Jump to content

இறுதிசடங்குகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு ஐநா வேண்டுகோள்- முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்கள் குறித்து கவலை


Recommended Posts

இறுதிசடங்குகள் குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்துள்ள ஐநா முஸ்லீம்களிற்கு எதிரான குரோத பேச்சுக்களை கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐநாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் அஹமட்சஹீட் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ahamad_shaheed1.jpg


மார்ச் 31 ம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது,மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப்பெட்டிக்குள் வைக்கவேண்டும்,உடல்களை எரிக்கவேண்டும்,என தெரிவிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நான்காவது திருத்தங்கள், மார்ச் 31 ம் திகதி 2020 நீர்கொழும்பில் முஸ்லீம் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவே அவரது உடல் எரியூட்டப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Gota.jpg


கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை கருத்தில் எடுத்து, இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் உள்ள விதிமுறைகளை மீள் பரிசீலனை செய்யவேண்டும், அதற்கேற்றபடி சுற்றுநிரூபத்தினை மாற்றவேண்டும்என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக அளவிலான தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, இலங்கையின் பல்வேறு சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளிற்கு எதிரானதாக அமையக்கூடிய இலங்கையின் அரசாங்கம் தவிர்த்துக்கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான தன்னிச்சையான முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்,தங்கள் அன்புக்குரியவர்களிற்கு உரிய இறுதிச்சடங்கினை வழங்க முடியாது அல்லது புதைக்கமுடியாது என்ற அச்சம் காரணமாக அவர்கள் கொவிட் 19 குறித்து தகவல்களை வெளியிட தயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொடர்புபட்ட அனைத்து இன மத சமூகத்தவர்களுடனும் அனைத்து சுகாதார நிபுணர்களுடனும் தொடர்புபட்டவர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு புதிய விதிமுறைகளை தளர்த்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

srilanka_corona_virus.jpg


ஐநாவின் விசேட அறிக்கையாளர் இலங்கை ஜனாதிபதிக்கு மேலும் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம்;; மாத்திரம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவிற்கான காரணங்களை தயவு செய்து தெரியப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானம் பாகுபாடற்றது,அவசியமானது ,உரிய நோக்கத்திற்கு சமாந்திரமானது என்பதை உறுதி செய்வதற்காக உரிய சுகாதார நிபுணர்கள் சிவில் சமூகத்தினர்,மற்றும் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசானைகள் இடம்பெற்றதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்களா என்பதை தெரியப்படுத்துங்கள் என அவர் கோரியுள்ளார்.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மூடப்படுவதற்கு முன்னர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உடல்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றார்களா? உடல் தகனம் செய்யப்படுவது குறித்து அவர்களிற்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படுகின்றதாஎன அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் பாரபட்சத்திற்கு உள்ளாவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்துங்கள் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

srilanka_corona1.jpg

 

மதசுதந்திரத்திற்கான உரிமை இறுதி கிரியைகள் குறித்த நம்பிக்கைகள் மதிக்கப்படுகின்றதா பின்பற்றப்படுகின்றதா என்பதையும் தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

முஸ்லீம்களிற்கும் இலங்கையின் ஏனைய மத இன சிறுபான்மை மக்களிற்கு எதிரான குரோதப்பேச்சு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்கள் நோயாளிகளின் அடையாளஙகளை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தெரியப்படுத்துங்கள்.

உங்களிடமிருந்து இது தொடர்பாக வெளியாகும் உங்களின் பதில்கள் 4 மணித்தியாலத்தில் குறிப்பிட்ட இணையதளம் மூலமாக வெளியாகும் ,மனித உரிமை ஆணையாளருக்கான அறிக்கையில் அது சேர்க்கப்படும் என விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/79925

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைப் போன்ற சிறிய நாட்டிற்கு எரிப்பதே சிறந்தது...ஏனெனில் கிருமித்தடுப்புஎன்பதே அவர்களிடம் சிறந்த்ததாக இல்லை....நோய்த்தொற்றை அறிவதே நூற்றுக்கணக்கில்...இதிலை மார்தட்டல் வேறு..30 நாளுக்குபின்னும் .அறிகுறி தென்படுகிறதென்றால்....இது எங்கு போய் முடியும்..

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

https://sptnkne.ws/CbPC

தற்போது வந்த செய்தி

பூட்டினின் பிரச்சார ஊடகம் ? 

படத்தில் இத்தாலிய பிரேத அறை. ஆனால், கதை தாய்லாந்தில் நடந்தது பற்றியது  😃
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ampanai said:

பூட்டினின் பிரச்சார ஊடகம் ? 

படத்தில் இத்தாலிய பிரேத அறை. ஆனால், கதை தாய்லாந்தில் நடந்தது பற்றியது  😃
 

அம்பனை,

விடயம் புட்டினின் பிரச்சார ஊடகமோ இத்தாலிய பிரேத அறையோ அல்ல. செய்தி என்ன சொல்கிறது என்பதும் அச் செய்தி உண்மையா என்பதுமே. 🙂

முடிந்தால் செய்தியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குங்கள். அதுதான் சரியான அணுகுமுறை. 😎

அதை விடுத்து குழந்தைப் பிள்ளை மாதிரி அடம்பிடிக்கக் கூடாது. சரியா ? 👍

 

Link to comment
Share on other sites

8 hours ago, Kapithan said:

அம்பனை,

விடயம் புட்டினின் பிரச்சார ஊடகமோ இத்தாலிய பிரேத அறையோ அல்ல. செய்தி என்ன சொல்கிறது என்பதும் அச் செய்தி உண்மையா என்பதுமே. 🙂

முடிந்தால் செய்தியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குங்கள். அதுதான் சரியான அணுகுமுறை. 😎

அதை விடுத்து குழந்தைப் பிள்ளை மாதிரி அடம்பிடிக்கக் கூடாது. சரியா ? 👍

 

கபிதன்,
உண்மைதான். ஆனால், சராசரி மனிதனுக்கு இவ்வாறான செய்திகளை அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அறிவோ இல்லை நேரமோ இல்லை. 

அதனால் தான் சில ஊடகங்களை மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்கள் ஒரு பொறுப்பு உள்ளவையாகவும், உண்மையான ஊடகவிளார்களையும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும். 

பொதுவாகவே உருசிய மற்றும் சீன ஊடகங்கள் நம்பகத்தன்மை அற்றவை. காரணம், அங்கு ஊடக சுதந்திரம் இல்லை. 

ஆக, அடம் பிடிப்போம் 👏
   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ampanai said:

கபிதன்,
உண்மைதான். ஆனால், சராசரி மனிதனுக்கு இவ்வாறான செய்திகளை அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் அறிவோ இல்லை நேரமோ இல்லை. 

அதனால் தான் சில ஊடகங்களை மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்கள் ஒரு பொறுப்பு உள்ளவையாகவும், உண்மையான ஊடகவிளார்களையும் கொண்டவையாகவும் இருக்கவேண்டும். 

பொதுவாகவே உருசிய மற்றும் சீன ஊடகங்கள் நம்பகத்தன்மை அற்றவை. காரணம், அங்கு ஊடக சுதந்திரம் இல்லை. 

ஆக, அடம் பிடிப்போம் 👏
   

உங்களுக்கு நேரமில்லை என்பதற்காகவோ அல்லது இரஸ்ய சீன ஊடகங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதனாலோ செய்தி / தகவல் நம்பகமற்றதாகிவிடாது. இப்போது புதல்வன் ஒரு இணைப்பை போட்டுள்ளார். இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் ? 😀

ஆதலால் தான் திரும்பவும் கூறுகிறேன், செய்தியின் சாரத்தை நோக்குங்கள். அதனை முடிந்தால் கேள்விக்குள்ளாக்குங்கள். 

அதை விடுத்து CNN BBC ABC சொன்னால்தான் நம்புவேன் என்று அடம்பிடிக்காதீர்கள், குழந்தை போல.😂

18 minutes ago, puthalvan said:

நன்றி புதல்வன். தக்க நேரத்தில் உதவியுள்ளீர்கள். 🙏

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

உங்களுக்கு நேரமில்லை என்பதற்காகவோ அல்லது இரஸ்ய சீன ஊடகங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதனாலோ செய்தி / தகவல் நம்பகமற்றதாகிவிடாது. இப்போது புதல்வன் ஒரு இணைப்பை போட்டுள்ளார். இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் ? 😀

உருசிய ஊடகம் காப்பி அடித்தது என்று உண்மையை சொல்லுவோம் 🙂 🙂 

1 minute ago, Kapithan said:

அதை விடுத்து CNN BBC ABC சொன்னால்தான் நம்புவேன் என்று அடம்பிடிக்காதீர்கள், குழந்தை போல.😂

சமோவா நாட்டில் பதியப்பட்டு உருசியாவில் தலைமை அலுவலகத்தை கொண்ட ஒரு ஏமாற்று ஊடகம். அப்படித்தான் சொல்லுவோம் .. ஏனென்றால் அதுதான் உண்மை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

உருசிய ஊடகம் காப்பி அடித்தது என்று உண்மையை சொல்லுவோம் 🙂 🙂 

விட்டாக் குடிம்பி இல்லாட்டி மொட்டையா 😂.  

அடம்பிடிக்காதெயுங்கோ அம்பனை 😜

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

விட்டாக் குடிம்பி இல்லாட்டி மொட்டையா 😂.  

அடம்பிடிக்காதெயுங்கோ அம்பனை 😜

பிடிச்சே ஆகணும் 😃

நாளைய ஏமாற்று செய்திகளை தவிர்த்தே ஆகணும் 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

பிடிச்சே ஆகணும் 😃

நாளைய ஏமாற்று செய்திகளை தவிர்த்தே ஆகணும் 😍

ஆக பிரித்தெடுக்கப்பட்டு, மிகத் திறம்பட ஒரு பக்கச் சார்பான செய்திகளை மட்டும் , உங்களுக்கு விரும்பியபடி தரும் ஊடகங்களைத்தான் நம்புவீர்களென்றால் நம்புங்கள். அது உங்கள் தெரிவு. 😀

ஆனால் ஆசியாவின் மிகப் பெரும் மக்கள் கூட்டத்தையும் மிகப் பெரும் நிலப்பரப்பையும் ஐரோப்பாவின் பெரும் மக்கள் தொகையையும் மிகப் பெரும் நிலப்பரப்பயும் கொண்ட இரஸ்ய, சீன,  வட கொரிய  செய்திகள் உங்களுக்குத் தேவையில்லை என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்ய முடியும். 🤥

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

ஆக பிரித்தெடுக்கப்பட்டு, மிகத் திறம்பட ஒரு பக்கச் சார்பான செய்திகளை மட்டும் , உங்களுக்கு விரும்பியபடி தரும் ஊடகங்களைத்தான் நம்புவீர்களென்றால் நம்புங்கள். அது உங்கள் தெரிவு. 😀

ஆனால் ஆசியாவின் மிகப் பெரும் மக்கள் கூட்டத்தையும் மிகப் பெரும் நிலப்பரப்பையும் ஐரோப்பாவின் பெரும் மக்கள் தொகையையும் மிகப் பெரும் நிலப்பரப்பயும் கொண்ட இரஸ்ய, சீன,  வட கொரிய  செய்திகள் உங்களுக்குத் தேவையில்லை என்று அடம் பிடித்தால் நான் என்ன செய்ய முடியும். 🤥

முடிந்தால் நீங்கள் ஒரு திரியை திறந்து அவ்வாறான செய்திகளை இணையுங்கள் 😜

சவாலை ஏற்க முடியுமா? வசதி எப்படி? ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ampanai said:

முடிந்தால் நீங்கள் ஒரு திரியை திறந்து அவ்வாறான செய்திகளை இணையுங்கள் 😜

சவாலை ஏற்க முடியுமா? வசதி எப்படி? ❤️

மன்னிக்கவும். எனக்கு திரியைத் திறந்து அதனை கொண்டு நடாத்துவதற்கான தொழில் நுட்ப அறிவோ பொறுமையோ இல்லை.  எனது தொழிலின் நிமித்தம்,  அன்றோய்ட் / iOS கைபேசிகளை பாவிக்கத் தொடங்கி ஏறக் குறைய 4-5 வருடங்களே. என்னுடைய முதற்றெரிவு Samsung Flip phones தான்.☹️

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

மன்னிக்கவும். எனக்கு திரியைத் திறந்து அதனை கொண்டு நடாத்துவதற்கான தொழில் நுட்ப அறிவோ பொறுமையோ இல்லை.  எனது தொழிலின் நிமித்தம்,  அன்றோய்ட் / iOS கைபேசிகளை பாவிக்கத் தொடங்கி ஏறக் குறைய 4-5 வருடங்களே. என்னுடைய முதற்றெரிவு Samsung Flip phones தான்.☹️

அடக்கம் ? 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் எல்லோருமே பாதிக்கபட்டு கொண்டு இருக்கிறார்கள்.உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பது என்று முடிவு எடுத்தால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு முஸ்லிம் மதம் சொன்ன படி தான் முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டும் என்கிறது ஐநா.முஸ்லிம்களிடம் உள்ள மதவ அடிப்படைவாதத்தை மேலும் மோசமாக்கி விடுகிறது ஐநா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.