Jump to content

உன் நினைவே..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன் நினைவே..!

எனது கிராமத்தில்..
கள்ளிச்செடிகூட
முள்ளுக்குத்தாது
காகிதப்பூக்கூட
வாசனைதந்தது
கடல்கற்கள் கூட
காலில் குத்தாது
காய்ந்த நிலம் கூட
காவியம் தந்தது.

உப்பு நீர்கூட
இனிமை தந்தது
உவர்க்காற்றுக்கூட
தென்றலாய்த் தொட்டதது
வளரும் மரம் செடி
மூலிகையானதது
வயதெல்லை
முதியோற்க்கு
நூறைக்கடந்தது
சாமை வரகு நெல்
சக்தி கொடுத்தது
சத்துணவானதை
பனை தென்னை தந்தது
சரித்திரம் படைத்த- பல
பெரியோர்கள் வாழ்ந்தனர்.

இப்போ
வெளிநாடு வந்து
விறைத்துப்போகிறேன்
வேலையும் குளிரும்
வேசம் இழந்திட்டேன்
பசுமைநாடே
பாலைவனமானது
படுக்கை மெத்தைக்குள்
பல ஊசி குத்துது
ஊரை நினைத்தே
உறங்கிக் கொள்ளுறேன்

ஒருநாள் வருவேன்
உன்மடி தூங்க.

-பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கிராமத்தில்..
கள்ளிச்செடிகூட
முள்ளுக்குத்தாது
காகிதப்பூக்கூட
வாசனைதந்தது
கடல்கற்கள் கூட
காலில் குத்தாது
காய்ந்த நிலம் கூட
காவியம் தந்தது

நல்ல கற்பனை பசுவூர்க்கோபி தொடர்ந்து எழுதுங்கள்.....இந்தக் கவிதையைக்கூட யாழ் அக்காவை 22 ல் மாற்றும்படி நிர்வாகத்திடம் கேட்டுப்பாருங்கள்.......!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.