Jump to content

யாழ்ப்பாணத்திற்கு ஏற்படவிருந்த பாரிய அழிவை தடுத்து நிறுத்திய வட மாகாண சுகாதாரப் பிரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த நிமிடமே வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து சுவிஸ் போதகருடன் பழகியவர்களை விரைவாகக் கண்டுபிடித்தன் காரணமாகவும், அவர்களை தனிமைப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை நீடித்ததுமே இன்று பாரிய சேதத்தைத் தடுக்க கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் 15இற்கு உட்பட்டவர்களுடன் யாழ்ப்பாணத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

உண்மையில் நாம் அனைவரும் எமது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்தோம் என பெருமைகொள்ளக் கூடிய நிலையில் யாழ்ப்பாணத்தை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

ஆயினும், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். அவர்களுக்கும் கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்க பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும் மதகுருவுடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் மீள் பரிசோதனை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலைகள், பல்கலைக்கழகம் மீள் ஆரம்பிக்கும் திகதியையும் மீளாய்வு செய்தல் வேண்டும். 12 நாட்களின் பின்னர் யாழில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதற்குக் காரணம் நாங்கள் போதியளவிலான பரிசோதனைகளை செய்யாமலும், பரிசோதனை செய்து தொற்றில்லாதவர்களை மீள பரிசோதிக்காமையுமே காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் கூறியபடி மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்ய வேண்டும். முதல் தொடர்புடையவர்களை மட்டுமல்ல இரண்டாம், மூன்றாம் தொடர்புடையவர்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். யாழ்ப்பாணத்தில், ஊரடங்கு தளர்த்துவது சம்பந்தமாக மாகாண பணிப்பாளர் தனது ஆளணியினருடன் மீளாய்வு செய்தல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்த 14 பேருக்கும் 12 நாட்களின் பின்னரே இப்பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் வைத்தியசாலைகளில் மீண்டும் அவசியமற்ற சேவைகளை ஆரம்பிக்கும்போது உள்ள ஆபத்துக்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எனவே, ஒரு நாளைக்குச் செய்கின்ற பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளை ஆராய்தல் இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாகும்.

 

https://www.ibctamil.com/srilanka/80/141253?ref=imp-news

Link to comment
Share on other sites

18 minutes ago, உடையார் said:

உண்மையில் நாம் அனைவரும் எமது சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்தோம் என பெருமைகொள்ளக் கூடிய நிலையில் யாழ்ப்பாணத்தை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

நல்லது. மக்களும் சுகாதர சேவையாளர்களும் தொடர்ந்தும் விழிப்பாக இருக்கவேண்டும். 

வடக்கில், கிழக்கில், மலையகத்தில் உட்பட வாழும் தமிழ் உறவுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தொற்றில் இருந்து மீளவேண்டும். 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

நல்லது. மக்களும் சுகாதர சேவையாளர்களும் தொடர்ந்தும் விழிப்பாக இருக்கவேண்டும். 

வடக்கில், கிழக்கில், மலையகத்தில் உட்பட வாழும் தமிழ் உறவுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தொற்றில் இருந்து மீளவேண்டும். 

 

வடக்கில், கிழக்கில், மலையகத்தில், சிங்கள பகுதிகளில் வாழும் தமிழ், சிங்கள உறவுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த தொற்றில் இருந்து மீளவேண்டும்.

அரசியல்வாதிகளை விடுவோம், சிங்கள மக்களின் இதயங்களை வெல்வோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Knowthyself said:

 

சிங்கள மக்களின் இதயங்களை வெல்வோம்.

 

நடக்கிற காரியமா? இவ்வளவு அழிவுக்கும் பின்பும் ....சிங்கள மக்கள் இனவாதியை பெற்றி பெற வைத்துள்ளனர் ....சிங்கள மக்களின் வாக்குகள் தான் இனவாதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது ....என்பதை மறந்து விட முடியாது.....

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

நடக்கிற காரியமா? இவ்வளவு அழிவுக்கும் பின்பும் ....சிங்கள மக்கள் இனவாதியை பெற்றி பெற வைத்துள்ளனர் ....சிங்கள மக்களின் வாக்குகள் தான் இனவாதிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது ....என்பதை மறந்து விட முடியாது.....

சாம் சுங் கோஷரியையும் தமிழ் மக்கள் தான் வேறுவழியில்லாமல் தெரிவுசெய்தார்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Knowthyself said:

சாம் சுங் கோஷரியையும் தமிழ் மக்கள் தான் வேறுவழியில்லாமல் தெரிவுசெய்தார்கள் ..

சிங்கள சமுகத்தில் வேறு தெரிவு இருந்தும் இனவாதம் பேசி சிங்கள வாக்குகளை பெற்றார்கள்....இனவாதம் மூலம் ஆட்சி அமைப்பது என்பது 1958 ஆம் ஆண்டிலிருந்தே சிரிலங்காவில் நடைபெறுகின்றது என்பது நாம் அறிந்த உண்மை...

சம் சும் கோஸ்டிகளை  சிறிலங்கா தேசிய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியாது...சிறிலங்கா தேசியம் சிறப்புடன் நடை பெறுவதற்கு சிங்கள இனவாத அரசியலொதுக்கப்பட வேண்டும்.அது ஒதுக்கப்படும் பட்சத்தில் சம்சும்  கோஸ்டிகளைன் அரசியலும் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்து விடும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Knowthyself said:

சிங்கள மக்களின் இதயங்களை வெல்வோம்.

எங்கிருந்துதான் இப்படி கிளம்பி வருகிறார்களோ தெரியலை  நாங்கள் நினைக்கிறம்  அவர்களின் இதயங்களை வெல்வோம் என்று அவர்கள் நினைக்கிறார்களா ?

 

Link to comment
Share on other sites

7 hours ago, putthan said:

சிங்கள சமுகத்தில் வேறு தெரிவு இருந்தும் இனவாதம் பேசி சிங்கள வாக்குகளை பெற்றார்கள்....இனவாதம் மூலம் ஆட்சி அமைப்பது என்பது 1958 ஆம் ஆண்டிலிருந்தே சிரிலங்காவில் நடைபெறுகின்றது என்பது நாம் அறிந்த உண்மை...

சம் சும் கோஸ்டிகளை  சிறிலங்கா தேசிய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட முடியாது...சிறிலங்கா தேசியம் சிறப்புடன் நடை பெறுவதற்கு சிங்கள இனவாத அரசியலொதுக்கப்பட வேண்டும்.அது ஒதுக்கப்படும் பட்சத்தில் சம்சும்  கோஸ்டிகளைன் அரசியலும் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்து விடும்...

பெருமாள் [எங்கிருந்துதான் இப்படி கிளம்பி வருகிறார்களோ தெரியலை  நாங்கள் நினைக்கிறம்  அவர்களின் இதயங்களை வெல்வோம் என்று அவர்கள் நினைக்கிறார்களா ?]

 

சாம் சுங் கோஷரியையும் தமிழ் மக்கள் தான் வேறுவழியில்லாமல் தெரிவுசெய்தார்கள், அதனால் தழிழ் மக்கள் எல்லோரும் கூடாதவர்கள் அல்ல, அதுபோல்தான் சிங்கள மக்களும், நாங்கள் எல்லோரும் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவோமாகயிருந்தால் சிங்கள மக்களின் இதயங்களை வெல்வது இலகு. நாங்கள், குரோத மனபான்மையில் ஊறிபோய், கண்மன் தெரியாமல் ஊருக்கு காசனிப்பி மிகபெரிய இடவெளியை (பொருளாதரத்தில், and etc.) எங்களிடையே ஏற்படுத்யள்ளோம், காசனுப்பியவர்களை அங்குள்ள சொந்தங்கள் மதிக்காமல் போனது வேறுகதை, சிங்கள மக்களை பொறுத்தவரை வறுமையிலுள்ளவர்கள் அதிகம் அதனால் கேடு.. அரசியல்வாதிகளால் அவர்களை வெல்லமுடிகிறது அத்துடன் இலகுவாக எங்களில் இருந்து கேடு..டவர்களை இலகுவாக உருவாக்கமுடிகிறது. உதாரணத்துக்கு, கனடாவிலிருந்து யாழ் உறுப்பினர் ஒருவர் சொன்னார், தான் லிபரலை ஆதரிப்பதில்லையாம் ஏனென்றால் அவர்கள் கஷட்டபட்டு உழைப்பவர்களின் காசைபுடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறார்களாம், இவர் ஒரு பதினைந்து வருடங்கள் தானிருக்கும் கனடாவந்து. இங்கு படித்த கேடு..ட்டவர்களை உருவாக்கியதுதான் மிச்சம். எங்களின் சொந்தக்காரியொருத்திசொல்லுரா, இலங்கையில் A/L லில் இரண்டாமிடம் வந்தவா ..ல், எலோரும் களவுவேலையும் பொய்யும் செய்யினம்/சொல்லீனம் அதனால் எங்கட பிள்ளையளுக்கும் கொஞ்சம் தெரிந்துக்கவேண்டுமாம், கச்மனுக்குள் வாறத்துக்கு, தப்பிதவறி ... பிளஸ் பாஸ்பண்ணாட்டிலென்று இன்னொரு வீட்டை வாடைகைக்கு எடுத்துவிட்டார்கள் ஆனால் பிள்ளை பாஸ்.

out of topics so I won't reply to your comments

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Knowthyself said:

பெருமாள் [எங்கிருந்துதான் இப்படி கிளம்பி வருகிறார்களோ தெரியலை  நாங்கள் நினைக்கிறம்  அவர்களின் இதயங்களை வெல்வோம் என்று அவர்கள் நினைக்கிறார்களா ?]

 

சாம் சுங் கோஷரியையும் தமிழ் மக்கள் தான் வேறுவழியில்லாமல் தெரிவுசெய்தார்கள், அதனால் தழிழ் மக்கள் எல்லோரும் கூடாதவர்கள் அல்ல, அதுபோல்தான் சிங்கள மக்களும், நாங்கள் எல்லோரும் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவோமாகயிருந்தால் சிங்கள மக்களின் இதயங்களை வெல்வது இலகு. நாங்கள், குரோத மனபான்மையில் ஊறிபோய், கண்மன் தெரியாமல் ஊருக்கு காசனிப்பி மிகபெரிய இடவெளியை (பொருளாதரத்தில், and etc.) எங்களிடையே ஏற்படுத்யள்ளோம், காசனுப்பியவர்களை அங்குள்ள சொந்தங்கள் மதிக்காமல் போனது வேறுகதை, சிங்கள மக்களை பொறுத்தவரை வறுமையிலுள்ளவர்கள் அதிகம் அதனால் கேடு.. அரசியல்வாதிகளால் அவர்களை வெல்லமுடிகிறது அத்துடன் இலகுவாக எங்களில் இருந்து கேடு..டவர்களை இலகுவாக உருவாக்கமுடிகிறது. உதாரணத்துக்கு, கனடாவிலிருந்து யாழ் உறுப்பினர் ஒருவர் சொன்னார், தான் லிபரலை ஆதரிப்பதில்லையாம் ஏனென்றால் அவர்கள் கஷட்டபட்டு உழைப்பவர்களின் காசைபுடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறார்களாம், இவர் ஒரு பதினைந்து வருடங்கள் தானிருக்கும் கனடாவந்து. இங்கு படித்த கேடு..ட்டவர்களை உருவாக்கியதுதான் மிச்சம். எங்களின் சொந்தக்காரியொருத்திசொல்லுரா, இலங்கையில் A/L லில் இரண்டாமிடம் வந்தவா ..ல், எலோரும் களவுவேலையும் பொய்யும் செய்யினம்/சொல்லீனம் அதனால் எங்கட பிள்ளையளுக்கும் கொஞ்சம் தெரிந்துக்கவேண்டுமாம், கச்மனுக்குள் வாறத்துக்கு, தப்பிதவறி ... பிளஸ் பாஸ்பண்ணாட்டிலென்று இன்னொரு வீட்டை வாடைகைக்கு எடுத்துவிட்டார்கள் ஆனால் பிள்ளை பாஸ்.

out of topics so I won't reply to your comments

 

 

வணக்கம் நண்பரே நாங்கள் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவதற்கு முதல் சிவப்பு சிந்தனைவாதிகள் (1977 முதல் ) எதற்கு எடுத்தாலும் புலம் பெயர் தமிழர்களை குற்றம் சாட்டுவதை விடவேண்டும் ....ஏழை சிங்கள மக்களின் வாக்குகள்தான் 1958 முதல் இனவாத அரசியல் வாதிகளை உருவாக்கின்றது....JVPபுரட்சியை உண்டாக்கிய ஏழை சிங்கள இளைஞர்களாலயே எழை சிங்கள மக்களை தங்களது வசம் இதுவரை இழுக்க முடியவில்லை ..இந்த நிலையில் நாங்கள் எப்படி சிங்கள மக்களை எம்வசம் இழுப்பது....எழை சிங்கள வாக்குகள் 50 வீதம் எமது வாக்கு 10 வீதம் தான் ....அந்த 50 வீதம் மாறவேண்டும், 10 வீததமிழ் வாக்குகள்  மாறினாலும், சிறிலங்கா தேசிய அர‌சியல் செழுமையாக இருக்க வேண்டும் என்றால் .....இனவாதிகளை  மதவாதிகளை உருவாக்குவதை   சிங்கள எழை வாக்காளர்கள் நிறுத்த வேண்டும்....

Link to comment
Share on other sites

13 hours ago, putthan said:

வணக்கம் நண்பரே நாங்கள் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவதற்கு முதல் சிவப்பு சிந்தனைவாதிகள் (1977 முதல் ) எதற்கு எடுத்தாலும் புலம் பெயர் தமிழர்களை குற்றம் சாட்டுவதை விடவேண்டும் ....ஏழை சிங்கள மக்களின் வாக்குகள்தான் 1958 முதல் இனவாத அரசியல் வாதிகளை உருவாக்கின்றது....JVPபுரட்சியை உண்டாக்கிய ஏழை சிங்கள இளைஞர்களாலயே எழை சிங்கள மக்களை தங்களது வசம் இதுவரை இழுக்க முடியவில்லை ..இந்த நிலையில் நாங்கள் எப்படி சிங்கள மக்களை எம்வசம் இழுப்பது....எழை சிங்கள வாக்குகள் 50 வீதம் எமது வாக்கு 10 வீதம் தான் ....அந்த 50 வீதம் மாறவேண்டும், 10 வீததமிழ் வாக்குகள்  மாறினாலும், சிறிலங்கா தேசிய அர‌சியல் செழுமையாக இருக்க வேண்டும் என்றால் .....இனவாதிகளை  மதவாதிகளை உருவாக்குவதை   சிங்கள எழை வாக்காளர்கள் நிறுத்த வேண்டும்....

 

[வணக்கம் நண்பரே நாங்கள் மேற்குலக மாயையில் இருந்து விடுபடுவதற்கு முதல்]

சிவப்பு பச்சை இருக்கட்டும், நாங்கள் மொத்தத்தில் திருந்தமாட்டம்!

50%, 10% (actually 8-9%) is a fact. 10%, இதில் கிட்டதட்ட 1% கொழுத்த பணக்காரர்களாக மாறிவிட்டார்கள், கிந்தியாவைபோல், இதுதான் பிரச்சனை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது! அவனொருத்தன் வந்து போலீசும் ஆமியும் தான் காரணம் என்று பாராட்டிப்போறான். இவை தாங்கள் என்கினம். யாருக்கு வோட்டுப் போடுறது? பலாலியில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகமாய் உறவுகளோடு சேரவேண்டும்.. அவர்கள் மூளை சலவை செய்யப்படாமல் இருக்க வேணடும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

என்னப்பா இது! அவனொருத்தன் வந்து போலீசும் ஆமியும் தான் காரணம் என்று பாராட்டிப்போறான். இவை தாங்கள் என்கினம். யாருக்கு வோட்டுப் போடுறது? பலாலியில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகமாய் உறவுகளோடு சேரவேண்டும்.. அவர்கள் மூளை சலவை செய்யப்படாமல் இருக்க வேணடும்.   

யார் காரணமென்றாலும் நம் உறவுகள் பாதுகாப்பாக கொரொணாவின் பாரிய அழிவில் இருந்து தப்பியிருப்பதே பெரிய சந்தோஷம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் நாளாந்த  முன்னுக்கு பின் முரணான கருத்து வெளியீடு, அந்தச் சந்தோசத்தை கேள்விக்குறியாக்குதே. எல்லோரும் சேர்ந்து சதி செய்யினமோ? தமிழன் வீழ்ந்த, ஏமாந்த வரலாற்றைப் புரட்டினால்,  அவற்றில் எல்லாவற்றிலும் தமிழனே காரணமானான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.