Jump to content

ஆடாமல் ஆடுகிறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                              ஆடாமல் ஆடுகிறேன்

swinging.jpg

 

என்ன நடந்தது இந்த இளவேனிலுக்கு
என்னை ஏன் மறந்தனர் இத்தனைபேரும்
நான் என்ன துரோகம் செய்தேன்
யாரையாவது வைதேனா? வதைத்தேனா?
இல்லை வம்புதான் செய்தேனா?
எனக்குள் ஏன் இத்தனை வெறுமை
நானோ இளந்துளிர்கால தேடலில்
என் தேவதைகளோ ஊடலில்;
பூப்பூவாய் எத்தனை பட்டாம் பூச்சிகள்
என்னைத்தேடி என்னிடம் நாடி
என்னிலே ஆடி நண்பரைக் கூடி
மழலைகள்முதல் முதியவர்வரை
என் மடிதவழும் உல்லாசம் எங்கே?
நானோ தன்னந்தனியாக ஆடிக்கொண்டிருக்கிறேன்


வசந்தம் வந்துவிட்டால் என் வீட்டில் சுகந்தம்
என்னைச் சுற்றி கண்கொள்ளாக் காட்சிகள்
காலாற நடப்பது கைப்பிடித்து மகிழ்வது
ஓடிப் பிடிப்பது உடற்பயிற்சி செய்வது
மந்திகளாய் தொங்குவது மனம் விட்டுப் பேசுவது
மேலிருந்து வழுக்குவது மேல் கீழாய் ஆடுவது
என் நிழலில் இளைப்பாற பறவைகள் வருகின்றன
அணில்கள் ஓடி விளையாடுகின்றன
ஆளில்லாத பொட்டல் வெளியில்
அந்நியப்பட்டு நிற்பதற்கு நான் செய்த பாவம் என்ன?
வெறுமையாக ஆடிக்கொண்டிருக்கிறேன்


கடந்து சென்ற கடுங்குளிர் காலமெல்லாம்
கூடிக் குதூகலிக்க என் குழந்தைகள் வருவார்கள்
என்மேல் ஆடிமகிழ என் மழலைகள் வருவார்கள் என
நான் கண்ட கனவு காட்சிப் பிழையாகிப்போன
காரணமென்ன?
தனிமையில் நடப்போர்கூட
நான் தனியாக வெறுமனே ஆடுவதைப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சு விடுவதுகூட
எனக்குக் கேட்காமலில்லை
ஆயினும் என்ன?
என்னில் அமர்ந்தாட எவருக்கும் பிடிக்கவில்லையா?
என்அருகே கைகோர்த்து கட்டிப் பிடித்து
நெருங்கி அணைத்து நேசமாய்ப் பேசி
கொஞ்சிக் குலாவிய அத்தனைபேரும்
வாயுறையும் கையுறையுமாய்
வார்த்தைகளுக்கப் பஞ்சமாய்
எதிர் கொண்டு வருபவருக்கு
எதிர்திசையாய் நடந்து
என்ன நடக்குதென்று எனக்குப் புரியவில்லை
நானோ தனியாக ஆடிக்கொண்டிருக்கிறேன்


என்னில் அமர்ந்து மகிழ்ந்தாடும் மழலைகளின்
மென்மையான ஸ்பரிசமும் குறும்பான பேச்சும்
என்னைத் தழுவிடும் காலம்
இவ் வசந்தத்திலும் வருமோ ?
இல்லை மறுவசந்தம் வரை
நான் வெறுமனே தனியாக
ஆடிக்கொண்டிருப்பதுதான் என் விதியோ?

Link to comment
Share on other sites

Quote

இவ் வசந்தத்திலும் வருமோ ?
இல்லை மறுவசந்தம் வரை

போகின்ற போக்கை பார்த்தால் இன்னும் கொஞ்ச காலம் எடுக்கும் போல உள்ளது. பொறுமை காத்தல் உங்களுக்கும் அனைவருக்கும் நல்லது. கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களுக்கு மட்டுமல்ல இப்படியான தனிமையும் வெறுமையும் எம்மைச்சுற்றி நிறைந்து கிடப்பதைக் காணக்கூடியதாயுள்ளது. இதுவும் கடந்து போகும் காத்திருப்போம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நுணாவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படத் தேவையில்லை சகோதரி, இவையும் கடந்து போகும்......ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் நெகிழ்ச்சியான கவிதை.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சுவி.
பச்சைப் புள்ளியிட்ட சசி நொச்சி தமிழினி நுணாவிலான் சுவி அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavallur Kanmani said:

என்னில் அமர்ந்தாட எவருக்கும் பிடிக்கவில்லையா?
என்அருகே கைகோர்த்து கட்டிப் பிடித்து
நெருங்கி அணைத்து நேசமாய்ப் பேசி
கொஞ்சிக் குலாவிய அத்தனைபேரும்

கொரனாவுக்கே வெளிச்சம்...கொரானா போனாலும் அதன் பாதிப்பால் உருவாக போகும் பணப்பிரச்சனை போக இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் போகும்....படைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி புத்தன். இந்த கொரோனாவின் பாதிப்பில் இருந்து விடுபட்டாலும் இதனால் ஏற்பட்ட இழப்புக்களும் பொருளாதார நெருக்கடிகளும் மனப்பிறழ்வுகளும் மாணவர்களின் கல்வியும் இன்னும் பல வேறுபட்ட இன்னல்களிலும் இருந்து வெளிவருவது பெரிய சவாலாகவே இருக்கப் போகிறது. எல்லாம் அவன்செயலன்றி வேறில்லை. நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kavallur Kanmani said:

என்னில் அமர்ந்து மகிழ்ந்தாடும் மழலைகளின்
மென்மையான ஸ்பரிசமும் குறும்பான பேச்சும்
என்னைத் தழுவிடும் காலம்
இவ் வசந்தத்திலும் வருமோ ?
இல்லை மறுவசந்தம் வரை
நான் வெறுமனே தனியாக
ஆடிக்கொண்டிருப்பதுதான் என் விதியோ?

வெகுவிரைவில் மறு வசந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
பெரியவர்களாவது நிலமையின் தாற்பரியம் புரிந்து வீட்டிற்குள் இருப்பார்கள். குழந்தைகள் வெயிலைக் கண்டவுடன் வெளியே போகத் துடிக்கிறார்கள். இப்படி எவ்வளவு காலம்தான் சமாளிக்கப் போகிறோமோ தெரியவில்லை. 
கருத்துக்கு நன்றிகள் ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆமாம் வெளியே போக முடியாததால் வீட்டுக்குள்ளே சுற்றி சுற்றி   வருகிறார்கள்  

தொலைக்காடசியும் தொலை பேசியும் தஞ்சமாக .டி வீ  ரிமோட்டுக்கும் தந்தையாருடன் சண்டை.  

எப்போது பாடசாலை தொடங்கும்  என ஆவலுடன் காத்திருக்கிறார்கள் . குயிலை பிடித்து கூட்டில்

அடைத்த கதையாக  சுழல்கிறது  உலகம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2020 at 17:05, Kavallur Kanmani said:

என்னில் அமர்ந்து மகிழ்ந்தாடும் மழலைகளின்
மென்மையான ஸ்பரிசமும் குறும்பான பேச்சும்
என்னைத் தழுவிடும் காலம்
இவ் வசந்தத்திலும் வருமோ ?
இல்லை மறுவசந்தம் வரை
நான் வெறுமனே தனியாக
ஆடிக்கொண்டிருப்பதுதான் என் விதியோ?

எல்லாம் நல்லதுக்கே என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.
காலத்திற்கேற்ற கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் வந்த நல்ல கவிதை, இன்னும் 2022 வரைக்கும் இப்படிதான் போல, பேசமல் பின் வளவுக்குள் / வீட்டுக்குள் சின்ன விளைட்டு மைதானம் வைக்க வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்துக் கருத்திட்ட நிலாமதி குமாரசாமி உடையார் அனைவருக்கும் நன்றிகள். வீட்டிற்குள் இருந்து வேலை செய்யும் பெற்றவர்கள் படும் பாடு சொல்லி வேலையில்லை. பெற்றவர்கள் வேலைக்குப் போனால் எம்முடன் நிற்கும் பிள்ளைகள் அவர்கள் வீட்டில் நின்றால் படும் பாடு பெரும்பாடு. இப்போழுதெல்லாம் பின் முற்றம்தான் விளையாட்டு மைதானம். ஆனாலும் கனடாவில் குளிர் இன்னும் முற்றாக விலகவில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.