Jump to content

கொரோனா நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பதால் அவர்களின் உயிர்களை காப்பாற்ற முடிகின்றது- சிஎன்என்


Recommended Posts

வெள்ளிக்கிழமை மருத்துவர் மங்களா நரசிம்மனிற்கு அவசர அழைப்பொன்று வந்தது.

40 வயது , கொரோனாவைரஸ் நோயாளியொருவர் ஆபத்தான நிலையிலிருந்தார். லோங்ஐலண்ட் யூவிஸ் மருத்துவமனையிலிருந்த அவரது சகாக்கள் அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக்கருவியை வழங்கவேண்டுமா என வந்து பார்க்குமாறு அவரை கேட்டுக்கொண்டனர்.

நான் அங்கு வருவதற்கு முன்னர் அந்த நோயாளியை குப்புறபடுக்கவையுங்கள் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுகின்றதா என பார்ப்போம் என நரசிம்மன் தனது சக மருத்துவரிடம் தெரிவித்தார்.

நரசிம்மன் ஐசியூவிற்கு செல்லவில்லை ஆனால் அவரது முயற்சி வெற்றியளித்தது.

நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பது,அவர்கள் தங்களிற்கு தேவையாக உள்ள அதிகளவான ஒக்சிசனை பெற்றுக்கொள்ள உதவுகின்றது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாங்கள் இதன் மூலம் நூறுவீதம் உயிர்களை காப்பாற்றுகின்றோம் என நரசிம்மன் தெரிவித்தார் என சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

நரசிம்மன் நியுயோர்க்கில் 23 மருத்துவமனைகளை கொண்டுள்ள நோர்த்வெல்ஸ் கெயரின் அவசரசேவை பிரிவின் பிராந்திய இயக்குநராக பணியாற்றுகின்றார்.

இது மிகவும் இலகுவாக செய்யக்கூடிய விடயம்,நாங்கள் மிகச்சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளோம்,ஒவ்வொரு நோயாளியிலும் இதனை நாங்கள் செய்து பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

download.jpg

 

இது பலனளிப்பதை பார்த்ததும் நீங்கள் இதனை அதிகம் பயன்படுத்த விரும்புவீர்கள் என குறிப்பிட்டுள்ள கதிரேன் கிப்பேர்ட் என்ற மருத்துவர் இது உடனடியாக பலனளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோயளிகள் - கடுமையான சுவாச நோய் பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர்,காய்ச்சல் நிமோனியா போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிற்கும் இது பொருந்தும்.

ஏழு வருடத்திற்கு முன்னர் பிரான்சின் மருத்துவர்கள் வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புறபடுக்கவைத்தால் அவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு குறைவு என தெரிவித்திருந்தனர்.

அதன் பின்னர் அமெரிக்க மருத்துவர்கள் நோயாளிகளிற்கு இந்த முறையை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனவைரஸ் நோயாளிகள் மத்தியில் அவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.அது பலனளிக்க ஆரம்பித்துள்ளது.

patients_in_stomach1.jpg


ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நோயாளி குப்புறப்படுக்கவைக்கப்பட்டவேளை அவரது குருதியில் ஒக்சிசன் 85 வீதத்திலிருந்து 98 வீதமாக அதிகரித்தது.

இந்த முறை காரணமாக நுரையீரலிற்கு ஒக்சிசன் செல்வது இலகுவாகின்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வென்டிலேட்டரில் உள்ள நோயாளிளை குப்புறப்படுக்கவைப்பதால் சில பிரச்சினைகளும் உள்ளன.அவ்வேளை அவர்களிற்கு அதிக மயக்கமருந்துகள் அவசியம் அதனால் அவர்கள் அதிக நேரம் ஐசியூவில் இருக்கவேண்டிய நிலையேற்படுகின்றது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/79961

Link to comment
Share on other sites

'Such a simple thing to do': Why positioning Covid-19 patients on their stomachs can save lives

On Friday, Dr. Mangala Narasimhan received an urgent call. A man in his 40s with Covid-19 was in a dire situation, and her colleague wanted her to come the intensive care unit at Long Island Jewish Hospital to see if he needed to be put on life support.

Before I come over there, Narasimhan told the other doctor, try turning the patient over onto his stomach and see if that helps.
Narasimhan didn't need to go the ICU. The flip worked.

Doctors are finding that placing the sickest coronavirus patients on their stomachs -- called prone positioning - helps increase the amount of oxygen that's getting to their lungs.

"We're saving lives with this, one hundred percent," said Narasimhan, the regional director for critical care at Northwell Health, which owns 23 hospitals in New York. "It's such a simple thing to do, and we've seen remarkable improvement. We can see it for every single patient."

"Once you see it work, you want to do it more, and you see it work almost immediately," added Dr. Kathryn Hibbert, director of the medical ICU at Massachusetts General Hospital.

https://www.cnn.com/2020/04/14/health/coronavirus-prone-positioning/index.html

 

 

 

Link to comment
Share on other sites

இந்த செய்தியை யாழ்கள மருத்துவர்கள் உறுதிப்படுத்த முடியுமா?

நம்ப கஷ்டமாக இருக்கு. குப்புற படுக்கும் போது மூச்செடுப்பது சிரமமே

Link to comment
Share on other sites

இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. இத்தாலியிலும் இவ்வாறு படுக்க வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி அதன் சிலபகுதிகளை அழிப்பதால் மூச்சித் திணறல் உண்டாவதால் செயற்கை முறையில் ஒட்சிசன் வழங்கப்படுகிறது. நுரையீரலின் பாதிக்கப்பட்ட பாகங்களிலிருந்து நீர் சுரப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைத்து ஒட்சிசன் கிரகிக்கப்படுவது தடை படுகிறது. முப்புறப் படுக்க வைப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைப்பது தடுக்கப்பட்டு ஒட்சிசன் உடலில் செல்ல வழி ஏற்படும்.

சாதாரண நோயாளியைக் குப்புறப் படுக்க வைப்பதால் மூச்சு விடுவது கடினம். ஆகவே குப்புறப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

https://www.rtbf.be/info/dossier/epidemie-de-coronavirus/detail_coronavirus-pourquoi-les-patients-des-soins-intensifs-sont-ils-allonges-sur-le-ventre?id=10463249 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, இணையவன் said:

இது புதிய கண்டுபிடிப்பு அல்ல. இத்தாலியிலும் இவ்வாறு படுக்க வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி அதன் சிலபகுதிகளை அழிப்பதால் மூச்சித் திணறல் உண்டாவதால் செயற்கை முறையில் ஒட்சிசன் வழங்கப்படுகிறது. நுரையீரலின் பாதிக்கப்பட்ட பாகங்களிலிருந்து நீர் சுரப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைத்து ஒட்சிசன் கிரகிக்கப்படுவது தடை படுகிறது. முப்புறப் படுக்க வைப்பதால் அந்த நீர் சுவாசக் கலங்களை அடைப்பது தடுக்கப்பட்டு ஒட்சிசன் உடலில் செல்ல வழி ஏற்படும்.

சாதாரண நோயாளியைக் குப்புறப் படுக்க வைப்பதால் மூச்சு விடுவது கடினம். ஆகவே குப்புறப் படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

https://www.rtbf.be/info/dossier/epidemie-de-coronavirus/detail_coronavirus-pourquoi-les-patients-des-soins-intensifs-sont-ils-allonges-sur-le-ventre?id=10463249 

 

கிட்டத்தட்ட 20வருடங்களுக்கு முன் இங்கே ஜேர்மனியில் எனக்கு தெரிந்த வயது வந்த தமிழ் பெண்மணி ஒருவருக்கு கடுமையான சளி பிடித்து மூச்சு எடுக்கமுடியாமல் போய் விட்டது. நாங்கள் அம்புலன்ஸ்சுக்கு ரெலிபோன் அடித்து வைத்தியசாலைக்கு கொண்டு போனோம்.நிலமை மோசமானதை அடுத்து அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மாறப்பட்டு செயற்கையாக கோமா நிலைக்கு கொண்டுவந்தார்கள். அதற்கு பின் நோயாளியை குப்பிற படுக்கை வைத்துத்தான் செயற்கை சுவாசம் கொடுத்தனர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.