Jump to content

உலையும் மனசோடு அலையும் இரவு.


Recommended Posts

Sunday, April 19, 2020

உலையும் மனசோடு அலையும் இரவு.

- சாந்தி நேசக்கரம் -

குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன்.

றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய்   மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது.

றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்தது. ஆங்காங்கே சரக்குக்கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தது.

வெயில் ஏறாத காலைநேரம் மரங்களின் முகடுகளில் படிந்திருந்த மெல்லிய புகைமூட்டம். அன்றைய காலைப்பொழுதின் றைன்நதியோர அழகை ரசிக்கும் பொறுமையில்லை. ஆனால் கண்கள் தானே அந்த அழகோடு பயணித்துக் கொண்டிருந்தது.

கணணியோடு சிலர் , கைபேசிகளோடு பலர், கதைத்தபடி சிலர் , கண்களை மூடி நல்ல நித்திரையில் சிலர் என பலவகையான மனிதர்களோடு றெயின் வளைவுகளில் சரிந்தும் நேர்பாதையில் நிமிர்ந்தும் 360கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

000       000       000

காலை 8.52. அவளது நகரில் இறங்கினேன். அடுத்த தொடரூந்துக்காக மனிதர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு பலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். எனது பயணப்பொதியோடு நானும் பயணிகளோடு நடந்து தானியங்கிப் படிகளில் ஏறி கீழிறங்கினேன்.

பிரதான வாசலுக்கு வலதுபுறமாக அடையாளமிடப்பட்ட மலசலகூடத்திற்கு செல்லும் வழியூடாக ஆண்கள் பலரும் பெண்கள் பலரும் ஒரே நிறத்தில் உடையுடுத்தி கைகளில் இனிப்புகள் குடிவகைகளோடு மேலேறி வந்தார்கள்.

அவர்களில் ஒருவன் றோசா நிறத்தில் ரீசேட்டும் கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான். அவர்களில் சிலர் மலசலகூடப்படிகளில் இறங்கிப் போனார்கள்.

அந்தப்படிகளில் நானும் இறங்கிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவனின் கை எனது பின்பகுதில் தட்டிவிட்டுப் போனதை உணர்ந்து திரும்பினேன்.

றோசா நிறத்தில் ரீசேட்டும் கறுப்பு நிறத்தில் காற்சட்டையும் அணிந்தவன் சில படிகள் கீழிறங்கிப் போய்க்கொண்டிருந்தான். தவறுதலாக அவன் கை என்னில் பட்டிருக்கிறதென நினைத்துக் கொண்டேன்.

வெளியில் வந்து அவளின் மாணவர்கள் தங்கிடத்திற்கான தொடரூந்து நேரவிபரத்தை தொலைபேசியில் பார்த்தேன்.  அடுத்த தொடரூந்து வருவதற்கு இன்னும் 26நிமிடங்கள் இருந்தது.

இரு குழுக்களாக ஆண்களும் பெண்களும் பிரத்தியேக உடைகள் அணிந்து சத்தமாக கதைத்துச் சிரித்து கைகளில் குடிவகைகள் சிகரெட்களோடு நின்றவர்களுக்கு 10மீற்றர் அளவிலான தொலைவில் நானும் நின்று கொண்டிருந்தேன்.

பர்தா அணிந்த பெண்ணொருத்தி பிளாஸ்ரிக் கப்பொன்றை கையில் கொண்டு வந்து ஒவ்வொருவரிடமும்  'பசிக்கிறது காசு' என கை நீட்டினாள். யாரும் அவளுக்கு காசு போடவில்லை. அவள் ஏதோ பேசிக்கொண்டு கடந்து போனாள்.

நான் போக வேண்டிய இடத்தின் பெயரோடு தொடரூந்து வந்தது. பிரதான தொடரூந்து நிலையத்திலிருந்து 6வது தரிப்பிடத்தில் இறங்கினேன். அந்த வீதிக்கு எதிர்ப்புறம் கடந்து நூறுமீற்றர் தொலைவில் அவளது குடியிருப்பு இருந்தது.

4வது மாடியில் இருந்து கீழிறங்கி வந்து எனக்காக அவள் காத்திருந்தாள். தொடரூந்துக்குள்ளிருந்து அவளைக்கண்டு கொண்டேன்.

பாலத்தைக் கடந்து போகும் நடைபாதையில் நடந்து அடுத்த பக்கத்தில் அமைந்திருந்த மேட்டுவீதியில் ஏறி அவளது வீட்டை நோக்கி நடந்தேன். அவள் கைகாட்டிச் சிரித்தபடி நிற்பது தெரிந்தது.

அம்மா...அவள் ஓடிவந்து கட்டியணைத்தாள்.

 குண்டம்மா எப்பிடியிருக்கிறீங்கள் ?

ஓரு நாய்க்குட்டி போல கட்டி முத்தமிட்டாள். அம்மாவைக் காணும் பசுக்கன்று போல என்னை அழைந்தாள்.

எனது பயணப்பொதியை வாங்கிக் கொண்டாள். 4வது மாடியில் இருக்கும் அவளது அறைக்கும் செல்லும் தானியங்கியில் ஏறினோம். 

15சதுரமீற்றர் அறையில் அவளது உலகத்தை காலம் அமைத்திருந்தது.
சமையல் குளியல் படிப்பு உறக்கம் அனைத்துமே அந்த அறைக்குள்ளே தான். அவ்வப்போது அவளைப் பார்க்க வரும் போது நிலத்தில் சிறிய மெத்தை எனது படுக்கையாகும்.

துளசியிலைத் தேனீர் ஒன்றைப் போட்டு கையில் தந்தாள்.

 அம்மா எனக்கு தேனீர்...
எனக் கேட்பவள் இன்று எனக்குத் தேனீர் போட்டுத் தந்தாள்.

அம்மா இண்டைக்கு கடைக்குப் போவமோ ? கேட்டாள்.
ஓமம்மா போவம்.

நீண்டகாலம் அவளோடு கடைகளுக்குப் போகவில்லை. அது அவளுக்குப் பெரும் குறையாகவே இருந்து வந்தது. இன்றைய நாளை அவளோடு அவள் விரும்புவது போல கழிப்பது என்பதே எனது எண்ணமும்.

கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக் கொண்டு அவளோடு புறப்பட்டேன் கடைத்தெருக்களிற்கு.  விடிய விடிய மனிதர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் , நிறைந்த மனிதர்களாலும் தனது நிறத்தை மாற்றியிருந்த யேர்மனியின் பெருநகரங்களில் ஒன்று அது.

வீதிச்சமிஞ்ஞைகளால் அவள் என்னையும் அழைத்துக் கொண்டு பழக்கப்பட்ட வழிகாட்டிபோல நடந்து கொண்டிருந்தாள்.

உடுப்புக்கடைகளுக்குச் சென்றோம். அவள் தனக்கான சில ஆடைகளை வாங்கினாள். எடுக்க விரும்பிய ஆடைகளை நீண்ட வரிசையில் நின்று போட்டுப் பார்த்தாள். ஓவ்வொரு உடுப்பையும் எடுக்கும் போது என்னிடமும் அபிப்பிராயம் கேட்டாள்.

மதியம் 2மணிவரையும் கடைகளைச் சுற்றினோம்.

உணவகமொன்றில் போய் பீற்சா சாப்பிட்டு 3மணிவரை உணவகத்தில் இருந்தோம். கதைகள் நிறையச் சொன்னாள். தனது படிப்பு பற்றி தன் தோழிகள் பற்றி அவளது கதைகளால் நிறைந்தது பொழுது.

அவள் செய்து முடித்த 'ஆசியப்பெண்கள்' பற்றிய ஆய்வுக்கட்டுரைக்காக வாசித்த நூல்கள் ஆய்வுகள் அவற்றில் எழுதப்பட்ட விடயங்கள் பற்றி நிறையவே சொல்லிக் கொண்டிருந்தாள்.

எனது குழந்தை உலகத்தை எப்படியெல்லாம் கற்றுக் கொள்கிறாள் என்பது பெருமையாகவும் வியப்பாகவும் இருந்தது. ஐரோப்பிய இலக்கியத்தின் நான் அறியாத பல இலக்கியர்களின் பெயர்களைச் சொல்லி அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியெல்லாம் சொன்னாள்.

பிள்ளைகளோடு சேர்ந்துதான் யேர்மன் மொழியைக் கற்றேன். மேற்குலக இசை இசைக்கலைஞர்கள் பாடகர்களை அறிந்து கொண்டதும் , பிள்ளைகள் ஊடாகவே எனது உலகத்தை பரந்து விரியச் செய்த சிந்தனையின் ஊற்றாக பிள்ளைகளே நிக்கிறார்கள்.

தான் படிக்கும் ஐரோப்பிய இலக்கிய விஞ்ஞானம் பற்றியும் பெண்பிள்ளைகள் அந்தத் துறையில் அதிகம் இல்லாதது பற்றியெல்லாம் சொன்னாள்.

பல்கலைக்கழகம் போனால் மருத்துவம் தொழில்நுட்பம் போன்றவையே சிறந்த கல்வியென்ற மனநிலையில் இருந்து மாறுபட்ட என் மனநிலையே அவளதும். கல்வி வாழ்வதற்கே வாழ்க்கை கல்விக்கல்ல என்பதில் அவள் தெளிவாக இருந்தாள்.

கடைத்தெருக்களைத் தாண்டி தொடரூந்து நிலையம் சென்றோம். நாங்கள் பயணிக்கவிருந்த தொடரூந்து தாமதமாகியது.

தனது கையில் இருந்த பைகளை என்னிடம் தந்துவிட்டு மலசலகூடம் செல்லும்  படிகளில் இறங்கினாள். அவள் இறங்கிய படிகளின் மேற்பகுதியில் நின்றேன். அந்தப்படிகளில் பலர் மேலேறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.

சிலநிமிடங்களில் மலசலகூடத்திலிருந்து மேலேறிக் கொண்டிருந்தவள்...திரும்பி படிகளில் தடதடவென ஓடினாள்.

ஏய்...! கோபமாய் சத்தமிட்டபடி படிகளில் கீழிறங்கி ஓடினாள்.

அவளது கோபம் ஓட்டம் என்னை ஒருகணம் திகைக்க வைத்தது.

அம்மா நில்லுங்கோ...

மேலே ஓடியவளைத் தொடர்ந்து நானும் ஓடினேன்.
அவள் ஆண்களின் மலசலகூடத் கதவடியில் ஒருவனை மறித்துக் கத்திக் கொண்டிருந்தாள்.

அங்கே நின்ற காவலாளர் அங்கே நின்றவனை கெட்ட வார்த்தைகளால் திட்டினான்.

என்னம்மா ? என்ன நடந்தது ?

என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அம்மா இவன் என்னை பின்பக்கதில தட்டீட்டு போனான்.

அவள் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டுமே என்காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. கைகளில் இருந்த பைகள் கையைவிட்டு வீழந்ததையும் எனது ஞாபகத்திலிருந்து அழித்துப் போனது அந்தக்கணம்.

அந்த உயரமான மனிதன். றோஸ்கலர் ரீசேட் அணிந்தவன். அவன் தான் அவளைத் தொட்டான் என்பதை அவள் கைநீட்டிச் சொன்னாள்.

அவன் நெஞ்சில் என்கைகள் பதிந்தது. அவனைத்தள்ளி விட்டு எனது காலில் இருந்த காற்செருப்பைக் கழற்றி அவன் முகத்துக்கு நேரே ஓங்கினேன். காவலுக்கு நின்றவன் என் குறுக்கே நின்று தடுத்தான்.

அம்மா அடிக்காதையுங்கோ...

அவனுக்கு அடிக்க வேண்டாமென அவள் சத்தமிட்டாள். காவலுக்கு நின்றவன் காவல்துறையை அழைக்கிறேன் அவனை அடிக்காதே என வேண்டிக் கொண்டிருந்தான்.

திருமணத்திற்கு முதல் கடைசியாக நண்பர்களுடன் கழிக்கும் பொழுதை ஆணும் பெண்ணும் அவர்களது சகாக்களோடு ஒன்றாக நகரங்களைச் சுற்றிக் குடித்து அனுபவிப்பார்கள். அதுவொரு கலாசரமாக யேர்மனியர்களிடம் வளமையாக இருந்து வருவதை சில இடங்களில் கேட்டுள்ளேன்.

தனது திருமணத்திற்கு முதல் தனது நண்பர்களுடன் என் குழந்தையைச் சீண்டியவனும் என்பதை காவலுக்கு நின்றவன் சொன்னான்.

நீங்கள் விரும்பினா நான் காவல்துறையைக் கூப்பிடுறேன்.

பொறுமையா இரு...

அந்த வயதான மனிதனின் கண்கள் கெஞ்சின. பலர் அந்த நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

மன்னிச்சுக்கொள்ளு பேபி...மன்னிச்சுக் கொள்ளு...

அவன் என் குழந்தையிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டு மேலேறி ஓடினான். அவன் பின்னே செருப்போடு திரும்பிய என்னை அவள் மறித்தாள்.

விடுங்கோம்மா...அவனுக்கு கலியாணம் நடக்கப்போகுது...இவ்வளவு ஆக்களும் பாக்க அவனை நானும் நீங்களும் பேசினதே அவன்ரை வாழ்க்கையில மறக்கமாட்டான்...இதை அவன்ரை வாழ்க்கையில மறக்கமாட்டானம்மா....

என்னால் ஆறுதலடைய முடியவில்லை. அவனை அடியென்கிறது மனசு.

எனது கையிலிருந்து தவறி அங்கங்கே கிடந்த பைகளை அவள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு என்னையும் அழைத்துக் கொண்டு படிகளில் மேலேறினாள்.

இந்தத் தொல்லையள் இருக்கெண்டு தெரிஞ்சுதான் நான் நீளமான உடுப்புகள் போடுறதம்மா...இவங்களுக்கு இதைவிட இனியெப்பிடி உடுப்பு போடுறது...

சொல்லிக் கொண்டு நடந்தாள்.

அவள் தன்னைப் பாதுகாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள் என்பது ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்தநாளை இவள் தனியே சந்தித்திருந்தால் அவளது மனவுளைச்சலை எப்படி இருந்திருக்குமென நான் யோசித்துக் கொண்டு நடந்தேன்.

நாங்கள் வெளியில் தொடரூந்துக்காக காத்து நின்றோம். தன் குழுவோடு நின்றவன் எங்களுக்கு கிட்ட வந்தான்.

மன்னிச்சுக்கொள்...மன்னிச்சுக்கொள்...என அவன் எங்களை வேண்டினான். தெரியாமல் செய்திட்டேன்.

அவனை தமிழில் உள்ள கெட்டவார்த்தைகளால் திட்டினேன். போ இதில நிக்காதை...அவனை அவள் டொச்சில் திட்டினாள். அவன் திரும்பிப் போய் தனது குழுவோடு சேர்ந்தான். எங்களை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.

காலையில் என் பின்புறத்தையும் தட்டிவிட்டுப் போனவன் இவனோ என நினைத்தேன்.

இப்பிடியும் இருக்கிறாங்களம்மா உலகத்தில...
அம்மாவுக்கு இப்பிடியான அனுபவங்கள் நிறைய இருக்கம்மா...
பெண்கள் ஒவ்வொருத்தரும் இப்பிடியான சனியனுகளைத் தாண்டித்தானம்மா போறம்...
இதை இதிலையே மறந்திடம்மா...
இதுவும் உங்கடை வாழ்க்கையில ஒரு கடந்து போன அனுபவமாக போகட்டும்.

நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

எனது குழந்தையைத் தொட்டவனை தண்டிக்க வேண்டுமென்றதே எனது மனம் முழுவதுமான ஒலியாகவிருந்தது. கோபம் அவன் மீது எனது எதிர்ப்பைக் காட்டிவிடும் வேகமே என்னிடமிருந்தது.

000       000           000
இரவு...,

மண்ணிற கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்தபடி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். தலைக்குப் பக்கத்தில் கடைசியாக அவள் வாசித்த கனடாவில் வாழும் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த மகள் ரூபியின் கவிதைப்புத்தகம் நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்தது.

இளம் கவிஞையான ரூபியின் ஆங்கிலக் கவிதைப் புத்தகத்தில் தனக்குப் பிடித்த கவிதைகளை எனக்கு மொழிபெயர்த்துத் தந்திருந்தாள்.என் குழந்தையைவிட சில வயதுகளால் மூத்த ரூபி தனது பிறப்பின் வேரிலிருந்து எழுதிய பெண் அடக்குமுறைகள் தொடக்கம் அவளது வாழ்வனுபங்கள் பற்றி அவள் சொன்ன கதைகள் அனைத்தையும் அவள் எனக்கு உணர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.

நித்திரை வரவில்லை. ஓவ்வொரு பக்கமாய் திரும்பித் திரும்பி உருண்டு கொண்டிருந்தேன். நேரம் இரவு 2.42.

என்ன குண்டம்மா நித்திரை கொள்ளேல்லயோ ?

நெஞ்சில் அணைத்து வைத்திருந்த கரடி பொம்மையை கன்னத்தில் வைத்துக் கேட்டாள்.

இல்லைச் செல்லம்...இப்பதான் முளிச்சனான். அவளுக்குப் பொய் சொன்னேன்.

பிரதான மின்விளக்கைப் போட்டுவிட்டு குளியலறைக்குப் போய் வந்து மீண்டும் மின்விளக்கை அணைத்தாள்.

அவளுக்கு 20வயது. என்னை விடவும் உயரத்தால் மட்டுமன்றி எண்ணங்களாலும் உயர்ந்து என்னை நிமிர்ந்து பார்க்க வைக்கிறாள். எனக்குள் ஒரு கோழிக்குஞ்சாகவே அவள் இப்போதும் காக்கப்படும் குழந்தையாகவே தெரிகிறாள்.

போனவருடம் என்கையிலிருந்து பிரிந்து பல்கலைக்கழக வாழ்வை ஆரம்பித்தவள். சமையல் சாப்பாடு படிப்பு படுக்கை பொழுது போக்கு யாவையும் தனித்து ஒரு அறையில் வாழப்பழகியிருக்கிறாள்.

அம்மா நான் சின்னனில்லை... எனக்கு இப்ப இருபது வயது.

அடிக்கடி ஞாபகப்படுத்துவது போல சொல்வாள்.

அம்மா..., இது அவள்...,

என்னம்மா...பகல் நடந்ததையே நினைச்சுக் கொண்டிருக்கிறீங்களோ ?

இல்லைக்குட்டி அதுதானே அம்மா அவனுக்கு செருப்பாலை அடிக்கப் போனனான்.

அவள் சிரித்தாள்.

அதுதானே என்ர குண்டம்மா துணிச்சல் சண்டைக்காரியெல்லோ....

அவள் மீண்டும் தூங்கிவிட்டாள்.


மேசையில் மெல்லிய ஒளியைப் பரப்பியபடியிருந்த மின்விளக்கின் வெளிச்சமும் எனது கைபேசியின் வெளிச்சமும் தவிர அவளது அறை அமைதியாக இருந்தது.

அமைதியைத் தொலைத்த கடலின் அலைகள் கரைகளில் மோதிச் செல்லும் ஓசைபோல எனக்குள் நேற்றைய மதியப்பொழுது தான் ஓடிக்கொண்டேயிருந்தது.

மனவுளைச்சலைத் தந்த அந்த நிகழ்விலிருந்து என்னால் விடுபட முடியாதிருந்தது.

பெண்ணின் அனுமதியின்றி அவளை ஒருவர் தீண்டுவது என்பது எந்தளவு மனவுளைச்சலைத் தருமென்பதை பலதரம் உணர்ந்தவள் நான். நித்திரை வர மறுத்தது. கைபேசியில் காலச்சுவடு இணைய சஞ்சிகையை வாசிக்கத் தொடங்கினேன்.

சாந்தி நேசக்கரம்
ஆவணி 2018

(இச்சிறுகதை 2008 ஆவணி மாதம் எழுதினேன்.  தாயகத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழில் வெளியாகியது.
ஜீவநதி வெளியீட்டாளர் பரணி அவர்களுக்கும் அவரது துணைவிக்கும் மனம் நிறைந்த நன்றிகள். ஒரு சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுதல் என்பது சிரமமான விடயம். ஆனால் தங்கள் காலப்பணியாக ஜீவநதியை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். சஞ்சிகையோடு நின்றுவிடாமல் ஆழுமைகளை வெளிக்கொணர்தல் தொடக்கம் சிறந்த பதிப்பாளர்களாகவும் இருந்துவரும் பரணியின் முயற்சியில் நூற்றையும் தாண்டிய நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து வெளியாகிக் கொண்டுமிருக்கின்றன.)
 
 
Link to comment
Share on other sites

நல்ல கதை . 
தொடக்கம் முதல் முடிவு வரை எழுத்துக்களோடு 
பயணிக்க முடிகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லது கெட்டது என்று இரண்டையும் தாண்டித்தான் பயணம் செய்யவேண்டி இருக்கிறது.வாழ்க்கை பயணத்திலும் கூட ........நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் சகோதரி.....!   😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 19/4/2020 at 18:22, pri said:

நல்ல கதை . 
தொடக்கம் முதல் முடிவு வரை எழுத்துக்களோடு 
பயணிக்க முடிகிறது .

அனுபவங்களே சிறந்த பதிவுகளாகின்றன. இது எனது அனுபவப்பகிர்வு. உங்கள் கருத்திற்கு நன்றிகள் உறவே.

On 19/4/2020 at 21:28, suvy said:

 நல்லது கெட்டது என்று இரண்டையும் தாண்டித்தான் பயணம் செய்யவேண்டி இருக்கிறது.வாழ்க்கை பயணத்திலும் கூட ........நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் சகோதரி.....!   😁

எல்லாம் கலந்தது தான் வாழ்வுப்பயணம் சுவியண்ணா. சில அனுபவங்கள் தரும் மனவுளைச்சலைத் தாண்டி வருவது பெரும் சவாலானது. உங்கள் கருத்திற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

பெண் அடக்கு முறைகள் மேம்பட்டு இருக்கும் சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் ஆண்களின் அசிங்கமான அடாவடித்தனங்களைத் தட்டிக் கேட்க முடியாத சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. எமக்கு முன் தலைமுறைப் பெண்களிலிருந்து நாம் வேறுபடுகிறோம். எமது குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார்கள்.  இது ஒரு வகை ஜனநாயகப்படுத்தலே. வீடுகளில் கணவன் மனைவி உறவு, காதலன் காதலி உறவு., பாடசாலைகள் வேலை இடங்களில் உயர் பதவி வகிப்பவர் அவருக்கு கேழே வேலை செய்பவர்களுக்கிடையேயான உறவு என எல்லா இடங்களிலும் சம உரிமைகள் பேணப்படாவிட்டால், ஜனநாயகம் பேணப்படாத இடங்களில் வளரும் குழந்தைகள் இப்படியான இழி செயல்கள் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

அம்மாவும் மகளும் ஒரே விடயத்தை இரு வேறு விதமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.  எமது அனுபவம் சார்ந்த வழிகளில் நாம் பிரச்னைகளைத் தீர்க்கப் பார்க்கிறோம்.  சிறப்பான எழுத்து நடை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • 9 months later...
On 2/8/2020 at 00:08, தோழி said:

பெண் அடக்கு முறைகள் மேம்பட்டு இருக்கும் சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கும் ஆண்களின் அசிங்கமான அடாவடித்தனங்களைத் தட்டிக் கேட்க முடியாத சந்தர்ப்பங்கள் வருவதுண்டு. எமக்கு முன் தலைமுறைப் பெண்களிலிருந்து நாம் வேறுபடுகிறோம். எமது குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார்கள்.  இது ஒரு வகை ஜனநாயகப்படுத்தலே. வீடுகளில் கணவன் மனைவி உறவு, காதலன் காதலி உறவு., பாடசாலைகள் வேலை இடங்களில் உயர் பதவி வகிப்பவர் அவருக்கு கேழே வேலை செய்பவர்களுக்கிடையேயான உறவு என எல்லா இடங்களிலும் சம உரிமைகள் பேணப்படாவிட்டால், ஜனநாயகம் பேணப்படாத இடங்களில் வளரும் குழந்தைகள் இப்படியான இழி செயல்கள் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

அம்மாவும் மகளும் ஒரே விடயத்தை இரு வேறு விதமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.  எமது அனுபவம் சார்ந்த வழிகளில் நாம் பிரச்னைகளைத் தீர்க்கப் பார்க்கிறோம்.  சிறப்பான எழுத்து நடை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் !

இன்று தான் உங்கள் கருத்தைக் கவனித்தேன் தோழி. காலங்கள் மாறினாலும் பெண் எப்போதும் ஒரே மாதிரியான வகையில் தான் தொல்லைப்படுகிறாள். 

கருத்துக்கு நன்றி தோழி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் அறிந்து கொள்ளவே முடியும் சகோதரி. 

இன்று தான் வாசித்தேன்.

பதியப்பட வேண்டியது. நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.