Jump to content

மதமாற்றம்: களையப்பட வேண்டிய கொரோனா வைரஸ்?


Recommended Posts

spacer.png

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாயிருந்த சுவிஸ் போதகர், நலமடைந்திருப்பதாகவம் கர்த்தரின் கிருபையினால்தான் தான் நலம் பெற்றிருப்பதாகவும் அண்மையில் அவர் பேசிய காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளன. இதில் இரண்டு நியாயங்களை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒன்று தனக்கு மருத்துவம் செய்த வைத்தியர்களுக்குகூட நன்றி சொல்ல மறுக்கின்ற கண்மூடித்தனமான மதவாதப்போக்கு. இரண்டாவது யாழ்ப்பாணத்தில் கொரோனாவை பரப்பி முடக்கியமை பற்றிய குற்றவுணர்வின்மை.

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் கருதப்பட்டது. இந்த நிலமையில் உள்ள இலங்கையின் ஐந்து மாவட்டங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களுடன் யாழ்ப்பாணமும் கொரோனா அபாய மாவட்டமாகியதற்கு என்ன காரணம்? போல் சற்குணராஜா என்ற சுவிஸ் மத போதகர், தனக்கு கொரோனா தொற்று இருந்தபோதும், அதை மறைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து, அதை சிலருக்கு பரப்பி விட்டும் சென்றிருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சியான வேலை.

இன்றைக்கு யாழ்ப்பாண மக்கள், போர்க்காலத்தைப் போல தொடர் ஊரடங்கு வாழ்க்கைக்குள் தள்ளப்பட இவரே காரணம். இன்றைக்கு யாழ்ப்பாணத்தின் பல ஏழை எளிய மக்களின் வீடுகளில் அடுப்பெரியாமல் இருப்பதற்கு இவரே காரணம். இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது வடக்கில் எட்டுப்பேர் கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களும் போல் சற்குணராஜாவின் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். இவர்களில் இருவர் சிறுவர்கள். கொரோனா தொற்றை தடுக்கும் ஜெயபக்கூட்டம் என்று அறிவித்து கொரோனாவை பரப்பிய நாசகாரத்தை என்னவென்பது?

இப்போது குறித்த மதபோதகர் மருத்துவர்களின் பெரும் போராட்டத்தினால் நலப்படுத்தியிருக்க, அதனையும் தனது மத வெற்றியாக கருதும் இவர், பொது நலன்களை கருதாமல், தனிப்பட்ட மத நலன்களுக்காக கொரோனா தொற்றை மறைத்து, அதனை யாழில் பரப்புகின்ற நாசகார வேலையை செய்து இருக்கிறார் என்பதும் இன்றைக்கு அவரது பேச்சின்மூலம் வெளிப்படுகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் முழுவதும் சபையை நிறுவுவேன் என்றும் சற்குணராஜா சர்ச்சையாகப் பேசியுள்ளார். இத்தகையவர்களின் பேச்சை நம்பி மதம் மாறும் மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

மழைக்கு முளைக்கும் காளான்கள் போல திடீர் திடீரென முளைக்கும் மதவாத சபைகள், அமைப்புக்கள் குறித்து மக்கள் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். பாரம்பரியமற்ற, தன் வியாபார நோக்கம் கொண்ட இத்தகைய அமைப்புக்கள் மக்களின் நலன்களில் அக்கறை இல்லாமல், சர்வதேச மற்றும் தேசிய அரசுகளின் எச்சரிக்கைகைளை பொருட்படுத்தாமல் தமது மதத்தை பரப்புவதுடன் மக்களின் உயிருக்கும் வாழ்க்கைக்கும் பாரிய ஆபத்துக்களையும் உருவாகக்கூடியவை. இதற்கு யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை தக்கவொரு சான்றாகும்.

ஈழத்திற்கு என்று ஒரு பண்பாடும் பாரம்பரியமும் இருக்கிறது. ஈழத்தின் இரு கண்களாக தமிழும் சைவமும் பல ஆயிரம் வருடங்களாக இருந்து வந்துள்ளன. பிற்காலத்தில், கிறீஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியன நமது பண்பாட்டில் இணைந்து கொண்டன. அப்போதைய வியாபாரச் சூழல்கள் மற்றும் அரசியல் சூழல்களால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் இன்றவளவும் மதவாதமற்ற, மிகுந்த சகிப்பு தன்மை கொண்டவொரு சமூகமாக ஈழத் தமிழ் சமூகம் காணப்படுகின்றது.

ஆனால் சில சமய அமைப்புக்களும் சபைகளும் மக்களின் வறுமை சூழலை பயன்படுத்தி, அவர்களுக்கு சில உதவிகளை செய்து, அவர்களின் மனங்களை மாற்றி மதமாற்றம் செய்கின்ற போக்கு வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ளது. இது மதமாற்றம் என்பதைவிட இன அழிப்பு அல்லது பண்பாட்டு அழிப்பு என்றே சொல்ல வேண்டும். 2009இற்குப் பின்னரான இடர்காலச் சூழலை பயன்படுத்தி, சில அமைப்புக்கள் மக்களின் மனங்களின் உள்ள பூர்வீக சமய நம்பிக்கைகளை கழுவி தமது மதங்களை திணிக்க முயல்கின்றன.

சமயம் என்பது வாழ்வியலுக்கான நம்பிக்கை. அது பொது ஒழுக்கத்தை வலியுறுத்துகின்ற மனதை ஒருமுகப்படுத்துகின்ற கருவியாகவும் இருக்கின்றது. ஒவ்வொரு இன சமூக மக்களின் பண்பாட்டுக்கு ஏற்ப தெய்வங்களும் மத வழிபாடுகளும் காணப்படுகின்றன. முழுக்க முழுக்க இயற்கையை தெய்வமாக கருதும் மிக ஆரோக்கியமான சமய வழிபாட்டையும் இயற்கையுடன் இணைந்து வாழும் பண்பாட்டு கூறுகள் கொண்ட வழிபாட்டையும் சைவம் உள்ளடக்கியிருக்கிறது.

ஈழத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் வளர்ச்சிக்கு இங்கே உருவெடுத்த சமய வழிபாடுகள் பெரும் பங்களிக்கின்றன. ஆனால் முற்றிலும் வேறான, அந்தியப் பண்பாடுகளை விதைக்கின்ற சமய வழிபாடுகள் எமது மக்களின் வாழ்வியலை படுகுழியில் தள்ளும். உயிர்ப்பற்று ஒடுக்கும். அத்துடன் அது இனத்தையும் அழிக்கும். மதமாற்றங்கள் பூர்வீக இனங்களின் அடையாளத்தை அழிப்பதாகவே ஆய்வுகள் சொல்கின்றன. ஈழத்தில்கூட அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கின்றன. ஈழத்தின் இஸ்லாமியர்கள் ஒருகாலத்தில் சைவர்கள். தமிழர்கள். அதனால்தான் இன்றைக்கும் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளனர்.

சில நூறு வருடங்களின் முன்னர் அவர்கள் அரபு வணிகர்களின் மதமாற்ற இலக்கில் இனம்மாறிப் போனவர்கள். இன்றைக்கும் அந்த வழியில் சைவத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகின்ற செயற்பாடுகளும் நடக்கின்றன. கிழக்கில் இது பெரியதொரு அரசியலாகவும் வன்முறையாகவும் நடக்கின்றது. அதைப்போல சில ஆயிரம் வருடங்களின் முன்னர் நீர்கொழும்பில் தமிழர்களாக இருந்தவர்கள் பின்னர் பௌத்தர்களாகவும் கிறீஸ்தவர்களாகவும் மாறி இறுதியில் சிங்களவர்களாகவும் மாறிவிட்டார்கள் என்பது கசந்த வரலாறு.

தமிழ் அரசியல்வாதிகளும் தமது தனிப்பட்ட நலன்களுக்காக இவை பற்றி அக்கறை கொள்ளுவதில்லை. வடக்கின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான விக்கினேஸ்வரன் அவர்கள், தமிழையும் தமிழர் சைவப் பண்பாட்டையும் வலியுறுத்துவதில் முதன்மையானவர். ஈழத்தின் ஆதி சமயம் சைவமே என்று சிங்களவர்களுக்கும் எடுத்துரைத்திருக்கிறார். நமது பண்பாட்டுக்கு முற்றிலும் பொருத்தமற்ற, தான்தோன்றித்தனமான, தன் மத நலன்களை முதன்மைப்படுத்திய, மதங்களை எமது மண்ணில் பரப்புவதை உடனடியாக தடுக்க வேண்டும். மதமாற்றமும் இனத்தை அழித்துவிடும் என்ற அபாயத்தை எல்லோரும் தமிழர்களாக நின்று உணர வேண்டும்.

தமிழ்க்குரலுக்காக தாயகன்

(இவ் ஆக்கத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் எழுத்தாளரையே சாரும். இவை தமிழ்க் குரலின் கருத்துக்கள் அல்ல. தமிழ்க் குரல் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது. – ஆசிரியர்பீடம்)

http://thamilkural.net/?p=35611

Link to comment
Share on other sites

18 minutes ago, கலையழகன் said:

நமது பண்பாட்டுக்கு முற்றிலும் பொருத்தமற்ற, தான்தோன்றித்தனமான, தன் மத நலன்களை முதன்மைப்படுத்திய, மதங்களை எமது மண்ணில் பரப்புவதை உடனடியாக தடுக்க வேண்டும். மதமாற்றமும் இனத்தை அழித்துவிடும் என்ற அபாயத்தை எல்லோரும் தமிழர்களாக நின்று உணர வேண்டும்.

இந்தக் கட்டுரையாளர் சைவ / இந்து மதத்தை முன்னிறுத்தி கருத்துக்களை முன்வைத்துள்ளார். பல மதங்களை கொண்டுள்ள தமிழ் இனத்தில், இவ்வாறான ஆக்கங்கள் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும். ஆகவே, இவை தவிர்க்கப்படல் வேண்டும், கண்ணடிக்கப்படல் வேண்டும். 

ஒரு மதம் சார்ந்த பரப்புரையில் ஏற்படும் தாக்கங்கள்  பற்றிய அலசல், மருத்துவம் உட்பட, அந்தந்த மதம் சார்ந்தவர்கள் மத்தியில், அவர்கள் சமூக தலைவர்கள்,  இருந்து வர வேண்டும். அதாவது சுய விமர்சனம் ஆரோக்கியமானது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.