Jump to content

கர்ப்பிணி நர்ஸ் உயிரைப்பறித்த கொலைகார கொரோனா


Recommended Posts

கர்ப்பிணி நர்ஸ் உயிரைப்பறித்த கொலைகார கொரோனா

கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடுகிற உண்மையான வீரர்கள், வீராங்கனைகள் யார்? என்றால் அவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர்கள்தான் உண்மையிலேயே உயிரைப்பணயம் வைத்து தங்கள் கடமையை... இல்லை சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய உயிருக்கு சவால்களும், சோதனைகளும் தொடர்கின்றன. ஆனாலும், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று அவர்கள் புனிதப் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த களத்தில் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன.

அப்படி ஒரு சம்பவம்தான் இப்போது இங்கிலாந்து நாட்டில் நடந்து இருக்கிறது.

லண்டன் மாநகரில் இருந்து 35 கி.மீ. வடக்கேயுள்ள லூட்டன் நகரில் உள்ள லூட்டன் அண்ட் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் கடந்த 5 ஆண்டுகளாக நர்சாக சேவை செய்து வந்தவர், 28 வயதேயான மேரி அகியேவா அகியா போங். இவர் ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்தவர். கர்ப்பிணி.

ஆனாலும் தன் வாழ்வையே இங்கிலாந்தில் என்.எச்.எஸ். என்று சொல்லப்படக்கூடிய தேசிய சுகாதார பணிகள் துறைக்கு அர்ப்பணித்து விட்டார்.

கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கூட இவர் அங்கு 12-வது வார்டில் இடைவிடாது தனது சேவையைத் தொடர்ந்து வந்தார். இந்த வார்டுதான், அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிற வார்டு ஆகும். மார்ச் 12-ந் தேதிவரை பணியில் தொடர்ந்து இருந்திருக்கிறார்.

இப்படி கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளுக்காக சேவையாற்றிக் கொண்டிருந்த மேரியையும் ஈவிரக்கமில்லாத கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டதுதான் பரிதாபம்.

ஏப்ரல் 5-ந் தேதி அவருக்கு கொரோனா தொற்றிக் கொண்டது மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.

அடுத்த 2 நாளில் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். முதலில் அவரது உடல்நிலை தேறுவது போல காணப்பட்டது. அவர் பிழைத்து விடுவார் என்று டாக்டர்கள் நம்பினர். ஆனால் அடுத்த ஓரிரு நாளிலேயே அவரது நிலை மோசம் அடைந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமானது.

என்ன செய்வது என்று மூளையைக் கசக்கிய டாக்டர்கள், மேரிக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை முதலில் காப்பாற்றி விடுவோம் என கருதினர். அதையே செய்தனர். சிசேரியனில் மேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மேரி என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ஆனால் ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை நாளில், நர்ஸ் மேரி உயிரை விட்டிருக்கிறார். இது அவரது குடும்பத்தினருக்கும், உடன் சேவையாற்றி வந்த டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் தீராத சோகத்தை தந்திருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக பாவம், அந்தக் குழந்தை மேரி, தன் வாழ்நாளெல்லாம் தாயின்றி வாழ வேண்டியதிருக்கிறது.

அதேநேரத்தில் என்.எச்.எஸ். டிரஸ்டின் தலைமை அதிகாரி டேவிட் கார்ட்டர், “மேரி ஒரு அற்புதமான நர்ஸ். இந்த துறை எதற்காக செயல்படுகிறது என்பதற்கு அவர் மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்தார். இந்த இருளான தருணத்தில், இந்த குழந்தைதான் நம்பிக்கை வெளிச்சம் அளிக்கிறது” என்று உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

“நர்ஸ் மேரிதான் இந்தத்துறையில் அனைவருக்கும் வரமாக வந்து அமைந்திருக்கிறார். அவரது அன்பு, கவனிப்பு, நேர்மை ஈடுசெய்ய முடியாதது. நீங்கள் என்றென்றும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள் மேரி... உங்கள் நினைவுகள் எங்களுடன் எப்போதும் இருக்கும்... நாங்கள் மீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்கள் நினைவைப்போற்றிக் கொண்டிருப்போம்” என்று உருகுகிறது, அவருக்காக, அவரது நினைவைப்போற்றி குடும்பத்தின் நலனைக் காக்க உருவாக்கப்பட்டுள்ள ‘கோ பண்ட் மீ’ இயக்கம்.

குட்டி மேரி... அதான், மேரியின் மகள் நன்றாக இருக்கிறாள், ஆரோக்கியமாக இருக்கிறாள் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கிறதா என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் குழந்தையின் தந்தை தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

மேரியின் மரணம், சில கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.

* மார்ச் 12-ந் தேதி வரை கொரோனா வார்டு பணியில் இருந்தபோதே மேரிக்கு கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டிருந்ததா?

* மேரி, சுய பாதுகாப்பு உடைகளையும், உபரணங்களையும் அணிந்து கொண்டு பணியாற்றினாரா? இந்தக் கேள்விக்கு முக்கிய காரணம், அந்த ஆஸ்பத்திரியில் முன் வரிசை வீரர்களுக்கான கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முக கவசங்களே ரேஷன் அடிப்படையில்தான் வழங்கப்பட்டு வந்ததாகவும் வெளியாகி உள்ள தகவல்கள்தான் இந்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளன.

மேரியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒன்று என்று ஆணித்தரமாக சொல்கிறது, கர்ப்பிணிகளின் நலனுக்காக செயல்படுகிற அமைப்பின் நிறுவனர் ஜோலி பிரர்லே.

4 வார கர்ப்பத்துக்கு உட்பட்டவர்கள் நர்ஸ் பணியில் தொடரலாம் என்கிற விதியை மாற்ற வேண்டும் என மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரிக்கு கோரிக்கை வலுத்து இருக்கிறது.

கொரோனா வைரசுக்கு இதுவரை இங்கிலாந்தின் தேசிய சுகாதார பணிகள் துறையில் பணியாற்றுகிற டாக்டர்கள், நர்சுகள், சார்பு மருத்துவ பணியாளர்கள் என 45 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

‘சூப்பர் ஹீரோ’ என அழைத்து வரப்பட்ட 62 வயது டாக்டர் பீட்டர் டன் ரீடிங் நகரில் உள்ள ராயல் பெர்க்‌ஷயர் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்திருக்கிறார்.

3 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவ சார்பு பணியாளர் அடே ரேமண்ட், லண்டன் நார்த் மிடில்செக்ஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்திருக்கிறார்.

இப்படி இறந்தோர் பட்டியல் நீளுகிறது.

இப்படி டாக்டர்களும், நர்சுகளும், சுகாதாரப் பணியாளர்களும் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உயிரிழப்பதற்கு முடிவு கட்ட வேண்டுமானால், அவர்களுக்கு தேவையாக கவச உடைகளும், உபகரணங்களும், மருத்துவ ரீதியிலான முக கவசங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்ற குரல் இங்கிலாந்தில் வலுத்து வருகிறது.

இங்கிலாந்து அரசு இதில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தினால்தான், இப்படிப்பட்ட சுகாதார சேவையாளர்கள் கொரோனா வைரஸ் தாக்கியவர்களை காப்பாற்ற முடியும். இவர்களையே காப்பாற்ற வழியற்றுப்போனால், கொரோனா வைரஸ் தாக்கிய மற்றவர்களை யார்தான் காப்பாற்றுவது?

Image may contain: 1 person, hat and closeup
Image may contain: fire
Image may contain: flower, plant and text
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள் 

 

தமிழ் நாட்டில் இரண்டு வைத்தியர்களை அடக்கம் செய்யவே விடவில்லை ஊர் மக்கள் அப்படி ஒரு மனித நேயம்🙄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.