Jump to content

"அப்பாவுக்கு.... தலைமயிர் வெட்ட, ஆருக்கு விருப்பம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

கந்தர்மடம் சந்தில, நல்லூரில இருந்து அரசடி வீதியால் வரேக்க, பலாலி ரோட்டில ஏறும் போது, இடது மூலையில் ஒரு சலூன்....

அங்க தலையை கொடுத்து, அவர் கேக்கிற வீட்டு விடுப்புகளை டிப்ஸ் ஆக சொல்லி, வெட்டினாப்பிறகு, பலாலி ரோடினை கடந்து முன்னால இருக்கிற சேட்டு போடாம, மடிச்சு கட்டின நாலுமுளத்தோட, யாவாரம் செய்யுற சின்னாம்பி கடையில பித்தளை மூக்குப் பேணில பிளைன் டீயும் வடையும் வாங்கி அடிச்சுப்போட்டு, அப்படியே, வேலு அண்ணர் கச்சான் கடையில ஒரு கச்சான் பாக்கெட் சோளம் போடாம வாங்கி.... 

வாடகை கார்காரர் சீராளன் அண்ணைக்கும், 'எப்படி அண்ணை, இருக்கிறியள்' என்று ஒரு சொல்லி வைத்து... அப்படி கச்சானை கொறித்துக் கொண்டே வீட்டுக்கு போன சிறியருக்கு....

ஜெர்மனி போய்... பிள்ளையள், தலைமயிர் வெட்டி.... யாழில் பதிவு போடுவன் எண்டு நினைத்திருப்பாரோ? 😜

நாதமுனி.....  அந்த சலூனில் தான், நாங்கள் தலைமயிர் வெட்டுவோம்.
சிறு பிள்ளைகளாக இருக்கும் போது.... வீட்டிற்கு வந்து வெட்டி  விடுவார்கள்.

தகப்பனும், மகனும் நல்ல குணமுடையவர்கள். அவரின் மகனின் பெயர் குமார்.  
சென்றமுறை இலங்கைக்கு போனபோது... குமாரிடம் தலைமயிர் வெட்டி விட்டு, 
500 ரூபாய் கொடுத்த போது, மிகவும் சந்தோசப் பட்டார்.

சின்னாம்பி கடையில... உளுந்து வடை,கடலை வடை, சூசியம், 
பால் தேனீர்... எல்லாம் நல்ல சுவையாக இருக்கும். 
40 வருசத்துக்கு முதல்... அங்கு,  அக்கவுண்டுக்கு  சாப்பிட்ட 
எனது கணக்கு 350 ரூபாய்க்கு   கிட்ட கொடுக்க வேணும்.
சென்ற முறைமுறை போய் தேடிப் பார்த்த போது... அவர்களை காணவில்லை.
இப்ப அதை வட்டியுடன் கொடுக்க வேணும் என்றாலும்..  லட்சத்தை  தாண்டும் போல் இருக்கிறது.

சின்னாம்பி கடையில்... தகப்பனும், மூத்த சகோதரரும் வேலை செய்வார்கள்.
சின்னாம்பிக்கு தகப்பனை கண்டால்.... பயங்கர பயம்.
தகப்பன்... கடைக்கு முன்... ஒரு கிடாரத்தில், பக்கத்தில் உள்ள கிணறில் தண்ணீர் எடுத்து வந்து, 
அந்த வழியால்... போகும் பாடசாலை மாணவர்கள் அருந்த நிரப்பி வைப்பார்.
அத்துடன் கடை வாசலை... தண்ணீர் தெளித்து எப்பவும், ஈரலிப்பாக வைத்திருப்பார்.

சின்னாம்பி ஒரு நாளும் சேட்  போடுவதில்லை. அவருக்கு சினிமா பார்க்க நல்ல விருப்பம். 
தகப்பன் இல்லாத நேரம், இரவு  படக் காட்சிக்குத்தான் போவார். 
அந்த நேரம் சேட்டை   தோழில் போட்டுக் கொண்டு நடந்து போய்...
ரிக்கற் கவுண்டருக்கு முன் சேட்டை போட்டுக் கொண்டு ரிக்கற் எடுத்து, படம் பார்த்து விட்டு,
திரும்பி வரும் போது.... சேட்டை  திரும்பவும் தோழில் போட்டுக் கொண்டு வந்து விடுவார்.

வாடகைக் கார்க்காரர் சீராளன் சைக்கிள்களும் வாடகைக்கு விடுகிறவர்.
அவரிடம் நிறைய சிறியவர்களுக்கான சைக்கிள்கள் இருந்தன.
அங்கு தான்... நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் வாடகைக்கு சைக்கிள் எடுத்து...
பின் வளவுக்குள் ஓடப் பழகினோம். பின் நன்றாக ஓடப் பழகிய பின்... 
றோட்டில் தனியே  ஓடி.. பக்கத்தில் உள்ள மாமா, சித்தப்பா வீட்டிற்கு போகும் போது,
இருந்த சந்தோஷத்துக்கும், பெருமைக்கும்... அளவே இல்லாமல் இருக்கும்.

சீராளன் கடைக்குப் பக்கத்தில்... கிளி என்று ஒருவரும், 
வாடகைக்கு ஓட...  ஐந்து கார்  வைத்திருந்தவர்.
ஆரம்பத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் படிக்கும் போது....  
அவரின் காரில் தான்... பள்ளிக் கூடம் போனேன். 

நாதமுனிக்கு... எல்லாம் வடிவாக தெரிகிற படியால்... 
கந்தர்மட சந்திக்கு கிட்டத்தான் இருக்கிறார் போலுள்ளது.
உங்களை கண்டு பிடிக்க.. புலனாய்வு  செய்து கொண்டு இருக்கிறம் விரைவில்.. பிடி படுவீர்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

  கதை என்னவோ சிரிப்பா இருக்கு... ஆனால் கணக்குத் தான் இடிக்குதே.. 70+40 = 110%

நெடுக்ஸ்....  நீங்கள் அடியில் எழுதியதை.. நன்றாக அவதானித்தமைக்கு நன்றி.
முதலில் 70 + 30 என்று தான்.... எழுதினேன்.
பிறகு குசும்புக்காக... இதை யாரும் அவதானிக்கிறார்களா.. என்பதற்காக,
70 + 40  என்று மாற்றி எழுதினேன். சத்தியமாக அதுதான் உண்மை. நம்புங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

உங்களுக்கு சீராளனை நன்றாகத் தெரிந்திருக்குது போல..... அப்ப, பக்கத்தில் துரைசிங்கத்தின் கார் கராஜ் மற்றும் அருகில் ஒரு இரும்பு வேலை லொறி செசி வேலை செய்யும்  பட்டறையும் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.அவர் எனது ஒரு முறையில் அண்ணர். அதுதான் கஞ்சா விற்கும் காஞ்சனா கதையில் அந்த இடத்தை மையப்படுத்தி எழுதி இருக்கின்றேன்......!  😇

 

19 hours ago, suvy said:

பழனியும் எனது உறவினர்.....துரையண்ணர் நண்பர்......பட்டறை  வைத்திருந்தவர் அண்ணர் .....!

சுவியர்... அந்தப் பட்டறையில், எனது சித்தப்பா பழைய கார்களின் வில்லுத் தகடுகளை கொடுத்து..
மரக்கறி வெட்டுகிற கத்தி, மீன், இறைச்சி  வெட்டுகிற கத்தி என்று அடிக்கடி செய்து கொண்டு வந்து,
சொந்தக் காரர்களுக்கு கொடுப்பார். கத்திகள் நல்ல கூர்மையாகவும், வித்தியாசமான முறையில்...
வடிவமைக்கப் பட்டு, அழகான மரப்  பிடியுடன் இருக்கும்.

நாங்கள் பள்ளிக்கூடம் போகின்ற காலங்களில், அப்பாவும் வேலைக்குப் போயிருக்கும் வேளையில்...
காலை பத்து மணியளவில்...   சைக்கிளில்..   பின் பக்கம் பெட்டியில்  வைத்து மீன் வியாபாரிகள்,
வீடுகளுக்கு,  கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.

எங்களுக்கு.... வாடிக்கையாக ஒருவர் கொண்டு வந்து தருவார்.
மிகப் பெரிய மீன் என்றால், துண்டுகளாக வெட்டித் தரும் படி...
அம்மா.. அவருக்கு.. அப்படி பட்டறையில் செய்த அந்த அழகிய  கத்தியை கொடுப்பார்.
அவரும்  வெட்டிக் கொடுத்து விட்டு, போய்  விடுவார்.

ஒரு நாள்....  அவர்,  அம்மா என்னிடம் இன்று, எல்லாம்.. பெரிய மீனாக உள்ளது,
இந்தக் கத்தியை தாங்கோ... நான் இவற்றை, வெட்டி வியாபாரம் செய்து விட்டு,
நாளைக்கு திருப்பிக் கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லிய போது...
அம்மாவும் அந்தக் கத்தியை கொடுத்து விட்டார்.
அதோடை போன மீன்காரன், திருப்பி அந்தப் பக்கமே வரவில்லை.

பண்ணையில் மீன் வாங்கி... பலாலி வீதியால் வந்து தான்,
அந்த இடங்களில் வியாபாரம் செய்பவர் என்பதால்,
கந்தர்மட சந்தியில் வைத்து... ஆளை அமத்தலாம் என்று....
மாசக் கணக்காக கந்தர்மட சந்தியில்... காவல் நின்ற போதும்,
ஆளை.....  கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பவும்.. அந்தக்  கத்தியை நினைத்தால்... கவலையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

சிறியர்,

தெய்வீக திருக்குறள் மன்ற ரோடினுள், பொக்சர் வீட்டுக்கு பக்கத்தில், முருகவேள் என்று ஒருவர் இருந்தார்.... ஜெர்மனி போனார்.... உங்களுக்கு அவரை தெரியுமா?

ஓம்... நாதமுனி, முருகவேளை எனக்கு நன்கு தெரியும். நல்ல பெடியன்.
என்னை விட 6,7 வயது இளமையானவர்.  
1979, 1980 களில்... ஒரு விபத்தில் கால் முறிந்து... காலுக்கு, மாவு கட்டு போட்டிருந்தவர்.

உங்களுக்கு... முருகவேளை  எப்படி தெரியும்?
அவர் ஜேர்மனிக்கு வந்தது எனக்குத் தெரியாது.
இங்கு...  எங்கு, இருக்கின்றார் என்றும் தெரியவில்லை.  
நீங்கள் முருகவேளுடன் தொடர்பிலிருந்தால்... விசாரித்ததாக சொல்லவும். :)

உங்களுக்கு... செல்லத்துரை மாஸ்டர்  வீட்டிற்கு முன் உள்ள... கண்மணி அம்மாள் ஒழுங்கைக்கு..
அடுத்த ஒழுங்கையில்... வசித்த சுரேந்திரனை தெரியுமா? யாழ் இந்துவில் படித்தவர்.

ஐங்கர நேசன், ரியூசன் சென்ரர்   நடத்திய..  
வீட்டில் வசித்த... ரவிராஜ், மோகன் ராஜ் ஆகியோரையும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஓம்... நாதமுனி, முருகவேளை எனக்கு நன்கு தெரியும். நல்ல பெடியன்.
என்னை விட 6,7 வயது இளமையானவர்.  
1979, 1980 களில்... ஒரு விபத்தில் கால் முறிந்து... காலுக்கு, மாவு கட்டு போட்டிருந்தவர்.

உங்களுக்கு... முருகவேளை  எப்படி தெரியும்?
அவர் ஜேர்மனிக்கு வந்தது எனக்குத் தெரியாது.
இங்கு...  எங்கு, இருக்கின்றார் என்றும் தெரியவில்லை.  
நீங்கள் முருகவேளுடன் தொடர்பிலிருந்தால்... விசாரித்ததாக சொல்லவும். :)

உங்களுக்கு... செல்லத்துரை மாஸ்டர்  வீட்டிற்கு முன் உள்ள... கண்மணி அம்மாள் ஒழுங்கைக்கு..
அடுத்த ஒழுங்கையில்... வசித்த சுரேந்திரனை தெரியுமா? யாழ் இந்துவில் படித்தவர்.

ஐங்கர நேசன், ரியூசன் சென்ரர்   நடத்திய..  
வீட்டில் வசித்த... ரவிராஜ், மோகன் ராஜ் ஆகியோரையும் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

சொன்னமாதிரியே.... கண்டு...பிடிக்கிற, துப்பறியும் வேலையில இறங்கி விட்டீர்கள் போல இருக்குது... 

சுரேந்திரன்.... அண்ணன் நரேந்திரன்?

ரவிராஜ் இறந்து விட்டார்.... மோகன்ராஜ் சென்னையில.. ஜெயராஜ், அவரது தம்பி சத்யராஜ் கனடாவில்...

முருகவேள் ஜெர்மன் போனவர். அவரது அக்கா கணவர் ஒரு கிறுக்கர்.... ஒரு விவாதத்தின் போது....அத்தானால்  கத்தியால் குத்தப்பட்டு இறந்ததாக அண்மையில் கேள்விப்பட்டேன். அத்தான்... மனநல மருத்துவமனையில் என்று கேள்வி..

ஜெர்மனியில் நியூஸில் வந்திருக்குமே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சொன்னமாதிரியே.... கண்டு...பிடிக்கிற, துப்பறியும் வேலையில இறங்கி விட்டீர்கள் போல இருக்குது... 

சுரேந்திரன்.... அண்ணன் நரேந்திரன்?

ரவிராஜ் இறந்து விட்டார்.... மோகன்ராஜ் சென்னையில.. ஜெயராஜ், அவரது தம்பி சத்யராஜ் கனடாவில்...

முருகவேள் ஜெர்மன் போனவர். அவரது அக்கா கணவர் ஒரு கிறுக்கர்.... ஒரு விவாதத்தின் போது....அத்தானால்  கத்தியால் குத்தப்பட்டு இறந்ததாக அண்மையில் கேள்விப்பட்டேன். அத்தான்... மனநல மருத்துவமனையில் என்று கேள்வி..

ஜெர்மனியில் நியூஸில் வந்திருக்குமே... 

சுரேந்திரனின்... தம்பிதான் நரேந்திரன். ஒரு வகையில்... அவர்கள் எங்களுக்கு உறவினர்.
போரின் போது.... அவர்கள் இருந்த வீட்டையும்  காணியையும், 
50´000 ரூபாய்க்கு  விற்று விட்டு கொழும்புக்கு  போய் விட்டார்கள். 
சுரேந்திரன்... வடக்கு  ஜேர்மனியில் வசிக்கின்றார்.
பல வருடங்களுக்கு முன்பு, அவருடன்... தொலை பேசியில் உரையாடினேன். 

ரவிராஜ் இறந்தது தெரியாது... 
பெரதெனியாவில் மருத்துவ பீடம் கிடைத்து படித்துக் கொண்டிருந்தவர்,
இடையில் அதனை முடிக்காமல்... வந்து விட்டதாக  அறிந்தேன்.
மோகன்ராஜ் 1981 களில் ஜேர்மனியில் இருந்த போது....நேரில் சந்தித்தோம். 
பின் சென்னைக்கு போய் விட்டார். 
மோகன்ராஜ்...   ஊரில், எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். :)

முருகவேளின்... அக்கா இறந்த செய்தியை, இப்போதான் கேள்விப் படுகின்றேன். 
நாதமுனி... நீங்கள்,  தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில் தான் வசிக்கின்றீர்கள்  என்று ஒரு சந்தேகம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

சுரேந்திரனின்... தம்பிதான் நரேந்திரன். ஒரு வகையில்... அவர்கள் எங்களுக்கு உறவினர்.
போரின் போது.... அவர்கள் இருந்த வீட்டையும்  காணியையும், 
50´000 ரூபாய்க்கு  விற்று விட்டு கொழும்புக்கு  போய் விட்டார்கள். 
சுரேந்திரன்... வடக்கு  ஜேர்மனியில் வசிக்கின்றார்.
பல வருடங்களுக்கு முன்பு, அவருடன்... தொலை பேசியில் உரையாடினேன். 

ரவிராஜ் இறந்தது தெரியாது... 
பெரதெனியாவில் மருத்துவ பீடம் கிடைத்து படித்துக் கொண்டிருந்தவர்,
இடையில் அதனை முடிக்காமல்... வந்து விட்டதாக  அறிந்தேன்.
மோகன்ராஜ் 1981 களில் ஜேர்மனியில் இருந்த போது....நேரில் சந்தித்தோம். 
பின் சென்னைக்கு போய் விட்டார். 
மோகன்ராஜ்...   ஊரில், எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். :)

முருகவேளின்... அக்கா இறந்த செய்தியை, இப்போதான் கேள்விப் படுகின்றேன். 
நாதமுனி... நீங்கள்,  தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில் தான் வசிக்கின்றீர்கள்  என்று ஒரு சந்தேகம். :grin:

தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில்.... இல்லை.... 😄

இறந்தது முருகவேளின் அக்கா இல்லை . முருகவேள் தான்.... அத்தான் காரர் அங்கயே ஒரு கிறுக்கு பார்ட்டி...

முருகவேள் இரண்டொரு வயது சீனியர்...

அப்ப உங்களுக்கு ஆனந்தியை தெரியவேணுமே... மோகன்ராஜின் நண்பர்...

இப்ப பாருங்கோ சுவியர் நெருங்கி வந்துட்டார்... 

நில்மினி வருவா.... அட... நீங்கள் அந்த ரோட்டொ எண்டு சொல்லிக்கொண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தெய்வீக திருக்குறள் மன்ற ரோட்டில்.... இல்லை.... 😄

இறந்தது முருகவேளின் அக்கா இல்லை . முருகவேள் தான்.... அத்தான் காரர் அங்கயே ஒரு கிறுக்கு பார்ட்டி...

முருகவேள் இரண்டொரு வயது சீனியர்...

அப்ப உங்களுக்கு ஆனந்தியை தெரியவேணுமே... மோகன்ராஜின் நண்பர்...

இப்ப பாருங்கோ சுவியர் நெருங்கி வந்துட்டார்... 

நில்மினி வருவா.... அட... நீங்கள் அந்த ரோட்டொ எண்டு சொல்லிக்கொண்டு...

முருகவேள்...  இறந்த செய்தியை கேட்க, சோகமாக உள்ளது.

ஆனந்தி என்று நீங்கள் சொல்வது.... குமாரசாமி றோட்டில் வசித்த நொத்தாரிசின் மகனா?

நாதமுனி... நீங்கள்தான், தைரியமான ஆளாச்சே....   
அப்படி என்றால், நீங்கள் வசிக்கும் வீதியின்... முதல் எழுத்தை, கூறுங்கள் பார்ப்போம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிகளே,

PMல பேசவேண்டியதை இப்படி இழுத்தடிக்கிறீங்களே..? 🤣

முடி வெட்டுற கதையை சீக்கிரம் தொடருங்கோ சாமி..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒற்றுமை ஈஸ்டர் ஞாயிறு அன்று எனக்கும் மனைவிதான் வெட்டி விட்டார். பிள்ளைகள் வீடியோ பிடித்தார்கள்.மந்தி ஒருதடவை வெட்டி அலங்கோலப்பட்டபடியால் ஒரு அளவோடு நிறுத்தி விட்டேன். திங்கள் வேலைக்கு போன பொழுது நல்லா இருக்கு எங்கே வெட்டினீர்கள் என்று கேட்டேன். தயங்காமல் மனைவி என்று கூறிவிட்டேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் சிறியருக்கு நடந்திருக்குமோ? 😂

விஜயகாந்த்

டையிங்

சிரிப்பு

குழந்தை சிரிப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒற்றுமை ஈஸ்டர் ஞாயிறு அன்று எனக்கும் மனைவிதான் வெட்டி விட்டார். பிள்ளைகள் வீடியோ பிடித்தார்கள்.மந்தி ஒருதடவை வெட்டி அலங்கோலப்பட்டபடியால் ஒரு அளவோடு நிறுத்தி விட்டேன். திங்கள் வேலைக்கு போன பொழுது நல்லா இருக்கு எங்கே வெட்டினீர்கள் என்று கேட்டேன். தயங்காமல் மனைவி என்று கூறிவிட்டேன்.

 புலவர் மந்தி யை முந்தி ஆக்கி விடுங்கள் . கருத்து மா றுபடப்போகுது 😀 தங்கள் மனைவிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிலாமதி said:

புலவர் மந்தி யை முந்தி ஆக்கி விடுங்கள் . கருத்து மா றுபடப்போகுது 😀 தங்கள் மனைவிக்கு பாராட்டுக்கள்

முந்தியை விட மந்தி நல்லாயிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இப்படி தான் சிறியருக்கு நடந்திருக்குமோ? 😂

விஜயகாந்த்

 

93493820_863053277545824_66496796800581632_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=XfmAuyZpCNUAX-qEz4K&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c8e67f54b0281a80325a9f9a5b76be79&oe=5EC35999

மனிசியிடம் மட்டும்... மயிர் வெட்ட தலையை கொடுக்க மாட்டேன்.  நாதமுனி.
காதோடை... சேர்த்து, வெட்டி விடுவார் என்ற பயம், எனக்கு எப்பவும் இருக்கு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

4 hours ago, தமிழ் சிறி said:

 

மனிசியிடம் மட்டும்... மயிர் வெட்ட தலையை கொடுக்க மாட்டேன்.  நாதமுனி.
காதோடை... சேர்த்து, வெட்டி விடுவார் என்ற பயம், எனக்கு எப்பவும் இருக்கு.  :grin:

உங்கள் வீட்டில் நாய் இல்லையா இருந்தால் காது அறுந்து விழுவது பற்றி கவலைப்படத் தேவையில்லையே.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

நம்ம காலத்தில டபுள் டெக்கர் இல்லாமல் போட்டுது....

நான் நினைக்கிறேன்.... லண்டனுக்கு வெளியில டபுள் டெக்கர் ஓடின 3 இடங்கள்: பம்பாய், இலங்கை தீவு, ஹாங்காங்.... முதல் இரண்டும் சுதந்திரத்திரத்துக்கு பிறகு, கடைசி காலனியாக இருக்கும் போதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

நம்ம காலத்தில டபுள் டெக்கர் இல்லாமல் போட்டுது....

நான் நினைக்கிறேன்.... லண்டனுக்கு வெளியில டபுள் டெக்கர் ஓடின 3 இடங்கள்: பம்பாய், இலங்கை தீவு, ஹாங்காங்.... முதல் இரண்டும் சுதந்திரத்திரத்துக்கு பிறகு, கடைசி காலனியாக இருக்கும் போதே..

அடப்பாவமே! 🤣
நான் முதன் முதல் நல்லூர்க் கந்தனிட்டை போனது டபுள் டெக்கர் பஸ்லைதான். அதெல்லாம் ஒரு காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

முன்பு ஒருநாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா....... சீராளன் கடைக்கு முன்னால் கோண்டாவில் டிப்போவில் இருந்து வந்த டபுள்டெக்கர் பஸ் ஒன்று அப்படியே மல்லாக்க நடு றோட்டில் பிரண்டுபோய் கிடந்தது......அந்த விபத்தில் இருபக்கத்து வேலிகளிலோ சீராளனின் கடைக்கோ சேதமில்லை.அவ்வளவு பெரிய பஸ் ரோட்டுக்கு குறுக்க வீதியை அடைத்துக் கொண்டு கிடந்தது.......!   😇

உங்கள் வீட்டில் நாய் இல்லையா இருந்தால் காது அறுந்து விழுவது பற்றி கவலைப்படத் தேவையில்லையே.....!  😁

ஆம் சுவி.... அந்த  விபத்தை, நேரில் போய் பார்த்தேன்.
சீராளன் கடைக்கு முன்னால் உள்ள... அந்த  மொத்த பூவரசம் மரம் இல்லாட்டி, 
கடைக்குள் பஸ் புகுந்து... உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

சுவி... உலகத்தை பார்த்தீர்களா,   கிட்டத் தட்ட 45 வருடங்களுக்கு முன்பு...
நாம் இருவரும், ஒரே இடத்தில் நின்றிருக்கின்றோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 00:46, தமிழ் சிறி said:

இந்த... இடைவெளியில்,  மிச்ச மயிரையும்...  
முழு மொட்டை  அடித்து விட்டு, கண்ணாடியில் பார்த்து ரசிப்பதும்... ஒரு அழகு தான்.

882-F5182-0-AC6-466-E-94-F6-1-FAF77-DCA7

Link to comment
Share on other sites

மொட்டை போட்ட சிறியரின் பதிவு.... கந்தர்மடத்துச் சொந்தங்களைத் தேடுமளவிற்கு வளர்ந்துவிட்டது. சொந்தங்களை மீண்டும் கண்டு பந்தங்கள் வளர்ந்தாலும் இனிவளராது சிறியரின் மொட்டையில் மயிர்.
 
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 

அது நம்ம சிறியர் வீட்ட இருந்து வந்த மணம் தான்.

தாயாரின் கைப்பக்குவம் எண்டு விளப்பம் இல்லாமல், கத்தியில தான் ஏதோ இருக்குது எண்டு ஆட்டையைப் போட்ட மீன்காரர், அதை வித்த காசுக்கு சவூதிக்கு ஏறிட்டார்...

இவர் ஒரு மாசமா கந்தர்மடம் சந்தில நிண்டு ஆளைத்தேடி இருக்கிறார்.

இப்படிதான், இந்து, சென்றல் கிரிக்கெட் நடக்கேக்க, ஜஸ்பழம் ஆசைப்பட்டு, சில்லறை இல்லாமல், ஜயாத்துறை கடையிலும் இல்லை எண்ட, சைக்கிள்ள வித்துக் கொண்டிருந்த ஆளிடம், ரியூசனுக்கு கொடுக்க வைத்திருந்த அம்பது ரூபா மிச்சகாசு தர ஏலுமோ எண்ட, அந்தாளும் ஓ... எண்டு... சொக்ஸ் ஜசை தந்து போட்டு... குடி தம்பி... தாறன்... எண்டு..... நான் மச் பிலாதில நிண்டு போட்டு திரும்பி பார்த்தால் ஆள் எஸ்கேப்...

ரியூசன் காசை குடுத்தன், ஆனா வாத்தியார் சர்யில்ல, வேற ரியூசன் போறன் எண்டு வீட்டில் பொய் சொல்லி..... ஜஸ்கிறீம் காரரை தேடிக் கண்டு பிடிக்க... அவரும் தான்  அங்கால போட்டு, திரும்பி வந்து பார்த்தால் என்னைக் காணவில்லை.... ஆனாலும் இப்ப காசு இல்லை...

அன்று முதல் ஏண்டா இவனோட சகவாசம் வைத்தேன் எண்டு நிணைக்கிற அளவுக்கு நண்பர்களுக்கும் ஜஸ்பழம்  கணக்கில போடண்ண எண்டு வாங்கி, வாங்கி, தம்பி... நூறு ருபாவுக்கு மேல வாங்கி போட்டியள்....கணக்கு சரி... எண்ட

ஆ....நல்ல கத.... கணக்கு பிழை... இப்பதான், இருபது தாண்டி இருக்குது...எண்டு....மூடியை திறந்து எடுத்து அடித்து..... பிறகு.... தூரத்தில் என்னையும் நண்பர்களையும் பார்த்தாலே.... துளைஞ்சுது இண்டைக்கு யாவாரம் எண்டு தலை தெறிக்க சைக்கிள திருப்பிக் கொண்டோடுறதும், திரத்திப்பிடித்து ஜஸ்பழம் சாப்பிட்டதும் ஒரு காலம்.

அவற்ற பிழை.... ஆட்டையைப் போட்டது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:
மொட்டை போட்ட சிறியரின் பதிவு.... கந்தர்மடத்துச் சொந்தங்களைத் தேடுமளவிற்கு வளர்ந்துவிட்டது. சொந்தங்களை மீண்டும் கண்டு பந்தங்கள் வளர்ந்தாலும் இனிவளராது சிறியரின் மொட்டையில் மயிர்.
 
 
நாங்கள் செக்கண்ட்சோ படம்பார்க்கச் செல்லும்போதெல்லாம், கந்தர்மடச் சந்தியிலிருந்து சிலவீடுகள் தள்ளி ஒரு வீட்டில் இறால் பொரியல் மணம், ஆகா.... நின்று மூச்சுமுட்ட இழுத்துவிட்டுச் செல்வோம். 
 

நடுவிலே  பெரிய இடைவெளி/வெட்டவெளி விட்டுள்ளீர்கள். ஏனென்று நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?Tatsch

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நடுவிலே  பெரிய இடைவெளி/வெட்டவெளி விட்டுள்ளீர்கள். ஏனென்று நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?Tatsch

கண்னை மூடி, அந்த றால் மணத்தினை அனுபவித்தில் இடைவெளி விழுந்து விட்டது....

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

கண்னை மூடி, அந்த றால் மணத்தினை அனுபவித்தில் இடைவெளி விழுந்து விட்டது....

என்னாமா கண்டுபிடிக்கிறாங்கப்பா தமிழன்டா. Bildergebnis für %e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே அந்த காலத்தில இலங்கையில் டபுள் டெக்கர் பஸ் இருந்ததா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.