Jump to content

கொரோனா வைரஸ்: கோவிட் 19 தொற்றிலிருந்து முழுமையாக குணமாக எவ்வளவு காலம் ஆகும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: கோவிட் 19 தொற்றிலிருந்து முழுமையாக குணமாக எவ்வளவு காலம் ஆகும்?

ஜேம்ஸ் கலாகெர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமாக எவ்வளவு காலம் ஆகும்?Getty Images

2019ஆம் ஆண்டு இறுதியில் கோவிட் 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உருவானது. ஆனால், இதனால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இதிலிருந்து குணமாக நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது.

சரி. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?

அது அந்தந்த நபரின் உடல்நிலையை பொறுத்தது. கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும்.

சிலர் இந்த நோயிலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். மற்ற சிலருக்கு இது நீண்டகால பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். 

கொரோனா தொற்றில் இருந்து குணமாக எவ்வளவு காலம் ஆகும்?Getty Images

மேலும் இது வயது, பாலினம் மற்றும் ஒருவரது உடல்நலப் பிரச்சனைகளையும் சார்ந்ததாகும். 

நீங்கள் எந்தளவிற்கு எவ்வளவு காலம் இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்கிறீர்களோ, அதையும் பொறுத்தே நீங்கள் எப்போது குணமடைவீர்கள் என்பது இருக்கிறது.

கொரோனா தொற்றில் இருந்து குணமாக எவ்வளவு காலம் ஆகும்?Getty Images

லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தால் என்ன செய்வது?

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இரண்டு முக்கிய அறிகுறிகளே தென்படும். ஒன்று இருமல். மற்றொன்று காய்ச்சல். 

ஆனால் சிலருக்கு இந்த அறிகுறிகளோடு, உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி மற்றும் தொண்டைவலி ஆகியவையும் தென்படும்.

ஆரம்பத்தில் வறட்டு இருமலே இருந்தாலும், போகப்போக சிலருக்கு சளி வரத்தொடங்கும். 

அதிக நீராகாரங்களை எடுத்துக் கொள்வது, நல்ல ஓய்வு மற்றும் பாராசிடமால் போன்ற வளி நிவாரணிகளை கொடு இதனை சரிசெய்ய முடியும்.

லேசான அறிகுறிகள் இருப்பவர்கள், விரைவாக குணமடைந்துவிடுவார்கள்.

இருமல் சரியாக சற்று நீண்ட காலம் ஆகலாம் என்றாலும், ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் குறைந்துவிடும். சராசரியாக இரண்டு வாரங்களுக்குள் இத்தொற்றிலிருந்து மீண்டுவிடுவார்கள் என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தீவிர அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது?

சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்குதல் தீவிரமாக இருக்கலாம். இத்தொற்று தாக்கிய 7 - 10 நாட்களுக்கு இது நடக்கலாம்.

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். நுரையீரல் வீக்கமடையும். 

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, இந்த வைரஸை எதிர்த்து போராடுவதே இதற்கு காரணம். 

ஆக்ஸிஜன் சிகிச்சைக்காக சிலர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையும் ஏற்படும்.

இந்தப் பிரச்சனை சரியாக இரண்டில் இருந்து எட்டு வாரங்கள் ஆகலாம். 

தீவிர சிகிச்சை தேவைப்பட்டால் என்ன செய்வது?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேரில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிடுகிறது. அவர்களுக்கு உயிர்காக்கும் கருவிகள் தேவைப்படலாம்.

எந்த நோயாக இருந்தாலும், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து குணமடைந்து திரும்ப சில நாட்கள் ஆகும். வழக்கமாக அவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பாக, பொது அறைக்கு மாற்றப்படுவது வழக்கம். 

கொரோனா தொற்றில் இருந்து குணமாக எவ்வளவு காலம் ஆகும்?Getty Images

தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து மீண்டு வந்த எவரும் மீண்டும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப 12 - 18 மாதங்கள் ஆகலாம் என்கிறார் தீவிர சிகிச்சை மருத்துவப்பிரிவின் பேராசிரியர் தலைவரான மருத்துவர் ஆலிசன் பிட்டார்ட்.

நீண்ட நாட்கள் மருத்துவமனையில் படுக்கையில் இருந்ததால் அவர்களுக்கு தசைகள் வலுவிழக்கும் வாய்ப்புள்ளது. தசைகள் மீண்டும் வளர்வதற்குச் சற்று காலம் பிடிக்கும். 

தீவிர சிகிச்சை பிரிவை விட்டு வெளியே வந்த சிலருக்கு பிரம்மை அல்லது மனஅழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் கூட வரலாம்.

கொரோனா வைரஸால் நீண்ட கால உடல்நல பாதிக்கப்படுமா?

இதுகுறித்து சரியான தகவல் மற்றும் தரவுகள் இல்லையென்றால், இதுதொடர்பான மற்ற நிலைகளை பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாக இயங்கினால், நுறையீரல் வீக்கம் அடைந்து அந்த நோயாளிக்கு மோசமான சுவாசக் கோளாறு நோய்க்குறி ஏற்படலாம்.

இதனால், உடல்நல மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சனைகைள் ஏற்படலாம் என கார்டிப் மற்றும் வேள் பல்கலைக்கழகத்தின் சுகாதார அமைப்பில் பிசியோதெரபிஸ்ட் பால் ட்வோஸ்.

கொரோனா தொற்றில் இருந்து குணமாக எவ்வளவு காலம் ஆகும்?Getty Images

இதுவரை எத்தனை பேர் குணமடைந்திருக்கிறார்கள்?

ஏப்ரல் 19ஆம் தேதி நிலவரப்படி, உலகளவில் கொரோனா தொற்றால் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,55,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. 

ஆனால், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பரிசோதனை முறை, மற்றும் மரணங்களை பதிவு செய்யும் முறை வேறுபடுவதால், இந்தத் தரவுகளில் மாற்றம் இருக்கலாம். 

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவருக்கும் மீண்டும் இந்த பாதிப்பு ஏற்படுமா?

இதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. 

ஒருவர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு விட்டார் என்றால், அவரின் உடல் இதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருக்க வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி, சரியான பரிசோதனை செய்யாததால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். 


https://www.bbc.com/tamil/science-52339766

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.