சேவை கட்டணம் மிகவும் குறைவு. மணிகிராம் மூலம் நான் தேவைப்படுபவர்களுக்கு காசை அனுப்புகின்றேன்.

எதுவாக இருந்தாலும் உங்கள் கிரடிட் கார்ட் வங்கி தகவல்களை ஒன்லைனுக்கால் கொடுப்பது ஆபத்தானது. ஒன்லைன் எக்கவுண்டும் நல்லது இல்லை. நேரடியாக முகவரிடம் சென்று (உதாரணமாக தபாலகம்) பணம் செலுத்தி காசை அனுப்புவதே சிறந்தது. ஒன்லைன் என்றால் உங்கள் கிரடிட் கார்ட் வங்கி தகவல் திருடப்பட்டு மோசடி இடம்பெறலாம்.

பயனுள்ள அறிவுரைகள். நன்றிகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.