Jump to content

"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Auch Scholz schneidet Haare selbst | „Bin froh, wenn ich wieder ...

(ஜேர்மன் நிதியமைச்சர்)

என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து... 
காதை  மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்... 
"மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்...
சென்ற.. திங்கள் கிழமை, ஈஸ்டர் லீவு என்ற  படியால்.... 

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,
முயற்சி பண்ணிப் பார்த்தால்... படத்தில் உள்ளதை போல, வந்திட்டுது. :grin:

இனி... யோசிக்க, நேரமில்லை என்று விட்டு...
பிள்ளைகளும் வீட்டில் நின்ற படியால்....
"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?...  என்று, ஒருமுறை தான்... கேட்டேன். ❤️
ஒவ்வொரு அறையிலிருந்தும்... நான் வெட்டுகின்றேன் என்று, 
மூன்றும்.... பாய்ந்து வந்து விட்டதுகள். 💕

வந்தவர்களை... ஏமாற்றப் படாது என்று, 
இருக்கிற, பொட்டல் காணியை...  😎
இடது பக்கம், வலது பக்கம், பிடரி பக்கம் என்று.. பிரித்து கொடுத்து,
இனி வெட்டுங்கோ... என்று சொன்ன போது,
அவர்கள்... குழந்தைகளாக இருந்த நேரத்தில்...  குழறக்  குழற... 
நான், மயிர் வெட்டிய... நினைவுகள், எல்லாம் வந்திருக்கும் போலை...
பிரித்து... மேய்ந்து விட்டார்கள். 😅

ஒராள்... மயிர் வெட்ட,  சும்மா நின்ற ஒராள்... வீடியோ எடுக்குது,
மற்ற ஆள்... கணனியில், பழைய நாடகத்தை... மீண்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த,
மனைவியிடம்... "அப்பாவுக்கு... தலைமயிர் வெட்டுறம்,  நீங்களும்  வந்து பாருங்கோ... "
என்று சொல்லி முடிக்க முதல்.... 💥

மனிசி... குளியலறைக்குள், புயலென வந்து.... 🗯️ 
வருசப் பிறப்பான இன்று...தலை மயிர் வெட்டுறீங்களோ...
நேற்று, முந்தநாள்... எல்லாம்,  இந்த யோசனை வரமால்,
கொம்புயூட்டருக்குள்ளை தலையை, வைத்துக் கொண்டு இருந்து போட்டு,
இண்டைக்கென்று... இதை செய்ய வெக்காமையில்லை? 👁️‍🗨️
வி*ர்  பிடிச்ச மனிசன், ச**ன் பிடிக்கிற வேலை பாக்குது...  என்று, பேசத்  தொடங்கி விட்டது. 😢

இதென்ன.... கோதாரியாய் கிடக்கு, 
அடுத்த வீட்டுக்கு... சத்தம் கேட்கப் போகுது  என்ற பயத்திலையும்,
நான் சாரத்துடன்.... அரைவாசி தலை மயிர் வெட்டின நிலைமையில்....
கட்டி அணைத்து, முத்தம் 💋 கொடுத்து...  சமாளிக்கவும் முடியாமல்...
தேவாங்கு...👽 மாதிரி முழித்துக்  கொண்டிருந்த போது.... 💀

மனிசியின்...  ரெலிபோன்,  "கிணிங்  கிணிங்" என்று அழைத்தது. 
பொறுங்கோ... வாறன், எண்டிட்டு போன, இடை வெளியில்...
ஆர்....  எடுத்தது என்று, பிள்ளைகளிடம், கேட்ட போது...
கனடாவில் இருந்து... சின்ன மாமி கதைக்கிறா.. என்று சொன்னார்கள்.  

அப்பாடா..... தப்பினேன் பிழைத்தேன்... என்று சந்தோசப் பட்டேன். :grin:

மனிசி.... தன்ரை, தங்கச்சியுடன் கதைத்தால்,கன நேரம் எடுக்கும்.
என்ரை... மச்சாள் (தமிழ் நாட்டில்.. சகலை) என்னை, 
அந்த.. இக்கட்டில் இருந்து, காப்பாற்றி விட்டாள். 🤣

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான். 🤪

பிற் குறிப்பு:  இந்தக் கதையை... எழுத,
குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்கில் வந்த படம்  தான்... காரணம். 

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. :)

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் அட்வான்ஸ் கோஸ்ட்டிகள்  நமக்கு நாமே தலைக்கு  முழுக்கு போடமுன் கொஞ்சம் கொஞ்சமே  அரிந்துவிடுவம் புதிதாய் என்போல் முயற்சிப்பவர்கள்  இந்தியன் கடையில் தண்ணி பைப்  அடைப்பு எடுப்பதை வாங்கி வைக்கவும் .😃

நமக்குவாது  பரவாயில்லை  பியூட்டி பார்லருக்கு ஒவ்வொரு கிழமையும் போய்  மீசையும் காது பக்கத்தில் வளரும் முடியையும் எடுத்த கூட்டம் இப்ப என்ன செய்கினம் என்று தெரியவில்லை ஆநேகமா இந்த லொக்டவுன்  முடிய நிறைய அசம்பாவிதம்கள்  நடக்க இருக்குது என்று உள்  மனது சொல்லுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Auch Scholz schneidet Haare selbst | „Bin froh, wenn ich wieder ...

(ஜேர்மன் நிதியமைச்சர்)

என்னுடைய... தலை மயிரும், கனக்க வளர்ந்து... 
காதை  மூடும் போல இருப்பதை பார்க்க,அரியண்டமாக இருந்தது. வழக்கமாக போகும்... 
"மசூதி சலூனுக்கும்" போக பயமாக இருந்த படியால்...
சென்ற.. திங்கள் கிழமை, ஈஸ்டர் லீவு என்ற  படியால்.... 

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,
முயற்சி பண்ணிப் பார்த்தால்... படத்தில் உள்ளதை போல, வந்திட்டுது. :grin:

இனி... யோசிக்க, நேரமில்லை என்று விட்டு...
பிள்ளைகளும் வீட்டில் நின்ற படியால்....
"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?...  என்று, ஒருமுறை தான்... கேட்டேன். ❤️
ஒவ்வொரு அறையிலிருந்தும்... நான் வெட்டுகின்றேன் என்று, 
மூன்றும்.... பாய்ந்து வந்து விட்டதுகள். 💕

வந்தவர்களை... ஏமாற்றப் படாது என்று, 
இருக்கிற, பொட்டல் காணியை...  😎
இடது பக்கம், வலது பக்கம், பிடரி பக்கம் என்று.. பிரித்து கொடுத்து,
இனி வெட்டுங்கோ... என்று சொன்ன போது,
அவர்கள்... குழந்தைகளாக இருந்த நேரத்தில்...  குழறக்  குழற... 
நான், மயிர் வெட்டிய... நினைவுகள், எல்லாம் வந்திருக்கும் போலை...
பிரித்து... மேய்ந்து விட்டார்கள். 😅

ஒராள்... மயிர் வெட்ட,  சும்மா நின்ற ஒராள்... வீடியோ எடுக்குது,
மற்ற ஆள்... கணனியில், பழைய நாடகத்தை... மீண்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த,
மனைவியிடம்... "அப்பாவுக்கு... தலைமயிர் வெட்டுறம்,  நீங்களும்  வந்து பாருங்கோ... "
என்று சொல்லி முடிக்க முதல்.... 💥

மனிசி... குளியலறைக்குள், புயலென வந்து.... 🗯️ 
வருசப் பிறப்பான இன்று...தலை மயிர் வெட்டுறீங்களோ...
நேற்று, முந்தநாள்... எல்லாம்,  இந்த யோசனை வரமால்,
கொம்புயூட்டருக்குள்ளை தலையை, வைத்துக் கொண்டு இருந்து போட்டு,
இண்டைக்கென்று... இதை செய்ய வெக்காமையில்லை? 👁️‍🗨️
வி*ர்  பிடிச்ச மனிசன், ச**ன் பிடிக்கிற வேலை பாக்குது...  என்று, பேசத்  தொடங்கி விட்டது. 😢

இதென்ன.... கோதாரியாய் கிடக்கு, 
அடுத்த வீட்டுக்கு... சத்தம் கேட்கப் போகுது  என்ற பயத்திலையும்,
நான் சாரத்துடன்.... அரைவாசி தலை மயிர் வெட்டின நிலைமையில்....
கட்டி அணைத்து, முத்தம் 💋 கொடுத்து...  சமாளிக்கவும் முடியாமல்...
தேவாங்கு...👽 மாதிரி முழித்துக்  கொண்டிருந்த போது.... 💀

மனிசியின்...  ரெலிபோன்,  "கிணிங்  கிணிங்" என்று அழைத்தது. 
பொறுங்கோ... வாறன், எண்டிட்டு போன, இடை வெளியில்...
ஆர்....  எடுத்தது என்று, பிள்ளைகளிடம், கேட்ட போது...
கனடாவில் இருந்து... சின்ன மாமி கதைக்கிறா.. என்று சொன்னார்கள்.  

அப்பாடா..... தப்பினேன் பிழைத்தேன்... என்று சந்தோசப் பட்டேன். :grin:

மனிசி.... தன்ரை, தங்கச்சியுடன் கதைத்தால்,கன நேரம் எடுக்கும்.
என்ரை... மச்சாள் (தமிழ் நாட்டில்.. சகலை) என்னை, 
அந்த.. இக்கட்டில் இருந்து, காப்பாற்றி விட்டாள். 🤣

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான். 🤪

பிற் குறிப்பு:  இந்தக் கதையை... எழுத,
குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்கில் வந்த படம்  தான்... காரணம். 

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. :)

படத்தை போடுங்கோ பார்ப்போம். எனக்கு வெட்டினது பெற்றறா அல்லது உங்களுக்கு அடிச்சது பெற்றறா எண்டு சொல்லுறன்.  😜

(மாணவர் விடுதியில் கன காலம் இருந்தபடியால் நான் நன்றாகவே புகுந்து விளையாடுவேன் 😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

நாங்கள் எல்லாம் அட்வான்ஸ் கோஸ்ட்டிகள்  நமக்கு நாமே தலைக்கு  முழுக்கு போடமுன் கொஞ்சம் கொஞ்சமே  அரிந்துவிடுவம் புதிதாய் என்போல் முயற்சிப்பவர்கள்  இந்தியன் கடையில் தண்ணி பைப்  அடைப்பு எடுப்பதை வாங்கி வைக்கவும் .😃

நமக்குவாது  பரவாயில்லை  பியூட்டி பார்லருக்கு ஒவ்வொரு கிழமையும் போய்  மீசையும் காது பக்கத்தில் வளரும் முடியையும் எடுத்த கூட்டம் இப்ப என்ன செய்கினம் என்று தெரியவில்லை ஆநேகமா இந்த லொக்டவுன்  முடிய நிறைய அசம்பாவிதம்கள்  நடக்க இருக்குது என்று உள்  மனது சொல்லுது .

பெருமாள்... எனது,  "மொட்டை  மண்டையை"   பார்த்து...
வேலை இடத்தில்... எல்லாரும் வியந்தார்கள்.

எங்கு...  வெட்டிநீர்கள்?
என்று கேட்ட போது....
அது, குடும்ப ரகசியம்... என்று, பதிலளித்த போது...
பயங்கரமாய்... சிரித்தார்கள். அது, போதும் எனக்கு.

அடுத்த முறையும்... மயிர் வளர்ந்தால்,  வீட்டில் வைத்துத்தான்.. மயிர் வெட்டுவேன்.    :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தைரியத்தை பாரட்டனும் 😃, வெளியில் போனீர்களா? 

நான் கடந்த 5 வருடங்களுக்கு மேல் வீட்டில் தான் வெட்டுவது, பின் மண்டையை மட்டும் பிள்ளைகளிடம் கெடுப்பது சரி செய்ய. மொட்டைதான் 😄😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

படத்தை போடுங்கோ பார்ப்போம். எனக்கு வெட்டினது பெற்றறா அல்லது உங்களுக்கு அடிச்சது பெற்றறா எண்டு சொல்லுறன்.  😜

(மாணவர் விடுதியில் கன காலம் இருந்தபடியால் நான் நன்றாகவே புகுந்து விளையாடுவேன் 😂)

கபிதன்.... நான், யாழ். களத்தில்  இணையும் போதே......
தனிப்பட்ட படங்களை, இணைப்பது இல்லை.... 
என்ற,  வைராக்கியத்துடன் தான், உள்ளே வந்தேன்.
அப்படி... ஒரு  படம் வந்தால்,  அது.... துயர் பகுதியில் வரலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை காம்பிலை இருக்கேக்கை இரண்டு பொடியள் என்னிலை பழகினவங்கள்.அதுக்குப்பிறகு தனி வீட்டிலை இருக்கேக்கை சலூனுக்கு போய் கைப்பாசையாலை கதைச்சு வெட்டுவிச்சனான்.அப்பிடியே காலம் போகப்போக ஒரு லேடியை அணைவு பிடிச்சிட்டன். அதுக்குப்பிறகு அவிங்களே  வீட்டை வந்து வெட்டி விடுவாங்க......பிறகு கலியாணம் முடிச்சாப்பிறகு சலூனுக்கு போய்த்தான் வெட்டுறது....
இப்ப உந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டெல்லோ....தன் கையே தனக்கு உதவியெண்டுட்டு  கண்ணாடியிலை பாத்து சயிற் இரண்டு பக்கத்தையும் மிசினாலை கோதி விட்டன்.பிடரி பக்கத்துக்கு பாரியார் கைவண்ணம்.என்ரை ரெலிபோனாலை பின்பக்கத்தை செல்பி எடுத்துப்பாத்தன் .இடைக்கிடை கறையான் அரிச்சமாதிரி இருந்தாலும் பரவாயில்லாமல் கிடந்துது.

அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

உங்கள் தைரியத்தை பாரட்டனும் 😃, வெளியில் போனீர்களா? 

நான் கடந்த 5 வருடங்களுக்கு மேல் வீட்டில் தான் வெட்டுவது, பின் மண்டையை மட்டும் பிள்ளைகளிடம் கெடுப்பது சரி செய்ய. மொட்டைதான் 😄😄

உடையார்... எனக்கு,  வாரத்தில்... ஐந்து நாளும்... வெளியே போக வேண்டிய வேலை.
முதல் இரண்டு நாள்..  வெட்கத்தில்  தொப்பி போட்டுக் கொண்டு போனேன்.

பிறகு...  என்ரை, மொட்டை  மண்டையை... தடவுறதில இருக்கிற சந்தோசம்.... 
பெரிதாக இருக்குது என்ற... படியால்,  இப்ப தொப்பி போடுவதில்லை.

ஐந்து நாளில், வெட்டிய..மயிர் எல்லாம், புசு.. புசேண்டு..  வெள்ளையாக வளருது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வீடியோ எடுக்குது,

அந்த வீடியோவை போட்டால் நாங்களும் பார்த்து சிரிப்போமல்ல😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்.... நான், யாழ். களத்தில்  இணையும் போதே......
தனிப்பட்ட படங்களை, இணைப்பது இல்லை.... 
என்ற,  வைராக்கியத்துடன் தான், உள்ளே வந்தேன்.
அப்படி... ஒரு  படம் வந்தால்,  அது.... துயர் பகுதியில் வரலாம். :)

சிறி,

பகடியாக கேட்டதை சீரியஸாக எடுதுவிட்டீர்கள். வெறு யாரினதும் படத்தை இணைப்பீர்கள் என எதிர்பார்த்தேன். 😀

33 minutes ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை காம்பிலை இருக்கேக்கை இரண்டு பொடியள் என்னிலை பழகினவங்கள்.அதுக்குப்பிறகு தனி வீட்டிலை இருக்கேக்கை சலூனுக்கு போய் கைப்பாசையாலை கதைச்சு வெட்டுவிச்சனான்.அப்பிடியே காலம் போகப்போக ஒரு லேடியை அணைவு பிடிச்சிட்டன். அதுக்குப்பிறகு அவிங்களே  வீட்டை வந்து வெட்டி விடுவாங்க......பிறகு கலியாணம் முடிச்சாப்பிறகு சலூனுக்கு போய்த்தான் வெட்டுறது....
இப்ப உந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டெல்லோ....தன் கையே தனக்கு உதவியெண்டுட்டு  கண்ணாடியிலை பாத்து சயிற் இரண்டு பக்கத்தையும் மிசினாலை கோதி விட்டன்.பிடரி பக்கத்துக்கு பாரியார் கைவண்ணம்.என்ரை ரெலிபோனாலை பின்பக்கத்தை செல்பி எடுத்துப்பாத்தன் .இடைக்கிடை கறையான் அரிச்சமாதிரி இருந்தாலும் பரவாயில்லாமல் கிடந்துது.

அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

லேடியை அணைவு பிடிச்ச கேடி 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்த புதிசிலை காம்பிலை இருக்கேக்கை இரண்டு பொடியள் என்னிலை பழகினவங்கள்.அதுக்குப்பிறகு தனி வீட்டிலை இருக்கேக்கை சலூனுக்கு போய் கைப்பாசையாலை கதைச்சு வெட்டுவிச்சனான்.அப்பிடியே காலம் போகப்போக ஒரு லேடியை அணைவு பிடிச்சிட்டன். அதுக்குப்பிறகு அவிங்களே  வீட்டை வந்து வெட்டி விடுவாங்க......பிறகு கலியாணம் முடிச்சாப்பிறகு சலூனுக்கு போய்த்தான் வெட்டுறது....
இப்ப உந்த கொரோனாவாலை சலூன் எல்லாம் பூட்டெல்லோ....தன் கையே தனக்கு உதவியெண்டுட்டு  கண்ணாடியிலை பாத்து சயிற் இரண்டு பக்கத்தையும் மிசினாலை கோதி விட்டன்.பிடரி பக்கத்துக்கு பாரியார் கைவண்ணம்.என்ரை ரெலிபோனாலை பின்பக்கத்தை செல்பி எடுத்துப்பாத்தன் .இடைக்கிடை கறையான் அரிச்சமாதிரி இருந்தாலும் பரவாயில்லாமல் கிடந்துது.

அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

குமாரசாமி அண்ணா.... நாங்கள் குளிக்கிறதே....மாசத்துக்கு ஒரு தரம் தான்,
நாங்கள்... இலங்கையிருந்து...வரும்.... போதே...
மில்க் வைற், சண்  லைற், ரெக்சோனா, லைவ்  போய்....
போன்ற சவர்க்காரங்களை கொண்டு வந்தானங்கள். 

எனக்கு,  குளிக்கிற தண்ணியில கண்டம் என்று.... சிலோன் சாத்திரி சொன்னவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

....அது சரி சிறித்தம்பி நீங்கள் என்ன சம்போ பாவிக்கிறனீங்கள்?😎

கொடுப்புக்குள் சிரிக்கக் கூடிய பதிவு..!  😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த போது...  25 வருசத்துக்கு முதல், 
அவர்களுக்கு... தலைமயிர் வெட்ட வாங்கின  "மெசின்  ஒன்று"...  
நில அறையில்... இருந்தது நினைவுக்கு வர, அதை எடுத்துக் கொண்டு வந்து,

வணக்கம் சிறி
1992ம் ஆண்டு மனைவி பிள்ளைகள் நியூயோர்க் வந்த பின் இன்றுவரை சலூன் பக்கம் போனதில்லை.
பலருக்கும் இதை நம்ப கஸ்டமாக இருக்கும்.ஆனாலும் இது தான் உண்மை.
அவர்கள் வந்த புதிதிலேயே மெசினும் ஒன்று வாங்கினேன்.மனைவி பிள்ளைகள் மாறிமாறி வெட்டிப் பழகினார்கள்.சரிபிழையைப் பற்றி எதுவுமே அலட்டிக் கொள்வதில்லை.5-6 வருடத்துக்கொரு தடவை புதிதாக மெசின் வாங்குவேன்.
     அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.ஆனால் அந்தக் காலங்களில் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி 
படத்தை போடாடததால் , அந்த அழகை நாங்கள்  பார்க்க கொடுத்து வைக்கவில்லை. எனக்கு கனகாலமாக மனிசிதான் வெட்டிவிடுகிறார். இந்த கொஞ்ச முடிக்கு 10 டாலர் கொடுக்க வேண்டுமா என்று பேசிபோட்டு வெட்டத்  தொடங்கியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உடையார்... எனக்கு,  வாரத்தில்... ஐந்து நாளும்... வெளியே போக வேண்டிய வேலை.
முதல் இரண்டு நாள்..  வெட்கத்தில்  தொப்பி போட்டுக் கொண்டு போனேன்.

பிறகு...  என்ரை, மொட்டை  மண்டையை... தடவுறதில இருக்கிற சந்தோசம்.... 
பெரிதாக இருக்குது என்ற... படியால்,  இப்ப தொப்பி போடுவதில்லை.

ஐந்து நாளில், வெட்டிய..மயிர் எல்லாம், புசு.. புசேண்டு..  வெள்ளையாக வளருது.:grin:

மொட்டை அடிச்சுப்போட்டு தடவுற சுகமே தனி 😃

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நினைவு மீட்டல் சிறியர்.....!

நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது  ஒருவர் வருவார் நான் மற்றும் அயலட்டை  பிள்ளைகள் என்று ஒரு 8/10 பேர் பின் வளவில் பூவரசுக்கு கீழ்  ஸ்டூலில் இருக்க வெட்டியது நல்ல ஞாபகம். பின்பு நான் இளந்தாரியாய் வந்தபின் எப்போதும் வசந்தா சலூனில்தான் வெட்டுவது வழக்கம்.( கே.கே. எஸ். வீதியில்  மனோகரா தியேட்டருக்கும்  கன்னாதிட்டி சிவன் கோவிலுக்கும் இடையில் இருந்தது).அங்கு வெட்டுவதற்கு இன்னுமொரு காரணம் அவர்கள் "மல்லிகை" என்ற புத்தகம் வைத்திருப்பார்கள். இலக்கியத்தரமான புத்தகம்.மாதம் ஒருமுறை வரும்.அதை வாசிப்பது வழக்கம்.....!

     பின்பு என் அப்பம்மாவின் இறுதிச்சடங்கு செய்ய வந்தவர் (சிறுவயதில் வெட்டியவரின் மகன் ) நான் கொள்ளி வைக்க முன் எனக்கு மொட்டை அடித்து விட்டவர் தான் நாச்சிமார் கோயிலடியில் சலூன் வைத்திருப்பதாக சொன்னார்.அதன்பின் அங்குதான் போவது....!

     பிரான்ஸ் வந்தபின் gare de l 'est ல் ஒரு பாகிஸ்தான் சலூனில் வெட்டுவது. அங்குதான் 5 ஈரோ. மற்றைய இடங்களில் 8 / 10 ஈரோ.....! பின்பு மனைவி பிள்ளைகள் வந்தபின் நான் ஒரு மிசின் வாங்கி மகனுக்கு நான் வெட்டி விடுவது, மனைவி எனக்கு வெட்டி விடுவது. ஆரம்பத்தில் தடக்குப் பட்டாலும் பின் கச்சிதமாக வெட்டப் பழகி விட்டாள்.பின்பு அவள் இல்லாத சமயங்களில் நானே பின் பக்கம் ஒரு கண்ணாடியை பிடித்துக் கொண்டு வெட்டிக்கொள்வேன்.இப்பவெல்லாம் பொடியள் அநியாய காசு குடுத்து சலூனில் வெட்டிக்கொள்கிறார்கள்......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்க்கும் இப.படித்தான் மனைவி பின் மகள் என்று வெட்டிவிடுவது.இப்ப நாலு மயிர் கையால அப்பப்ப பிடுங்கி எறிஞ்சுப்போட்டு போறது.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.ஆனால் அந்தக் காலங்களில் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

எல்லாருக்கும் அந்தக்காலத்திலை அடர்த்தியாகத்தான் இருக்கும்.பிரச்சனை இப்பவெல்லோ 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  

13 hours ago, தமிழ் சிறி said:

டிஸ்கி:  நடந்த சம்பவங்கள்...  70 % உண்மையில் நடந்தது. 
மிகுதி 40 % வாசகர்கள்... கொடுப்புக்குள், சிரிக்கக் கூடியதாக.. புனையப்  பட்டது. 

கதை என்னவோ சிரிப்பா இருக்கு... ஆனால் கணக்குத் தான் இடிக்குதே.. 70+40 = 110%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

உங்களுக்கு சீராளனை நன்றாகத் தெரிந்திருக்குது போல..... அப்ப, பக்கத்தில் துரைசிங்கத்தின் கார் கராஜ் மற்றும் அருகில் ஒரு இரும்பு வேலை லொறி செசி வேலை செய்யும்  பட்டறையும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அவர் எனது ஒரு முறையில் அண்ணர். அதுதான் கஞ்சா விற்கும் காஞ்சனா கதையில் அந்த இடத்தை மையப்படுத்தி எழுதி இருக்கின்றேன்......!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

உங்களுக்கு சீராளனை நன்றாகத் தெரிந்திருக்குது போல..... அப்ப, பக்கத்தில் துரைசிங்கத்தின் கார் கராஜ் மற்றும் அருகில் ஒரு இரும்பு வேலை லொறி செசி வேலை செய்யும்  பட்டறையும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அவர் எனது ஒரு முறையில் அண்ணர். அதுதான் கஞ்சா விற்கும் காஞ்சனா கதையில் அந்த இடத்தை மையப்படுத்தி எழுதி இருக்கின்றேன்......!  😇

ஒமோம்...துரையண்ண கராஜ்... தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டுக்கு முன்னால இருந்தது.... அங்க பழனி என்று டிங்கேர் வேலை செய்யுற ஒருத்தர் இருந்தவர். அவரை சிலோன் ஜெமினி எண்டு சொல்லுவினம்.. 

சீராளனின் மாமனார், கால் ஏலாத ஒருவர், அவரும் கந்தர்மடம் சந்தில கார் வைத்திருந்தவர்... முரட்டு மீசை..நல்ல தடிமன்... ஆள் கொஞ்சம் கட்டை... தமிழ் படங்களில் வரும் வில்லன் மாதிரி பயம் காட்டும் உருவம்.

10 hours ago, ஈழப்பிரியன் said:

     அதுக்காக இவனுக்கு மயிரே இல்லை என்று முடிவு பண்ணாதீர்கள்.இப்போது குறைவு தான்.

நாங்கள் நுவரஎலியாவில் எடுத்த உங்கண்ட படத்தை, பார்த்திருப்பதால், எந்தளவுக்கு இருக்குது எண்டு தெரியும்...🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

ஒமோம்...துரையண்ண கராஜ்... தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டுக்கு முன்னால இருந்தது.... அங்க பழனி என்று டிங்கேர் வேலை செய்யுற ஒருத்தர் இருந்தவர். அவரை சிலோன் ஜெமினி எண்டு சொல்லுவினம்.. 

சீராளனின் மாமனார், கால் ஏலாத ஒருவர், அவரும் கந்தர்மடம் சந்தில கார் வைத்திருந்தவர்... முரட்டு மீசை..நல்ல தடிமன்... ஆள் கொஞ்சம் கட்டை... தமிழ் படங்களில் வரும் வில்லன் மாதிரி பயம் காட்டும் உருவம்.

நாங்கள் நுவரஎலியாவில் எடுத்த உங்கண்ட படத்தை, பார்த்திருப்பதால், எந்தளவுக்கு இருக்குது எண்டு தெரியும்...🤗

பழனியும் எனது உறவினர்.....துரையண்ணர் நண்பர்......பட்டறை  வைத்திருந்தவர் அண்ணர் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர்,

தெய்வீக திருக்குறள் மன்ற ரோடினுள், பொக்சர் வீட்டுக்கு பக்கத்தில், முருகவேள் என்று ஒருவர் இருந்தார்.... ஜெர்மனி போனார்.... உங்களுக்கு அவரை தெரியுமா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.