Jump to content

உலையும் மனசோடு அலையும் இரவு.


Recommended Posts

Sunday, April 19, 2020

உலையும் மனசோடு அலையும் இரவு.

- சாந்தி நேசக்கரம் -

குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன்.

றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய்   மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது.

றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்தது. ஆங்காங்கே சரக்குக்கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தது.

வெயில் ஏறாத காலைநேரம் மரங்களின் முகடுகளில் படிந்திருந்த மெல்லிய புகைமூட்டம். அன்றைய காலைப்பொழுதின் றைன்நதியோர அழகை ரசிக்கும் பொறுமையில்லை. ஆனால் கண்கள் தானே அந்த அழகோடு பயணித்துக் கொண்டிருந்தது.

கணணியோடு சிலர் , கைபேசிகளோடு பலர், கதைத்தபடி சிலர் , கண்களை மூடி நல்ல நித்திரையில் சிலர் என பலவகையான மனிதர்களோடு றெயின் வளைவுகளில் சரிந்தும் நேர்பாதையில் நிமிர்ந்தும் 360கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

000       000       000

காலை 8.52. அவளது நகரில் இறங்கினேன். அடுத்த தொடரூந்துக்காக மனிதர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு பலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். எனது பயணப்பொதியோடு நானும் பயணிகளோடு நடந்து தானியங்கிப் படிகளில் ஏறி கீழிறங்கினேன்.

பிரதான வாசலுக்கு வலதுபுறமாக அடையாளமிடப்பட்ட மலசலகூடத்திற்கு செல்லும் வழியூடாக ஆண்கள் பலரும் பெண்கள் பலரும் ஒரே நிறத்தில் உடையுடுத்தி கைகளில் இனிப்புகள் குடிவகைகளோடு மேலேறி வந்தார்கள்.

அவர்களில் ஒருவன் றோசா நிறத்தில் ரீசேட்டும் கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான். அவர்களில் சிலர் மலசலகூடப்படிகளில் இறங்கிப் போனார்கள்.

அந்தப்படிகளில் நானும் இறங்கிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவனின் கை எனது பின்பகுதில் தட்டிவிட்டுப் போனதை உணர்ந்து திரும்பினேன்.

றோசா நிறத்தில் ரீசேட்டும் கறுப்பு நிறத்தில் காற்சட்டையும் அணிந்தவன் சில படிகள் கீழிறங்கிப் போய்க்கொண்டிருந்தான். தவறுதலாக அவன் கை என்னில் பட்டிருக்கிறதென நினைத்துக் கொண்டேன்.

வெளியில் வந்து அவளின் மாணவர்கள் தங்கிடத்திற்கான தொடரூந்து நேரவிபரத்தை தொலைபேசியில் பார்த்தேன்.  அடுத்த தொடரூந்து வருவதற்கு இன்னும் 26நிமிடங்கள் இருந்தது.

இரு குழுக்களாக ஆண்களும் பெண்களும் பிரத்தியேக உடைகள் அணிந்து சத்தமாக கதைத்துச் சிரித்து கைகளில் குடிவகைகள் சிகரெட்களோடு நின்றவர்களுக்கு 10மீற்றர் அளவிலான தொலைவில் நானும் நின்று கொண்டிருந்தேன்.

பர்தா அணிந்த பெண்ணொருத்தி பிளாஸ்ரிக் கப்பொன்றை கையில் கொண்டு வந்து ஒவ்வொருவரிடமும்  'பசிக்கிறது காசு' என கை நீட்டினாள். யாரும் அவளுக்கு காசு போடவில்லை. அவள் ஏதோ பேசிக்கொண்டு கடந்து போனாள்.

நான் போக வேண்டிய இடத்தின் பெயரோடு தொடரூந்து வந்தது. பிரதான தொடரூந்து நிலையத்திலிருந்து 6வது தரிப்பிடத்தில் இறங்கினேன். அந்த வீதிக்கு எதிர்ப்புறம் கடந்து நூறுமீற்றர் தொலைவில் அவளது குடியிருப்பு இருந்தது.

4வது மாடியில் இருந்து கீழிறங்கி வந்து எனக்காக அவள் காத்திருந்தாள். தொடரூந்துக்குள்ளிருந்து அவளைக்கண்டு கொண்டேன்.

பாலத்தைக் கடந்து போகும் நடைபாதையில் நடந்து அடுத்த பக்கத்தில் அமைந்திருந்த மேட்டுவீதியில் ஏறி அவளது வீட்டை நோக்கி நடந்தேன். அவள் கைகாட்டிச் சிரித்தபடி நிற்பது தெரிந்தது.

அம்மா...அவள் ஓடிவந்து கட்டியணைத்தாள்.

 குண்டம்மா எப்பிடியிருக்கிறீங்கள் ?

ஓரு நாய்க்குட்டி போல கட்டி முத்தமிட்டாள். அம்மாவைக் காணும் பசுக்கன்று போல என்னை அழைந்தாள்.

எனது பயணப்பொதியை வாங்கிக் கொண்டாள். 4வது மாடியில் இருக்கும் அவளது அறைக்கும் செல்லும் தானியங்கியில் ஏறினோம். 

15சதுரமீற்றர் அறையில் அவளது உலகத்தை காலம் அமைத்திருந்தது.
சமையல் குளியல் படிப்பு உறக்கம் அனைத்துமே அந்த அறைக்குள்ளே தான். அவ்வப்போது அவளைப் பார்க்க வரும் போது நிலத்தில் சிறிய மெத்தை எனது படுக்கையாகும்.

துளசியிலைத் தேனீர் ஒன்றைப் போட்டு கையில் தந்தாள்.

 அம்மா எனக்கு தேனீர்...
எனக் கேட்பவள் இன்று எனக்குத் தேனீர் போட்டுத் தந்தாள்.

அம்மா இண்டைக்கு கடைக்குப் போவமோ ? கேட்டாள்.
ஓமம்மா போவம்.

நீண்டகாலம் அவளோடு கடைகளுக்குப் போகவில்லை. அது அவளுக்குப் பெரும் குறையாகவே இருந்து வந்தது. இன்றைய நாளை அவளோடு அவள் விரும்புவது போல கழிப்பது என்பதே எனது எண்ணமும்.

கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக் கொண்டு அவளோடு புறப்பட்டேன் கடைத்தெருக்களிற்கு.  விடிய விடிய மனிதர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் , நிறைந்த மனிதர்களாலும் தனது நிறத்தை மாற்றியிருந்த யேர்மனியின் பெருநகரங்களில் ஒன்று அது.

வீதிச்சமிஞ்ஞைகளால் அவள் என்னையும் அழைத்துக் கொண்டு பழக்கப்பட்ட வழிகாட்டிபோல நடந்து கொண்டிருந்தாள்.

உடுப்புக்கடைகளுக்குச் சென்றோம். அவள் தனக்கான சில ஆடைகளை வாங்கினாள். எடுக்க விரும்பிய ஆடைகளை நீண்ட வரிசையில் நின்று போட்டுப் பார்த்தாள். ஓவ்வொரு உடுப்பையும் எடுக்கும் போது என்னிடமும் அபிப்பிராயம் கேட்டாள்.

மதியம் 2மணிவரையும் கடைகளைச் சுற்றினோம்.

உணவகமொன்றில் போய் பீற்சா சாப்பிட்டு 3மணிவரை உணவகத்தில் இருந்தோம். கதைகள் நிறையச் சொன்னாள். தனது படிப்பு பற்றி தன் தோழிகள் பற்றி அவளது கதைகளால் நிறைந்தது பொழுது.

அவள் செய்து முடித்த 'ஆசியப்பெண்கள்' பற்றிய ஆய்வுக்கட்டுரைக்காக வாசித்த நூல்கள் ஆய்வுகள் அவற்றில் எழுதப்பட்ட விடயங்கள் பற்றி நிறையவே சொல்லிக் கொண்டிருந்தாள்.

எனது குழந்தை உலகத்தை எப்படியெல்லாம் கற்றுக் கொள்கிறாள் என்பது பெருமையாகவும் வியப்பாகவும் இருந்தது. ஐரோப்பிய இலக்கியத்தின் நான் அறியாத பல இலக்கியர்களின் பெயர்களைச் சொல்லி அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியெல்லாம் சொன்னாள்.

பிள்ளைகளோடு சேர்ந்துதான் யேர்மன் மொழியைக் கற்றேன். மேற்குலக இசை இசைக்கலைஞர்கள் பாடகர்களை அறிந்து கொண்டதும் , பிள்ளைகள் ஊடாகவே எனது உலகத்தை பரந்து விரியச் செய்த சிந்தனையின் ஊற்றாக பிள்ளைகளே நிக்கிறார்கள்.

தான் படிக்கும் ஐரோப்பிய இலக்கிய விஞ்ஞானம் பற்றியும் பெண்பிள்ளைகள் அந்தத் துறையில் அதிகம் இல்லாதது பற்றியெல்லாம் சொன்னாள்.

பல்கலைக்கழகம் போனால் மருத்துவம் தொழில்நுட்பம் போன்றவையே சிறந்த கல்வியென்ற மனநிலையில் இருந்து மாறுபட்ட என் மனநிலையே அவளதும். கல்வி வாழ்வதற்கே வாழ்க்கை கல்விக்கல்ல என்பதில் அவள் தெளிவாக இருந்தாள்.

கடைத்தெருக்களைத் தாண்டி தொடரூந்து நிலையம் சென்றோம். நாங்கள் பயணிக்கவிருந்த தொடரூந்து தாமதமாகியது.

தனது கையில் இருந்த பைகளை என்னிடம் தந்துவிட்டு மலசலகூடம் செல்லும்  படிகளில் இறங்கினாள். அவள் இறங்கிய படிகளின் மேற்பகுதியில் நின்றேன். அந்தப்படிகளில் பலர் மேலேறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.

சிலநிமிடங்களில் மலசலகூடத்திலிருந்து மேலேறிக் கொண்டிருந்தவள்...திரும்பி படிகளில் தடதடவென ஓடினாள்.

ஏய்...! கோபமாய் சத்தமிட்டபடி படிகளில் கீழிறங்கி ஓடினாள்.

அவளது கோபம் ஓட்டம் என்னை ஒருகணம் திகைக்க வைத்தது.

அம்மா நில்லுங்கோ...

மேலே ஓடியவளைத் தொடர்ந்து நானும் ஓடினேன்.
அவள் ஆண்களின் மலசலகூடத் கதவடியில் ஒருவனை மறித்துக் கத்திக் கொண்டிருந்தாள்.

அங்கே நின்ற காவலாளர் அங்கே நின்றவனை கெட்ட வார்த்தைகளால் திட்டினான்.

என்னம்மா ? என்ன நடந்தது ?

என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அம்மா இவன் என்னை பின்பக்கதில தட்டீட்டு போனான்.

அவள் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டுமே என்காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. கைகளில் இருந்த பைகள் கையைவிட்டு வீழந்ததையும் எனது ஞாபகத்திலிருந்து அழித்துப் போனது அந்தக்கணம்.

அந்த உயரமான மனிதன். றோஸ்கலர் ரீசேட் அணிந்தவன். அவன் தான் அவளைத் தொட்டான் என்பதை அவள் கைநீட்டிச் சொன்னாள்.

அவன் நெஞ்சில் என்கைகள் பதிந்தது. அவனைத்தள்ளி விட்டு எனது காலில் இருந்த காற்செருப்பைக் கழற்றி அவன் முகத்துக்கு நேரே ஓங்கினேன். காவலுக்கு நின்றவன் என் குறுக்கே நின்று தடுத்தான்.

அம்மா அடிக்காதையுங்கோ...

அவனுக்கு அடிக்க வேண்டாமென அவள் சத்தமிட்டாள். காவலுக்கு நின்றவன் காவல்துறையை அழைக்கிறேன் அவனை அடிக்காதே என வேண்டிக் கொண்டிருந்தான்.

திருமணத்திற்கு முதல் கடைசியாக நண்பர்களுடன் கழிக்கும் பொழுதை ஆணும் பெண்ணும் அவர்களது சகாக்களோடு ஒன்றாக நகரங்களைச் சுற்றிக் குடித்து அனுபவிப்பார்கள். அதுவொரு கலாசரமாக யேர்மனியர்களிடம் வளமையாக இருந்து வருவதை சில இடங்களில் கேட்டுள்ளேன்.

தனது திருமணத்திற்கு முதல் தனது நண்பர்களுடன் என் குழந்தையைச் சீண்டியவனும் என்பதை காவலுக்கு நின்றவன் சொன்னான்.

நீங்கள் விரும்பினா நான் காவல்துறையைக் கூப்பிடுறேன்.

பொறுமையா இரு...

அந்த வயதான மனிதனின் கண்கள் கெஞ்சின. பலர் அந்த நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

மன்னிச்சுக்கொள்ளு பேபி...மன்னிச்சுக் கொள்ளு...

அவன் என் குழந்தையிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டு மேலேறி ஓடினான். அவன் பின்னே செருப்போடு திரும்பிய என்னை அவள் மறித்தாள்.

விடுங்கோம்மா...அவனுக்கு கலியாணம் நடக்கப்போகுது...இவ்வளவு ஆக்களும் பாக்க அவனை நானும் நீங்களும் பேசினதே அவன்ரை வாழ்க்கையில மறக்கமாட்டான்...இதை அவன்ரை வாழ்க்கையில மறக்கமாட்டானம்மா....

என்னால் ஆறுதலடைய முடியவில்லை. அவனை அடியென்கிறது மனசு.

எனது கையிலிருந்து தவறி அங்கங்கே கிடந்த பைகளை அவள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு என்னையும் அழைத்துக் கொண்டு படிகளில் மேலேறினாள்.

இந்தத் தொல்லையள் இருக்கெண்டு தெரிஞ்சுதான் நான் நீளமான உடுப்புகள் போடுறதம்மா...இவங்களுக்கு இதைவிட இனியெப்பிடி உடுப்பு போடுறது...

சொல்லிக் கொண்டு நடந்தாள்.

அவள் தன்னைப் பாதுகாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள் என்பது ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்தநாளை இவள் தனியே சந்தித்திருந்தால் அவளது மனவுளைச்சலை எப்படி இருந்திருக்குமென நான் யோசித்துக் கொண்டு நடந்தேன்.

நாங்கள் வெளியில் தொடரூந்துக்காக காத்து நின்றோம். தன் குழுவோடு நின்றவன் எங்களுக்கு கிட்ட வந்தான்.

மன்னிச்சுக்கொள்...மன்னிச்சுக்கொள்...என அவன் எங்களை வேண்டினான். தெரியாமல் செய்திட்டேன்.

அவனை தமிழில் உள்ள கெட்டவார்த்தைகளால் திட்டினேன். போ இதில நிக்காதை...அவனை அவள் டொச்சில் திட்டினாள். அவன் திரும்பிப் போய் தனது குழுவோடு சேர்ந்தான். எங்களை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.

காலையில் என் பின்புறத்தையும் தட்டிவிட்டுப் போனவன் இவனோ என நினைத்தேன்.

இப்பிடியும் இருக்கிறாங்களம்மா உலகத்தில...
அம்மாவுக்கு இப்பிடியான அனுபவங்கள் நிறைய இருக்கம்மா...
பெண்கள் ஒவ்வொருத்தரும் இப்பிடியான சனியனுகளைத் தாண்டித்தானம்மா போறம்...
இதை இதிலையே மறந்திடம்மா...
இதுவும் உங்கடை வாழ்க்கையில ஒரு கடந்து போன அனுபவமாக போகட்டும்.

நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

எனது குழந்தையைத் தொட்டவனை தண்டிக்க வேண்டுமென்றதே எனது மனம் முழுவதுமான ஒலியாகவிருந்தது. கோபம் அவன் மீது எனது எதிர்ப்பைக் காட்டிவிடும் வேகமே என்னிடமிருந்தது.

000       000           000
இரவு...,

மண்ணிற கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்தபடி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். தலைக்குப் பக்கத்தில் கடைசியாக அவள் வாசித்த கனடாவில் வாழும் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த மகள் ரூபியின் கவிதைப்புத்தகம் நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்தது.

இளம் கவிஞையான ரூபியின் ஆங்கிலக் கவிதைப் புத்தகத்தில் தனக்குப் பிடித்த கவிதைகளை எனக்கு மொழிபெயர்த்துத் தந்திருந்தாள்.என் குழந்தையைவிட சில வயதுகளால் மூத்த ரூபி தனது பிறப்பின் வேரிலிருந்து எழுதிய பெண் அடக்குமுறைகள் தொடக்கம் அவளது வாழ்வனுபங்கள் பற்றி அவள் சொன்ன கதைகள் அனைத்தையும் அவள் எனக்கு உணர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.

நித்திரை வரவில்லை. ஓவ்வொரு பக்கமாய் திரும்பித் திரும்பி உருண்டு கொண்டிருந்தேன். நேரம் இரவு 2.42.

என்ன குண்டம்மா நித்திரை கொள்ளேல்லயோ ?

நெஞ்சில் அணைத்து வைத்திருந்த கரடி பொம்மையை கன்னத்தில் வைத்துக் கேட்டாள்.

இல்லைச் செல்லம்...இப்பதான் முளிச்சனான். அவளுக்குப் பொய் சொன்னேன்.

பிரதான மின்விளக்கைப் போட்டுவிட்டு குளியலறைக்குப் போய் வந்து மீண்டும் மின்விளக்கை அணைத்தாள்.

அவளுக்கு 20வயது. என்னை விடவும் உயரத்தால் மட்டுமன்றி எண்ணங்களாலும் உயர்ந்து என்னை நிமிர்ந்து பார்க்க வைக்கிறாள். எனக்குள் ஒரு கோழிக்குஞ்சாகவே அவள் இப்போதும் காக்கப்படும் குழந்தையாகவே தெரிகிறாள்.

போனவருடம் என்கையிலிருந்து பிரிந்து பல்கலைக்கழக வாழ்வை ஆரம்பித்தவள். சமையல் சாப்பாடு படிப்பு படுக்கை பொழுது போக்கு யாவையும் தனித்து ஒரு அறையில் வாழப்பழகியிருக்கிறாள்.

அம்மா நான் சின்னனில்லை... எனக்கு இப்ப இருபது வயது.

அடிக்கடி ஞாபகப்படுத்துவது போல சொல்வாள்.

அம்மா..., இது அவள்...,

என்னம்மா...பகல் நடந்ததையே நினைச்சுக் கொண்டிருக்கிறீங்களோ ?

இல்லைக்குட்டி அதுதானே அம்மா அவனுக்கு செருப்பாலை அடிக்கப் போனனான்.

அவள் சிரித்தாள்.

அதுதானே என்ர குண்டம்மா துணிச்சல் சண்டைக்காரியெல்லோ....

அவள் மீண்டும் தூங்கிவிட்டாள்.


மேசையில் மெல்லிய ஒளியைப் பரப்பியபடியிருந்த மின்விளக்கின் வெளிச்சமும் எனது கைபேசியின் வெளிச்சமும் தவிர அவளது அறை அமைதியாக இருந்தது.

அமைதியைத் தொலைத்த கடலின் அலைகள் கரைகளில் மோதிச் செல்லும் ஓசைபோல எனக்குள் நேற்றைய மதியப்பொழுது தான் ஓடிக்கொண்டேயிருந்தது.

மனவுளைச்சலைத் தந்த அந்த நிகழ்விலிருந்து என்னால் விடுபட முடியாதிருந்தது.

பெண்ணின் அனுமதியின்றி அவளை ஒருவர் தீண்டுவது என்பது எந்தளவு மனவுளைச்சலைத் தருமென்பதை பலதரம் உணர்ந்தவள் நான். நித்திரை வர மறுத்தது. கைபேசியில் காலச்சுவடு இணைய சஞ்சிகையை வாசிக்கத் தொடங்கினேன்.

சாந்தி நேசக்கரம்
ஆவணி 2018

(இச்சிறுகதை 2008 ஆவணி மாதம் எழுதினேன்.  தாயகத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழில் வெளியாகியது.
ஜீவநதி வெளியீட்டாளர் பரணி அவர்களுக்கும் அவரது துணைவிக்கும் மனம் நிறைந்த நன்றிகள். ஒரு சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுதல் என்பது சிரமமான விடயம். ஆனால் தங்கள் காலப்பணியாக ஜீவநதியை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். சஞ்சிகையோடு நின்றுவிடாமல் ஆழுமைகளை வெளிக்கொணர்தல் தொடக்கம் சிறந்த பதிப்பாளர்களாகவும் இருந்துவரும் பரணியின் முயற்சியில் நூற்றையும் தாண்டிய நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து வெளியாகிக் கொண்டுமிருக்கின்றன.)
 
 
Link to comment
Share on other sites

நல்ல கதை . 
தொடக்கம் முதல் முடிவு வரை எழுத்துக்களோடு 
பயணிக்க முடிகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லது கெட்டது என்று இரண்டையும் தாண்டித்தான் பயணம் செய்யவேண்டி இருக்கிறது.வாழ்க்கை பயணத்திலும் கூட ........நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் சகோதரி.....!   😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 19/4/2020 at 18:22, pri said:

நல்ல கதை . 
தொடக்கம் முதல் முடிவு வரை எழுத்துக்களோடு 
பயணிக்க முடிகிறது .

அனுபவங்களே சிறந்த பதிவுகளாகின்றன. இது எனது அனுபவப்பகிர்வு. உங்கள் கருத்திற்கு நன்றிகள் உறவே.

On 19/4/2020 at 21:28, suvy said:

 நல்லது கெட்டது என்று இரண்டையும் தாண்டித்தான் பயணம் செய்யவேண்டி இருக்கிறது.வாழ்க்கை பயணத்திலும் கூட ........நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் சகோதரி.....!   😁

எல்லாம் கலந்தது தான் வாழ்வுப்பயணம் சுவியண்ணா. சில அனுபவங்கள் தரும் மனவுளைச்சலைத் தாண்டி வருவது பெரும் சவாலானது. உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

பெண் அடக்கு முறைகள் மேம்பட்டு இருக்கும் சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் ஆண்களின் அசிங்கமான அடாவடித்தனங்களைத் தட்டிக் கேட்க முடியாத சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. எமக்கு முன் தலைமுறைப் பெண்களிலிருந்து நாம் வேறுபடுகிறோம். எமது குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார்கள்.  இது ஒரு வகை ஜனநாயகப்படுத்தலே. வீடுகளில் கணவன் மனைவி உறவு, காதலன் காதலி உறவு., பாடசாலைகள் வேலை இடங்களில் உயர் பதவி வகிப்பவர் அவருக்கு கேழே வேலை செய்பவர்களுக்கிடையேயான உறவு என எல்லா இடங்களிலும் சம உரிமைகள் பேணப்படாவிட்டால், ஜனநாயகம் பேணப்படாத இடங்களில் வளரும் குழந்தைகள் இப்படியான இழி செயல்கள் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

அம்மாவும் மகளும் ஒரே விடயத்தை இரு வேறு விதமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.  எமது அனுபவம் சார்ந்த வழிகளில் நாம் பிரச்னைகளைத் தீர்க்கப் பார்க்கிறோம்.  சிறப்பான எழுத்து நடை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • 9 months later...
On 2/8/2020 at 00:08, தோழி said:

பெண் அடக்கு முறைகள் மேம்பட்டு இருக்கும் சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் ஆண்களின் அசிங்கமான அடாவடித்தனங்களைத் தட்டிக் கேட்க முடியாத சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. எமக்கு முன் தலைமுறைப் பெண்களிலிருந்து நாம் வேறுபடுகிறோம். எமது குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார்கள்.  இது ஒரு வகை ஜனநாயகப்படுத்தலே. வீடுகளில் கணவன் மனைவி உறவு, காதலன் காதலி உறவு., பாடசாலைகள் வேலை இடங்களில் உயர் பதவி வகிப்பவர் அவருக்கு கேழே வேலை செய்பவர்களுக்கிடையேயான உறவு என எல்லா இடங்களிலும் சம உரிமைகள் பேணப்படாவிட்டால், ஜனநாயகம் பேணப்படாத இடங்களில் வளரும் குழந்தைகள் இப்படியான இழி செயல்கள் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

அம்மாவும் மகளும் ஒரே விடயத்தை இரு வேறு விதமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.  எமது அனுபவம் சார்ந்த வழிகளில் நாம் பிரச்னைகளைத் தீர்க்கப் பார்க்கிறோம்.  சிறப்பான எழுத்து நடை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !

இன்று தான் உங்கள் கருத்தைக் கவனித்தேன் தோழி. காலங்கள் மாறினாலும் பெண் எப்போதும் ஒரே மாதிரியான வகையில் தான் தொல்லைப்படுகிறாள். 

கருத்துக்கு நன்றி தோழி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் அறிந்து கொள்ளவே முடியும் சகோதரி. 

இன்று தான் வாசித்தேன்.

பதியப்பட வேண்டியது. நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.