Jump to content

லாக் டவுன்: மூன்று முக்கிய கேள்விகள்-ராஜன் குறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லாக் டவுன்: மூன்று முக்கிய கேள்விகள்-ராஜன் குறை

corona-feature-2.jpg

நாம் பலரும் பேச்சிலும், வழக்கிலும் “வரலாறு காணாத” என்றொரு சொற்சேர்க்கையை பயன்படுத்துவோம். அந்த வார்த்தைகளின் முழுப் பொருளையும் எதிர்கொள்ளும் ஒரு சூழலை மானுடம் சந்தித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த சூழல் அனைவரையுமே திகைப்பிலும், குழப்பத்திலும், பதட்டத்திலும் ஆழ்த்தியுள்ளது எனலாம். அதனால் நம்மால் தர்க்க ரீதியாக சிந்திக்க முடியுமா என்பதே சவாலாக உள்ளது. இந்த சிறு கட்டுரையின் நோக்கம் தர்க்க ரீதியாக சில கேள்விகளை உரத்துக் கேட்பது. இதற்கான பதில்களை ஆட்சியாளர்கள்தான், குறிப்பாக இந்தியாவின் மத்திய அரசுதான் இக்கேள்விகளுக்கான முழுமையான பதில்களை அளிக்க முடியும். அவ்விதம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றாலும், பொதுக்களத்தில் இந்த கேள்விகள் எழுப்பப் படுவதும் உரத்து சிந்திக்கப்படுவதும் அவசியம், அவசரம் என்பதால் இந்த சிறு கட்டுரை.

கேள்வி ஒன்று: லாக் டவுன் எதுவரை? எதற்காக? 

இன்று ஏப்ரல் 14 தேதி இந்திய அளவில் நோய் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9272 என்று இந்திய அரசின் இணைய தளம் கூறுகிறது. பத்தொன்பது நாட்கள் கழித்து மே 3 ஆம் தேதி இந்த எண்ணிக்கை இருபதாயிரம் பேர், அல்லது முப்பதாயிரம் பேர் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானல் லாக் டவுன் மேலும் மே இறுதி வரை நீடிக்கப்படுமா என்பதே முக்கிய கேள்வி. இதை விரிவாக பரிசீலிப்போம்.

1-5-300x169.jpg

கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது என்பதால் மக்கள் வழக்கம்போல கூடி பணிகளில் ஈடுபடுவது, அதற்காக பயணிப்பது போன்றவை தொற்று ஏராளமானவர்களுக்குப் பரவ வகை செய்துவிடும் என்பதால் ஒரு அசாதாரண நடவடிக்கையாக மொத்த சமூக இயக்கத்தையும் நிறுத்தி வைத்து அனைவரும் வீட்டிற்குள் வசிக்க வேண்டும் என்ற நடைமுறையை உலகின் பல்வேறு நாடுகள் கடைபிடிக்கின்றன. இந்த நடைமுறையை தாமதமாக கடைபிடித்ததால் இத்தாலி போன்ற நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கனவர்கள் நோய்க்கு பலியாகிவிட்டனர். இத்தாலியில் நோய்க்கிருமி தொற்றியவர்களில் பத்து சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகிவிட்டனர்.

எனவே, அநாவசியமாக காலம் தாழ்த்தாமல் மார்ச் மாத மத்தியிலேயே கேரள மாநிலம் லாக் டவுனை தொடங்கி விட்டது. மத்திய அரசு மார்ச் 22 ஒரு நாள் காலை முதல் இரவு வரை லாக் டவுன் பரீட்சார்த்தமாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு பத்து நாள் லாக் டவுன் அறிவிக்க, மத்திய அரசு மார்ச் 24 நள்ளிரவிலிருந்து 21 நாள் தேசிய அளவிலான லாக் டவுனை அறிவித்தது. இதனால் நோய் பரவுதலின் வேகம் மட்டுப்படும் என்பதே காரணம். லாக் டவுனால் அன்றாடம் வருவாய் ஈட்டும் எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பரிபோகும் என்றாலும் கூட, அனைவரது ஆரோக்கியத்தையும் முன்னிட்டு இதை செய்வதாகவும், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதாகவும் மத்திய மாநில அரசுகள் கூறின.

தேசிய அளவில் லாக் டவுன் தொடங்கிய மார்ச் 24 ஆம் தேதி நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 519. இருபத்தோரு நாள் லாக் டவுன் முடிந்த இன்றைய தினம் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 10815. இதில் குணமடைந்தவர்கள், 1189, இறந்தவர்கள் 353 கழித்துவிட்டால் கூட 9272 பேர் நோய் தொற்றில் உள்ளார்கள். அதாவது இருபது நாட்களில் கிட்டத்தட்ட இருபது மடங்கு அதிகரித்துள்ளதாகவே அரசு தரும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நேற்றைய தினம் மட்டும் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

98286bca4bb96fa47b046274cd7c2ea8-300x207

லாக் டவுன் செய்யாவிட்டால் தொற்று இதைவிட பன்மடங்கு அதிகரிகரித்திற்கும் என்ற வாதம் உண்மையானாலும், லாக் டவுன் காலத்தில் கணிசமாக அதிகரித்திருப்பது தெரிகிறது. இப்போது வேறு வழியில்லாமல் மேலும் 19 நாட்கள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையான 21 நாள் காலகட்டத்தில் அதிகரித்தது போல, அடுத்த பத்தொன்பது நாட்களில் அதிகரிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மற்றொரு புறம், இந்தியாவில் நோய் தொற்று இருந்தாலும், நோய் முற்றுவதில்லை, மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. இது குறித்த தகவல்களை அரசு பரிசீலித்து முடிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உருவாகியுள்ளது. இந்த கோணத்தில் சிந்தப்பவர்கள் கோரானா பாதிப்பை விட, லாக் டவுன் பாதிப்புகள் அதிகமாகிவிடும் என எச்சரிக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் இரண்டு. ஒன்று, லாக் டவுன் என்று கூறினாலும் அத்தியாவசிய தேவைகளுக்கான அதாவது வீட்டிலேயே இருக்கும் மக்கள் அனைவரும் உணவு உட்கொள்வதற்கான பொருட்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும். எனவே, மளிகைப் பொருட்கள், காய்கறி, பால், இறைச்சி, முட்டை போன்ற அனைத்தும் உற்பத்தியாகும் இடத்திலிருந்து நுகர்வோரிடம் சென்று சேரும் விநியோக வலைப்பின்னல், supply chain, இயங்கியாக வேண்டும். விவசாயம் தொடர்ந்து நடைபெற வேண்டும். விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். மின்சாரம், குடிநீர், தொலைபேசி போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள், காவல்துறை ஆகியோர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். எனவே 130 கோடி பேரும் வீட்டிற்குள் முடங்குவது என்பது சாத்தியமேயில்லை.

இரண்டு சர்வதேச அளவில் நோய் தொற்று இருக்கிறதா என்று பரிசோதிப்பதில் இந்தியா மிக, மிக பின் தங்கியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் கூட டெஸ்ட் செய்யப்படவில்லை. எனவே இப்போதுள்ள நோய் தொற்று எண்ணிக்கை என்பது மிக,மிக குறைவான டெஸ்ட்டிங் அடிப்படையில் கூறப்படுவது. இனி வரும் நாட்கள் டெஸ்ட் செய்வது அதிகரித்தால் நிச்சயம் நோய் தொற்றியவர் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரிக்கும் எனலாம். அப்படியானால் எத்தனை நாட்கள் லாக் டவுனை நீடிக்க வேண்டியிருக்கும், எந்த அடிப்படையில் அதை தளர்த்தவோ, முடிவுக்கோ கொண்டுவருவது எனப்தைக் குறித்து தெளிவான, திட்டவட்டமான தொலைநோக்குப் பார்வை எதையும் மத்திய அரசு வெளியிட்டதாகத் தெரியவில்லை. கொரோனாவுடன் போர், கொரோனாவை வெல்வோம் என்று வாய்ப்பந்தல் போடுவதுதான் பிரதமரின் உரைகளில் இருக்கிறது; ஆளும் கட்சியினரின் பேச்சில் இருக்கிறது. ஆனால் எப்படி வெல்வார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்னும் செயல் திட்டம் எதுவும் இல்லை.

கேள்வி 2: கொரோனா தடுப்பு என்பது என்பது மாநில அரசுகளின் பணியா? மத்திய அரசின் பணியா?

மாநில அரசு பத்து நாள் ஊரடங்கை அறிவித்தால், மறுநாள் மத்திய அரசு 21 தேசிய லாக் டவுன் அறிவிக்கிறது. மாநில அரசு ஏப்ரல் 30 வரை லாக் டவுன் என்றால் மத்திய அரசு மறுநாளே மே 3ஆம் தேதிவரை தேசிய லாக் டவுனை நீடிக்கிறது. ஏன் இப்படி மத்திய மாநில அரசுகள் முரண்பட்டு நடந்துகொள்கின்றன? மாநில அரசின் பொறுப்பு என்ன, மத்திய அரசின் பொறுப்பு என்ன? எதற்காக தேசிய அளவிலான லாக் டவுன்?

மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கையில் இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே விமானங்கள், இரயில்கள், பேருந்துகள் ஆகியவை இயங்கலாமா கூடாதா என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில் பொருள் இருக்கிறது. மற்றபடி சுகாரத்துறையும், சட்டம் ஒழுங்கு துறையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

உதாரணமாக கேரள மாநிலம் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு கொரோனா தொற்றை வெகுவாக கட்டுப்படுத்திவிட்டது. புதிதாக நோய் தொற்றுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. அந்த மாநிலம் அதன் போக்கிலேயே செயல்பட்டால் புதிய தொற்றுகளே ஏற்படவில்லை என்ற நிலையை விரைவில் அடையலாம். அது மட்டுமல்லாமல் நிவாரப்பணிகள், டெஸ்ட்டிங் போன்றவற்றிலும் அது இந்தியாவின் பிற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஏற்கனவே நிபா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு வென்ற அனுபவத்தால் அதனால் சரியான அணுகுமுறையை விரைவில் கடைபிடித்து, “பரிசோதனை, தனிமைப்படுத்து, குணப்படுத்து” என்ற மும்முனை செயல்பாட்டை சிறப்பாக கையாள முடிந்துள்ளது.

d4041777f77241cfae57051dc982db57_18-300x

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிக்கு இடையில் நிலமை கணிசமாக வேறுபடுகிறது. நோய் தொற்று எண்ணிக்கையும் சரி, பரவலின் வேகமும் சரி மாறுபடுகிறது. இந்த நிலையில் எந்த விதமாக ஊரடங்கை அமல்படுத்தவேண்டும், எத்தனை நாட்கள் அமல் படுத்தவேண்டும் என்பன போன்ற முடிவுகளை மாநில நிர்வாகத்திடமும், இன்னம் சொன்னால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமும் விட்டுவிட்டு, மத்திய அரசு தேவையான நிதியுதவியை அனைத்து மாநிலங்களுக்கும் செய்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

ஆனால் எந்த காரணத்தாலோ மத்திய அரசு தேசம் முழுவதிலும் அதுவே லாக் டவுனை அறிவிக்க வேண்டும் என நினைக்கிறது. மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய நிதியை பகிர்ந்தளிக்க தாமதிக்கிறது. ஜிஎஸ்டி வரியில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கையே தராமல் வைத்திருக்கிறது. இதன் விளைவாக கேரள அரசு 9 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி செலவு செய்வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு தன்னிடம் அதிகாரங்களை குவித்துக்கொள்ளும் சர்வாதிகார நோக்குடன் செயல்படுகிறதோ என்ற அச்சம் அரசியல் நோக்கர்களுக்கு ஏற்படாமல் இருக்க முடியாது. நன்றாக கவனித்தால் பிரதமர் சில தினங்களுக்கு முன் மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்தார். அப்போது லாக் டவுன்  அல்லது ஊரடங்கை அறிவிப்பதை மாநிலங்களின் தீர்மானத்திற்கு விட்டுவிட்டு, தேசிய அளவிலான போக்குவரத்து தொடர்பான விதிகளை மட்டும் மத்திய அரசு அறிவிப்பதாகத் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? கூட்டம் முடிந்ததும் பல மாநிலங்களின் முதல்வர்கள் ஏப்ரல் 30 வரை லாக் டவுன் அவரவர் மாநிலத்தில் அறிவித்தார்கள். கடைசியாக தமிழக முதல்வரும் திங்கட்கிழமை அறிவித்தார். ஆனால் நேற்று. செவ்வாய்கிழமை காலை தேசிய அளவில் லாக்டவுனை பிரதமர் மே 3 ஆம் தேதி வரை அறிவித்து அனைத்து முதலமைச்சர்களையும் சிறுமைப்படுத்தியுள்ளார். எழுபதாண்டுக்கால முதிர்ச்சியுள்ள இந்திய கூட்டாட்சி அமைப்பை வேண்டுமென்றே அவமதிக்கும் செயலில் பிரதமர் இறங்கியுள்ளார். ஏப்ரல் 30 என்பதற்கும், மே 3 என்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு என்ற கேள்வி ஒருபுறமிருக்க, எந்த அடிப்படையில், எதற்காக பிரதமர் தேசிய அளவில் லாக் டவுனை அறிவிக்கிறார் என்பதே புரியவில்லை. அவர் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நிர்வாகத் துறைகள், போக்குவரத்து ஆகியவற்றிற்குத்தான் அவர் அறிவிக்க வேண்டுமே தவிர மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது மிக மோசமான முன்மாதிரியை உருவாக்கும். கொரோனா சாக்கில், இந்திய கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் செயல் கண்டிக்கத் தக்கது மட்டுமன்றி, இதற்கான காரணத்தை விளக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

கேள்வி 3: கொரோனாவால் சாகக் கூடாது என்றால் பசியால் சாகலாமா? ஏற்கனவே கடும் மந்த நிலையில் இருந்த பொருளாதாரம் நாற்பது நாள் லாக் டவுனால் எந்த வகையான இழப்பை சந்திக்கும்? அதை எப்படி ஈடு செய்வது?

ஊரடங்கு, வீட்டிலேயே தனித்திருப்பது என்பதெல்லாம் மாதச் சம்பளம் பெறும் மத்திய தர வர்க்கத்திற்கு சாத்தியம். ஏழை உழைக்கும் மக்கள், அன்றாடக் கூலிகள், அன்றாட வருவாயில் பிழைப்பவர்கள் எல்லோருக்கும் வாழ்வாதாரமே லாக்டவுனில் பறிபோகிறது. இவர்களுக்கு பணம் வழங்குவதாகவும், உணவுப் பொருட்கள் வழங்குவதாகவும் கூறப்பட்டாலும், ஏராளமானவர்களுக்கு அவை சென்றடவையில்லை என்பதே களப்பணியாளர்களின் கூற்றாக இருக்கிறது.

மேலும் இந்திய பொருளாதார வளர்ச்சி என்பது மேலிருந்து கசியும் நீர் போன்றது. டிரிக்கிள் டவுன் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது மத்திய தர வர்க்கத்தினர் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போதுதான் மெக்கானிக்குகளுக்கு வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு சிறு நகரிலும் நூற்றுக்கணக்கனக்கான் மெக்கானிக்குகள் வண்டிகளை செப்பனிட்டுக் கொடுத்தும், பராமரித்துக் கொடுத்தும் தங்கள் தினசரி வருவாயை ஈட்டுகிறார்கள். நாற்பது நாட்கள் வண்டிகளே ஓடவில்லையென்றால் அவர்கள் அனைவருக்கும் ஒரு வருமானமும் இல்லை என்ற நிலையே உருவாகும். ஒவ்வொரு சிறு நகரிலும் நூற்றுக்கணக்கான சிறு விற்பனை நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள் உள்ளன. அவையனைத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அடைக்கப்பட்ட நிலையில் எத்தனை பேர் வருவாய் இழப்பார்கள் என்பதை யோசிப்பதே கடினமாக இருக்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் பணக்கார, உயர் மத்திய தர, மத்திய தர வர்க்கத்தின் நுகர்விலிருந்து கசிந்து செல்லும் நீர் மொத்தமாக நின்றுவிடுகிறது எனலாம். அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் சக்தி எளியவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசியில் பலரால் சோறாக்கி சாப்பிட முடியவில்லை என்பதே யதார்த்தம். அதை இட்லி, தோசை செய்ய பயன்படுத்துவதே சகஜம். சாப்பாட்டிற்கான அரிசியை விலைகொடுத்துதான் வாங்குகிறார்கள். சமீபத்தில் மதுரையிலிருந்து ஒருவர் வாட்ஸ அப்பில் ரேஷன் அரிசையைக் காட்டி நாங்கள் எப்படி இந்த அரிசையை உண்டு உயிர்பிழைத்திருப்பது என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார். நண்பர்கள் பலரும் அவர்கள் வீட்டு வாசலில் வந்து உணவிற்காக உதவி கேட்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தனர். இவை புள்ளி விவரங்களால் புறக்கணிக்கத்தக்க அனுபவங்கள் இல்லை.

இதற்கு அடுத்த நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள். இவை மாதா மாதம் ஈட்டும் வருவாயிலிருந்து பணியில் அமர்த்தியுள்ள ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவார்கள். இவர்களது இலாபம் என்பது பெரும் சேமிப்புகளை உருவாக்குவது அல்ல. மிகக் குறைந்த அளவிலேயே, முதலாளியும் தொழிலாளிகளில் ஒருவராக கொஞ்சம் அதிகம் வருவாய் ஈட்டுபவராக இருப்பார்; அவ்வளவுதான். இவர்கள் பலர் மார்ச் மாத சம்பளத்தை எப்படியோ கொடுத்துவிட்டார்கள். ஆனால் ஏப்ரல் மாத சம்பளத்தை கொடுக்க முடியுமா என்பது ஐயம்தான். பிரதமர் யாரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகிறார். அது எப்படி சாத்தியம் என யோசிக்க வேண்டாமா? ஒரு நெடுஞ்சாலை பரோட்டா கடையில் கூட ஐந்து பேர் முதலாளியுடன் வேலை செய்வார்கள். கடையே நடக்கவில்லை என்றால் அவர் எப்படி சம்பளம் கொடுப்பார். எந்த நம்பிக்கையில் அவர்களை வேலைக்கு வைத்திருப்பார் என்பதே கேள்வி.

விவாசாயிகள் இழப்புகளோ மிகக் கடுமையாக இருக்கின்றன. மூர்க்கத்தனமான போலீஸ் கெடுபிடிகளால் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் அழுகிப்போன காய்கறிகளினால் ஏற்பட்ட இழப்புகள் தலைசுற்றச் செய்கின்றன. அரசின் அலட்சியமும், மெத்தனமும் கேட்பவர்களின் வயிறையே எரியச் செய்தால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயிற்றெரிச்சல் எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது கடினம். மேலும், சாதாரணமாகவே மாமூலில் கொழிக்கும் காவல்துறை இந்த நெருக்கடி நிலையிலும் அடாத பணப்பறிப்புகளை செய்துவருவதாக பலரும் கூறுகின்றனர். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும், அரசுதான் இந்த சூழ்நிலைக்கு பொறுப்பேற்க வேண்டும். அரசும், ஊடகங்களும் உருவாக்கிய கொரோனா பீதியில் கண்மூடித்தனமான ஊரடுங்கு கொள்கையால் காவல்துறை அத்துமீறல் தலைவிரித்தாடுகிறது.

maharashtrafarmerssuicide-792394154-1583
 

 அது மட்டுமின்றி எல்லா தொழில்களும், விமான கம்பெனிகள் கூட கடுமையான வருவாய் இழப்பை சந்திக்கப் போகின்றன. அதானால் ஏற்படக்கூடிய பொருளாதார சிக்கல்கள் என்ன, அரசு அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதையெல்லாம் குறித்து மத்திய அரசு எதையுமே கூறவதில்லை என்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார ஊக்கத்திற்கான பெரும் நிதி ஆதாரங்களை அறிவித்துள்ளன. அதனால் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால் இந்திய அரசு மிகவும் மர்மமான முறையில் மெளனம் சாதிக்கிறது.  நிதியமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக் முதல் முறை பேசியபோது பிரதமர் கூறினார். குழு அமைக்கப்பட்டதா,  அது என்ன பரிந்துரைகள் செய்துள்ளது என்பது குறித்து கடந்த இருபத்தோரு நாட்களில் எந்த செய்தியுமில்லை. அத்துடன் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வருவாய் பகிர்ந்தளிப்பும் சரி, நிறுவனங்களுக்கு திருப்பித் தரவேண்டிய ஈட்டுத் தொகையும் சரி, எதுவுமே வழங்கப்படவில்லை என்பது மத்திய அரசின் நிதி நிலையைக் குறித்த பல்வேறு வதந்திகளை, கவலைகளை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. பல்வேறு பொருளாதார வல்லுனர்கள், அமர்த்யா சென், அபிஜித் பானர்ஜி. ரகுராம் ராஜன் முதல் தமிழகத்தில் ஜெயரஞ்சன் வரை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அரசிடமிருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை.

பொருளாதார நிலை குறித்தும், வறியவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் ஆதரவளிப்பது குறித்தும் அரசு வெளிப்படையாக பேசாமல் இருப்பது ஆபத்தானது. இது மன்னராட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ அல்ல. மக்களுக்கு அரசின் பார்வையை, தொலைநோக்குத் திட்டத்தை அறிந்துகொள்ள உரிமை இருக்கிறது. இது போன்ற நெருக்கடி நிலையில் அது இன்றியமையாதது.

இந்த கேள்விகளையும், இதையொட்டிய கேள்விகளையும் அனைவரும் சேர்ந்து எழுப்பி அரசிடம் விளக்கம் பெறுவதே மக்களாட்சி.
 

https://uyirmmai.com/செய்திகள்/சமூகம்/லாக்-டவுன்-மூன்று-முக்கி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தற்போது இந்தியாவில் வசிக்கிறாரா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இவர் தற்போது இந்தியாவில் வசிக்கிறாரா 

ஆமாம். நியூடெல்லியில் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருக்கிறார் ராஜன் குறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

ஆமாம். நியூடெல்லியில் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருக்கிறார் ராஜன் குறை

நன்றி 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.