Jump to content

"குருமா" வருதுன்னு சொன்னாங்களா.. அதான் தலையில வேப்பிலை வச்சுக்கிட்டேன்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"குருமா" வருதுன்னு சொன்னாங்களா.. அதான் தலையில வேப்பிலை வச்சுக்கிட்டேன்..! வெள்ளந்தி பாட்டி.

 

 
 
சென்னை:
 
"எதுக்கு தலையில வேப்பிலை வெச்சிருக்கீங்க..?" என்று கேட்டதற்கு, "குருமா வருதுன்னு சொன்னாங்க, அந்த குருமாவுக்காக ஆண்டவனை வேண்டிக்கிட்டு வேப்பிலையை வெச்சிக்கிட்டேன்.. நிறைய பேர் குருமா நோவு வந்து சாகறாங்களாமே.. என்னமோ தீங்கு வருதாம் நமக்கு..!" என்று துப்புரவு பணியாளர் ஒருவர் வெகு இயல்பாகவும், வெள்ளந்தியாகவும் பதிலளிக்கிறார்..
 
இன்னும்கூட இந்த வைரஸின் பேர் வாயில் நுழையாமல் பல கிராம மக்கள் உள்ளனர். ஆனால் பெரிய நோய் என்று மட்டும் புரிந்து கொண்டுள்ளனர். கொரோனாவுக்கு கிராமப்புறங்களில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை வீடு, வாசல்களில் தெளித்து வருகின்றனர். எனினும் கொரோனா வேப்பிலை, மஞ்ச தண்ணீரில் குணமடையும் என அறிவியல்பூர்வமாக நிரூபணமாகவில்லை.
 
அந்த வகையில் பெண் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது..!
 
இவர் தன்னுடைய தலையில் வேப்பிலையை செருகி உள்ளார். தூய்மை பணியாளர். புதுச்சேரியை சேர்ந்தவர். நெற்றி நிறைய குங்குமம், மஞ்சள் பூசி மங்கலமாக காணப்படுகிறார். இவரிடம் செய்தியாளர் ஒருவர் "தலையில எதுக்கு வேப்பிலையை வெச்சிருக்கீங்க..?" என்று கேள்வி எழுப்புகிறார்.
 
அதற்கு அந்த பெண் முழுக்க முழுக்க வெகுளித்தனமான பதிலை வெகு யதார்த்தமாக சொல்கிறார். "நாடு விட்டு நாடு, நகரம் விட்டு நகரம், என்னமோ தீங்கு வருதாம்.. நாங்க இந்த பாண்டிச்சேரியில எவ்வளவோ உழைக்கிறோம், போறோம், வர்றோம்.. எங்களுக்கெல்லாம் லீவும் கிடையாது, ஒன்னும் கிடையாது.. இந்த குருமா வருதுன்னு சொன்னாங்க.. உடனே எங்க ஊரு பசங்க என்னை அனுப்பல.. நீ போனால் திரும்பி வரமாட்டேன்னு சொன்னாங்க.. ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்கவும் தலையில வேப்பிலையை வெச்சிக்கிட்டு வந்திட்டேன்" என்றார்.
 
செய்தியாளர் அவரிடம் "எந்த நோய்க்காக வெச்சிருக்கிறதா சொன்னீங்க..?" என்று திரும்ப கேட்கிறார்.. அதற்கு "குருமா வருதுன்னு சொன்னாங்க, அந்த குருமாவுக்காக ஆண்டவனை வேண்டிக்கிட்டு வேப்பிலையை வெச்சிக்கிட்டேன்.. நிறைய பேர் குருமா வந்து சாகறாங்க.. யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது" என்றார்.
 
உடனே செய்தியாளர், "அப்படியில்லை, குழந்தை பெத்தவங்கதான் தலையில வேப்பிலை வெச்சிப்பாங்க, நீங்க ஏன் வெச்சிருக்கீங்க..?" என்று கேட்க, "குருமாங்க.. மீண்டும் (தூய தமிழ்) நான் சொல்றேன், குருமா நோவு வருதுங்க.." என்றார்.
 
கொரோனா ஒரு தொற்று என்பதை மட்டும் கிராம மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அம்மை போன்ற கொள்ளை நோய்களை எப்படி விரட்டினார்களோ, அதுபோலதான் இந்த கொரோனாவையும் கிராம மக்களில் பலர் கையாண்டு வருகின்றனர்.
 
எனினும் யதார்த்தமாக பேசும் இந்த பெண்ணின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

ஒன் இந்தியா
 
 
 
Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.