Jump to content

கொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது? - அ.மார்க்ஸ்


Recommended Posts

கொரோனா தாக்குதலை சீனா எப்படிச் சமாளித்தது? - அ.மார்க்ஸ்

 
20502375_web1_CPT13044596.jpg
பேராசிரியர் அ.மார்க்ஸ் கொரோனாவை சீனா எதிர்கொண்ட விதம் குறித்த விடயங்களை தன்னுடைய முகநூலில் தொடராக பதிவு செய்து வருகிறார். முதல் மூன்று பாகங்களில் டாக்டர் புரூஸ் எய்ல்வாட்டின் (Dr.bruce aylward) நேர்காணலை பதிவிடுகிறார்.
நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ள இந்த நேர்காணல் சீனா எவ்வாறு இந்த கொடிய நோயை இத்தனை விரைவாகச் சமாளித்தது என்பதைச் சொல்கிறது. இது பிற முதலாளிய நாடுகளில் எந்த அளவு சாத்தியம் என்பது சிந்திக்கத் தக்கது. பெரிய அளவு மருத்துவம் தனியார் மயப்படுத்தப்பட்ட இந்தியாவில் இது சாத்தியமா என்கிற கேள்விக்குறி நம்முன் பெரிதாக எழுகிறது.
டாக்டர் புரூஸ் எய்ல்வாட் உலக நல நிறுவனத்தின் சார்பாக சீனாவுக்கு கொரானா தாக்குதலை அந்நாடு எவ்வாறு சமளிக்கிறது என்பதை நேரில் கண்டறிய அனுப்பப்பட்ட குழுவின் தலைவர். இரண்டு வார காலங்கள் அங்கு தன் குழுவுடன் தங்கி சீனா எவ்வாறு வியக்கத்தக்க முறையில் அந்தக் கொடுந்த் தாக்குதலைச் சமாளிக்கிறது என்பதை நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
 
சீன அரசின் உடனடித் தீவிர நடவடிக்கைகளின் ஊடாக பிப்ரவரி தொடக்கத்தில் தினம்தோறும் 3,000 கொரோனா நோயாளிகள் வருகை என்பது இரண்டே வாரங்களில் வெறும் 200 என்பதாகக் குறைக்கப்பட்டதை அவர் வியந்து இந்த நேர்காணலில் பேசுவது நம் கவனத்த்குக்குரியது. நோய்த்தாக்குதல் எண்ணிக்கை இப்படிக் குறைந்தவுடன் சீனாவின் தேங்கிக் கிடந்த பொருளாதாரம் உயிர் பெறும்போது மீண்டும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் இப்போதைக்கு அதிக எண்ணிக்கையில் உலகின் வேறுபகுதிகளில்தான் மக்கள் இந்நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
 
இன்றைய தாக்குதல் உலகளாவிய தாக்குதல் அல்ல. மாறாக உலக அளவில் ஆங்காங்கு நடக்கும் தாக்குதல் என்பதால் நாம் இதனை ஓரளவு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்கிறார் எய்ல்வார்ட்
 
சீனாவின் இந்த அனுபவம் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படலாம். ஆனால் அது அதி வேகம், பொருட் செலவு, அரசியல் துணிவு, கற்பனைத் திறன் ஆகியவற்றைக் கோரும் ஒரு நடவடிக்கையாக அமையும் என்கிறார் நியூயார்க் டைம்ஸ் சார்பாக இந்த நேர்காணலைச் செய்தவர். போலியோ, எபோலா முதலான உலக அளவிலான நலம் சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அனுபவம் மிக்கவர் டாக்டர் எய்ல்வார்ட் என்பது குறிப்பிடத் தக்கது.
 
நோய்க்குறிகளைத் தொடக்கத்தில் வெளிப்படுத்தாத ஒருவகையான நோய் இது. சோதிக்கும்போது பலருக்கு இந்தத் தாக்குதலுள்ளது தெரியாது. ஓரிரண்டு நாட்களில் அது வெளிப்படத் தொடங்கும். அதேபோல நாட்டில் ஒரு மிகப் பெரிய நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்பதும் முதலில் தெரியாது. பனிமலை ஒன்றின் மேல் நுனியைத்தான் நாம் பார்த்துக் கொண்டுள்ளோம் என்பது முதலில் தெரியாது.
 
பாதிக்கப்படும் பகுதியில் உள்ள எல்லோரும் முதலில் சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கைகழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், வாய்க்கு மூடி அணிதல், கைகுலுக்காது இருத்தல் முதலியன. எல்ல்லா இடங்களிலும் மக்களை நிறுத்தி காய்ச்சல் உள்ளதா எனப் பரிசோதித்தல். அவசியம்.
China_Outbreak_48893.jpg-2dcf1_c0-448-50
இவை அனைத்தும் முறையாக சீனாவில் மேற்கொள்ளப்பட்டன.
 
கொத்துக் கொத்தாக நோய்த்தாக்குதல்கள் இருப்பது ஒரு பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட உடன் பள்ளிகள், தியேட்டர்கள், ஓட்டல்கள் மூடப்பட்டன வுஹான் மற்றும் அதற்கு அருகில் உள்ல நகரங்கள்தான் முழுமையாக 'லாக் டவுன்' செய்யப்பட்டன.
 
மொத்த மருத்துவ அமைப்பில் 50 சதத்தை சீன அர்சு 'ஆன்லைன்' தொடர்புக்கு மாற்றியது. மக்கள் நேரடியாக வந்து நோய்ப் பரம்பலைச் செய்வது இவ்வாறு தடுக்கப்பட்டது. உங்களுக்கு இன்சுலின் அல்லது இதய நோய் மருந்துகள் என எது தேவையோ அது அவர்கள் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டன.
 
ஒருவருக்குக் கொரோனா தாக்குதல் இருப்பதாக அவர் கருதினாரானால் அவர் காய்ச்சலுக்கான கிளினிக்கிற்கு அனுப்பட்டார். காய்ச்சல் அளவு, பிற நோய்க்குறிகள் ஆகியவற்றை அவர்கள் சோதிப்பார்கள். உங்கள் மருத்துவ வரலாற்றைக் கேட்பார்கள். நீங்கள் சமீபத்தில் எங்கேனும் பயணம் செய்தீர்களா, வைரஸ் தாக்குதல் உள்ள யாருடனாவது உங்களுக்கு ஏதும் தொடர்பு இருந்ததா என்றெல்லாம் கேட்பார்கள். பிறகு முழுமையாக உங்கள் உடலை 'ஸ்கான்' செய்து பார்ப்பார்கள், ஒவ்வொரு ஸ்கான் எந்திரமும் நாளொன்றுக்கு 200 ஸ்கான்களைச் செய்தன. ஒரு ஸ்கானுக்கு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள்தான்!. சில நேரங்களில் பகுதி ஸ்கான்கள் மட்டும் செய்யப்பட்டன. மேலைத் தேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு ஸ்கான் எந்திரம் ஒரு மணி நேரத்தில் ஒன்று அல்லது இரு ஸ்கான்களைத்தான் செய்ய இயலும். ஸ்காந்தான் செய்தாக வேண்டும். எக்ஸ்ரேக்கள் போதாது. பாதிப்புகள் அதில் தெரியாது. நாம் தேடும் குறிகள் உள்ளனவா இல்லையா என்பதை சிடி ஸ்கான்கள்தான் தெளிவாகக் காட்டும்.
 
நீங்கள் நோய்த் தாக்குதலுக்கு உட்பட்டதாக ஐயம் உண்டானால். உங்கள் உடலிலிருந்து சோதனைக்குத் தேவையானவை சுரண்டி எடுக்கப்படும். சளி (ஜலதோஷம்), ஃப்ளூ, மூக்குச்சளி ஆகியவற்றுடன் மக்கள் வருவார்கள். ஆனால அவை கோவிட் அல்ல. உடல் குறிகளை வைத்துப் பார்த்தால் 90% காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்; சளி இல்லாத வரட்டு இருமல் உடையவர்களில் 70%, மூச்சுத் திணரல் அல்லது ஏதோ ஒரு சோர்வு என வந்தவர்களில் 30%, மூக்கு ஒழுகலுடன் வந்தவர்களில் வெறும் 4% மக்கள்தான் கோவிட் பாதிப்பு உடையவர்களாக இருந்தனர்.
 
சுரண்டி எடுக்கப்பட்டது சோதனை செய்து ரிசல்ட் நான்கு மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. சமீப காலம்வரை அமெரிக்காவில் கூட அது அட்லான்டா வுக்கு அனுப்பித்தான் சோதனை முடிவுகள் அறியப்பட்டு வந்தன என்பது நினைவுக்குரியது.
200212173336-08-coronavirus-0212-super-1
அதுவரை மக்கள் வீட்டுக்கு அனுப்படவில்லை. ரிசல்ட் வரும் வரை அவர்கள் அங்குதான் காத்திருக்க வேண்டும். அலைந்து திரிந்து அவர்கள் நோயைப் பிறருக்குக் கடத்துவது இவ்வாறு தடுக்கப்பட்டது.
 
சோதனை முடிவு 'பாசிட்டிவ்' ஆக இருந்தால் அவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள். நோய்பாதிப்பிலிருந்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்குத் தொடக்கத்தில் 15 நாட்கள் பிடித்தன. குறிகள் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டே நாட்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது எனும் நிலை விரைவில் ஏற்படுத்தப்பட்டது. இது மிக முக்கியமான ஒன்று. நோய்த்தாக்குதல் எளிமையாக ஏற்படக் கூடியவர்களுக்கு நோய் கடத்தப்படுவது இவ்வாறு தடுக்கப்பட்டது.
வைரஸ் தாக்குதல் உறுதியானால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். ஆரம்பத்தில் நோய்த் தொடக்கத்திற்கும் அவர்கள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் தொடங்குவதற்கும் 15 நாட்கள் இடைவெளி இருந்தது. விரைவில் அது வெறும் இரண்டு நாட்களாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நோய் பரவுதல் இதன் மூலம் பெரிய அளவில் தடுக்கப்பட்டது.
 
தனிமைப்படுத்தப்படல் என்பதற்கும் மருத்துவமனை சிகிச்சை என்பதற்கும் என்ன வேறுபாடு? நோய்க்குறிகள் கடுமையாக இல்லாத நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு (isolation centres) அனுப்பப்பட்டனர். 'ஜிம்நாசியம்கள்', 'ஸ்டேடியம்கள்' முதலியன 1000 படுக்கைகள் வரை அமைக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது அவர்கள் நேரடியாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் அவ்வாறே நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
 
தாக்குதல் மெலிதானது (Mild) என்றால் சோதனையில் நோய்த் தொற்று தெரியும். காய்ச்சல், இருமல் இருக்கும். நிமோனியாவாகக் கூட அது இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஆக்சிஜன் புகட்டுவது தேவைப்படாது. கடுமையான தாக்குதல் (Severe) என்றால் மூச்சு இழுத்து விடும் வீதம் மிக அதிகமாக இருக்கும். ஆக்சிஜன் 'சேசுரேஷன்' அளவு குறையும். அவர்களுக்கு உடன் ஆக்சிஜன் அளிக்கப்பட வேண்டும் அல்லது வென்டிலேடர் பொருத்தப்பட வேண்டும்.
 
ஆபத்தான நிலை (Critical) என்றால் சுவாசம் சாத்தியமற்றுப் போகும் நிலை மற்றும் பல உறுப்புக்கள் செயலிழக்கும் (respiratory failure or multi-organ failure) நிலை. இப்படியானவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டோரும் நேரடியாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
 
மருத்துவமனைகளும் பலதரமாகப் பிரிக்கப்பட்டன. தலைசிறந்த மருத்துவமனைகள் அனைத்தும் 'கோவிட் 19' தாக்குதல் சிக்கிச்சைக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டன. உடனடி அறுவை சிகிச்சை தேவையில்லாதவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன. மற்ற மறுத்துவ மனைகள் வழக்கமான சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டன. பெண்கள் பிரசவத்துக்கு வருவார்கள், வேறு நோய்களால் நெருக்கடியான நிலையில் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த மருத்துவமனைகளில் தடங்கலின்று மருத்துவ சேவை தொடர்ந்தது.
 
புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த மருத்துவ மனைகள் கோவிட் தாக்குடல் சிகிச்சைக்காகச் சீர்திருத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்படுவதற்கான போதிய வசதிகள் இல்லாதபோது நீளமான சிகிச்சைக் கூடங்கள் சுவர்கள் எழுப்பிப் பிரிக்கப்பட்டு சன்னல்கள் பொருத்தப்பட்டன. இப்படியாக "அழுக்கான" மற்றும் "தூய" பகுதிகள் உருவாக்கப்பட்டன. மருத்துவர்கள் உள்ளே நுழைந்தவுடன் உடலை மறைக்கும் 'கவுனை" அணிந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். பின்னர் மாற்றுவழி மூலமாக வெளியே வந்து போட்டிருந்த 'கவுனை" களைந்துவிட்டுச் செல்லலாம்.
 
எபோலா வைரஸ் சிகிச்சை போலத்தான் இதுவும். ஆனால் உடல் திரவக் கசிவுகள் இல்லை என்பதால் அந்த அளவு கிருமி நீக்கம் இங்கு தேவையில்லை.
 
தீவிர சிகிச்சை எந்த அளவிற்குத் தரமாக இருந்தது எனும் கேள்விக்கு டாக்டர் எய்ல்வர்ட் சொல்வது: "மக்களின் உயிரைக் காப்பது என்பதில் சீனா மிகவும் அக்கறையுள்ள அருமையான நாடு. நமது ஊர்களில், சுவிச்சர்லாந்த் போன்ற நாடுகளில் உள்ள மருத்துவ மனைகளைக் காட்டிலும் சீனாவில் மருத்துவ மனைகள் சிறப்பாக உள்ளன. எத்தனை 'வென்டிலேட்டர்கள்' இங்கே உள்ளன என நாம் கேட்டால் "50" என்பார்கள். அம்மாடி! வியப்போம். எத்தனை ECMO (extracorporeal membrane oxygenation machines) உங்களிடம் உள்ளன என்றால் "ஐந்து" என்பார்கள். எங்கள் குழுவில் ஒருவர் புகழ்பெற்ற 'ராபர்ட் கோச்' நிறுவனத்தில் இருந்து வந்தவர். "ஐந்தா? ஜெர்மனியில் மூன்று இருந்தாலே அதிகம்!" என்றார் அவர்.
 
சரி, இந்த சிகிச்சைக்கெல்லாம் யார் பணம் செலுத்தினார்கள்? அரசு இது குறித்துத் தெளிவாக இருந்தது. சோதனைகள் இலவசம். கோவிட் 19 என்பது உறுதியானால் உங்கள் காப்பீட்டுத் திட்டம் முடியும்போது அரசு எல்லாப் பொறுப்பையும் உடன் ஏற்றுக் கொள்ளும்.
 
ஆனால் அமெரிக்காவில் இந்த காப்பீடுத் தொகை பெறுவது முதலான பிரச்சினைகளில் சிகிச்சை தாமதமாகும். மக்களுக்குக் கவலை ஏற்படும். "நான் மருத்துவரைச் சென்று பார்த்தால் அதற்கு 100 டாலர் ஆகும். நான் I.C.U வுக்கு அனுப்பப்பட்டால் ஐயோ அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?" - இந்த சிந்தனையே ஒருவரைக் கொன்றுவிடும். அழிவிற்கு இட்டுச் சென்றுவிடும். 'முழுமையான நலப் பாதுகாப்பு' என இவர்கள் முழக்குவதும் உயிர் காப்பும் மோதிக்கொள்ளும் புள்ளி இது. அமெரிக்கா இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்."
http___prod-upp-image-read.ft.jpg
மருத்துவத் துறை அல்லாதவர்கள் இதை எப்படி எதிர்கொண்டனர்?
தேசிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்றனர். "பாதிக்கப்பட்ட வுகான் மக்களுக்கு நாம் உதவ வேண்டும்" என்கிற எண்னம்தான் அவர்களிடம் வெளிப்பட்டது, ,"அட இந்த வூகான் நம்மை இந்த ஆபத்தில் சிக்க வைத்ததே" என அவர்கள் யாரும் நினைக்கவில்லை, பிறமாநிலங்களிலிருந்து வூகானுக்கு 40,000 வாலண்டியர்கள் வந்தனர். இவர்களில் பலர் பணி நிமித்தமாக அல்லாமல் தொண்டுள்ளத்துடன் பங்கேற்றனர்.
 
ஒரு நள்ளிரவில் வூகானை எங்கள் ரயில் அடைந்தது. நாங்கள் இரங்கத் தயாரானோம். இன்னொரு குழுவும் அதில் வந்திருந்தது. அது உதவி புரிய வந்த ஒரு மருத்துவக் குழாம். வூகானில் முடக்கப்பட்டிருந்த மக்களுக்கு எப்படி உணவு கிடைத்தது?
 
15 மில்லியன் - ஒன்றரைகோடி மக்கள். அவர்கள் அனைவரும் 'ஆன் லைனில்' உணவு ஆர்டர் பண்ணினார்கள். அத்தனை பேர்களுக்கும் சரியாக உணவு கொண்டுவந்து சேர்க்கப்பட்டது.
 
"சில நேரங்களில் வரும் உணவில் ஏதாவது ஒரு 'ஐட்டம்' குறையும். ஆனால் எனக்கொன்றும் எடை குறையவில்லை." - என்றார் ஒரு பெண்.
 
அரசு ஊழியர்கள் அவர்களது பணி தவிர மற்ற வேலைகளையும் செய்தனர். ஒரு நெடுஞ்சாலை ஊழியர் காய்ச்சல் இருக்கிறதா எனச் சோதிப்பார். அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொண்டு வந்து தருவார். ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண் எவ்வாறு பாதுகாப்பு 'கவுனை' அணிந்துகொள்வது என மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்கள் என்ன தொற்றுத் தடுப்பு குறித்துப் படித்தவரா?" எனக் கேட்டேன். "இல்லை. நான் இங்கே 'ரிசப்ஷனிஸ்ட்'. இதை நானாகக் கற்றுக் கொண்டேன்" என்றார்,
 
தரவுகளைக் கையாளவது பெரிய பிரச்சினை. 70,000 நோயாளிகள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன என்றால் பள்ளிக் கட்டிடங்கள் மூடப்பட்டன என்பதுதான். மற்றபடி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடந்தன.
 
சிசுவான் எனும் பகுதிக்குப் போனோம். மிகப் பெரிய பரப்பு. கிராமப்புறம். ஆனால் 5G தொடர்புகள் இருந்தன. நாங்கள் தலைநகரில் இருந்தோம். ஒரு அவசர உதவி மையம் அது. மிகப் பெரிய ஒளித் திரை அங்கு அமைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஏதோ ஒன்றைப் புரிந்து கொள்ளும் பிரச்சினை அவர்களுக்கு. தலைநகர அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டும் பிரச்சினை தீரவில்லை. எனவே அவர்கள் அந்தக் குழுவின் தலைமைக்கு தொலை பேசினர், அவர் 500 கி.மீ தொலைவில் இருந்தார். தொலைபேசியில் வீடியோ காலில் பேசினார். அவர்தான் ஆளுநர்.
 
Weibo, Tencent, WeChat முதலான செயலிகளின் ஊடாக துல்லியமான தகவல்கள் அவ்வப்போது கேட்பவர்களுக்குத் தரப்பட்டன. கூடவந்த நமது ஊடகவியலாளர்கள், "இதெல்லாம் நம்ம நாட்டில் நடக்காது" என அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தனர்.
 
சில பத்திரிகையாளர்கள், "இது ஒரு சர்வாதிகார நாடு. மக்கள் பயந்து கொண்டு வேலை செய்கிறார்கள்". அபத்தம். அமைப்புக்கு அப்பாற்பட்ட பலரிடமும் பேசினேன். ஓட்டல்கள், ரயில்கள் இங்கெல்லாம் சந்திப்பவர்களிடம் பேசினேன். ஒரு போர்க்கால நடவடிக்கையைப் போல செயல்பட அவர்கள் திரண்டிருந்தனர். தாங்கள் முன்னணியாளர்கள். மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்கள் என்கிற உணர்வுடன் அவர்கள் செயல்பட்டனர். சீனர்களை மட்டும் பாதுகாப்பது என்பதல்ல. உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் கடப்பாட்டுடன் அவர்கள் இருந்தனர். வைரஸ் அச்சம்தான் அவர்களின் தூண்டு சக்தியாக இருந்தது.
wor2001280020-p1.jpg
படிப்படியாக ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரி அவர்கள் மீண்டும் வாழ்வைத் தொடங்கிக் கொண்டுள்ளார்கள். சில இடங்களில் பள்ளிகள் இன்னும் மூடிக் கிடக்கின்றன. சில இடங்களில் அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் உற்ற்பத்தி செய்யப்படுகின்றன. செங்டு வில் 5 மில்லியன் புலம் பெயர் தொழிலாளிகள் உள்ளனர். வேலைக்கு வருபவர்கள் ஒரு மருத்துவரிடம். 'ரிஸ்க்' இல்லை என ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். அது 3 நாட்களுக்குச் செல்லும். பின் ஒரு ரயிலைப் பிடித்து நீங்கள் வேலை செய்யும் இடத்திற்குப் போக வேண்டும். அங்கே இரண்டுவாரம் நீங்களாக குவாரண்டைனில் இருக்க வேண்டும். உங்கள் உடல் வெப்பம் முதலியன ஃபோன் மூலமே நேரடியாகவோ தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
 
பாரம்பரிய மருந்துகளும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை சில எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில கலவைகள்தான். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் என அவர்கள் நினைக்கிறார்கள். அவை வைரல் எதிர்ப்பு மருந்துகள் அல்ல. ஆனால் அது அவர்களுக்குப் பழக்கமான மருந்து. அவர்கள் அதன் மூலம் நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள்.
 
கைகளைக் கிருமிநீக்கம் செய்யப்பயன்படுபவை குவிந்து கிடக்கின்றன. முகமூடியை நாமும் அணிந்துகொள்ள வேண்டும். அது அவர்கள் அரசின் கொளகை. நாங்கள் நோயாளிகளைச் சந்திப்பதில்லை. மருத்துவமனைகளின் ஆபத்தான பகுதிகளுக்கும் (hospital dirty zones) செல்வதில்லை.
 
சமூக ரீதியாகவும் நாம் அவர்களுக்குத் தொலைவாக உள்ளவர்கள். பேருந்துகளில் வரிசைக்கு ஒருவர் என அமர்ந்து கொள்கிறோம். ஓட்டல் அறைகளுக்குச் சாப்பாடு வந்துவிடுகிறது. இல்லாவிட்டால் ஒரு மேசையில் ஒருவர் மட்டும் அமர்ந்து சாப்பிட வேண்டும். கருத்தரங்க அறைகளிலும் அப்படித்தான். ஒரு மேசையில் ஒருவர். மைக் மூலம் பேசிக் கொள்ளலாம். அல்லது குரலை உயர்த்தி சத்தம் போட்டுப் பேசலாம்.
 
அதனால்தான் நான் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கிறேன். ஆனால் என்னை சோதித்துக் கொண்டேன். எனக்கு கோவிட் இல்லை. சோதித்துப் பார்த்துவிட்டேன்.
Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

இன்றைய தாக்குதல் உலகளாவிய தாக்குதல் அல்ல. மாறாக உலக அளவில் ஆங்காங்கு நடக்கும் தாக்குதல் என்பதால் நாம் இதனை ஓரளவு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்கிறார் எய்ல்வார்ட்

 உலக அளவில் ஆங்காங்கு நடக்கும் தாக்குதல் என்பதால் மக்கள் மத்தியில் பயம் உள்ளது !

 

2 hours ago, nunavilan said:

15 மில்லியன் - ஒன்றரைகோடி மக்கள். அவர்கள் அனைவரும் 'ஆன் லைனில்' உணவு ஆர்டர் பண்ணினார்கள். அத்தனை பேர்களுக்கும் சரியாக உணவு கொண்டுவந்து சேர்க்கப்பட்டது.

தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த இடமாக இருந்தமை உதவியது. 

2 hours ago, nunavilan said:

உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் கடப்பாட்டுடன் அவர்கள் இருந்தனர். வைரஸ் அச்சம்தான் அவர்களின் தூண்டு சக்தியாக இருந்தது.

ஆனால், ஆபிரிக்கர்களை வீடுகளை விட்டு வெளியேற்றி உள்ளார்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடது சாரிகளின் கொள்கை தான் கொரானாவுக்கு சிறந்தது என வலதுசாரிநாடுகளில் வாழும் இடதுசாரி புத்திஜீவிகள் சொல்லுகின்றனரோ என எண்ண தோன்றுகிறது...
கியுபா,ரஸ்யா,சீனா என பக்கம் பக்கமாக எழுதுகின்றனர்😀

Link to comment
Share on other sites

18 minutes ago, putthan said:

இடது சாரிகளின் கொள்கை தான் கொரானாவுக்கு சிறந்தது என வலதுசாரிநாடுகளில் வாழும் இடதுசாரி புத்திஜீவிகள் சொல்லுகின்றனரோ என எண்ண தோன்றுகிறது...
கியுபா,ரஸ்யா,சீனா என பக்கம் பக்கமாக எழுதுகின்றனர்😀

ஆனால், யாரும் அங்கு குடிபெயரவோ இல்லை அகதி விண்ணப்பம் கோரவோ மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

ஆனால், யாரும் அங்கு குடிபெயரவோ இல்லை அகதி விண்ணப்பம் கோரவோ மாட்டார்கள். 

இதுதான் எனக்கு உள்ளேயும் எழும் மில்லியன்டொலர் கேள்வி😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.